23/02/2018
எந்த எண்ணத்துடன் கோலம்
போடவேண்டும்?
அதே மாதிரி வீடுகளில் கோலம்
போடுவார்கள். இது சாஸ்திரங்கள்
நமக்காக உருவாக்கிக் கொடுத்த
வழிமுறை. கோலம் எதற்காகப்
போடுகிறார்கள்? பல
புள்ளிகளை வைத்து இணைத்துப்
பார்க்கிறார்கள்.
கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள்
காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப்
புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக்
கொண்டு கோலமிடும் பொழுது, நாம்
எண்ணுகின்ற உணர்வுகள், கோலப்
பொடியில் கலந்து விடுகின்றது.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள்.
சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன்,
கோலப்பொடியைக் கையில் எடுத்தோம்
என்றால், அதிலிருக்கும் காந்த
சக்தி நமது வெறுப்பின்
உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
நாம் நமது வீட்டில்
கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற
எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம்.
ஆனால், மாமியார் மீது வெறுப்பு,
மாமனார் மீது வெறுப்பு, கணவர்
மீது வெறுப்பு என்று மனதில்
வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால்
எப்படியிருக்கும்?
இந்த உணர்வுடன் கோலமிடத்
தொடங்கினால், என்னாகும்?
அது ஒழுங்காக வராது.
அழித்து அழித்துக் கோலம் போட்டுக்
கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக
இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால்,
தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக்
கொண்டே போவார்கள்.
ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்
காக தன் குடும்பத்தின் மீது, பற்றும்
பாசமும் கொள்ளும் பொழுது,
மகிழ்ச்சியான உணர்வின்
தன்மையை உருவாக்கும் ஆற்றல்
வருகின்றது.
குடும்பத்தில் அனைவரும்
ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஒன்று சேர்ந்து வாழவேண்டும்
என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து,
புள்ளிகளை வைத்துக் கோலமிடும்
பொழுது, நம்முடைய நிலைகளும்
ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத
நிலைகள் கொண்டு, அனைவரையும்
அரவணைக்கும் தன்மை வர
வேண்டுமென்ற எண்ணத்தால்,
நமது குடும்பத்தின் மீது பற்றும்
பாசமும் வரவேண்டும்,
இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும்
என்ற உணர்வுகளை எண்ணித்தான்,
இங்கு கோலமிட வேண்டும்.
ஆக, நம் முன்னோரான சித்தபெருமக்கள்
வகுத்த அறிவியல் தத்துவங்கள்
பொய்யல்ல. நாம் தெளிவாக
இதையெல்லாம் தெரிந்து அந்த
ஞானிகள் காட்டிய அருள் வழியில்
மகிழ்ந்து வாழ்வோம்