உடுப்பிட்டி சொர்ணஞானவைரவர் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Uduppiddy
  • உடுப்பிட்டி சொர்ணஞானவைரவர் ஆலயம்

உடுப்பிட்டி சொர்ணஞானவைரவர் ஆலயம் உடுப்பிட்டி ஞான வைரவர் ஆலய நிகழ்வுகள் குறித்த பதிவுகள் இங்கே...

05/04/2026
பைரவம்சிவத்தை அறிய பல வழிகளும் போதனைகளும் புராணங்களும் உண்டுஆனால் சிவமாய் மாற உள்ள ஒரே வழி போதனை?"பைரவம்" பைரவர் என்பது ...
12/03/2026

பைரவம்
சிவத்தை அறிய பல வழிகளும் போதனைகளும் புராணங்களும் உண்டு
ஆனால் சிவமாய் மாற உள்ள ஒரே வழி போதனை?

"பைரவம்"

பைரவர் என்பது அவதாரமாகவோ தேவதா சங்கல்பமாகவோ உணரபடவேண்டியது மட்டும் அல்ல

பைரவம் என்பது ஒவ்வொருவருடைய சுய உயிர் மொழியை உணரும் வழி

சித்தர்கள் ஞானிகள் யோகிகள் உபாசக தவசீலர்கள் என நம் முன்சென்ற சான்றோர்கள் தவிர்க்காமல் பயணித்த பயணம் பைரவம்

பைரவம் என்ற சொல்லுக்கு பயத்தை அறுப்பது என்ற பொருள் மட்டுமல்ல
கொண்டாட்டம்,நீந்தி கடப்பது என்றும் பொருள் உண்டு
பைரவர் கொண்ட வாகனங்கள் சொல்லும் பொருள்

காளை-உடல்
நாய்-மனம்
நாகம்-ஆன்மா

பைரவத்தின் நிர்வாணம் உயிருக்கு அணிகலன்களோ மறைப்போ இல்லை
எட்டுத்திக்கிலும் உள்ள எல்லா வித உடல் கொண்ட உயிர்கள் கொண்ட மஹா நிர்வாணம் பைரவம்

இந்த உடல் கொண்ட பஞ்சபூத நவகிரக மண்டல இருப்பில் உள்ள நானே எல்லா உயிர்களிலும் இருக்கிறேன் என்ற தத்துவார்த்தம் பைரவம்

மூச்சு நின்றுவிட்டால் மரணம் என்ற பயத்தை
மனித வாழ்வு கொண்ட பயங்களுக்கான உச்சபட்சத்தை
தான் உயிரோடு ஜீவிக்கும் போது தன் அறிதலின் புரிதலின் வாழ்வியலின் படி
தத்துவத்தின் படி தன் உயிர் என்னவாக உள்ளது.. எதுவாக வேண்டும்...என்று அறிந்து
அதை அறிந்தபின் தன் உயிர் கொண்ட பிரபஞ்ச ஆளுமை என்ன அதன் சிறப்பு என்ன என அறிந்து பிறகு மரணத்தின் மீது உள்ள பயத்தை அழித்து மரணத்தின் மீது காலத்தின் மீது உள்ள மதிப்பை அறிவிப்பது பைரவம்

அசிதாங்கம்-பிரம்மம் என்ற உருவமற்ற சர்வ வியாப நிலை
ருரு- அகந்தை
சண்டம்-வேகம்
குரோதம்-கோபம்
உன்மத்தம்- நடத்தை
கபாலம்(காலம்)-சுழற்சி
பீஷணம்-அச்சம்
சம்ஹாரம்-அழிவு
என்ற எட்டு நிலைகளின் உச்சபட்ச விழிப்பு நிலையே அட்ட பைரவ அவதார பரிணாமங்களாக நமக்கு பக்திமார்க்கபடி வழிபாட்டில் உள்ளது
எட்டும் ஒரு ஆன்மா !
தான் அடைய வேண்டிய விழிப்புநிலைகள்

ஜாதகப்படியோ அல்லது குரு உபதேசப்படியோ எட்டு பைரவரின் ஒரு ரூபத்தை நீங்கள் வழிபட வழிகாட்ட பட்டால் இந்த பிறப்பில் நீங்கள் அந்த பைரவரின் விழிப்பு நிலையை பெறவேண்டியதும் அடுத்தடுத்த நிலைகளின் விழிப்பு நிலைகளை அடைய வேண்டியதும் பிறவி கடமை என கொள்க.

இந்த அடிப்படையிலேயே.. தந்திர சாஸ்திர படி இதற்கு நேர் எதிரான அபிசாரப்ரயோகங்கள் பைரவரை வைத்து செய்யவும் படுகின்றன...

ஆனால் நேர்வழி பைரவத்தத்துவத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு
நாளும் கோளும் ஒன்றும் செய்யாது

அட்டமி தினத்தில் ஒவ்வொரு பக்தர்களும் செய்யும்
மிளகாய் யாகமோ
அல்லது எலுமிச்சை மற்றும் வெண்பூசணி விளக்கு (நல்லெண்ணையில்) ஏற்றுவது... சத்ரு சம்ஹாரத்திற்கு மற்றும் எதிரிதொல்லை நீங்க என கேள்விப்பட்டோ அல்லது அங்குள்ள குருமார்களால் சொல்லியோ இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது... உண்மைதான்
மிளகாய் யாகம் சத்ரு சம்ஹாரம் தான் செய்கிறது
வெளியில் உள்ள சத்ருக்களை அல்ல
முதலில் யாகத்தில் கலந்து கொண்ட சத்துருக்கள் பற்றிய அல்லது சத்துருக்களால் ஏற்படுத்த பட்ட எண்ண பதிவுகளை அவர்கள் யாகத்தில் மந்திர உச்சாடனத்துடன் சேர்ந்து வரும் யாக காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்குள் உள்ள சத்துருக்கள் பற்றிய நினைவலைகள் இன் பீதி சம்ஹரிக்கபடுகிறது.
எதிரி தொல்லை விளக்கு போடும் போது நீங்குகிறது உண்மைதான்
நல்லெண்ணெயில் எலுமிச்சையிலோ அல்லது வெண்பூசணியிலோ விளக்கு எரிக்கப்படும் போது அங்கு அமர்ந்து தியானிக்கும் போது அந்த காற்றால் மன பதட்ட பயங்கள் குளிர்விக்கப்படுவதால் உள்ளிருக்கும் எதிரி தொல்லை எண்ணத்தில் இருந்து குளிர்வதால் எதிரி தொல்லை நீங்குகிறது...
இது போன்ற அக புற செயல்களை புரிந்து மனம் முதலில் அமைதி பெறவே இது போல சடங்குகள் பைரவ வழிபாட்டில் புறத்தின் மூலம் அகத்தை அமைதி கொள்ள வைக்க பின்பற்ற படுகிறது.. மனம் அமைதி கொண்டபின் பயணிக்க வேண்டியது விழிப்பு நிலையை நோக்கி தான்..

நன்றி

(தொடரும்)

அஹம் பைரவாஸ்மி

01/02/2026

உடுப்பிட்டி ஸ்ரீ சாமுண்டேஸ்வரி சமேத சொர்ண ஞான வைரவர் தேவஸ்தானம் மணவாளக் கோல பெருவிழா -01.02.2026 மணவாளக் கோல பெருவிழ.....

Address

Uduppiddy

Website

Alerts

Be the first to know and let us send you an email when உடுப்பிட்டி சொர்ணஞானவைரவர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share