திருக்கோணமலை மடத்தடி ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • திருக்கோணமலை மடத்தடி ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்

திருக்கோணமலை மடத்தடி ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம் This is our official page for ருக்மணி சத்யபாமா சமேத ?

மடத்தடி கிருஷ்ண பகவான் ஆலய ஏகாதசி உற்சவ அலங்காரம்31.01.2019
01/02/2019

மடத்தடி கிருஷ்ண பகவான் ஆலய ஏகாதசி உற்சவ அலங்காரம்
31.01.2019

17/12/2018

$$ ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ $$

விளம்பி வருடம் மார்கழி திங்கள் 1 ம் நாள் (16.12.2018) ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காலை 4.15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் நடை திறக்கப்பட்டு மூலவர் அபிஷேகத்துடன் 5.30 மணிக்கு விசேட திருப்பாவை பூஜை , திருப்பாவை ஓதல் நடைபெறுகிறது.தொடர்ந்து நடைபெறும் திருப்பாவை பூஜையில் கலந்து கொண்டு பகவான் திருவருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏

17/12/2018
02/09/2018

#கிருஷ்ண_ஜெயந்தி
#விரதமுறை

*காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருத்தல் வேண்டும். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம்.

*கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், நெய் பண்டங்களை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

*பதினாறு வார்த்தைகள் அடங்கிய ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

*பகவத் கீதை படிக்க வேண்டும்.

*கோவிலுக்குச் சென்று கிருஷ்ணரை பிரார்த்திக்க வேண்டும்.

#சொன்னவன்_கண்ணன்
#சொல்பவன்_கண்ணன்

அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதோபதேசக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.

*உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும், நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் நான் இந்த பூமியில் மனிதனாக அவதரிக்கிறேன். நீயும் தர்மத்தைக் காக்க துணிந்து நில்.

*எல்லா உயிர்களின் இதயத் தாமரையில் கிருஷ்ணனாகிய நானே வீற்றிருக்கிறேன். எனது சக்திக்கு கட்டுப்பட்டு உயிர்கள் அனைத்தும் பொம்மை போல ஆட்டுவிக்கப்படுகின்றன.

*பச்சிலை, மலர், தண்ணீர் எது வேண்டுமானாலும் அன்புடன் எனக்கு அளித்தால் போதும். அவர்களின் அன்பை ஏற்றுக் கொண்டு அருள்புரிய தயாராக இருக்கிறேன்.

*குரு என்னும் திறமையான மாலுமியும், தெய்வீக அருள் என்னும் காற்றும் சாதகமாக இருந்து விட்டால், பிறவிக்கடலை எளிதாக ஒருவனால் கடந்து விட முடியும்.

*மண்ணில் பிறந்த உயிர்கள் அனைத்தும், என்றாவது ஒருநாள் பிறப்பு, இறப்பு இரு நிலைகளையும் கடந்தே ஆக வேண்டும். இதுவே வாழ்வின் குறிக்கோள்.

*கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவி மூலம் ஆன்மிக வாழ்வில் முன்னேற முயற்சிக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.

*மனம் போல போக்கில் மனிதன் வாழ்வது கூடாது. புலன்களுக்கு அடிமைப்பட்டவன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். பகுத்தறிவால் நன்மை, தீமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

*ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை புத்தியால் அடக்க வல்லவன் ஞான நிலையை அடைய முடியும்.

*மனிதப்பிறவி மகத்தானது. அதனால் தேவர்களும் மண்ணில் பிறப்பெடுத்து அன்பு நெறியில் வாழ்ந்து உயர்ந்த ஞானம் அடைய விரும்புகின்றனர்.

*நேர்மை, பணிவு, பொறுமை, சேவை மனப்பான்மை, மனத்தூய்மை, தன்னடக்கம் ஆகிய நற்பண்புகள் அறிவுடையோரின் அடையாளங்களாகும்.

*தேனீக்கள் பல பூக்களில் இருந்து தேனைச் சேகரிப்பது போல மனிதன் பல வழிகளிலும் நற்பண்புகளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

*உணவு, உறக்கம், உழைப்பு அனைத்திலும் மிதமாக இருப்பவனே சிறந்த மனிதன். அடங்காத முரட்டுக் குதிரையான மனதை அடக்கும் வல்லமை அவனிடம் மட்டுமே இருக்கும்.

*வேலையின்றி கணப்பொழுதும் சும்மா இருக்க கூடாது. அவரவர் கடமையைச் சரிவர செய்ய வேண்டும். செயலற்று இருந்தால் உடலைப் பராமரிப்பது கூட சிரமமாகி விடும்.

*செய்யும் கடமையைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், பலனைப் பற்றிய சிந்தனை உண்டாகாது. அப்போது தான் மனிதன் சுதந்திரமாக வாழ முடியும்.

*அளவான பேச்சும், உணவில் கட்டுப்பாடும் இருந்து விட்டால் மனிதன் தன்னை அறியும் அறிவைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

*நாடாளும் மன்னராக இருந்தாலும் பெரியவர்களைக் கண்டால் வணங்குவது அவசியம். மனப்பூர்வமாக பெரியவர்களுக்குச் சேவை செய்தால் அகந்தையை வெல்ல முடியும்.

*கொழுந்து விட்டு எரியும் தீ, கட்டைகளை எரித்து சாம்பலாக்குவது போல என்னிடம் முழுமையாகச் சரணடைந்தால் பாவம் அனைத்தும் முற்றிலும் அழிந்து போகும்.

#வசுதேவர்_தேவகி
#பொருள்_என்ன?

கிருஷ்ணரை பெற்ற தந்தை வசுதேவர். வசு என்ற சொல்லுக்கு எங்கும் பரவியிருப்பது என்று பொருள். எங்கும் பரவியிருக்கும் தேவனான கிருஷ்ணரைப் பெற்றதால் அவர் வசுதேவர் என பெயர் பெற்றார். கிருஷ்ணரின் தாய் தேவகி. இதற்கு தெய்வீகம் எனப்பொருள். ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்ததால் இந்தப் பெயர் பெற்றாள்.

#விடாக்கண்டன்
#கொடாக்கண்டன்

அவரவர் கருத்தில் உறுதியாக நிற்பவர்களை விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்கள். பாரதப்போரில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இப்படி பேசிக்கொண்டனர். தன் எதிரே நிற்கும் பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட குருமார்களையும், உறவினர்களையும் எதிர்த்து போராட முடியாது என அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொல்லி விட்டான்.

அப்படியானால் உன் பெயரான விஜயன் (வெற்றியாளன்) என்பதை இழக்க வேண்டி வருமே என்றார் கிருஷ்ணன். போனால் போகட்டும் என்ற அர்ஜுனனிடம், “அப்படியானால் நீ இழந்த நாட்டை மீட்க முடியாது. உன் சுகமெல்லாம் போய் விடுமே! என்றதும், அதுவும் போகட்டும் என்றான் அர்ஜுனன். தன் வழிக்கு வராத அர்ஜுனனிடம்,“சரி...உன் சகோதரர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்று கிருஷ்ணர் சொல்லவும், “எங்களுக்குள் அப்படி கருத்து வேறுபாடே வராது.

நான் சொல்வதை மற்றவர்கள் நிச்சயம் ஏற்பார்கள், என்றான் அர்ஜுனன். சரி...நீ என்ன தான் சொல்ல வருகிறாய்? என்று கிருஷ்ணன் கேட்கவும், “நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உனக்கு தெரியாதாக்கும். சரியான ஆளாக இருக்கிறாயே! என் மனதில் மட்டுமல்ல...ஊரில் எல்லார் மனதிலும் என்ன இருக்கிறது என்று அறிந்த நீயா இவ்வளவு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று மடக்கி விட்டான் அர்ஜுனன்.

ஆம்...எல்லாம் அறிந்த கிருஷ்ணர் நம் மனதில் இருப்பதையும் அறிவார். அதனால் நாம் நல்லதையே நினைப்போம்.

அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

இன்று ஆனி மாத தேய்பிறை ஏகாதசி. "அபரா"" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீக...
09/07/2018

இன்று ஆனி மாத தேய்பிறை ஏகாதசி. "அபரா"" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.
இன்று ஏகாதசியன்று கிருஷ்ண பகவான் அருளாட்சி வழங்கும் அருட்கோலம்

$$ ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ $$எமது பகவான் ஆலயத்தில் திருப்பாவை உற்சவமானது 16/12/2017 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்றுக்க...
29/12/2017

$$ ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ $$

எமது பகவான் ஆலயத்தில் திருப்பாவை உற்சவமானது 16/12/2017 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பகவான் திருவருளோடு தினமும் அதிகாலை அபிஷேகம், சிறப்புபூஜையுடன் திருப்பாவை பாடப்பெறும் நிகழ்வும் இடம்பெறுகின்றது.

விழாநாட்களில் ஆலயத்தில் இடப்பட்ட கோலங்களின் படத்தொகுப்பை இங்கு தரவேற்றம் செய்கின்றோம்!

$$ ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ $$

அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய தம்ப மண்டப புனருத்தாரண திருப்பணிக்காக அடிக்கல் நாடும் வைபவம...
04/09/2016

அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய தம்ப மண்டப புனருத்தாரண திருப்பணிக்காக அடிக்கல் நாடும் வைபவம் - 04/09/2016 (ஞாயிற்றுக்கிழமை)

வைகுண்ட ஏகாதசி விரத திருவிழா மடத்தடி ருக்மணி சத்தியபாமா சமேத கிருஷ்ண பகவான் ஆலயம்.      ஏகாதசி வரலாறு:ஒரு காலத்தில் அம்ப...
21/12/2015

வைகுண்ட ஏகாதசி விரத திருவிழா மடத்தடி ருக்மணி சத்தியபாமா சமேத கிருஷ்ண பகவான் ஆலயம்.

ஏகாதசி வரலாறு:

ஒரு காலத்தில் அம்பரீஷன் என்ற சக்கரவர்த்தி, ஏகாதசி விரதத்தை தவறாது கடைப்பிடித்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசியன்று, யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரை சந்தித்தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான். யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சென்ற துர்வாச முனிவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அங்கிருந்த மற்ற ரிஷிகள், ‘அம்பரீஷா! துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு சாப்பிட்டால்தான் தவறு. தீர்த்தம் அருந்துவதில் தவறில்லை” என்று கூறினர்.
தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்த்தம் உண்டதைக் கேட்டு துர்வாசர் கோபம் கொண்டார். அம்பரீஷன் மீது சடைமுடி ஒன்றை ஏவிவிட்டார். அது பூதமாக உருமாறி அம்பரீஷனைத் துரத்தியது இதை அறிந்ததும் பக்தனை காப்பதற்காக, அந்தப் பூதத்தின் மீது மகாவிஷ்ணு சுதர்சனச் சக்கரத்தை எறிந்தார். அச்சக்கரம் பூதத்தையும் துர்வாசரையும் துரத்தியது. பாற்கடலுக்கு ஓடி, மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டினார்.

‘துர்வாசரே! ஏகாதசி நாளில் என்னைக் குறித்து யாரொருவர் பக்தியோடு விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்’ என்றார் மகாவிஷ்ணு.
அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டியதோடு, அவனுக்குப் பல்வேறு வரங்களையும் தந்து அருளினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

விரத முறை:

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று கூறப்படுகிறது.

அனுஷ்டிப்பது எப்படி?

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?

பாற்கடலில் மகாவிஷ்ணு வீற்றிருக்கும் வைகுண்ட வாசல், நல்லவர்களின் காலடி பட்டவுடன் தானே திறந்து கொள்ளும். ஏகாதசி திதியன்று மட்டும் சொர்க்க வாசல் முழுமையாக திறந்திருக்கும். ஏகாதசி திதியன்று உயிர் துறப்பவர்களும்கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால், இவர்கள் சொர்க்கத்துக்கு செல்வர்கள் என்பது நம்பிக்கை.

தவிர்க்க வேண்டியவை:

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவு நாள்) வந்தால். அன்று செய்யாமல், மறுநாள் துவாதசி திதியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக்கூட சாப்பிடக்கூடாது (கூடுமானவரை கோயில் பிரசாதங்களை குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்). ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து, அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழான நரகத்துக்கு செல்வான்.ஏகாதசி நாளில் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. தேவையான துளசிகளை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்

மடத்தடி ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ண பகவான் ஆலய விஸ்ணுவாலயதீப பூஜை.........
26/11/2015

மடத்தடி ருக்மணி சத்யபாமா சமேத கிருஷ்ண பகவான் ஆலய விஸ்ணுவாலயதீப பூஜை.........

தீபத்திருநாள் விசேட பூசையின் போது.......
10/11/2015

தீபத்திருநாள் விசேட பூசையின் போது.......

27/09/2015

ஓம் நமோ நாராயணாய நமஹ...

எமது பகவான் ஆலயத்தின் "கிருஷ்ண பக்தி கழகம்" சார்பாக ஒரு சிறு பதிவு...

மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் "வைகுண்ட ஏகாதசி விரதம்". கங்கையின் தீர்த்த மகிமையை போலும், காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகளின் ஆழமகிமையைப் போலும், கோயிலின் ஆகமத்தைவிட தாயின் அன்பு அறவணைப்பு விஞ்சியிருப்பதைப்போலும், திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது வைகுண்ட ஏகாதசி.

வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார் என்பது ஐதீகம்.
-----------------------------------------
இவ்வருடம் வைகுண்ட எகாதசியானது வருகின்ற மார்கழி மாதம் 21ம் திகதி நடைபெற பகவான் திருவருள் கூடியுள்ளது...

அதனையொட்டி எமது கிருஷ்ணபகவான் ஆலயத்தின் "கிருஷ்ண பக்திக்கழகம்" பகவானுடைய புகழை பரப்பும் நோக்கில் ஆக்கபூர்வமான நிகழ்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளது...

இதற்காக பகவான் அடியார்களாகிய உங்களிடமிருந்து "ஆலோசனைகள்" எதிர்பார்க்கபடுகின்றது.

நடாத்தபடுகின்ற நிகழ்வுகள் வெறுமனே ஆலயத்தின் உள்ளே மட்டும் முடிந்துவிடாமல் ஆலயத்தினை தாண்டி திருகோணமலையின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்குவதாக, எமது பகவானின் மகிமையை அனைத்து மக்களுக்கும் உணர்த்துவதாக, அனைவரையும் உள்ளடக்குவதாக அந்நிகழ்வுகள் அமைய வேண்டும் என்பது எமது ஆசை...

ஆகவே பகவான் அடியார்கள் ஆகிய நீங்கள் இப்பதிவை புறக்கணிக்காது உங்களது ஆலோசனைகள்/விருப்பங்கள்/எதிர்பார்புக்களை எம்முடன் பகிருந்துகொள்ள எதிர்பார்க்க படுகின்றீர்கள்...

ஓம் நமோ நாராயணாய நமஹ

Address

Madathaddi
Trincomalee
31000

Alerts

Be the first to know and let us send you an email when திருக்கோணமலை மடத்தடி ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share