Aanmiga Payaanam

Aanmiga Payaanam ஆன்மீக தகவல்கள் spirituals LIFE FOREVER

13/05/2026

13/05/2026

13/05/2026

12/05/2026

சித்த ரகசியம்: 08
---------------------------------
சித்தர்கள் கூறிய ஜபமுறைகள் பற்றி அகத்தியர் பெருமான் ஆழமாக கூறுகிறார்....

மனத்தை ஒருமுகப்படுத்தி, மந்திரங்களை உருவேற்றுவதை ஜபம் என்கிறோம். இது, [ஜப் (அகற்றுதல் /களைதல் / நீக்குதல்) என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பெறப் பட்டதாகும்.] ஆங்கிலத்தில் கூறுவதானால்,

ஜபம் செய்வதில் பலவகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தருவதாகும். விளக்கமாகப் பார்க்கலாம்:

(01) வாசிக ஜபம்:-
பிறர் கேட்கும் அளவு, மந்திரத்தை உரக்க (வாய்விட்டு) ஜபம் செய்வது வாசிகம்.

(02) உபாம்சு ஜபம்:-
ஒலி எழுப்பாமல், உதடுகளும், நாக்கும் மட்டும் அசைய, மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு.

(03) மானஸ ஜபம்:-
மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஜபிப்பது மானஸம்.
[சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது. உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபம் 10மடங்கு உயர்ந்தது - அதாவது அலங்கார பூஜையை விட மானஸ ஜபம் 1000 மடங்கு மேலானது என்பது பொருள். மானஸம் "அதி விரைவாகப் பலனைத் தரக்கூடியது" என்று மனு_ஸம்ஹிதை கூறுகிறது.

(04) லிகித ஜபம்:-
புனித மந்திரத்தை தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதி வருதல் லிகித ஜபம் எனப்படும்.
ஓம் சரவணபவ, ஓம் நமசிவாய போல....

(05) அகண்ட ஜபம்:-
புனித மந்திரத்தைக் குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபித்தல். இதைக் கூட்டு வழிபாடாக நடத்தும்போது, அகண்ட நாம பாராயணம் என்பர்.

(06) அஜபா ஜபம்:-
இறைவன் திருநாமத்தை எந்நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் (ஸ்வாஸ, நிஸ்வாஸத்துடனும்) இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
[சாதாரணமாக, நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது ஸோऽஹம் என்ற ஒலியும், மூச்சை வெளிவிடும் போது ஹம்ஸ: என்ற ஒலியும் உள்ளார்ந்து ஒலிக்கும். இந்த ஒலிகளையே ஒரு மந்திரமாக்கி ஜபிப்பதை அஜபா காயத்ரி என்பர். (இது குண்டலினி lயில் தோன்றும் சூட்சும ஒலியாகும்.) இதைத்தான் ஔவையாரின் விநாயகர் அகவல் கூறும்]
"குண்டலி அதனிற் கூடிய அசபை
விண்டெழும் மந்திரம் வெளிப்பட உரைத்து"

(07) ஆதார சக்ர ஜபம்:-
இம்முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்ரங்களிலும், அவற்றைத் தாண்டி, சகஸ்ராரத்திலுமாக, ஒவ்வொரு சக்ரத்திலும் மனத்தை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது. இதில் ஒவ்வொரு நிலையையும் படிப்படியாகக் கடந்து, சகஸ்ராரம் எனப்படும் ஆயிரம் இதழ்த் தாமரையை அடைந்தவுடன் யோகியானவன், மீண்டும், சகஸ்ராரத்தில் தொடங்கி, ஒவ்வொரு ஆதாரமாக மனத்தை நிறுத்தி ஜபம் செய்து, மீண்டும் மூலாதாரத்தை வந்தடைவது ஒரு சாதனையாகும். இதுவே புரஶ்சரணம் எனப்படும். [இந்த வழிமுறைக்கு, சித்தர்கள் பரிபாஷையில் ஏற்றடி இறக்கடி என்பர்]

படிப்படியாக முன்னேறுங்கள்.....

- சித்தர்களின் குரல்.

முருகன் வழிபாட்டு மந்திரங்கள்முருகன் காயத்ரி மந்திரங்கள் சில :ஓம் தத்புருஷாய வித்மஹேமஹாஸேனாய தீமஹிதன்ன: ஷண்முக ப்ரசோதயாத...
12/05/2026

முருகன் வழிபாட்டு மந்திரங்கள்

முருகன் காயத்ரி மந்திரங்கள் சில :

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

ஓம் கார்த்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்

*தேவசேனை*

ஓம் அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
க்ரியா சக்த்யை ச தீமஹி
தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.

*வள்ளி*

ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச தீமஹி
தன்ன: வல்லி ப்ரசோதயாத்.

*வேல்*

ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே
ஞான சக்த்யை ச தீமஹி
தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.

*மயில்*

ஓம் சுக்ல பாங்காய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்

ஓம் வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்

ஓம் நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி
தன்ன; மயூர ப்ரசோதயாத்

*சேவல்*

ஓம் அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய தீமஹி
தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்

ஓம் குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்.

மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)

" ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !! "

சக்தி வேலே!, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னைப் பஜிக்கிறேன். ஸ்ரீ குஹனின் கையில் அலங்காரமான சக்தியே !, தங்களுக்குப் பல நமஸ்காரங்களைச் செய்கிறேன். என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்.

எண்ணியதெல்லாம் ஈடேற்றும் சுப்ரமண்ய தியானம் :

" ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம் "

*-பிரம்மன் பாடிய சுப்ரமண்ய கவசம்*.

பொதுப் பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.

*சண்முக ஸ்தோத்ரம் :*

காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற

ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ

*ஸ்ரீ வல்லீ ஸ்தோத்ரம்*

ச்யாமாம் பங்கஜ ஸம்ஸ்திதாம் மணிலஸத் தாடங்க கர்ணோஜ்வலாம்- ஸவ்யே லம்பகராம் கிரீட மகுடாம் துங்கஸ்தனீம் கஞ்சுகாம்

வாமே பங்கஜதாரிணீம் சரவணோத் பூதஸ்ய ஸவ்யே ஸ்திதாம் குஞ்ஜாமால்ய தராம் ப்ரவாள வதனாம் வல்லீச்வரீம் பாவயேத்

*ஸ்ரீ தேவஸேனா ஸ்தோத்ரம்*

பீதாம் உத்பல தாரிணீம் சசினிபாம் திவ்யாம்பராலங்க்ருதாம் வாமே லம்பகராம் மஹேந்த்ர தனயாம் மந்தார மாலான்விதாம், தேவை அர்ச்சித பாதபத்ம யுகளாம் ஸேனானி வாமே ஸ்திதாம், திவ்யாம் திவ்ய விபூஷணாம் த்வி நயனாம் தேவீம் த்ரிபங்கீம் பஜே.🌹🏵️🙏🏵️🌹

12/05/2026

12/05/2026

Address

Shah Alam

Telephone

+60192141807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aanmiga Payaanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share