10/07/2026
🕌 டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி...
அல்லாஹ்வின் அருளால், 2026 ஜூலை 10 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, Mahallah360 நிறுவனத்தின் ஊடாக, எமது பள்ளிவாயலுக்கான மஹல்லா வாசிகளின் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து நிர்வகிக்கும் Web System உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைய டிஜிட்டல் உலகில், ஒரு பள்ளிவாயலின் நிர்வாகம் திறமையாகவும், வெளிப்படையாகவும், ஒழுங்காகவும் செயல்பட டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானதாகும். இந்த முறைமையின் மூலம்
👉மஹல்லா உறுப்பினர்களின் தகவல்களை பாதுகாப்பாகச் சேமித்தல், (கல்வி, சுகாதாரம், தொழில் தகைமை, தொழில், தேவைப்பாடு)
👉விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல்,
👉மாதாந்த சந்தா கொடுப்பனவு தொடர்பான விபரங்கள்,
👉 நிர்வாகப் பணிகளை எளிமைப்படுத்துதல்
👉எதிர்கால சேவைகளை மேலும் சிறப்பாக வழங்குதல்
போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.
மேலும் இன்றைய தினம் மஹல்லாவாசிகள் இந்த திட்டத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது தொடர்பாக QR முறைமை அறிமுகப்படுத்தி விநியோகிக்கப்பட்டது.
Mahallah360 நிறுவனத்தின் இந்த முயற்சி, பள்ளிவாயல் நிர்வாகத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, சமூக சேவையை மேலும் தரமானதாக மாற்றும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கும், Mahallah360 நிறுவனத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மஹல்லா வாசிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
"டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நோக்கி... சிறந்த நிர்வாகம், சிறந்த சமூக சேவை."
#டிஜிட்டல்_தொழில்நுட்பத்தை_நோக்கி