மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்

  • Home
  • Malaysia
  • Semenyih
  • மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்

மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம் Help people live better lives & elevate them to super-consciousness
மக்கள் வளமா? Is there a Solution or Pathway in Sight? Yes!

Sri Agatthiyar Self Realization Centre

What do people really want & seek these days? To live in harmony
Improve economically
Peace with oneself
Greater self-esteem
None or minimal stress
Awareness in everything they do
Good physical and mental health
Delightful spiritual experiences
Manage their busy lives with ease
The desire to know the Self! Among others, and since 1999, Pertubuhan Kerohanian

Moral Sri Agatthiyar, Malaysia has been assisting numerous people to fulfill their desires and goals through guided spiritual practices, the focus of which is meditation and through counseling. About Pertubuhan Kerohanian Moral Sri Agatthiyar, Malaysia

A registered non-profit organization located in Semenyih, Selangor Darul Ehsan. The Centre helps people to elevate themselves spiritually and economically. Activities implemented at the Centre are based on the experiences and teachings of numerous Sages & Saints. The Centre is race, religion, nationality and gender neutral.

ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்

இன்றைய மக்களின் உண்மையான தேடலும் வேண்டுகையும் என்ன?

எல்லாரிடமும் இசைந்து வாழுதல்
பொருளியல் மேம்பாடு
தன்னகத்தில் அமைதி
உயர்வான தன் மதிப்பு
குறைந்த / அறவே இல்லாத மன அழுத்தம்
அனைத்து செயல்பாடுகளிலும் விழிப்புணர்வு
நல்ல உடல் அல்லது மன நலம்
பேரின்ப ஆன்மீகப் பட்டறிவு
பரபரப்பான் அன்றாட வாழ்வை எளிமையாக கையாளுதல்
தன்னையும் அறியும் வேற்கை

இதற்கான தீர்வு உண்டா? அல்லது வெறும் நடைபயண காட்சியா?

ஆம்! இதற்கான தீர்வைக் கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம் அளித்து வருகின்றது. இப்பீடமானது எண்ணிலடங்கா மக்களின் வேட்கையையும் இலக்குகளையும் ஆன்மீக பயிற்சி வழிக்காட்டுதலோடு நிறைவேற்ற துணை புரிகிறது. மன ஓர்மையும் (தியானம்) வழி காட்டுதலும் இப்பீடத்தின் முதன்மையான நடவடிக்கைகள் ஆகும்.

ஸ்ரீ அகத்தியர் அருள்ஞான பீடத்தைப்பற்றியொரு சில வார்த்தைகள்

செமினி, சிலாங்கூரில் அமைத்துள்ள இப்பீடம் பதிவு பெற்ற, ஈட்ட நோக்கம் இல்லாத இயக்கம். மக்கள் பொருளியல், ஆன்மீகவியள் வளர்ச்சி பெற இப்பீடம் பெரிதும் துணைபுரிகிறது. என்னற்ற சித்தர்களும் இறை அடியார்களும் பெற்றியர்களும் காட்டிய செந்நெறியில் பல்வேறு நடவடிக்கைகள் இப்பீடத்தில் நடைப்பெறுகின்றன. இனம், சமயம் பால் நாடு கடந்த நிலையில் அனைவருக்கும் இப்பீடம் உறித்ததாகும்.

Beautiful celebration of Sivaraja Yogi Aiya♥️Double celebration for us 🥰
05/01/2026

Beautiful celebration of Sivaraja Yogi Aiya♥️

Double celebration for us 🥰

அகஸ்திய மாமுனிவர் 🔥🔥
05/01/2026

அகஸ்திய மாமுனிவர் 🔥🔥

05/01/2026

Guru Aiya Speech ♥️

Osho ❤️
10/06/2022

Osho ❤️

❤️🙏🔥
03/06/2022

❤️🙏🔥

 #படித்ததில்பிடித்தது கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?துரோணாச்சாரியா...
22/03/2022

#படித்ததில்பிடித்தது

கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.

மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.

"குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன்", என்றானாம்.

கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று பாராட்டினார்!!!

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம். தொடங்கிய இடத்துக்கே வந்தாகனும் 🌎

 #படித்ததில்பிடித்தது ஆத்ம விசாரம்!ஓம் ஸ்ரீகுருவே சரணம் ♥️மனம் உடையவன் மனிதன். மனிதனுடைய மனமானது சதா சர்வ காலமும் ஏதாவது...
24/02/2022

#படித்ததில்பிடித்தது

ஆத்ம விசாரம்!

ஓம் ஸ்ரீகுருவே சரணம் ♥️

மனம் உடையவன் மனிதன். மனிதனுடைய மனமானது சதா சர்வ காலமும் ஏதாவது கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த கேள்விகளுக்குரிய விடைகள் மனிதனுக்குத் தெரிந்தால் மனித மனம் சமாதானம் அடைகிறது, அமைதி ஏற்படுகின்றது.

விடை தெரியாதபோது குழப்பம் உருவாகிறது.

கேள்வியும் பதிலும் மனிதனின் அறிவு வளர்ச்சி அடையும்போது, கல்வி கற்க ஆரம்பிக்கும்போது அவனைத் தொடர்வதாக நினைக்கிறோம்.

உண்மையில் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே மனிதன் கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறான்.

கர்ப்ப வாசம் ஆரம்பித்த ஒன்பதாவது மாதம் குழந்தைக்கு மனம் தோன்றி விடுகிறது.

உண்மையில் மனிதன் பிறப்பதற்கு முன்பே அவனிடம் சூட்சும வடிவில் மனம் இருக்கும்.

சூட்சும வடிவில் அமைந்த அந்த மனத்தின் செயல்பாட்டை தன்னுடைய ஒன்பதாவது மாத கர்ப்ப வாசத்தில் மனிதன் உணர ஆரம்பிக்கிறான்.

அப்போதே கேள்வியும் கேட்க ஆரம்பித்து விடுகிறான்.

ஆனால், குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதன் தேவ நிலையில் பரிசுத்தமாக இருப்பதால் அவனுடைய கேள்விகளுக்கான பதில்கள் அவனுக்குக் கிடைத்து விடுகின்றன.

எனவே கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை எந்த வித குழப்பமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது.

தாயின் கர்ப்பத்தை விட்டு வெளியே வந்து இந்த உலகத்தைப் பார்த்தவுடன் குழந்தைக்கு தன்னுடைய ஆயுள் காலம் எவ்வளவு என்பது தெரிந்து விடுகிறது.

தன் கடமை என்னவென்பதும் அக்குழந்தைக்குப் புரிந்து விடுகிறது.

இறைவனை அடைவதே மனிதனின் குறிக்கோள் என்பதைத் தெளிவாக அச்சமயத்தில் குழந்தை உணர்ந்திருக்கும்.

ஆனால், இறைவனை உணரும் மகத்தான பணிக்கு அதற்கு விதிக்கப்பட்ட 50, 60 ஆண்டு கால ஆயுள் நிச்சயமாக போதாது என்பதும் அதற்குத் தெரிய வரும்.

அதை நினைத்துதான் குழந்தை அழுகிறது. பிறந்தவுடன் குழந்தை அழும் காரணம் இதுவே.

பிறந்த குழந்தை வளர வளர யுக நியதியால் அதன் தெய்வீகத் தன்மை குறைந்து போவதால் மனிதனுக்குத் தோன்றும் கேள்விகளுக்கு அவனால் பதில் ஏதும் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

குழந்தை வளர்ந்து பள்ளிக்குச் சென்றவுடன் அங்கு வைக்கப்படும் தேர்வுகளுக்கு உரிய விடையைக் கூட, ஏற்கனவே படித்த பதில்களைக் கூட நினைவு கூர முடியாத நிலையை குழந்தைகள் அடையும்போது அவர்களுக்கு வேதனை ஏற்படுகிறது.

எனவே கேள்வியும் பதிலுமே மனித வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.

மனித வாழ்க்கையில் எந்த அளவிற்கு மனிதன் தான் சந்திக்கும் கேள்விகளுக்கு உரிய விடைகளைப் பெற முடிகிறதோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையை சந்தோஷமாக, நிம்மதியாகக் கழிக்க முடியும்.

அது முடியாதபோது அவன் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறான்.

கடன் தொல்லைகள் பெருகுதல், திருமணத்திற்கு முன் கர்ப்பம் தாங்குதல், வேதனை மிகுந்த நோய்கள் போன்றவற்றால் மனிதன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை அடைகின்றான்.

உண்மையில் இவை எல்லாம் விடை பெற முடியாத கேள்விகள் ஏற்படுத்தும் விளைவே.

எப்போது ஒரு மனிதன் தனக்குத் தோன்றும் அல்லது தான் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கு உரிய விடையை உடனே பெற முடிகிறதோ அப்போது அவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் ஆகின்றான்.

எல்லாக் கேள்விகளுக்கும் உரிய விடையை ஒரு மனிதன் பெற முடியுமா?

நிச்சயமாக முடியும்.

அது இறை மார்கத்தில் மட்டுமே சாத்தியமாகும்.

அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே.

மனிதன் என்பவன் இறைவனின் ஒரு துளியாக, ஒரு அம்சமாக படைக்கப்பட்டிருப்பதால் மனிதனும் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடையை தன்னிடமிருந்தே பெற முடியும்.

அதற்கு வழி வகுப்பதே ஆத்ம விசாரம் ஆகும்.

இந்த வினா விடை புதிரை மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால் அது இன்னும் சுவையாக இருக்கும்.

ஒரு மனிதனுக்கு இரண்டு சக்கர வாகனம் கிடைத்தால் ஆனந்தமாக இருக்கிறது.

அதே மனிதனுக்கே ஒரு கார் கிடைத்தால் அவன் இன்னும் சந்தோஷம் அடைவான்.

அவனுக்கு காரும் வண்டியும் இருந்தாலும் அவன் வசிப்பதற்கு ஒரு வீடு இல்லையென்றால் நிச்சயம் அவன் அமைதியாக உறங்க முடியாது.

எனவே ஒரு மனிதன் வசதிகளைப் பெருக்கிக் கொண்டு சந்தோஷம் அடைவது என்பது இந்த உலகில் சாத்தியமில்லை.

ஏனென்றால் எத்தனை கோடி பணம் சம்பாதித்தாலும் தனக்கு சுகமளிக்கும் எல்லாப் பொருட்களையும் எவராலும் வாங்க முடியாது.

இதை உணர்ந்த நமது முன்னோர்கள் போதும் என்ற மன நிறைவையே சந்தோஷமாக வைத்தார்கள்.

அதாவது வசதிகளைப் பெருக்கிக் கொள்வதால் கிடைக்கும் ஆனந்தத்தை விட வசதிகளைப் பற்றிக் கவலைப்படாத நிலையே ஒரு மனிதனுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.

கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவதே உண்மையான நிம்மதி.

மேலும் அதுவே நடைமுறையில் சாத்தியமானதும் கூட. அல்லவா?

இதே முறையில் ஆராய்ந்தால் ஒரு மனிதன் தனக்குத் தோன்றும் எல்லாக் கேள்விகளுக்கும் உரிய விடையைத் தேடுவதை விடை கேள்விகளே தோன்றாத நிலையை, எந்தக் கேள்விக்கும் விடை தேட வேண்டிய அவசியம் ஏற்படாத ஒரு நிலை ஏற்பட்டால் அதுவே உத்தமமான நிலை அல்லவா?

மனதில் எந்தக் கேள்விகளும் எழாத நிலையில் இருப்பவர்களையே நாம் மகான்கள், ஞானிகள் என்று அழைக்கிறோம்.

ஏன் ஞானிகளுக்கு கேள்விகள் எழுவதில்லை? மனிதர்கள் கேள்வியையும் பதிலையும் இரண்டு வெவ்வேறு அம்சங்களாகக் கருதுகிறார்கள்.

ஆனால், ஞானிகளோ கேள்வியையும் பதிலையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில்
கேள்வியும் பதிலும் ஒன்றே.

உதாரணமாக தேர்வுக்காக வினாத்தாள் தயாரிக்கும் ஒரு ஆசிரியர் என்ன செய்கிறார்?

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது என்று ஒரு கேள்வியை தேர்விற்காகத் தயாரிக்கிறார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்ற விடை அந்த ஆசிரியரின் மனதில் தோன்றிய பின்தான் அதற்குரிய கேள்வியைக் குறிக்கிறார்.

எனவே இங்கு கேள்விக்கு முன் வருவது விடை. ஆனால், மாணவனுக்கு இதுவே விடை தெரியாத கேள்வியாக மாறி விடுகிறது.

இவ்வாறு கேள்வி பதில் என்ற இரண்டை ஒன்றாகப் பார்ப்பவர்கள் ஞானிகள்.

கேள்வியை மட்டும் சந்திப்பவன் மனிதன்.

எனவே மனிதனுடைய கேள்விகளுக்கு உரிய விடையைத் தன்னுள் எப்படித் தேடுவது என்பதை உணர்த்துவதே ஆத்ம விசாரம் என்னும் தெய்வீக கோட்பாடாகும்.

உண்மையில் இறைவனை உணர்வதும் ஆத்மாவை உணர்வதும் ஒன்றே.

இறைவனை இந்த பொருளைக் கொண்டு அறியலாம்.

இந்த வழியாகச் சென்று இறைவனை தரிசனம் செய்யலாம் என்று எந்த பொருளையும் வழி முறையையும் சுட்டிக் காட்ட முடியாது.

இந்த உண்மையை சற்றே ஆராய்ந்து பாருங்கள்.

உலகில் உள்ள எந்த பொருளைக் கொண்டு சூரியனை நீங்கள் பார்க்க முடியும்?

இவ்வுலகில் ஒரு பொருள் இருக்கிறது என்று நாம் பார்ப்பதற்குத் தேவையான வெளிச்சமே சூரியனிடமிருந்துதான் வருகிறது எனும்போது சூரியனை எந்த ஒரு இரண்டாவது ஒரு பொருளைக் கொண்டு பார்க்க முடியும்?

நாம் ஒரு அறைக்குள் தாளிட்டுக் கொண்டு சூரியனைக் காணவில்லை என்று நினைக்கிறோம்.

அப்போது சூரியனைப் பார்ப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சி அறையை விட்டு வெளி வருவது ஒன்றுதான்.

வேறு எந்தப் பொருளும் சூரியனைக் காட்டாது.

அது போல இந்த உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமே இறைவனின் பெருங் கருணையால் தோன்றியதே.

எனவே இறைவனைக் காண நாம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இறைவனை மறைக்கும் பொருட்களைக் களைந்தால் போதும் மனிதனையும் இறைவனையும் மறைக்கும் மாயை என்னும் திரையை விலக்கினால் போதும்.

இறைவன் தன்னைத் தானே நமக்கு உணர்த்துவார்.

இறைவனைத் தவிர இரண்டாவது ஒரு பொருள் உலகில் இல்லாததால் இறைவன் அல்லாத இரண்டாவது ஒரு பொருளைக் கண்டு நாம் இறைவனை உணரவே முடியாது.

அப்படியானால் மாயை என்ற இரண்டாவது ஒரு பொருள் உண்டா என்ற சந்தேகம் ஏற்படலாம்.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்ட மனிதன் இறைவன் மட்டுமே இருக்கிறான் என்று உணரும் போது இல்லாத ஒன்று எப்போதுமே இல்லாததாக போய் விடுகிறது.

நீங்கள் இறை தரிசனம் பெறுகிறீர்கள்.

இவ்வாறு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள மாயை என்ற திரையைத் தோற்றுவிப்பது மனித மனமே.

மனிதன் தான் இந்த உடல் என்ற எண்ணம் கொண்டு இயங்கும் வரை இறைவனை உணர முடியாது.

உடம்பு என்ற கற்பனையைக் கடந்தால்தான் உண்மை விளங்கும்.

இறைவனை உணர்வதாக பெரியோர்கள் ஏற்படுத்தித் தந்த எல்லா வழிமுறைகளும் ஒரு விதத்தில் மனிதன் தன்னுடைய உடல் பற்றைத் தாண்டி செல்ல உதவும் வழி முறைகளே.

இதற்கு எளிமையான உபாயமே ஆத்ம விசாரம் ஆகும்.

ஆத்ம விசாரம் மிக மிக எளிமையானது.

மனிதனுடைய ஆத்மா என்பது இறை அம்சம் பொருந்தியது.

இறைவனின் ஒரு பகுதி என்றும் ஆத்மாவைக் கூறலாம்.

அது அழிவில்லாதது.

என்றும் எல்லையற்ற ஆனந்தத்துடன் இருப்பது.

இதற்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது.

ஆனால், மனித உடலுக்கு பிறப்பு என்ற ஆரம்பமும் இறப்பு என்ற முடிவும் உண்டு.

அழிவில்லாத ஆத்மாவைப் பெற்ற மனிதன் தன்னை அழியக் கூடிய உடலுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு உணவு, காசு, பணம், பெண் என்று உடல் சுகத்தைப் பெருக்கிக் கொள்ளும்போது எல்லையில்லா ஆனந்தத்தில் நிலைக்க வேண்டிய மனிதன் வேதனையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

இவ்வாறு மனிதனை நெறிப்படுத்தி என்றும் ஆனந்தமாய் வாழ பல வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

இவ்வாறு மனிதனை நெறிப்படுத்தி என்றும் ஆனந்தமாய் வாழ பல வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர் சித்தர் பிரான்கள். சித்தர்களின் வழிமுறை நடைமுறைக்கு எளிதாக ஒத்து வரக் கூடியது. உடலைப் பெற்ற மனிதன் அதை முற்றிலும் மறந்து இறை மார்கத்தில் ஈடுபடுவது என்பது கலியுக நியதிக்கு ஏற்புடையது அல்ல.

கலியுகத்தில் எந்த சுகத்தையும் அனுபவித்து திருப்தி அடைந்தால்தான் மீண்டும் அந்த சுகத்தை மனித மனம் நாடாது என்பதே சித்தர்கள் தரும் நல்லுரை. எந்த விஷயத்தையும் அது எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக ஒருவர் மேல் திணித்தால் அதற்கு மதிப்பு இருக்காது. ஒருவருடைய மனப் பக்குவத்தைப் பொறுத்தே அவருக்கு இறை மார்கத்தில் நாட்டம் ஏற்படும்.

ஒரு மனிதனுக்குத் தேவையான எல்லா சுகங்களையும் முதலில் பெற வழி வகுப்பதே 32 அறங்களாகும். நமது முன்னோர்கள் வகுத்த 32 அறங்களையும் எந்த அளவுக்கு நிறைவேற்றுகிறோமோ அந்த அளவுக்கு மனித வாழ்க்கையில் அடையக் கூடிய எல்லா சுகங்களையும் பெற்று வாழ முடியும். இவ்வாறு எல்லா சுகங்களையும் அனுபவித்த மனம்தான் உடல் சுகங்களை நாடாது.

32 அறங்களையும் இயற்றும் வழிமுறைகளை அறியாதவர்கள் ஸ்ரீஅகத்தியர் அருளிய பன்னிரு திருமுறைகளை ஓதி பாடல் பெற்ற தலங்களில் அன்னதானம் அளித்து வந்தால் அவர்கள் ஒரு மனிதன் பெறக் கூடிய எல்லா சுகங்களையும் பெற்று வாழ்வார்கள்.

இவ்வாறு உடல் சுகங்களிலிருந்து விடுதலை பெற்ற பின் ஐம்புலன்களால் வரும் சுகங்களை தத்தம் பொறிகளில் நிலைநிறுத்தும் ஆற்றலைப் பெற முயற்சி செய்ய வேண்டும். புலன்களும் பொறிகளும் அமைதி பெற்றால் மனம் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வளவு காலம் உடல் சுகத்திற்காக வெளியே சென்று அலைந்த மனம் உள்நோக்கி செல்ல ஆரம்பிக்கும்.

இவ்வாறு உடலை விட்டு நீங்கிய மனம் மெல்ல மெல்ல ஆத்மாவில் ஒன்றும்போது தான் யார் என்ற உண்மை விளங்கும். தான் யார் என்ற நிலை தெரிய வரும்போது தான் எங்கிருந்து வந்தோம் என்ற சூட்சுமம் புரிய வரும். இதுவே ஆத்ம விசாரம் எனப்படும்.

அதை அடுத்த நிலைகள் குரு மூலமாக உணர வேண்டியவை ஆகும். இவ்வாறு ஆத்ம விசார நிலைக்குத் தயாரானவர்களை குருவே உடனிருந்து அடுத்து வரும் நிலைகளை உணர்த்துவார் ♥️

எண்ணம் போல் வாழ்க்கை! #படித்ததில்பிடித்தது ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தான்.அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட...
06/12/2021

எண்ணம் போல் வாழ்க்கை!

#படித்ததில்பிடித்தது

ஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தான்.

அவர் பாதம் தொட்டு கும்பிட்டுவிட்டு.,
அவர் பாதம் கழுவி பின் குருவை பணிந்து வணங்கி நின்றான்.

அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.

அவன் மௌனமாக ஆமாம்.! என தலையாட்டிவிட்டு மெல்ல ஆரம்பித்தான்.

நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று ஒரு கேள்வியை கேட்டான்.

குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே.,
அவனை அருகில் அழைத்தார்.

மெல்ல அவன் தலையை கோதிவிட்டு., கன்னங்களை தட்டிக்கொடுத்தார்.

அவனது கண்களில்
முணுக்கென எட்டிப்பார்த்த கண்ணீரை மெதுவாக துடைத்து விட்டு., என் சிஷ்யன் கலங்கக்கூடாது என்று ஆறுதல் படுத்திய குரு நான் உனக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்., பொறுமையாக கேள் என்று மெல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தான்.

ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடப் போனான்.

வழியில் அவன் பரிவாரங்களை விட்டு வழி தவறி போய் விட்டான்.

அவர்களை தேடித் தேடி காட்டுக்குள் ரொம்ப தூரம் போய் விட்டான்.

ரொம்ப களைப்பு., பசி., தாகம்., கொஞ்சம் பயம் வேறு.

சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் உட்கர்ந்து விட்டான்.

அது ஒரு கற்பக மரம்.

நம் மனத்தில் நினைப்பதை எல்லாம் அப்படியே நிறைவேற்றி வைக்கும் அற்புத சக்தி கொண்டது.

ஆனால் அது அந்த இளவரசனுக்குத் தெரியாது.

ரொம்ப தாகமா இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான்.

சற்றே திரும்பி பார்த்தால்., அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி., அதில் குமிழியிட்டு நல்ல தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது.

தாகம் தீர குடித்தான்.

சற்று நேரத்தில் பசி வந்தது.

ஏதாவது சாப்பிட கிடைத்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தான்.

அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன.

அவனுக்கிருந்த பசியிலும்., களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை.

அந்த பழங்களை உண்டு பசி ஆறினான்.

பிரயாணக் களைப்பு., உண்ட மயக்கம்., தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது.

அடடா இப்ப பஞ்சு மெத்தையோடு ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்.

உடனே ஒரு கட்டில் வந்தது.

ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான்.

'டங்' என்று ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள்.

அசந்து தூங்கினான்.

திடீரென்று முழிப்பு வந்து விழித்துக் கொண்டான்.

என்னடா இது,நாம நினைக்கிறது எல்லாம் நடக்கிறதே.,ஒரு வேளை இது ஏதாவது பிசாசோட வேலையா இருக்குமோ..அந்த பிசாசு இங்க வந்துட்டால்..? என்று நினைத்தான்.

'டங்'என்று ஒரு பெரிய பிசாசு வந்தது.

கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே.

ஐயோ., இந்த பிசாசு நம்மை கடித்து தின்று விடுமோ..? என்று நினைத்தான்.

அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது.

இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம் என்று சற்று நிறுத்திய குரு
பிறகு தொடர்ந்தார்.

நல்ல பெண் என்று தான் நினைத்து நாம் திருமணம் செய்து கொள்கிறோம்.

இவள் தான் வேண்டும். இவள் இல்லாவிட்டால் வாழ்கையே இல்லை என்று நினைக்கின்றோம்.

திருமணம் முடிந்து வாழ ஆரம்பித்தவுடன்., ஐயோ., இவளுக்கா ஆசைப் பட்டோம் என்று நொந்து கொள்ளுகிறோம்.

ஆசை ஆசையாக நிலத்தை வாங்கி வீட்டை கட்டுகிறோம். அக்கம் பக்கம் தொல்லை ஏற்பட்டவுடன் ஏண்டா இங்க வந்தோம் என்று ஆகி விடுகிறது.

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளைகள் திரும்பிப் பார்க்காமல் போய் விடுகின்றன,

மனம் கிடந்து கவலையில் உழல்கிறது.

இப்படி வேண்டும் வேண்டும் என்று கேட்டது எல்லாம் பின்னாளில் வேண்டாம் வேண்டாம் என்று மறுதலிக்கும் படி ஆகி விடுகிறது என்று சொல்லிவிட்டு.சற்று நிறுத்தியவர் கடவுளுக்குத் தெரியாதா ?நமக்கு என்ன வேண்டும் என்று அவனை பார்த்து ஒரு கேள்வியை கேட்டார்.

அவனுள் ஞானம் பிறந்தது.

பிறகு., அவருக்கான பணிவிடைகளை செய்து விட்டு திரும்பவும் குருவின் காலடியை தொட்டு வணங்கிவிட்டு அவன் இருப்பிடம் நோக்கி திரும்பினான்.

இதைத்தான் மாணிக்கவாசகர் கீழ்கண்ட பாடல் மூலம் எல்லாவற்றையும் அவனிடமே விட்டு விடு அவன் பார்த்து செய்யட்டும் என்று என்கிறார்.

*பாடல்*

*வேண்டத் தக்க தறிவோய் நீ*

*வேண்ட முழுதுந் தருவோய் நீ*

*வேண்டும் அயன்மாற் கரியோய் நீ*

*வேண்டி என்னைப் பணி கொண்டாய்*

*வேண்டி நீயா தருள்செய்தாய்..*

*யானும் அதுவே வேண்டின் அல்லால்*

*வேண்டும் பரிசொன் றுண்டென்னில்*

*அதுவும் உன்றன் விருப்பன்றே.*

பொருள்

வேண்டத் தக்க தறிவோய்நீ = வேண்டத் தக்கது அறிவோய் நீ = எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.

வேண்ட முழுதுந் தருவோய்நீ = எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்

வேண்டும் = வேண்டுகின்ற

அயன்மாற் கரியோய்நீ = அயன் + மால் + அரியோய் நீ. விரும்புகின்ற பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் நீ அரியவன்.

வேண்டி = நீயே விரும்பி

என்னைப் பணிகொண்டாய் = என்னை உன் பணியாளனாக ஏற்றுக் கொண்டாய்

வேண்டி = விரும்பி

நீயா தருள்செய்தாய் யானும் = நீ எனக்கு என்ன அருள் செய்தாலும்

அதுவே வேண்டின்அல்லால் = அதுவே நானும் வேண்டினேன், அல்லாமல்

வேண்டும் = நான் வேண்டும், நான் விரும்பும்

பரிசொன் றுண்டென்னில் = பரிசு என்று ஒன்று இருந்தால்

அதுவும் உன்றன் விருப்பன்றே. = அதுவும் உன்னோட விருப்பம். எனக்குன்னு ஒரு விருப்பமும் கிடையாது.

இறைவா,

எனக்கு வேண்டியது எது என்றுஉனக்குதான் தெரியும். அதை நான்விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.

பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.

நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான்அதையே உன்னிடம் வேண்டுவேன்.

’ம்ஹூம், அதெல்லாம் சரிப்படாது, நீயாக எதையாவது கேள்’ என்கிறாயா?

நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?

தென்னாடுடைய சிவனே போற்றி !!!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!

எம்பெருமான் அகத்தியர் ☘️மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
23/08/2021

எம்பெருமான் அகத்தியர் ☘️

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்

மீண்டும் ஒருமுறை ❤ பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான். எப்படி பால் பொங்கி வழிகிறதோ, அதேபோல் மறுபக்கம் சந்தோஷமும் பொங்கி வழ...
15/01/2021

மீண்டும் ஒருமுறை ❤

பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான். எப்படி பால் பொங்கி வழிகிறதோ, அதேபோல் மறுபக்கம் சந்தோஷமும் பொங்கி வழிந்தோடும் தமிழர் திருநாளே தைப்பொங்கல்.

ஒருவகையில், பிரபஞ்சத்திற்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி நவிழ்கிறோம் என்றுதான் கூறவேண்டும். உலகமே கொண்டாடும் இத்தெய்வத் திருநாளை, நாம் என்றுமே மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

தினமும் நாவில் வைக்கும் அந்த முதல் சோற்று பருக்கைக்காக, முதற்கண் நன்றி. உழவன் உலகின் உயிர், உழவனையும், உதவிய அக்ரிணைகளையும், உழவு தொழிலையும் மதிக்க பழக வேண்டும். நாம் என்ன செய்யலாம்? சாப்பிடும் முன் மனதார நன்றி சொல்லி வாழ்த்தலாம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை, இதற்கும் பொருந்தும் !

தன்னை வறுத்தி, பின்பு அந்த மண்பானைக்கு உஷ்ணம் கொடுத்து, அரிசியை பதமாய் வேக வைக்க, தோள் கொடுகின்றன, சூடம், தீக்குச்சி மற்றும் செங்கற்களும் விறகுகளும். அதே போல் நம் வாழ்க்கையிலும் நம்மால் முடிந்தவரை அனைவருக்கும் உதவுதல் அத்தியாவசியமான ஒன்று. தேவைப்பட்டால் ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தி விடவும் தயங்க கூடாது.
நீ எதை விதைக்கிறாயோ, அதையே நீ அறுவடை செய்வாய்!

பொங்கல் பொங்கி வரும் வேளையில், சூரிய பகவானின் வருகைக்காக காத்திருந்து, அவரின் ஒளி கதிர்கள் நம் மேல் பாயும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண் பார்வை திறன் அதிகரித்து, இரத்த அழுத்தங்கள் மற்றும் உடல் கொழுப்புகள் குறைந்து, மன அமைதி நிலைத்து நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் வழி வகுக்குகின்றது. அடுத்த சந்ததியினரான குழந்தைகளுக்கு இதனை சொல்லிக் கொடுங்கள், நம்மை பார்த்து வளரும் நெற்மணிகள், நாளை அவர்களின் வாழ்க்கை பொங்கல் போல இனிக்க வேண்டுமல்லவா? அதற்காக!

அதிகாலையில் எழுந்து, ஒற்றுமையாக வேலை பார்த்து, பொங்கல் பொங்கி வரும் வேலையில் சந்தோஷமாக ஆடி பாடி, கூடி பேசி களிக்கும் அந்த நிமிடங்கள் பசுமையானவை. மனம் விட்டு பேசுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், எல்லாம் சரியாகும்.

நம்மை எந்நேரமும் முடக்கி வைத்திருக்கும் தொ(ல்)லைபேசிகளை தூர போடுங்கள், வாழ்க்கை
அழகாகும்!

புதுப்பானை, புதுப்பால், புது அரிசி, புது துணிமணிகள், அப்பப்பா, பொங்கலன்று எல்லாமே புதுசுதான். பழசுகளைதான் போகியன்று எரித்து விட்டாச்சே, உண்மைதான்.

முடிந்தால் உங்களுக்குள் இருக்கும் எல்லா 'பழசுகளையும்' எடுத்தெறிந்து விடவேண்டும். தீய எண்ணங்கள், நிலையில்லா வாழ்க்கை கொள்கைகள், அளவுக்கதிகமான சிந்தனைகள் என எதுவெல்லாம் உங்களை புதிப்பிக்க வில்லையோ, அவற்றை எல்லாம் தீயிலிட்டு விடுங்கள். அப்போதுதான் நாம் வாழும் வாழ்க்கையும் தித்திப்பாக இருக்கும், கரும்பைப் போல

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - திருக்குறள்"

எப்படி நாம் பொங்களில் இனிப்பு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை என நல்ல உணவு வகைகளை சேர்த்து கொள்கிறோமோ, அதே போல நல்ல ந(ண்)பர்கள், நல்ல எண்ணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என எல்லா நல்ல விஷயங்களையும் நம்முள் சேர்த்துக் கொள்வதால் வாழ்க்கையே அமிர்தமாகும்.

உன் ஆனந்தம், உலகின் பேரானந்தம்!

பொங்கலன்று சானம் நீர் தெளித்து அரிசி கோலம் போடுவது வழக்கம். சானம் நம்மை கிருமி நாசினிகளிடமிருந்து காக்க வல்லது. அரிசி கோலம், எறும்பு வகை பூச்சிகளுக்கு நாம் இடும் அன்னதானம்.
"ஐயமிட்டு உண்" - பசியோடிப்பவர்க்கு ஈந்து அதன் பின் நாம் உண்ண வேண்டும் ❤ அவ்வை பாட்டி சொன்னது!

'யோகிகள் நாங்கள்', என்று வாய் வார்த்தையோடு நின்று விடாமல், ஒவ்வொரு நாளும் 'சூர்ய நமஷ்காரம்' செய்து உடலையும் உள்ளத்தையும் பேணி காத்தல் அவசியமாகும். ஒரே ஒரு நாள் சூரிய பகவான் உதிக்காமல் போனால் என்னவாகும் உலகம்? இருள் சூழ அமர்ந்திருப்போம். இன்று பொங்கல் என நன்றி கூறி, நாளை மறவாமல் இருக்க, தினம் தினம் மனதார நன்றி கூறுவோம், யோகாசனம் பயில்வோம். வாழ்க்கை பிரகாசிக்கும் கதிரவனை போல!

பொங்கல் பொங்கி விட்டதா? இனிப்பு சேர்த்தீர்களா? எல்லாருக்கும் பகிருங்கள், நல்ல விஷயங்கள் பகிரபட வேண்டும்!

கதிரவனுக்காக வானத்தை அன்னார்ந்து பார்த்தீர்களா? வாய்ப்புக் கிடைத்தால் அடிகடி பாருங்கள், இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு புள்ளிதான் என்பது தெரியவரும்!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையும் தித்திப்பாக அமைய கடவுளைப் பிராத்திக்கிறேன். ஓம் அகத்திசாய நம!

#அகத்தியன்தோழி
#மீண்டும்ஒருமுறை
#பேனாவைகையிலேந்துகிறேன்
#தித்தித்திக்கும்பொங்கல்2021

Address

Lot 5682, Fasa 1A, No 55, Jalan Kesuma 6, Bandar Tasik Kesuma, Mukim Beranang, Daerah Hulu Langat
Semenyih
43500

Alerts

Be the first to know and let us send you an email when மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்:

Share