08/03/2024
இன்று மகா சிவராத்திரி, ஒவ்வொரு இந்துக்களும் முன்னோர் போதித்த மரபுபடி அதனை கட்டாயம் பின்பற்றுதல் அவசியம்
இந்துமதம் மகா சுதந்திரமானது ஆனால் அந்த அதிதீவிர சுதந்திரமேதான் அதன் பல வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று
கண்டிப்பும் கட்டுபாடும் இல்லா மதம் காலவோட்டத்தில் தடுமாறும், இந்துமதத்துக்கும் அந்த சோதனை வந்தது ஆனால் அதனை தாங்கிபிடித்த விஷயங்கள் பல உண்டு
இந்துமதம் பல்லாயிரம் தூண்களில் நின்றிருக்கும் மண்டபம், லடசகணக்கான வேர்களில் நிற்கும் மதம்
அதனால் வழிபாடுகள் அவசியம், அதுவும் கோவில் சென்று வழிபடுதல் அவசியம்
கோவிலின் நிர்வாகம் யாரிடமும் இருக்கட்டும், காலம் அதை மாற்றும் ஆனால் கோவில் செல்லும் வழக்கத்தை எக்காரணம் கொண்டும் விட்டுவிட கூடாது
பெரும் கூட்டமாக செல்ல செல்லத்தான் இந்துமதம் வாழும், மதம் வாழ வாழத்தான் இந்துக்கள் வாழ்வார்கள் இந்த திருநாடும் வாழும்
பண்டிகைகள், சிறப்பு நாட்கள் மதம் சார்ந்ததுதான், அந்நாளில் மதம்மேல் நாம் வைத்திருக்கும் பற்றை வெளிபடுத்த நல்ல வாய்ப்புத்தான் அதே நேரம் இந்த மாபெரும் ஞான்சமூகத்தின் தொன்மை என்ன? பாரம்பரியம் எனன? லட்சோபலட்சம் ஆண்டாக இதை பெருமையுடன் உலகுக்கு சொல்லிகொண்டிருக்கும் ஞானகர்வம் என்ன என்பதெல்லாம் உலகுக்கு விளங்கும்
எந்த இனத்த்துக்கும் இல்லா பெருமையும், தொன்மையும்,ஞானமும், வழிபாட்டு பெருமையும் இந்துக்களுக்கு மட்டும்தான் உண்டு
அதை ஒவ்வொருவரும் மறக்காமல் செய்யவேண்டும்
தயவு செய்து ஒவ்வொரு இந்துவும் இந்நாளில் கோவில்களுக்கு சென்று வணங்குங்கள், இரவில் எல்லா கோவில்களிலும் பூஜை நடத்துதல் நன்று
இது வாகன வசதி பெருகிவ்ட்ட காலங்கள், ஒரே இரவில் ஏகபட்ட ஆலயங்களை தரிசிக்கவும் முடியும், அதனால் முடிந்தவரை பல ஆலயங்களுக்கு இரவெல்லாம் செல்ல முயலுங்கள்
நாலுகால பூஜையும் நான்கு இடங்களில் காணுதல் மிக நன்று
இந்த நாளும் இந்த இரவும் சிவனுக்கானது சிவன் இந்த உலகத்துக்கனவர் என்றாலும் இந்நாட்டிற்கு மகா முக்கியமானவர்
அந்த சிவனுக்குரிய நாளில் தொன்மை மாறாமல் முடிந்தவரை எல்லா கோவிலுக்கும் சென்று அங்கிருக்கும் அர்ச்சகர்கள் குருக்கள் பணியாளர்கள் என எல்லோரையும் உற்சாகபடுத்துங்கள்
அவர்களுக்கு அதுதான் மகிழ்ச்சி, தெய்வத்தை அவர்கள் உங்கள் வடிவில்தான் காண்பார்கள், அவர்கள்தான் இந்துமத அச்சாணி
உலகெல்லாம் வெகு உற்சாகமாக கொண்டாடபடும் சிவராத்திரி தமிழகத்தின் எல்லா ஆலயங்களிலும் அதே உற்சாகத்துடன் உங்கள் ஆதரவில் கொண்டாடபடட்டும்
யாரோ ஒரு அன்னியன் சொன்ன ஆங்கிலபுத்தாண்டை கொண்டாடும் மடமை போல் அல்லாமல் நம் முன்னோர் சொன்ன, நம் ஞானபரம்பரை சொன்ன, நமது ரிஷிகளும் ஞானியரும் தந்துவிட்ட நாளில் அவர்கள் குறித்து சொன்ன நாளில் உற்சாகமாக சிவராத்திரியினை கொண்டாடுவதே அறிவுடமையானது
அலை அலையாக இந்துக்கள் எழுந்து ஆலயங்களை நிரப்பட்டும் "மகாதேவா" எனும் குரல் இரவினை உலுக்கட்டும்
இந்த நாட்டின் அடையாளம் மதம் அதன் சிறப்பு மதம் அதன் மாபெரும் தாத்பரியம் ஞானமதம், அதை கொண்டுதான் அந்நாடு எழும்பிற்று அதன் வாழ்வு அட்சி தேசம் மக்கள் வாழ்வியல் என எல்லாமுமே அந்த ஞான மதமாய் இருந்தது என்பதை உலகம் மீண்டும் மீண்டும் பார்க்கட்டும்
அனைவருக்கும் சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்