19/08/2024
புனித அல் குர்ஆனில் சர்வதேச ரீதியில் இஜாஸா உயர் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்!
________________________
இறைவனுக்கே புகழ் அனைத்தும்- அல்ஹம்துலில்லாஹ்...!
அல்ஹாபிழ், மௌலவி நஸ்ருல்லா ரபாய்தீன் அல் ஹுஸைனி.
அபுக்காகம, கனுகெடிய மண்ணில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, எமது ஊர் மத்ரஸாவான "zஸைத் பின் ஸாபித்" அரபுக் கல்லூரியில் புனித அல்குர்ஆனை சிறப்பாக மனனம் செய்து, கெகுனுகொல்ல , மடலஸ்ஸ "அல் ஹுசைனியா" அரபுக் கல்லூரியில் ஷரீஆ துறையில் கற்று, பட்டம் பெற்றார். பின்பு தனது குர்ஆனிய மேற்படிப்பை தொடர்வதற்கு தெகிவளை "மர்க்கஸ் உபை இப்னு கஃப் - அகில இலங்கை ஹைஅதுல் குர்ஆன் அல் கரீம்" என்ற அல் குர்ஆன் உயர் கற்கை நெறிக்கான நிறுவனத்தில் புனித அல் குர்ஆன் "இஜாஸா" கற்கை நெறியை அல் காரீ, அஷ்ஷேக் முஸ்தஜாப் அந் நூரீ, அல் யமனீ அவர்களிடம் பூர்த்தி செய்தார்.
பின்பு, அல் ஹாபிழ் நஸ்ருல்லா அவர்கள் புனித அல் குர்ஆனில் சர்வதேச ரீதியில்
இஜாஸா பட்டத்தினை, சவுதி அரேபியாவிலே ‘‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி'' முஸ்லிம் உலக அமைப்பு (Muslim World League) என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனத்தினூடாக ஜித்தா நகரில், அஷ்ஷேக், அல் காரீ : முஹம்மத் இப்னு அலீ இப்னு முஹ்ஸின் (அல் யாஃபிஈ) அவர்களினூடாக பெற்றுக் கொண்டார்.
மேலும், இவர் (2024. 08. 16 ) திகதியன்று கென்யா நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கென்யக் குடியரசு (Republic of Kenya), என்பது கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
புனித அல் குர்ஆனில் பிரபலமான பத்து ஓதல் முறைகளில் ஒன்றான இமாம் ஆஸிம் பின் அபின்நஜூதில் கூபிய்யி கிறாஅத் முறையில் ஹப்ஸ் மற்றும் ஷூஃபா ரிவாயத்தில் (அறிவிப்பில்) ஷாதிபிய்யா வழியில் பெற்ற இந்த இஜாஸாவானது (அனுமதி) சர்வதேச ரீதியாக புனித அல் குர்ஆனை, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஓதுவதற்கும் ,கற்பிப்பதற்கும்
புனித அல் குர்ஆனில் திறமையான ஹாபிழ்களுக்கு இஜாஸா
வழங்குவதற்கும் வழங்கப்பட்ட விஷேட அனுமதியாகும்.
புனித அல் குர்ஆனில் இஜாஸா என்பது
அல் குர்ஆனின் பிரபலமான பத்து ஓதல் முறைகளில் ஏதாவது ஒன்றில் அல்லது முழுவதிலும்,
புனித அல் குர்ஆனை, முழுமையாக,
மிக மிக உறுதியாக மனமிட்ட ,
புனித
அல் குர்ஆனோடு தொடர்புடைய அனைத்துக் கலைகளிலும் ஏனைய ஷரீஆக் கலைகளிளும் தேர்ச்சியடைந்த, மிகச்சிறந்த ஓதல் வல்லுனர்கள் குழாமிடம் அல்லது ஒரு(ஷெய்க்) மூத்த பிரபல இஸ்லாமி அறிஞரிடம்
புனித அல் குர்ஆன் முழுவதையும் மிக மிக உறுதி நிலையில் மனனமிட்ட
அது தொடர்பான கலைகளான தஜ்வீத் ,மகாரிஜுல் ஹூறூப், உலூமுல் குர்ஆன் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரு ஹாபிழ் புனித
அல் குர்ஆனை மனனமாக முழுமையாக, மிகத்தெளிவாக, மிக ஆழ்ந்த மனன வல்லமையுடன் ஆழமான உச்சரிப்புடன் உய்த்துணர்ந்து சகல விதமான சொற்றொடர்களின் குறியீட்டு மாற்றங்கள், மற்றும் தஜ்வீது சட்டங்கள் பேணி ஓதி ஒப்புவிப்பார்.
இதற்கு பல வருட காலங்கள் எடுக்கும்.
இவ்வாறு உய்த்துணர்ந்து மிகக் கவனமாக பாராயணம் செய்யும் போது, "இஜாஸா" வழங்கும் குறித்த ஷைக் மிகக்கவனத்துடனும் மிகுந்த கண்டிப்புடனும் இருப்பதோடு உச்சரிப்புக்களைச் சரிசெய்வதில் மிகக்கவனம் கொள்வார்.
* இவ்வாறு இஜாஸாவைப்பெறுபவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை குர்ஆனைப்பாராயணம் செய்த சங்கிலித் தொடரை(சில்சிலாவை)ப் பெறுவதுதான் இங்கு ஈண்டு குறிப்பிடத் தக்க விடயமாகும்.
உண்மையில் இவர் எமது ஊரின் இலை மறை காய்களில் ஒறுவர் என்றே கூறலாம் . இவரை பாராட்டுவது எமது கடமையாகும். இவரை பாராட்டுவதும் வாழ்த்துவதும் குர்ஆனை கவௌரப்படுத்தியதாகவே கருதப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவருடைய இந்த திறமையை வெளிக் கொண்டு வருவதற்கு காரண கருத்தாக்களாக இருந்த அன்பு பெற்றோர்கள், உஸ்தாத்மார்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மேலும் இவருடைய குர்ஆனிய உயர் கற்கை நெறியை மேலும் தொடர வேண்டும்! இவரின் ஊடாக எமது ஊருக்கும் நாட்டிற்கும் பயன் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.
எனவே இவரது சுய முயற்சியை மிகவும் பாராட்டுவதுடன் எம் உள்ளார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-நன்றி-
வாழ்த்துக்கள்...
By- Abdul wajid Iyyoob (in'aami)
ABUKKAGAMA, MUNNEKULAMA, NIKAWERETIYA
19.08.2024
copid