05/02/2026
ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில்
#இலங்கையின்_78_வது_சுதந்திர_தின_நிகழ்வு
ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, அதன் இணை அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வு ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சிரேஷ்ட பொறியாளர் A.M. றாபி தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் 2026.02.04 ம் திகதி காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.
தேசியக் கொடியேற்றும் நிகழ்வின் பின் தாருத்தலபா மாணவன் எம்.எஸ். சுரைப் அவகளின் கிராஅத் உடன் ஆரம்பமான இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கெப்டன் E.M.A.S. Ekanayake (S.L. Army) எஸ்.ஐ.தௌபீக் (OIC Akkaraipattu Police) மற்றும் ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பைத்துல் மால்- உறுப்பினர்கள்,பள்ளிவாசல்களின் இமாம்கள், முஅத்தீன்கள், தாருத்தலபா ஹிப்ழ் மதரஸா மாணவர்கள், ஒலுவில் அந் நஹ்ழா பாலர் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
"தேசப்பற்று" என்ற தலைப்பில் தாருத்தலபா ஹிப்ழ் மதரஸா மாணவன் எம்.எம். முபானிக் அவர்களின் சிற்றுரையை தொடர்ந்து, சுதந்திர தினம் தொடர்பானா உரையினை பள்ளிவாசல் பொருளாளர் இஸட்.ஏ.றகுமானின் நிகழ்த்தினார்.
தாறுத் தலபா மனன கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இறுதியாக நன்றியுரையினை எம்.சி.எ.மக்சூட் (A.O -Genius Hospital) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வை பள்ளிவாசல் சார்பாக அதன் முகாமைத்துவ உதவியாளர் அஸீஸ் எம்.பாயிஸ் மற்றும் எம்.ஏ.எம்.சிஹாம் (பணிப்பாளர் ஒலுவில் மீடியா) ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்விற்கு ஊடாக அனுசரணையினை ஒலுவில் மீடியா வழங்கியிருந்தது.
நிகழ்வினை ஏற்பாடு செய்வதற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினையும் பங்களிப்பினையும் வழங்கிய பைத்துல் மால் பொருளாளர் A.M.றினோஸ், பள்ளிவாசல் உதவியாளர் A.L. மன்சூர், ஒலி அமைப்பு மற்றும் தொழினுட்ப உதவிகளை வழங்கி இஷட்.எம்.நிலாம் (நளீமி), E.L.பைசுர்ரஹ்மான் மற்றும் இந்நிகழ்வினை சிறப்பாக செய்து முடிக்க உதவிய ஏனைய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நம்பிக்கையாளர் சபை,
பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்,
ஒலுவில்.