சாய் இல்லம் மன்னார்

சாய் இல்லம் மன்னார் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சாய் இல்லம் மன்னார், Religious Center, Amman Kovil Veethe, Uppukkulam, Mannar.

🙏⚘ஓம்சாய்ராம் 🙏⚘இறைவனுக்கும் ஞானிக்கும் வேறுபாடில்லை என்பதை எவரொருவரால் உணரமுடிகிறதோ  அவரே குருவை வணங்கும் தகுதியைப் பெற...
21/04/2026

🙏⚘ஓம்சாய்ராம் 🙏⚘இறைவனுக்கும் ஞானிக்கும் வேறுபாடில்லை என்பதை எவரொருவரால் உணரமுடிகிறதோ அவரே குருவை வணங்கும் தகுதியைப் பெறுகிறார்.
⚘ஸ்ரீ சாய்சத்சரிதம் அத்தியாயம்_ 30⚘
இறையருளைப் பெற்ற காகாஜி வைத்யா என்பவர் .
🙏சப்தஷ்ரிங்கிதேவியின் 🙏 உபாசகர். அவர் 🙏🙏🙏தேவியிடம் 🙏அதீத பக்தி கொண்டவர். இருப்பினும் அவர் வாழ்வில் நமக்கு ஏற்படும் வலிகளும், வேதனைகளும் போல சாதகமற்ற சூழ்நிலைகளாலும், துயரங்களாலும் அவர் பெருமளவு மன அமைதியை இழந்தார் . ஒருநாள் மாலை தேவியின் கோயிலுக்குசென்று தம்மை கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும் பக்தி பூர்வமாக பிரார்த்தனை செய்துவேண்டினார். 🙏தேவி🙏 அவரது பக்தியால் மகிழ்ச்சியடைந்து அதே நாள் இரவு கனவில் தோன்றி அவரிடம் கூறினாள் "பாபாவிடம் நீ செல்வாயாக" பின் உன் மனம் அமைதியடையும். இந்த "பாபா"யாரென்று தேவியிடம் அறிவதற்கு ஆர்வமுற்றார். அதன் முன்பு அவரது தூக்கம் கலைந்து விட்டது.
🙏தேவி 🙏குறிப்பிட்ட "பாபா "யாராக இருக்கும் என்று எண்ணத் தொடங்கினார்.

சிறிது நேரம் கழித்து இந்த "பாபா"
🙏த்ரயம்பகேஸ்வரராக🙏 ( சிவனாக) இருக்க வேண்டும் என எண்ணி 🙏 த்ரயம்பகத்திற்கு🙏 சென்று அங்கே பத்து நாட்கள் தங்கினார்.
அங்கே அவர் ஆசார அனுஷ்டானங்களுடன் "ஸ்ரீ ருத்ரம்" ஓதி அபிஷேகம் பிற சம்பிரதாயங்கள் எல்லாம் செய்தும் அவரது மனம் அமைதியடையவில்லை. பின்னர் தன்வீப்டிற்கு சென்று மீண்டும் தேவியை இரக்கமாக வேண்டினார். அன்றிரவு தேவி மீண்டும் கனவில் தோன்றி "நீ" ஏன் த்ரயம்பகேஸ்வரத்திற்கு சென்றாய் நான் "பாபா" என குறிப்பிட்டது. "ஸ்ரீ ஸமர்த்த சாயியை" என்றாள்.
அந்த நேரம் தொடக்கம் எப்படி சீரடிக்கு செல்வது " பாபாவை எப்படிப் பார்ப்பது என்பதே கேள்வியாக இருந்தது.
ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவர் உண்மையான ஆர்வமுள்ளவராக இருப்பின் ஞானி மாத்திரமல்ல கடவுளும் அவரது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். உண்மையில் 'ஸந்து' தும், (ஞானி) 'அனந்' தும் ( கடவுள்) ஒருவரே எள்ளளவும் அவர்களிடையே வேறுபாடு இல்லை.
ஒரு ஞானியைப் பார்க்க அவராகவே செல்கிறாரென்றால் அது வெறும் டம்பமேயாகும். ஞானியின் அருளின்றி எவரே அவரை அணுகி தரிசிக்க முடிகிறது.
குருவின் அனுக்கிரகம் எமக்கு இல்லாவிட்டால் அவரது நாமத்தை உச்சரிக்க கூட எம்மால் முடியாது. அவரது அனுக்கிரகம் கிடைப்பதானால் ஆன்மீக வழிசென்று இறையை உணரவேண்டும். இங்ஙனம் குருவும், கடவுளும் ஒன்றே என உணரும் நிலைதான்.சற்குருசாய் வழிபாடு என்பதை உணர்ந்து சாய் பிரேரணாவில் சொல்லப்பட்ட கைங்கரியங்களில் ஏதாவது ஒரு சிலவற்றை தானும் நாம் செய்கிறோமா ? என பரிசீலித்தபடி சாய் நாமம் உச்சரித்து நாளாந்தம் எம் கடமைகளையும் தவறாமல் நல்வழி நடப்போமானால். மன அமைதியுடன்எவ்வாறான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்துஎமது இலக்கை அடையலாம் .
இதற்கு சாய் அப்பாவின்🙏⚘🙏 நம்பிக்கை 🙏⚘மற்றும்🙏⚘பொறுமை🙏⚘🙏 என்ற இரண்டு பிரசாதத்தை அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டும்.
🌺🙏ஸ்ரீ ஸமர்த்த🌺🙏 சச்சிதானந்த🌺🙏 🙏🌺🙏🌺🙏சற்குருசாய்நாத் 🙏🌺மகாராஜ்க்கு ஜெய்♥️🙏

21/04/2026

நீ மனமுடைந்து போகும் அளவுக்கு ஒன்றும் நடந்து விடவில்லை, மனதை ஒரு நிலைப்படுத்தி சிறிது நேரம் என் முன் வந்து அமரு, நான் தருகிறேன் உன் பிரச்சனைக்கான தீர்வை.

Address

Amman Kovil Veethe, Uppukkulam
Mannar
MB41000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சாய் இல்லம் மன்னார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share