09/03/2026
"அடையாளங்கள் தொலைந்து போகும் காலத்தில், ஒரு சிறு தோட்டம் வரலாற்றை எப்படி மீட்டுருவாக்கம் செய்கிறது?"
சப்ரகமுவ மாகாணத்தின் எல்லைக்கோட்டில், சவால்கள் நிறைந்த பாதைகளுக்கு அப்பால் அமைந்திருக்கிறது கந்தலோயா. இயற்கை அனர்த்தம், நிலமின்மை, பொருளாதார நெருக்கடி என அடுக்கடுக்கான தடைகளையும் தாண்டி, ஒரு சமூகமாக இந்த மக்கள் சாதித்துக் காட்டுவது வியக்கத்தக்கது. வெறும் 175 மாணவர்கள் மட்டுமே பயிலும் ஒரு பாடசாலை, மிகக் குறுகிய காலத்தில் 47 பல்கலைக்கழகப் பட்டதாரிகளை உருவாக்கியது எப்படி? கலாசார சிதைவுகளுக்கு மத்தியில் 'காமன்கூத்து' எனும் மண்ணின் கலையை மாணவர்கள் முன்னெடுப்பது எதைக் காட்டுகிறது? கந்தலோயா பாடசாலையில் நான் கண்ட கூட்டுப்பொறுப்பும், அந்த மண்ணின் துணிச்சலும் மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வலிமையான அடையாளங்கள். எனது பயணத்தின் சில ஆழமான அவதானிப்புகள் இதோ...