Kurumankadu christian assembly

Kurumankadu christian assembly k.christianassembly.com

உலகம் நாளை அழிந்து விடுமா? பதில் இங்கே?
20/12/2012

உலகம் நாளை அழிந்து விடுமா? பதில் இங்கே?

20/12/2012
கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:3...
30/03/2012

கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.
கர்த்தருக்குக் கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.( உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29) விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக். 1:22)
கர்த்தர்மேல் நாம் காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன் அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம் என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.
எல்லா அதிகாரமும் அவருடைய பூரண திட்டத்தின்படி கர்த்தரிடத்திலிருந்து வருகிறதென்று உணர்ந்து எங்களுக்குமேலாக அதிகாரிகளாக கர்த்தர் ஏற்படித்தியிருக்கும் மனிதர்களுக்கும் நாங்கள் கிழ்ப்படியவேண்டும், ( எபி. 13: 7, 17. 1.பேதுரு2:13,14) அடிமைகள் எஜமானுக்கு கீழ்ப்படிகிறார்கள் (கொலோசியர் 3:22) கிறிஸ்தவர்கள் ஆலயத்தலைவர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள்,( 1தெச 5: 12,13. எபி 13:7) பிரஜைகள் தங்கள் அரச ஊழியர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள் ( எபி 13:7)
கீழ்படிதல் என்பது தன்னியக்கமாகசெயலபடும் ஒருசெயற்பாடல்ல. இது கற்றுத்தேறவேண்டியது, அத்துடன்நேர்மாறானது, நாம் இதை பிள்ளைகளுக்குப்போதிக்கவேண்டும். ( உபா. 6: 7-9) கர்தருடைய திட்டத்தின் பங்காளராகவிருக்கும் அதிகார வரிசையிலுள்ளவர்களுக்கும் கீழ்படிதல் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அபிவிருத்திசெய்வதற்கு அவசியமானது, ஆகவே எங்களுடையசொந்த விருப்பங்களை நிறைவுசெய்வதல்ல ஆனால் சுவிஷேசத்தை மற்றவர்களுக்கு அறிவித்தலும் முக்கியமானதாகும்.
எங்களுக்குக்கொடுத்த அதிகாரங்களுக்குக் கீழ்படியும்போது, கர்த்தருடைய கட்டளைகளை உடைத்துப்பொடக்கூடாது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும் (மேசேயின் தாய்மோசேயை ஒளித்துவைத்தல், தானியேலையும், சாத்திராக்,மேசாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதிகாரிகளுக்கு கீழ்படியாமல் முற்றுமுழுதாக கர்த்தருடைய கட்ளைக்கு கீழ்ப்படிந்தார்கள்—யாத். 1:17, 2:3-10, தானி. 3: 9-26, 6: 13-22) நாங்களும் எங்கள் அதிகாரிகளின்வேண்டுதலுக்கு நீதிநியாயத்தின் ரையறைக்குள் எங்கள்சொந்த விருப்பங்கள், முன்னுரிமை,அபிப்பிராயங்கள், அல்லது உணர்வுகளுக்கு ஏற்றபடசெயற்படாமல் கிழ்படிதல்வேண்டும்.—எங்கள் கீழ்படிதலை மதிக்கும்படியும்,எங்கள்மேலுள்ள அதிகாரிகளை வழிநடத்தும்படியும், கர்த்தருடைய விருப்பத்தின்படி அவர்கள்செயற்படும் கர்த்தரை நம்பவேண்டும். எங்களுடைய கீழ்படிதலின் பலாபலன்கள் அவருடைய அதிகாரத்திலுள்ளது.
கர்த்தர் எங்கள் எதிரிகளிடமிருந்து விடுதலைகிடைக்கும் என்று வாக்குக்கொடுத்துள்ளார். (யாத். 23:22), பலமும், ஆசீர்வாதமும் நாங்கள் கீழ்ப்படிவதைப்பொறுத்தேயுள்ளது. மறுபக்கத்தில் பார்ப்போமாகில் கீழ்ப்படியாமை பொருளாதரம் சம்பந்தமாகவும், மனவுளைச்சல்கள்சம்பந்தமாகவும், ஆவிக்குரிய விதமாகவும்அழிவைக் கொண்டுவரும். அப்படியிருந்தும், கீழ்படியாமையானது பாவசுபாவத்தின் ஒரு பகுதியாகவும் ஒருக்கிறது, அத்துடன் எங்கள் வாழ்க்கையில் அதைத்தவிர்க்கமுடியாமலுள்ளது. இஸ்றவேலர்கள் அடிக்கடி கர்த்தருடைய சத்த்த்தைக்கேட்காமலும் அதன்படி நடக்கவும் தவறியுள்ளார்கள்.( எரேமியா 713, ஓசியா. 9:17) நாங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், எங்கள் கீழ்ப்படியாமை மன்னிக்கப்படக்க கூடயது என்பதை இருதயத்தில்வைத்துக்கொள்ளல்வேண்டும். தங்களுடைய கீழ்ப்படிதலை அறிக்கைசெய்து இனிமேல் கீழ்ப்படிவேன் என்று புதிய தீர்மானம்செய்பவர்களுக்கு கர்த்தர் தன்னுடைய அளவற்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் முற்றுமுழுவதுமாக் கொடுக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார்.(றோமர். 11: 30-32)

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை
24/03/2012

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை

God Tests AbrahamGod tests Abraham. He wants him to take Isaac, his beloved son and offer him as a sacrifice on one of t...
24/03/2012

God Tests Abraham
God tests Abraham. He wants him to take Isaac, his beloved son and offer him as a sacrifice on one of the mountains. Abraham, without any hesitation or objections, got up early in the morning, took Isaac and two of the men to the place which God told him of. The journey took more than one day.

Only Abraham and Isaac went up to the mountain. Noticing that they had everything except the sacrifice, Isaac asked his father, “Where is the lamb for the burnt offering?” Abraham’s reply was very interesting, prophetic. ”God will provide Himself a lamb for a burnt offering.” Instead of us sinners dying for our sins because we had broken the law, God provided in our place, Jesus. Jesus was the Lamb of God who takes away our sins.

When they got to the place which God told him about, Abraham built the altar and put Isaac on it. One can’t help but wonder what was going through Isaac’s mind when he realized that he was the sacrifice–the lamb. How do he feel when his father raised his hand to slay him? Was he relieved when the voice of heaven called out to Abraham saying, “Lay not thine hand upon the lad, neither do thou anything unto him”?

Abraham himself was not worried about the outcome because he remembered the promise God had made to him that, “in Isaac shall thy seed be called .” The author of Hebrews wrote that Abraham believed that God would raise Isaac from the dead. He did, figuratively when a ram caught in a thicket by his horns materialized. The ram was offered in Isaac’s place.

We see a lot of parallels here. The ram died as a substitute for Isaac just as Jesus died as our substitute. Abraham so loved God that he was willing to sacrifice his son. God so loved the world that He sacrificed His only begotten Son so that whosoever believed in Jesus would not perish but have everlasting life (John 3:16). Issac’s birth was promised just as Jesus’ was.

24/03/2012
21/03/2012
21/03/2012
பிசாசின் தாக்கத்தின் உண்மைத் தன்மை: வேதாகமத்தின் குறிப்புக்களும் அனுபவங்களும்.சிலவேளைகளில் அதிக விவாதத்திற்குரிய கேள்வி ...
20/03/2012

பிசாசின் தாக்கத்தின் உண்மைத் தன்மை: வேதாகமத்தின் குறிப்புக்களும் அனுபவங்களும்.
சிலவேளைகளில் அதிக விவாதத்திற்குரிய கேள்வி என்னவென்றால். “ உண்மையான விசுவாசி பிசாசினால் தாக்கத்திற்குள்ளாவானா? இங்கு பிசாசு பீடித்தல் பற்றி நான் பேச வில்லை என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிசாசு பீடித்தல் என்பது ஒருவரை தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதாகும். கிறிஸ்தவர்கள், கீழ்ப்படியாதவர்களும் கூட, கர்த்தருக்குரியவர்கள், சாத்தானுக்குரியவர்களல்ல. சாத்தான் அவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியாது. எப்படியோ, பிசாசின் தாக்கம் என்பது சற்று வித்தியாசமானது. பிசாசின் தாக்கம் என்பது சாத்தான் தன்னுடைய பிசாசுகள் மூலமாகநேரடியாகத் தாக்குகின்றான், ஒரு கிறிஸ்தவனுடைய அல்லது கிறிஸ்தவனல்லாத ஒருவருடைய வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதலாகும்.
கிறிஸ்தவர்களுக்கு இப்படி நடக்குமா?
வேதாகமத்தின் பிரகாரமும், கிறிஸ்தவர்களின் அனுபவத்தின்படியும் இது முடியும். பிசாசு வீழ்ந்ததைப்போல் வீழ்ந்து தண்டனைக்கு உட்படவேண்டா மென்று கிறிஸ்தவர்களை வேதாகமம் எச்சரிக்கின்றது அல்லது பிசாசின் வலையில் விழவேண்டாமென்று எசரிக்கின்றது.( 1 திமேத் 3: 6-7) அவைகள் “ விசுவாசிகள் பிசாசின் பக்கம் சாய்கிறார்கள்” என்று கூறுகின்றன. ( 1 திமே. 5:15) சாத்தான் தாக்குகிறது என்று கூறுகிறது. அவர்கள் எப்படி “சாத்தானை விசுவாசத்தில் உறுதியாக எதிர்பது என்று அறியாவிட்டால்” அவர்கள் “பிசாசினால் விழுங்கப்படுவார்கள்”. (1பேதுரு 5: 8-9) இவைகள் மிகவும் கடுமையான வார்த்தைகள், சாத்தானுடைய திட்டங்களை அறியாத விசுவாசிகள் மிகவும் ஆபத்தில் விழுவார்கள் என்று பரிசுத்த பவுல் எழுதுகின்றார்.( 2கொரி. 2:11)
(Westchester, Ill.: Crossway, 1989 Murphy, Edward F.: Handbook for Spiritual Warfare. என்ற புத்தகத்திலிருந்து பெறப் பட்டவை நன்றி ).
சாத்தான் :-குற்றம் சுமத்துபவர்
1. 1. அச[த்த ஆவிகளின் அரசன், கர்த்தரினதும் கிறிஸ்துவினதும் நிலையான எதிரி.
2. 2. கர்த்தரிடம் நம்பிக்கையிழக்கச்செய்து பாவம்செய்யத் தூண்டுவான்.
3. 3. தன்னுடைய தந்திரத்தின்மூலம் மனிதர்களை ஏமாற்றுவான்.
4. 4. சுரூப ஆராதனை செய்பவர்களை அவனுடைய கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளுவான்.
5. 5. அவனுடைய பிசாசுகள்மூலம் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடிவதுடன்,நோயினாலும் பாதிப்படையச் செய்கிறான்.
6. 6. தேவனுடைய உதவியுடன் அவன் வெற்றிகொள்கிறான்.
7. 7. வானத்திலிருந்து இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது அவன் ஆயிரம் வருடங்கள் சங்கிலியால் கட்டப்படுவான்,ஆனால் ஆயிரம் வருடங்கள் முடிந்தபின்பு இன்னும் அதிக பலத்துடன் பூமியில் உலாவுவான், ஆனால் சிறிதுகாலத்தில் நித்திய தண்டனைக்குள்ளாவான்.
8. சாத்தான் ஒரு மனிதனுக்கூடாகச்செயற்பட்டு எங்களை ஏமாற்றுவான்...
சாத்தான் யார் என்பதையும், பிசாசுகள் யார் என்பதையும் அவர்களின் முக்கிய கடமைகள் யாவை என்பதையும் நாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.
கர்த்தரையும் அவரை உண்மையாய் ஆராதிப்பவர்களையும் எதிர்பதும் கர்த்தரைவிட்டு அவர் களை வழிவிலகச் செய்வதுமே அவனது பிரதான தொழில்களாகும்.
எங்களைச் சூழ்ந்துள்ள மூன்று மட்டத்திலான பாதகாப்புகள்.
1. பாது காப்பு எல்லை(யோபு 1-2)
2. கர்த்தருடைய தூதர்கள், (சங். 34:7, 91: 11-13, எபி. 1:14)
3. விசுவாசக் கேடயம். ( எபேசி. 6: 16)
எங்கள் சரீரம் மூன்று அமைப்புகளைக்கொண்டுள்ளது. 1. சரீரம். 2. ஆத்துமா. 3. ஆவி.
சரீரம் (றோமர் 12:1-2 றோமர் 6: 13.)
எங்கள் சரிரங்களை பரிசுத்தமாகவும்தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க
வேண்டும். இந்த உலகத்திற்கு ஏற்றவேடம் தரியாமல்,தேவனுடைய சித்த்த்தை அறிந்து
அதன்படி செயற்படல்வேண்டும்.எங்கள் அவயவங்களை பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்
அவைகளை நீதியின் வழியில்செயற்படுத்தவேண்டும்.
ஆத்துமா :- கர்த்தரைப்பற்றிய சிந்தனையோடு இருத்தல்வேண்டும்.எங்கள் சிந்தனைகள் எப்போதும் தேவனுக்குப் பிரியமானவைகளாக இருத்தல்வேண்டும். (2கொரி. 10: 3-5., பிலி. 4:8.)
உணர்வுகள்:-கர்த்தர் விரும்புவதைச் செய்ய வேண்டும் ,வெறுப்பவை களை வெறுக்கவேண்டும்.
விருப்பங்கள் :- கர்த்தர் தெரிவுசெய்வதை தெரிவுசெய்யவேண்டும், கர்த்தர் தள்ளிவிடுவதை தள்ளிவிடல்வேண்டும்.
உடல் சார்ந்த ஆசைகள் :-
எங்கள் சரீரங்களை நீதிக்குப் பயன்படுத்த ஒப்புக் கொடுக்க வேண்டும்.(கலா. 5:16-21, 24, 2:20)
ஆவி:-
1. 1. மறு பிறப்படைவதற்கு முன்பு, எங்களில் ஆவி இருந்த்து, ஆனால் செத்த்தாய் இருந்தது. அதாவது கர்த்தரோடு தொடர்பில்லாமல் இருந்தது.
2. 2. மறுபிப்படைதல் என்பது எங்கள் ஆவி மறுபடியும் பிறத்தலாகும். அதாவது கர்த்தருடன் தொடர்பு ஏற்படுத்தலாகும்.(1.கொரி. 6:17, 1கொரி.2: 6- 16,கலாத்.4:6, 5:16)
3. பாவமானது ஆவி, ஆத்தும, சரீரத்தைக் கறைப்படுத்துகிறது.( 2.கொரி. 7:1 2. திமே.4 : 22, 1.தெச.5:23.)
பரிசுத்த ஆவியோடு எங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் இணைந்துசெயற்பட்டால் அவருடைய பாதுகாப்பு எல்லைக்குள் நாம் ஜீவிக்கமுடியும், எங்களுக்கு கர்த்தருடைய தூதர்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.எங்களுடைய ஆவி பரிசுத்த ஆவியுடன் இணைந்து தேவ காரியங்களைச் செயற்படுத்திக் கொண்டு தேவனை மகிமைப்படுத்தும்.

19/03/2012
19/03/2012
16/03/2012

Address

Kurumankadu
Vavuniya Town
9400

Telephone

+94777809457

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kurumankadu christian assembly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kurumankadu christian assembly:

Share