Maviddapuram Kanthaswamy Temple-மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

  • Home
  • Sri Lanka
  • Maviddapuram
  • Maviddapuram Kanthaswamy Temple-மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

Maviddapuram Kanthaswamy Temple-மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maviddapuram Kanthaswamy Temple-மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், Hindu temple, Kks Road, Maviddapuram.

TEMPLE AUTHORITY: Maharajasri D.S.RATHNASABAPATHY KURUKKAL, Governing Authority and chief High Priest, Mavai Aadheenam, Maviddapuram Kandasamy Temple, Maviddapuram, Tellippalai, Northern Province, Srilanka.

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடார்ந்த மஹோற்சவ பெருவிழா - 2025 திருநடனத் திருவிழா🙏மாவைக்கந்தா போற்றி போற்றி நின்பாத...
05/07/2025

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடார்ந்த மஹோற்சவ பெருவிழா - 2025

திருநடனத் திருவிழா🙏

மாவைக்கந்தா போற்றி போற்றி நின்பாதம் சரணம் சரணம்🙏

Photos Credits go to Mavaikandan official page.
MAVIDDAPURAM KANDASWAMY TEMPLE

#மாவிட்டபுரம் #காம்யோற்சவம் #மாவைக்கந்தன் #திருவிழா #மாவைகந்தன் #மாவை #கந்தசுவாமி #கோவில்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
Maviddapuram Kanthaswamy Temple

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய  வருடார்ந்த மஹோற்சவ பெருவிழா - 2025 3ம் நாள் திருவிழா🙏🙏🙏Credit goes to Capital Tharisan...
02/07/2025

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடார்ந்த மஹோற்சவ பெருவிழா - 2025

3ம் நாள் திருவிழா🙏🙏🙏

Credit goes to Capital Tharisanam

மாவைக் கந்தன்🙏🌺🌼இன்றைய தினத்தில் எழில்மிகு திருக்கோலத்தில் காட்சி தருகின்றான்எழில் நலம் ஓங்கிட மயில் மேல்வடிவேலொடு நீ வர...
01/07/2025

மாவைக் கந்தன்🙏🌺🌼

இன்றைய தினத்தில் எழில்மிகு திருக்கோலத்தில் காட்சி தருகின்றான்

எழில் நலம் ஓங்கிட மயில் மேல்
வடிவேலொடு நீ வரும் வேளை..

தேவர் சேனாதிபதியின் ஆறுமுகமும்,
பன்னிரு தடந்தோளும்,

பதினெண் கண்களுமுடையானின்
திருவடி காணப் பெற்றேன் என
பேரனாந்தம் கொண்டு

அடி தொழுதே நிற்பேன்...

அத்துணை தெய்வமும்
ஆளும் நின்னடியில்

கைத்தலம் சேர்த்துப் பணிவதே
பெருஞ் சிறப்பு என்பேன்...

மாவைக் கந்தனே...

ஓம் சரவண பவ 🙏
Sivasoroopan

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்மஹோற்சவம் 2025 முதலாம் நாள் 🙏மாவைக்கந்தா போற்றி போற்றி நின்பாதம் சரணம் சரணம்🙏🙏🙏Photos...
30/06/2025

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்
மஹோற்சவம் 2025 முதலாம் நாள் 🙏

மாவைக்கந்தா போற்றி போற்றி நின்பாதம் சரணம் சரணம்🙏🙏🙏

Photos Credits go to Mavaikandan official page.
https://m.facebook.com/mavaikandan/

#மாவிட்டபுரம் #காம்யோற்சவம் #மாவைக்கந்தன் #திருவிழா #மாவைகந்தன் #மாவை #கந்தசுவாமி #கோவில்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
Maviddapuram Kanthaswamy Temple

35 ஆண்டுக்கு பின் இடம்பெறும் மாவைக்கந்தனின் கொடியேற்றம் நாளை🙏மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்மஹோற்சவம் 202530.06.2025...
29/06/2025

35 ஆண்டுக்கு பின் இடம்பெறும் மாவைக்கந்தனின் கொடியேற்றம் நாளை🙏

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில்

மஹோற்சவம் 2025

30.06.2025 திங்கட்கிழமை மஹோற்சவம் முதலாம் நாள்

காலை பூசை நேர விபரம்

காலை 04:30 மணிக்கு உஷத்கால பூசை
காலை 05:30 மணிக்கு 108 சங்காபிஷேகம்
காலை 07:15 மணிக்கு காலைச்சந்தி பூசை
காலை 09:00 மணிக்கு கொடிப்புடவை உள்வீதி வலம்
காலை 10:15 மணிக்கு வசந்தமண்டப பூசை
நன்பகல் 12:06 மணிக்கு கொடியேற்றம்
நன்பகல் 01:30 மணிக்கு உச்சிக்கால பூசை
நன்பகல் 01:45 மணிக்கு மகேஸ்வரபூசை, அன்னதானம்

மாலை பூசை நேர விபரம்

மாலை 04:30 மணிக்கு 108 சங்காபிஷேகம்
மாலை 06:00 மணிக்கு சாயரட்ச பூசை
மாலை 07:00 மணிக்கு தம்ப பூசை
மாலை 08:00 மணிக்கு இரண்டாம் கால பூசை
இரவு 08:15 மணிக்கு வசந்தமண்டப பூசை தொடர்ந்து திருவிழா
இரவு 10:30 மணிக்கு அர்த்தசாம பூசை தொடர்ந்து திருவருட் பிரசாதம் வழங்குதல்

மாவைக்கந்தா போற்றி போற்றி...நின்பாதம் சரணம் சரணம்....🙏🙏🙏

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி !அபிஷேக ஸ்கந்தனுக்கு மஹா கும்பாபிஷேகம் --இராஜ மூர்த்தமா...
11/04/2025

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி !

அபிஷேக ஸ்கந்தனுக்கு மஹா கும்பாபிஷேகம்
--
இராஜ மூர்த்தமாக முருகன் எழுந்தருளியிருக்கும் யாழ்ப்பாணம்- மாவிட்டபுரம் பெரிய கோயிலில் மஹா கும்பாபிஷேகம்(11.04.2025) வெள்ளிக்கிழமை.
--
ஆயிரத்து முன்னூறு ஆண்டு பழைமை வாய்ந்த மாவை ஆதீனத்தின் நிர்வாகத்திலிருக்கும் இத்திருக்கோயிலில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம்.
--
நல்லூர்க்கந்தனை அலங்காரக்கந்தன் என்றும் செல்வச் சந்நிதி முருகனை அன்னதானக்கந்தன் என்றும் மாவைக் கந்தனை அபிஷேகக் கந்தன் என்றும் சிறப்பிப்பது ஈழத்து வழக்கு.
--
அபிஷேகமான பிறகு தானே, அலங்காரம், நெய்வேத்யம் நடைபெறும். எனவே காலத்தால் முந்தைய தலம் மாவிட்டபுரம். அதை உணர்த்துவது போல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. ஆயிரத்து ஐநூறு ஆண்டு பழைய வேலும் லிங்கமும் இன்றும் இருக்கிறது.
--
அபி என்றால் அழகு. அழகுக் கடவுளான முருகன் இங்கு அபிஷேகப் ப்ரியன். அத்தகு அபிஷேகப் ப்ரியன் அபிஷேகங்களில் மிகப் பெரியதான மஹா கும்ப அபிஷேகம்.
--
இந்த நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு ஆதீன குருமஹா சந்நிதானங்கள், வேத பண்டிதர்கள்,
ஶிவாச்சார்யர்கள், வித்வான்கள் என்று பலரும் மாவிட்டபுரத்தில் கூடியிருக்கிறார்கள்.
--
குறிப்பாக சம்ஸ்க்ருத கல்லூரி, தருமை ஆதீன பாடசாலை போன்றவற்றில் வியாகரண சிரோமணி முதலிய பட்டங்களை பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இலண்டன் நாகநாத ஶிவாச்சார்யர் போன்ற பலரும் வந்து சென்றிருக்கிறார்கள். இன்னும் பலர் வருகை தர இருக்கிறார்கள்.
--
இந்த வித்வத் ஶதஸை தரிசிக்கவென்றே மாவிட்டபுரம் போகலாம். தவிர கிரியா காலம் தோறும் நிருத்தாஞ்ஜலி நடைபெற்று வருகிறது.
--
05.04.2025 திருப்பதி வேத பல்கலைக்கழக துணைவேந்தர் வருகை தந்து ஸம்க்ருதத்திலேயே உரையாற்றியிருந்தார்கள். குறித்த பல்கலைக்கழக பேராசிரியர் கார்த்திகேய ஶிவாச்சார்யர் யாகபூஜைகளிலும் இணைய இருக்கிறார்.
--
மாவை ஆதீனம் ஆயிரம் ஆண்டு பழைமை மிக்க வரலாற்றுப்புகழ் பெற்ற
ஶிவாச்சார்ய ஆதீனம். அந்த ஆதீனத்தின் தற்போதைய ஆதீனகர்த்தர் மஹாராஜஸ்ரீ து.ஷ. இரத்னசபாபதிக்குருக்கள் தலைமையில் இவ்விழா கோலாகலமாக வைதிக சைவ விதிப்படி நடைபெற்று வருகிறது.
--
மாவை ஆதீன இளவரசு. மஹாராஜஸ்ரீ .இ. ஞானஸ்கந்த ஶிவாச்சார்யார் பிரதிஷ்டாசார்யராகப் பக்தி பூர்வமாக கிரியைகளை ஆற்றி வருகிறார்.
--
தமிழக வேத ஆகம சாஸ்த்ர வித்வான்களும் அவர்களுக்கு இணையாக ஈழத்து சாதகாச்சார்யர்களும் ஶாதகப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு காலமும் நிகழும் ப.சனாதனஶர்மா அவர்களின் கிரியை விளக்க உரைகள் அற்புதமாக உள்ளன.
--
கலாநிதி. ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி பிரபாகர சர்மா அவர்கள் நடன வேள்வியை நெறிப்படுத்துகிறார். சிதம்பரத்து தீட்சிதர்கள் நடேச யாகத்தைச் நிகழ்த்த இருக்கிறார்கள்.
--
திருமுறை, திருப்புகழுக்கும் அதிக முதன்மை வழங்கப்படுகிறது. சிவ. மாதவன் வருகை தந்திருந்தார். இன்னும் ஓதுவார் மூர்த்திகள் எழுந்தருள இருக்கிறார்கள்.
--
ஶிவஸ்ரீ. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆதீனங்களை வரவேற்று உபசரித்தல் முதலிய பணிகளை முன்னெடுக்கிறார்.
--
எமது மண்ணின் பெருமை மிக்க கலாநிதி ஆறு. திருமுருகன், கலாநிதி. அனுஷாந்தன், கம்பவாரிதி போன்ற சைவச்சான்றோர்களும் அவ்வப்போது கலந்து பணியாற்றுகிறார்கள்..
--
அடியேனுக்கும் இத்தகு பெரிய வைபவத்தில் இணையும் பேறு கிடைத்திருக்கிறது. ஏதோ நாமும் ஆச்சார்யம் முதலியவற்றினை அவ்வப்போது செய்ய முருகனின் அருள் கிடைக்கிறது.
--
இன்று 06.04.2025 இரவு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மாவை ஸுப்ரஹ்மண்யக் கடவுள் மூலாலயத்திலிருந்து கும்பத்தில் எழுந்தருளி யாக சாலையில் மந்த்ர சிம்மாசனத்தில் எழுந்தருள இருக்கிறார்.
--
தொடர்ந்து பத்துக் காலம் யாக மண்டப -வேதிகா- குண்ட ஆராதனைகள் நிகழ்ந்து உத்தர நக்ஷத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நிகழ இருக்கிறது.
--
சோழர் கால ஸ்தலமாக -மாருதப்புரவீக வல்லிக்கு வாழ்வு கொடுத்த தலமாக- காயாத்துறையை காங்கேசன் துறையாக்கிய அற்புத தலமாக இத்தலம் மிளிர்கிறது.
--
வா என்றழைத்து அருளும் வான் கருணை வெள்ளமான மாவை ஷண்முகநாத வள்ளல் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் எங்கள் வாழ்விலும் எம்மோடு வந்தருளிக் காத்திட வேண்டுவோம்.

மாவைக் கந்த சுவாமியாருக்கு அரோஹர🙏
--
அன்புடன்,
தி.மயூரகிரிக்குருக்கள்
நீர்வேலி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி !அபிஷேக ஸ்கந்தனுக்கு மஹா கும்பாபிஷேகம் --இராஜ மூர்த்தமா...
11/04/2025

சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி !

அபிஷேக ஸ்கந்தனுக்கு மஹா கும்பாபிஷேகம்
--
இராஜ மூர்த்தமாக முருகன் எழுந்தருளியிருக்கும் யாழ்ப்பாணம்- மாவிட்டபுரம் பெரிய கோயிலில் மஹா கும்பாபிஷேகம் (11.04.2025) வெள்ளிக்கிழமை.
--
ஆயிரத்து முன்னூறு ஆண்டு பழைமை வாய்ந்த மாவை ஆதீனத்தின் நிர்வாகத்திலிருக்கும் இத்திருக்கோயிலில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம்.
--
நல்லூர்க்கந்தனை அலங்காரக்கந்தன் என்றும் செல்வச் சந்நிதி முருகனை அன்னதானக்கந்தன் என்றும் மாவைக் கந்தனை அபிஷேகக் கந்தன் என்றும் சிறப்பிப்பது ஈழத்து வழக்கு..
--
அபிஷேகமான பிறகு தானே, அலங்காரம், நெய்வேத்யம் நடைபெறும். எனவே காலத்தால் முந்தைய தலம் மாவிட்டபுரம். அதை உணர்த்துவது போல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. ஆயிரத்து ஐநூறு ஆண்டு பழைய வேலும் லிங்கமும் இன்றும் இருக்கிறது.
--
அபி என்றால் அழகு. அழகுக் கடவுளான முருகன் இங்கு அபிஷேகப் ப்ரியன். அத்தகு அபிஷேகப் ப்ரியன் அபிஷேகங்களில் மிகப் பெரியதான மஹா கும்ப அபிஷேகம்.
--
இந்த நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு ஆதீன குருமஹா சந்நிதானங்கள், வேத பண்டிதர்கள்,
ஶிவாச்சார்யர்கள், வித்வான்கள் என்று பலரும் மாவிட்டபுரத்தில் கூடியிருக்கிறார்கள்.
--
குறிப்பாக சம்ஸ்க்ருத கல்லூரி, தருமை ஆதீன பாடசாலை போன்றவற்றில் வியாகரண சிரோமணி முதலிய பட்டங்களை பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இலண்டன் நாகநாத ஶிவாச்சார்யர் போன்ற பலரும் வந்து சென்றிருக்கிறார்கள். இன்னும் பலர் வருகை தர இருக்கிறார்கள்.
--
இந்த வித்வத் ஶதஸை தரிசிக்கவென்றே மாவிட்டபுரம் போகலாம். தவிர கிரியா காலம் தோறும் நிருத்தாஞ்ஜலி நடைபெற்று வருகிறது.
--
05.04.2025 திருப்பதி வேத பல்கலைக்கழக துணைவேந்தர் வருகை தந்து ஸம்க்ருதத்திலேயே உரையாற்றியிருந்தார்கள். குறித்த பல்கலைக்கழக பேராசிரியர் கார்த்திகேய ஶிவாச்சார்யர் யாகபூஜைகளிலும் இணைய இருக்கிறார்.
--
மாவை ஆதீனம் ஆயிரம் ஆண்டு பழைமை மிக்க வரலாற்றுப்புகழ் பெற்ற ஶிவாச்சார்ய ஆதீனம். அந்த ஆதீனத்தின் தற்போதைய ஆதீனகர்த்தர் மஹாராஜஸ்ரீ து.ஷ. இரத்னசபாபதிக்குருக்கள் தலைமையில் இவ்விழா கோலாகலமாக வைதிக சைவ விதிப்படி நடைபெற்று வருகிறது.
--
மாவை ஆதீன இளவரசு. மஹாராஜஸ்ரீ .இ. ஞானஸ்கந்த ஶிவாச்சார்யார் பிரதிஷ்டாசார்யராகப் பக்தி பூர்வமாக கிரியைகளை ஆற்றி வருகிறார்.
--
தமிழக வேத ஆகம சாஸ்த்ர வித்வான்களும் அவர்களுக்கு இணையாக ஈழத்து சாதகாச்சார்யர்களும் ஶாதகப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு காலமும் நிகழும் ப.சனாதனஶர்மா அவர்களின் கிரியை விளக்க உரைகள் அற்புதமாக உள்ளன.
--
கலாநிதி. ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி பிரபாகர சர்மா அவர்கள் நடன வேள்வியை நெறிப்படுத்துகிறார். சிதம்பரத்து தீட்சிதர்கள் நடேச யாகத்தைச் நிகழ்த்த இருக்கிறார்கள்.
--
திருமுறை, திருப்புகழுக்கும் அதிக முதன்மை வழங்கப்படுகிறது. சிவ. மாதவன் வருகை தந்திருந்தார். இன்னும் ஓதுவார் மூர்த்திகள் எழுந்தருள இருக்கிறார்கள்.
--
ஶிவஸ்ரீ. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆதீனங்களை வரவேற்று உபசரித்தல் முதலிய பணிகளை முன்னெடுக்கிறார்.
--
எமது மண்ணின் பெருமை மிக்க கலாநிதி ஆறு. திருமுருகன், கலாநிதி. அனுஷாந்தன், கம்பவாரிதி போன்ற சைவச்சான்றோர்களும் அவ்வப்போது கலந்து பணியாற்றுகிறார்கள்..
--
அடியேனுக்கும் இத்தகு பெரிய வைபவத்தில் இணையும் பேறு கிடைத்திருக்கிறது. ஏதோ நாமும் ஆச்சார்யம் முதலியவற்றினை அவ்வப்போது செய்ய முருகனின் அருள் கிடைக்கிறது.
--
இன்று 06.04.2025 இரவு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மாவை ஸுப்ரஹ்மண்யக் கடவுள் மூலாலயத்திலிருந்து கும்பத்தில் எழுந்தருளி யாக சாலையில் மந்த்ர சிம்மாசனத்தில் எழுந்தருள இருக்கிறார்.
--
தொடர்ந்து பத்துக் காலம் யாக மண்டப -வேதிகா- குண்ட ஆராதனைகள் நிகழ்ந்து உத்தர நக்ஷத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நிகழ இருக்கிறது.
--
சோழர் கால ஸ்தலமாக -மாருதப்புரவீக வல்லிக்கு வாழ்வு கொடுத்த தலமாக- காயாத்துறையை காங்கேசன் துறையாக்கிய அற்புத தலமாக இத்தலம் மிளிர்கிறது.
--
வா என்றழைத்து அருளும் வான் கருணை வெள்ளமான மாவை ஷண்முகநாத வள்ளல் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் எங்கள் வாழ்விலும் எம்மோடு வந்தருளிக் காத்திட வேண்டுவோம்.

மாவைக் கந்த சுவாமியாருக்கு அரோஹரா
--
அன்புடன்,
தி.மயூரகிரிக்குருக்கள்
நீர்வேலி

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக கிரியைகள்🙏🙏🙏
11/04/2025

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக கிரியைகள்🙏🙏🙏

புதுப்பொலிவு பெற்ற மாவைக்கந்தனின் பழைமையான இராஜகோபுரத்துடன் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 🙏🙏🙏 11.04.2025 பங்குனி 28ம் நாள் ...
01/04/2025

புதுப்பொலிவு பெற்ற மாவைக்கந்தனின் பழைமையான இராஜகோபுரத்துடன் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 🙏🙏🙏

11.04.2025 பங்குனி 28ம் நாள் வெள்ளிக்கிழமை!

#மாவிட்டபுரம் #கந்தசுவாமி #கோவில்

🔥🔥🔥
27/11/2024

🔥🔥🔥

27/11/2024

ஒருமுறை இந்த பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள் கண்கள் கலங்கும்😰

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🙏
15/11/2024

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🙏

Address

Kks Road
Maviddapuram

Alerts

Be the first to know and let us send you an email when Maviddapuram Kanthaswamy Temple-மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category