Voice of Asha'era

Voice of Asha'era அழகிய வாழ்விற்கு எடுத்துக்காட்டான இஸ்லாமிய பயான்கள், கஸீதாகள் மற்றும் மார்க்கம் சார்ந்த விடயங்கள் இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி அறிந்து கொள்ள.

Voice of Asha'era
23/12/2025

Voice of Asha'era

Eid Mubarak 😊🤲🫰
30/03/2025

Eid Mubarak 😊🤲🫰

21/03/2025

ஆபிய்யத் என்றால் என்ன? | voice of asha'era | Tamil bayan | shaikh rismi rilvi ash'ari
Voice of Asha'era
YouTube | subscribe 🫵 🫰
https://youtu.be/aceIew7jtfU

 #அஸ்ஸகாபதுல்_இஸ்லாமிய்யஹ்பாகம்: 04🔸️🔸️🔸️🔸️🔸️🔸️இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகள்_பாடம்: 01_     இரு ஷஹாதாக்கள்இரு ஷஹாதாக்கள...
17/03/2025

#அஸ்ஸகாபதுல்_இஸ்லாமிய்யஹ்
பாகம்: 04
🔸️🔸️🔸️🔸️🔸️🔸️
இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகள்

_பாடம்: 01_

இரு ஷஹாதாக்கள்

இரு ஷஹாதாக்கள் எனப்படுவது
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ﷺ
என்பதாகும்.

இஸ்லாத்தில் நுழைய விரும்புவோர், இரு ஷஹாதாக்களின் கருத்தை உள்ளத்தால் உறுதி கொண்டு, இஸ்லாத்தில் நுழையும் நோக்கில் அவற்றை உடனடியாக மொழிவது கடமையாகும்.

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
என்பதன் பொருள்:- உண்மையில் வணங்கி வழிபடத்தகுதியானவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அதாவது நான் பணிவின் உச்சகட்டத்தை செலுத்த அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாரும் தகுதிபெறவேமாட்டார்கள். என நாவினால் ஏற்று உள்ளத்தினால் உறுதி கொள்கிறேன்.

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ﷺ
என்பதன் பொருள்:- நிச்சயமாக முஹம்மதுப்னு அப்தில்லாஹிப்னி
அப்தில் முத்தலிபிப்னி ஹாஷிமிப்னி அப்தி மனாபின் அல்குரஷிய்ய அறபிகள், அறபியல்லாதோர்கள் அனைத்து படைப்பினங்களுக்கும் தூதராக அனுப்பப்பட்டவர் எனவும் உள்ளத்தினால் உறுதி கொண்டு நாவால் மொழிகிறேன். அவர்கள் அறபி கோத்திரங்களில் சிறந்த கோத்திரமாகிய குறைஷி கோத்திரத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மக்காவில் பிறந்து அங்கேயே அவர்களுக்கு முதன் முதலாக வஹியும் அருளப்பட்டது. இன்னும் மதீனாவிற்க்கு ஹிஜ்ரத்தை மேற்கொண்டார்கள், மேலும் அங்கேதான் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

அவர்களே அனைத்து நபிமார்களிலும் ரஸுல்மார்களிலும் இறுதியானவரும், மிகச் சிறந்தவருமாவார். அவர்கள் மீது ஸலாதும் ஸலாமும் உண்டாகட்டுமாக.

அவர்கள் அறிவித்தவைகள், எத்திவைத்தவைகள் அனைத்தையும் உண்மைப்படுத்துவது கடமையாகும்.

இமாம் துன் நூன் அல் மிஸ்ரிய் றஹிமஹுல்லாஹ்
அவர்கள் கூறியுள்ளார்கள்:

"நீ உனது உள்ளத்தினால் அழ்ழாஹ்வை எவ்வாறெல்லாம் கற்பனை செய்தாலும் அவன் அதற்கும் ஒப்பாகமாட்டான்."

Voice of Asha'era
YouTube
https://youtube.com/channel/UCiRYpc1CCeZrx6uLriCTt2w
WhatsApp
https://chat.whatsapp.com/EpyH2olJYKm1gJLE9QDwC0

 #நோன்பு 🫴❤️🕌
01/03/2025

#நோன்பு 🫴❤️🕌

சங்கை பொருந்திய  #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..Beautiful Religion - islam YouT...
13/02/2025

சங்கை பொருந்திய #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..
Beautiful Religion - islam
YouTube
https://youtube.com/channel/UCiRYpc1CCeZrx6uLriCTt2w
WhatsApp
https://chat.whatsapp.com/EpyH2olJYKm1gJLE9QDwC0
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
தொடர்

அழ்ழாஹ்வுடைய தன்மைகளோ, அவனுடைய அறிவோ மாற்றம் அடையக் கூடியது என எந்த மனிதனும் உறுதி கொள்ளக்கூடாது. அவன் ஆரம்பமில்லாத தன்மையிலே ஒரு விடயத்தை அறியாமல் இருந்து பின்னர் அதனை புதிதாக அறிந்து கொண்டான் என எவ்வாறு நம்பிக்கைக் கொள்ளப்படமாட்டாதோ அதே போன்று அவன் ஆரம்பமில்லாத தன்மையிலே ஒரு விடயத்தை நாடாமல் இருந்து பின்னர் புதிதாக நாடினான் எனவும் நம்பிக்கை கொள்ளப்படமாட்டாது.

பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனையைக் கொண்டோ அல்லது ஸதகா கொடுப்பவரின் ஸதகாவைக் கொண்டோ அல்லது நேர்ச்சை வைப்பவரின் நேர்ச்சையைக் கொண்டோ அழ்ழாஹ்வுடைய நாட்டம் மாற்றமடைவதில்லை.

ஸுனன் அபூதாவுத் எனும் கிரந்தத்தில்
((مَا شَاءَ اللّٰهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ)) "
"அவன் நாடியவை நடைபெறும். அவன் நாடாதவை நடைபெறவேமாட்டாது." என்ற ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பமில்லாத தன்மை கொண்ட அழ்ழாஹ், எது உண்டாகுவதை அறிந்தவனாகவும், நாடியவனாகவும் உள்ளானோ அது கட்டாயம் நடைபெறும். மேலும் எது ஏற்படாது என ஆரம்பமில்லாத தன்மையிலே அறிந்துள்ளானோ அது கட்டாயம் நடைபெறாது. அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் :
((إِنَّ النَذْرَ لَا يَرُدُّ مِنْ قَدَرِ اللّٰهِ شَيْئًا))

,,நிச்சயமாக நேர்ச்சை வைப்பது அழ்ழாஹ்வின் ஏற்பாட்டில் எதையும் மாற்றிவிடமாட்டாது."

(அறிவித்தவர் : இமாம் இப்னு ஹிப்பான் رضي الله عنه, இமாம் அஹ்மத் رضي الله عنه)

13/02/2025

ஷஃபான் பிறை 15 இரவின் சிறப்பு | Tamil audio bayan | voice of asha'era

Ash-shaikh rismi (rilvi' ash'ari)
#ஷஃபான்_பிறை_15

Share subscribe 🫵
https://youtu.be/rK21-NTpuo4

சங்கை பொருந்திய  #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..Beautiful Religion - islam YouT...
12/02/2025

சங்கை பொருந்திய #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..
Beautiful Religion - islam
YouTube
https://youtube.com/channel/UCiRYpc1CCeZrx6uLriCTt2w
WhatsApp
https://chat.whatsapp.com/EpyH2olJYKm1gJLE9QDwC0
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

#ஷஃபான்_பிறை_15_ஆம்_தினத்தின்_இரவில்_குர்ஆன்_அருளப்படவில்லை_என்பது_சம்பந்தமான_தெளிவு

முதலாவதாக (( ُّفِيْهَا يُفْرَقُ كُل أَمْرْ حَكِيْم)) என்ற வசனமானது ஷஃபான் பிறை 15 ஆம் இரவு பற்றிப் பேசவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன் இவ்விரவிலே தான் அருளப்பட்டதென மக்களுக்கு மத்தியில் பரவிவரும் இக்கருத்து பிழையான ஒரு கருத்தாகும். அழ்ழாஹ் மலக்குமார்களுக்கு இவ்வருடத்திலிருந்து அடுத்த வருடம் வரை அடியார்களுக்கு நிர்ணயித்துள்ள மெளத், ஹயாத், பிறப்பு, ரிஸ்குகள் மேலும் அது போன்ற நிகழ்வுகளின் விபரங்களை அறிவித்துக் கொடுக்கும் இரவானது புனித ,,லைலதுல் கத்ர்,, இரவாகும் என்பதே சரியானதாகும்.

குர்ஆன் முதல் வானத்திலே ,,பைதுல் இஸ்ஸா,, எனும் இடத்திலே ஷஃபான் பிறை 15 ஆம் இரவில் இறங்கியதாக யாரும் உறுதி கொள்ளலாகாது. மாறாக குர்ஆன் முதல் வானத்திலே இருக்கும் ((بيت العزة)),, பைதுல் இஸ்ஸா,, எனும் இடத்திற்கு அருளப்பட்டது புனிதமிகு ,,லைலது கத்ர்,, இரவில் நடைபெற்றதாகவே
((إِنَّا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةِ القَدْر))

விளக்கம்: ,,நிச்சயமா நாங்கள் குர்ஆனை ,,லைலதுல் கத்ர்,, உடைய இரவிலே இறக்கிவைத்தோம்,,

(அத்தியாயம் : அல் கத்ர்,வசனம் : 01)

எனும் குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது.

மேலும் இவ்வசனம் பின்வரும் வசனத்தை தெளிவுபடுத்துகிறது.

அழ்ழாஹு தஆலா கூறியுள்ளான்.

((إِنَّا أَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِيْنَ فِيْهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيْم))

விளக்கம்: ((,,றமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் இரவிலே முதல் வானிலுல்ல ,,பைதுல் இஸ்ஸா,, வுக்கு குர்ஆனை ஒட்டுமொத்தமாக இறக்கிவைக்கும்படி அழ்ழாஹ் கட்டளையிட்டான். நிச்சயமாக அழ்ழாஹ் குர்ஆனை இறக்கிவைத்தான். அதிலே மார்க்க சட்டங்களும், உபதேசங்களும், வாக்குறுதிகளும், எச்சரிக்கைகளும் உள்ளன,,))

(அத்தியாயம்: அத்துஹான்,வசனம்:03))

குறிப்பு: மேற்கூறப்பட்ட வசனத்தில் இடம்பெற்றுள்ள ((ليلة مباركة)) ,,லைலதுன் முபாரகதுன்,, என்பதன் மூலம் நாடப்படுவது ((ليلة القدر)) ,,லைலதுல் கத்ர்,, ஆகும்.

((فيها يفرق كل أمر حكيم ))
என்ற வசனத்தின் கருத்தானது இவ்வருடத்திலிருந்து அடுத்த வருடம் வரை அழ்ழாஹ் தனது அடியார்களுக்கு நிர்ணயித்துள்ள மெளத், ஹயாத், பிறப்பு, ரிஸ்குகள் மேலும் அது போன்ற நிகழ்வுகளின் விபரங்களை லைலதுல் கத்ருடைய இரவில் அவன் மலக்குமார்களுக்கு அறிவித்துக் கொடுத்துள்ளான் என்பதாகும்.

#ஷஃபான்_பிறை_15_ஆம்_இரவில்_தொழக்கூடிய_தொழுகையின்_எண்ணிக்கை_எங்கும்_குறிப்பிட்டுக்_கூறப்படவில்ல_அது_சம்பந்தமான_தெளிவு

இவ்விரவிலே பிரத்தியேகமான அமைப்பில் 100 ரக்அத்கள் அல்லது 50 ரக் அத்கள் அல்லது 12 ரக்அத்கள் தொழுவதற்கு மார்க்கத்தில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் கிடையாது. மேலும் இது அழ்ழாஹ்வின் தூதர் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்களின் வாயிலாக பதிவிடப்படவுமில்லை. இவ்விரவிலே நன்மையை நாடக்கூடிய ஒரு முஸ்லிம் தான் விரும்பிய அளவு ரக்அத்களை தொழுது கொள்ளலாம். இத்தனை ரக்அத்கள்தான் தொழப்பட வேண்டுமென எண்ணிக்கை குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் அப்துழ்ழாஹ் அல் - ஹுமாரி رضي الله عنه அவர்கள்
((حسن البيان في ليلة النصف من شعبان))
,, ஹுஸ்னுல் பயான் பீ லைலதின் நிஸ்பி மின் ஷஃபான்,, எனும் கிரந்தத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ,, ஸஹீஹான அமைப்பிலோ அல்லது பலவீனமான அமைப்பிலோ இந்த இரவில் தொழப்படும் தொழுகையின் எண்ணிக்கை தொடர்பாக எந்த குறிப்பும் காணப்படவில்லை. மாறாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளே காணப்படுகின்றன.,,

#பிரார்த்தனை_அழ்ழாஹ்வின்_ஏற்பாட்டைத்_தட்டி_விடாது_மேலும்_அழ்ழாஹ்வுடைய_நாட்டம்_ஆரம்பமற்றது_ #அது_மாற்றமடையாதது_என்பது_பற்றிய_தெளிவு

அழ்ழாஹ்வுடைய நாட்டம் எனும் தன்மை அடியார்களின் செயல்கள், சொற்கள் அனைத்தையும் அடையவளைத்துக் கொள்ளக்கூடியது. இவ்வுலகிலே அழ்ழாஹ்வின் நாட்டமின்றி மேலும் அவன் அறியாமல் அவன் படைக்காமல் அவனின் ஏற்பாடின்றி எதுவும் நடைபெறமாட்டாது. அழ்ழாஹ்வின் நாட்டத்தின் பிரகாரமே அடியார்களின் நாட்டம் கூட உண்டாகுகிறது. இது தொடர்பாக பின்வருமாறு அழ்ழாஹு
தஆலா கூறியுள்ளான்

(وَمَاتَشَاءُوْنَ إِلَّا أَنْ يَشَاءَ اللّٰهُ رَبُّ العَالَمِيْنَ))
விளக்கம் : "படைப்பனைத்தையும் படைத்து ஆட்சி செய்யும் அழ்ழாஹ்வின் நாட்டமின்றி யாராலும் எதையும் நாடவே முடியாது."

இதுவே முஸ்லிம்களின் நம்பிக்கை கோட்பாடாகும். நல்ல விடயங்கள், கெட்ட விடயங்கள், வணக்கங்கள், பாவங்கள், அழ்ழாவை ஈமான் கொள்வது, அவனை மறுப்பது யாவும் அழ்ழாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன. ஏனெனில் அழ்ழாஹ்வைத் தவிர எதனையும் படைக்கக்கூடியவன் யாரும் கிடையாது. அழ்ழாஹ்வின் நாட்டத்திற்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அதில் மாற்றங்களோ, நிலைமாறுதல்களோ ஏற்படமாட்டாது. இவ்வாறுதான் அழ்ழாஹ்வுடைய அறிவு, வல்லமை போன்ற தன்மைகளும் மாற்றம் பெறமாட்டாது. மாற்றம் பெறுதல் என்பது படைப்புக்களின் தன்மையாகும். எனவே அழ்ழாஹ்வுடைய யதார்த்தத்திலோ, தன்மைகளிலோ மாற்றம் ஏற்படுவதில்லை. அவ்வாறு அழ்ழாஹ்வுடைய தன்மைகளில் மாற்றம் ஏற்படுவது புத்தி ஏற்றுக்கொள்ளாத, சாத்தியமற்ற ஒன்றாகும்.

12/02/2025

Islamic album Song | Nabiyin ummethea song |jamiyethul jamaaliya Arabic collage kky| thanzeel ahamed

Song name : Nabiyin ummethea.
Edite by: jamiyethul jamaaliya Arabic collage.kattankudy.
Music by : shaan Muhammed.
Singer: thanzeel ahamed
Lyrics: jamaaliya Arabic collage.

Share. subscribe
https://youtu.be/pbiz5BAjgBw

சங்கை பொருந்தி  #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..Beautiful Religion - islam Whats...
11/02/2025

சங்கை பொருந்தி #ஷஃபான்_பிறை_15 தெளிவு பெற வேண்டிய சில விடயங்கள்□ எனும் நூலில் இருந்து..
Beautiful Religion - islam
WhatsApp
https://chat.whatsapp.com/EpyH2olJYKm1gJLE9QDwC0
YouTube
https://youtube.com/channel/UCiRYpc1CCeZrx6uLriCTt2w
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
புகழ் யாவும் இல்லாமையிலிருந்து படைப்புகள் அனைத்தையும் படைத்து, அவற்றிற்கு எவ்விதத்திலும் ஒப்பாகாத, உடலற்ற, உருமற்ற அழ்ழாஹ்வுக்கே
உரித்தாகட்டுமாக!. மேலும் அதிக சிறப்புகளையும், தன் உம்மத்தின் மீது முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் எதையெல்லாம் பயப்படுவார்களோ அவை அனைத்தை விட்டும் அச்சமின்மையையும் அழ்ழாஹ் அவர்களுக்கு வழங்குவானாக!


#இஸ்லாத்தில்_பிரார்த்தனை_செய்வதன்_சிறப்பு

அதன் சிறப்பு பற்றி படைப்புகளின் தன்மைகளை விட்டும் பரிசுத்தமான அழ்ழாஹு தஆலா கூறியுள்ளான்.

(وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا
بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ)

விளக்கம் :
"உங்களிடம் அடியார்கள் அழ்ழாஹ்வையும், அவனது
தன்மைகளையும் பற்றி கேட்டால் அழ்ழாஹ்
அனைத்தையும் அறிந்தவன் மேலும் அவனைப் பிரார்த்திப்போரின் பிரார்த்தனையை கேட்பவன். அதாவது அழ்ழாஹ் அவருடைய
தேவையை நிறைவேற்றி
கொடுப்பான் அல்லது அந்த அடியான் மார்க்க ரீதியான நலவொன்றை பிரார்த்தித்திருந்தால் அந்த அடியானுக்கு (ஸவாபு) நற்கூலி வழங்குவான்."

(அத்தியாயம் : அல்-பகரஹ், வசனம் : 186)

அழ்ழாஹ்வின் தூதர் முஹம்மத்صلى الله عليه وسلم அவர்கள்
கூறினார்கள்:

"الدعاء مخ العبادة:

(அறிவித்தவர் : இமாம் அத்-திர்மிதீ رضي الله عنه )

இதன் கருத்தாவது துஆவின் அந்தஸ்து இபாதத்களிலே உயர்வானதாகும். ஏனெனில் ஒரு முஃமினான அடியாரின் பிரார்த்தனையில் அழ்ழாஹ்தான் அனைத்தையும் ஆட்சி செய்பவன், அனைத்தின் மீதும் வல்லமையுடையவன் மேலும் அவனுக்கு அழ்ழாஹ் செய்த அதிக அருட்கொடைகளை ஏற்றுக் கொள்கின்றான் என்பதெல்லாம் உள்ளடங்கியுள்ளது.

Address

Kinniya
Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Asha'era posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share