Malaysia Hindu Sangam Kapar

Malaysia Hindu Sangam Kapar Religious Activities

திருச்சிற்றம்பலம்"திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி"திருஞானசம்பந்தர்சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரி...
02/06/2026

திருச்சிற்றம்பலம்

"திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி"

திருஞானசம்பந்தர்

சைவநெறி தழைத்தோங்க பாடுபட்டவர்களில் தேவார மூவரின் பங்களிப்பு பெரிதாகும். இவர்கள் தந்த பண்சுமந்த பாடல்கள் தோத்திரப் பாக்களாக உள்ளன. இவர்கள் பாடிய தலங்கள் திருமுறைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அழைக்கப்படுகின்றனர். தேவார மூவரில் இளம் வயதிலேயே தெய்வ அருள் பெற்று பாடல்களை இயற்றியவராகத் திருஞானசம்பந்தர் விளங்குகிறார்.

பிறப்பு:

சோழ நாட்டில் பிரமபுரம், வேணுபுரம், காழி என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழியில் சிவபாத இருதயாருக்கும், பகவதியம்மாளுக்கும் மகனாக கி.பி. 637 ஆம் ஆண்டு சம்பந்தர் பிறந்தார்.

ஞானப்பால் உண்டல்:

ஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையார் சம்பந்தரைத் தோணியப்பர் ஆலயக்குளக்கரையில் அமரவைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். நீருக்குள் மூழ்கி தந்தை மந்திர உரு செய்தார். நெடுநேரமாகியும் தந்தை வராதலால் சம்பந்தர் அழுதார். அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் கையில் வைத்திருந்த அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார்.
குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். அப்பொழுது ஞானசம்பந்தர் “தோடுடைய செவியென்” என்ற நட்டபாடை பண்ணில் திருவாய் மலர்ந்தருளி தொடர்ந்து பல சைவம் தழைத்தோங்க பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் :

பொற்றாளம் பெற்றது;

முயலகன் நோய் தீர்த்தது;

யாழ்மூரி பாடியது ;

வாசித்தீரக் காசு பெற்றது;

பாம்பு தீண்டப்பெற்று இறந்த வணிகனை “சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் மூடப்பட்டிருந்த மறைக்கதவத்தைத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்த கோளறு பதிகம் பாடினார்.
மங்கையற்கரசியாரின் அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்றார். ஆலவாய் இறைவனைப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்றார். கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருநீற்றுப்பதிகம் பாடினார். திருக்கொள்ளம்புதூரில் “கொட்டமே கமழும் கொள்ளம் புதூர் என்று தொடங்கும் காந்தாரப் பஞ்சமம் பண்ணமைந்த பதிகம் பாடி ஓடம் செலுத்தினார்.
திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்தார். பின்பு தொண்டை நாடு சென்றார். திருவோத்தூரை அடைந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனையாக இருந்தன. இதனை,
“பூந்தோர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி” எனத் தொடங்கும் பழந்தக்கராகம் பண்ணமைந்த பதிகம் பாடி பெண்பனையாக்கினார். மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாவையை “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” எனத் தொடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பெண்ணாக எழுப்பிவித்தார்.
இறுதியில் திருப்பெருமணம் என்னும் கோயிலை அடைந்தார். இக்கோயில் ஆச்சாள்புரம் என்னும் தலத்தில் உள்ளது. இங்கு இவருக்கு வைகாசி மாதம் மூலநாளில் திருமணம் நடைபெற்றது.
“கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.
மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். தோடுடைய செவியன் எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன. இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

திருஞானசம்ந்தரின் குருபூசையான இன்றய நன் நாளில் "தமிழையே ஆடையாக கொண்ட" (தமிழாகரன்) சம்பந்தரின் திருவடிகளை வணங்கி அவர் திருவாய் மலர்ந்தருளிய பதிகங்களை ஒப்புவிப்போமாக...

"திருஞானசம்பந்தர் திருவடி போற்றி போற்றி"

திருச்சிற்றம்பலம்

கிள்ளான் அமான் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஓர் இந்து குடும்பத்தினருக்கு வீட்டு மளிகைச்சாமான்களை ம...
14/05/2026

கிள்ளான் அமான் பெர்டானா அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஓர் இந்து குடும்பத்தினருக்கு வீட்டு மளிகைச்சாமான்களை ம இ சங்க காப்பார் வட்டார சமயப்பகுதி பொறுப்பாளர் தொண்டர்மணி செல்லதுரை இராமசாமி எடுத்து வழங்கினார். ம இ சங்க காப்பார் வட்டார சமூக நலன் பொறுப்பாளர் மற்றும் Meru KKI பொறுப்பாளர் திரு.வாசுதேவன் சங்கரன் ஏற்பாட்டில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காலணி, சீருடை , புத்தகப்பை வழங்கப்பட்டது. அதே வேளையில் அக்குடும்பத்தினர்க்கு சமய அறிவுரைகளும் எடுத்துரைத்து
" நமசிவாய " ஒட்டுப்படம் (ஸ்டிக்கர்) வழங்கப்பட்டது.

10/05/2026
மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப்பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிறு 10/5/2026 கோத்த கமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய...
10/05/2026

மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப்பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிறு 10/5/2026 கோத்த கமுனிங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பொறுப்பாளர்களுக்கான சந்திப்புக்கூட்டத்தில் ம இ சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையின் சார்பாக ஆசிரியை மகேஸ்வரி மற்றும் தொண்டர்மணி செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

*மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் இளைஞர் பிரிவு தலைவர் தம்பி சிவராம் அர்ஜுனன் அவர்கள், மலேசிய இந்து சங்கம...
02/05/2026

*மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் இளைஞர் பிரிவு தலைவர் தம்பி சிவராம் அர்ஜுனன் அவர்கள், மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில பேரவையின் இளைஞர் பிரிவு தலைராக நியாமான கடிதத்தை இந்து சங்கம் தேசிய தலைவர் சிவ நெறி செல்வர் ஸ்ரீ காசி தங்க கணேசன் அவர்களிடமிறந்து பெற்றுக்கொண்டர்.*

Congratulations Sivaram Arjunan Selangor State Youth Leader

இன்று *மலேசிய இந்து சங்கம் சிலங்கூர் மாநில பேரவையின் 41 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், சுங்கை ரெங்கம் மாநாட்டு மையத்தில் சிறப்...
02/05/2026

இன்று *மலேசிய இந்து சங்கம் சிலங்கூர் மாநில பேரவையின் 41 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், சுங்கை ரெங்கம் மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது, இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில், நமது மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் மகிளிர் பிரிவு தலைவி திருமதி சுமதி டாத்தோ முத்துப்பிள்ளை அவர்களுக்கு, அவர்தம் சமய சேவையை அங்கீகாரிக்கும் வகையில் அவருக்கு "தொண்டர்மனி" என்ற உயரிய விருதை வழங்கி சிறப்பித்தமைக்கு,காப்பார் காப்பார் வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக ரத்னா அருநேசன் ஜெயபாலன் அவர்தம் செயலாளவை உறுப்பினர்கள், தேசிய தலைவர், மாநில தலைவர் அனைவரும் பாராட்டுக்களையும் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்*

Dear Respected *Local Council Chairman* and *Committee Members,and Hindu Sangam Life Members(LMI), and also Temple Membe...
30/04/2026

Dear Respected *Local Council Chairman* and *Committee Members,and Hindu Sangam Life Members(LMI), and also Temple Membership (LMT)*
Please find attached the *Notice of the 41st Annual General Meeting of the Malaysia Hindu Sangam Selangor State Council.*
📅 Date: *02 May 2026 (Saturday)*
🕑 Time: *2:01 PM*
📍 Venue: *Sungai Renggam Convention Centre (SRCC), Shah Alam*
All Local Council Chairmen, EXCO Members, Committee Members, and MHS Selangor State Council Members are kindly requested to attend the meeting.
⚠️ _Important Note_ :
_As stated in the agenda, there will be no gener version

திருச்சிற்றம்பலம் 🙏🏻 வணக்கம்Semalam telah berlangsung dengan jayanya Mesyuarat Jawatankuasa Malaysia Hindu Sangam Majlis...
24/04/2026

திருச்சிற்றம்பலம் 🙏🏻 வணக்கம்

Semalam telah berlangsung dengan jayanya Mesyuarat Jawatankuasa Malaysia Hindu Sangam Majlis Kapar seperti yang telah dijadualkan.

Malaysia Hindu Sangam Majlis Kapar

திருச்சிற்றம்பலம்மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவை ஏற்பாட்டிலான திருமுறை விழாவிற்கான விதிமுறைகள் பற்றிய விளக்கம...
19/04/2026

திருச்சிற்றம்பலம்
மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவை ஏற்பாட்டிலான திருமுறை விழாவிற்கான விதிமுறைகள் பற்றிய விளக்கம் கூட்டம் இன்று ஞாயிறு 19/4/2026 கூட்டுப்பிரார்த்தனை அன்பர்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம் தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில்  மலேசிய இந்து சங்கம் காப...
19/04/2026

திருச்சிற்றம்பலம்
தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையின்
(சிலாங்கூர்) வாராந்திர சமய வகுப்பு 18/4/2026 சனிக்கிழமை இரவு மணி 7.00 முதல் 8.00வரை தே.வ. வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. கலந்து கொண்ட மாணவர்கள் 15 பேர்.

இறை வாழ்த்து
பிரணவம்
ஐந்து கரத்தனை
தோடுடைய செவியன்
திருமுறை பாடல் பயிற்சி( பிரிவு 2 முதல் பிரிவு 3 வரை)
உலகெலாம் உணர்ந்து
இறை வாழ்த்து
மாணவர்களுக்கு திருமுறை தொடர்பான விதிமுறைகள் விளக்கம் அளிக்கப்பட்டது

மாணவர்கள் " நான் ஓர் இந்து" என்ற வாசகத்தை வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

ஆசிரியர்: தொண்டர்மணி இரா.செல்லதுரை

என்றும் இறைச்சேவையில்
சமயப்பகுதி பொறுப்பாளர் தொண்டர்மணி இரா.செல்லதுரை
திருச்சிற்றம்பலம்

Address

Kapar
41050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malaysia Hindu Sangam Kapar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share