18/07/2025
நமது ஆலயத்தின் இவ்வாண்டுக்கான ஆடி வெள்ளி திருவிழா பக்தர்களின் ஆதரவோடு சிறப்பாக நடந்து முடிந்தது. பால்குடம், அக்கினிச்சட்டி என பல முறையில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளைப் போல திருவிழா கோலாகலமாக இல்லாவிட்டாலும், ஆலயத்தின் நில விவகாரத்தை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைத்து மக்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து இரவு, சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற உள்ளது. அதில் பக்தர் கோடிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.