03/11/2024
மலேசிய இந்து சங்கத்தின் செர்டாங் வட்டாரப் பேரவையும், ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயமும் இணைந்து, சைவ சமயத் திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் மகிமைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இத்தெய்வீக நிகழ்ச்சியானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, செர்டாங்கிலுள்ள ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டிமுனி ஆலயத்தில் நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை. இறையருள் பெற கடவுள் பக்தி மிக முக்கியம். இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தாலே போதும், ஞானத்தையும் முக்தியையும் அடைந்து விட முடியும் என்பதையே, சிவனடியார்களான இந்த 63 நாயன்மார்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.இவர்கள் பற்றிய வரலாற்றினை மிகச் சுருக்கமாக நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி வாயிலாக நாம் அறிந்து கொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இவ்வாய்ப்பைத் தவற விடாமல், சுற்று வட்டார இந்துப் பெருமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறும்படி, அன்புடன் அழைக்கிறோம். இதுபோன்ற சமயம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மலேசிய இந்து சங்கத்தின் செயல் திட்டங்களுக்கு நமது வற்றாத ஆதரவையும் வழங்குவோம். இளம் தலைமுறையினரிடையே சமய உணர்வை வளர்ப்பதும் மேலோங்கச் செய்வதும் இந்துக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நமது சமயம் நமது உயிர். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.