Mannar Diocese Catholic Youth Union

Mannar Diocese Catholic Youth Union Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mannar Diocese Catholic Youth Union, Religious organisation, Mannar Town.

*SOLEMUNITY OF THE MOST HOLY TRINITY**Go therefore and make disciples of all nations, baptizing them in the name of the ...
31/05/2026

*SOLEMUNITY OF THE MOST HOLY TRINITY*

*Go therefore and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit*
(~*Matthew 28:19*~)

Glory be to the Father, who loved us first; to the Son, who saved us; and to the Holy Spirit, who lives within us.

 ்கும்மேற்பட்ட_வவுனியா_மறைக்கோட்ட_இளையோர்களின்_பங்கேற்புடன்_சிறப்பாக_நடைபெற்ற_செபமாலை_பேரணிமன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ...
26/05/2026

்கும்மேற்பட்ட_வவுனியா_மறைக்கோட்ட_இளையோர்களின்_பங்கேற்புடன்_சிறப்பாக_நடைபெற்ற_செபமாலை_பேரணி

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், வவுனியா மறைக்கோட்ட இளையோரின் அனுசரணையில், வவுனியா மறைக்கோட்ட இளையோர்களுக்கான செபமாலை பேரணி கடந்த 24.05.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பங்கின் துணை ஆலயமான அண்ணாநகர் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் செபமாலையுடன் ஆரம்பமாகி, இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நிறைவு பெற்றது.

பேரணியைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை வழிபாடுகளை இறம்பைக்குளம் உதவி பங்குதந்தை அருட்பணி பெஞ்சமின் அடிகளார் வழிநடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நேசரட்ணம் அடிகளாரினால் நற்கருணை ஆசீர்வாதமும் அன்னை மரியாவின் திருச்சுருப ஆசீர்வாதம் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி இராசாணந்தம் நீக்ளஸ் அடிகளாரினாலும் வழங்கப்பட்டது.


​இவ் ஆன்மீகப் பேரணியை வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் இறம்பைக்குளம் பங்குதந்தையுமான அருட்பணி விக்றர் சோசை அடிகளாரினாலும் வவுனியா மறைக்கோட்ட நிர்வாக குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

​இந்நிகழ்வில் வவுனியா மறைக்கோட்டத்தில் பணியாற்றும் பங்குதந்தையர்கள், அருட்சகோதரிகள், மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் நிர்வாகக்குழுவினர் மற்றும் பல்வேறு பங்குகளில் இருந்தும் வருகை தந்த 230-க்கும் மேற்பட்ட இளையோர்கள் ஆழமான விசுவாசத்துடனும் எழுச்சியுடனும் கலந்துகொண்டனர்.

​பேரணியின் இறுதி நிகழ்வாக, வவுனியா மறைக்கோட்டத்தில் உள்ள பல்வேறு பங்குகளின் இளையோர் ஒன்றியத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

20/05/2026

வணக்க மாத செயற்பாடாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி நீக்கிலஸ் அடிகளாரின் தலைமையில் மறைக்கோட்ட நிகழ்வாக மாந்தை மறைக்கோட்டத்தின் இளையோர் யுவதிகளுக்கான செபமாலை பேரணியானது ஒழுங்குபடுத்தப்பட்டது

இதில் மாந்தை மறைக்கோட்டத்தை சேர்ந்த இளையோர் யுவதிகளும் திருப்பாலர் சபை சிறார்களுமாக 160 க்கும் அதிகமானோர் பங்கெடுத்தனர்

இப்பேரணியானது பள்ளமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது

நற்கருணை வழிபாடு அருட்பணி செல்வநாதன் அடிகளாரினால் நிகழ்த்தப்பட்டு, மறைகோட்ட இயக்குனர் அருட்பணி யூட். குரூஸ்அடிகளாரினால் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது
அன்னையின் மரியாளின் திருச்சுரூப ஆசீர்வாதம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர்
அருட்பணி நீக்கிலாஸ் அடிகளாரால் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திய மறைகோட்ட முதல்வர்
மற்றும் மறைக்கோட்ட நிர்வாகக்குழு
ஏனைய ஏற்பாடுகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வழிப்படுத்திய அருட்பணியாளர்களுக்கும் அருட்சகோதரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

#செபமாலை #2026

மாந்தை மறைக்கோட்டத்தில் நடைபெற்ற செபமாலை பேரணி மற்றும் நற்கருணை ஆராதனை!மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின...
18/05/2026

மாந்தை மறைக்கோட்டத்தில் நடைபெற்ற செபமாலை பேரணி மற்றும் நற்கருணை ஆராதனை!

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், விடத்தல்தீவு புனித ஜோசப்வாஸ் கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் அனுசரணையில், மாந்தை மறைக்கோட்ட இளையோர்கள் மற்றும் திருப்பாலர்த்துவ சபை மாணவர்களுக்கான விசேட செபமாலை பேரணியும் நற்கருணை ஆராதனையும் 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி இராசாணந்தம் நீக்ளஸ் அடிகளார் தலைமையில் விடத்தல்தீவு பங்குதந்தை அருட்பணி. ஜெயகாந்தன் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

மாலை 4.30 மணியளவில் பள்ளமடு பகுதியில் இருந்து ஆரம்பமான இச் செபமாலை பேரணியானது, விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயத்தை வந்தடைந்து அங்கு நிறைவு பெற்றது. இதில் இளையோர்களும் மாணவர்களும் பக்தி பூர்வமாக கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நற்கருணை ஆராதனையை
காத்தான்குளம் பங்குதந்தை அருட்பணி. செல்வநாதன் அடிகளார் நெறிப்படுத்தியதோடு , நற்கருணை இறையாசீர்வதத்தினை மாந்தை மறைக்கோட்ட முதல்வரும், ஆட்காட்டிவெளி பங்குதந்தையுமான அருட்பணி. யூட் குருஸ் அடிகளார் வழங்கினார்.

அத்தோடு அன்னை மரியாவின் திருச்சுருப இறையாசீர்வாதம் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி. இராசாணந்தம் நீக்லஸ் அடிகளார் வழங்கினார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், திருப்பாலர்த்துவசபை மாணவர்கள், அவர்களின் ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மாந்தை மறைக்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பங்குகளில் இருந்தும் வருகை தந்திருந்த இளையோர்கள் என 160 ற்கு மேற்பட்டோர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 !🎂🎉🥳       2026-05-05             Coordinator,       Murunkan Deanery,Catholic Youth  Association        Diocese of Man...
05/05/2026

!🎂🎉🥳

2026-05-05

Coordinator,
Murunkan Deanery,
Catholic Youth Association
Diocese of Mannar

Teach us to number our days, that we may gain a heart of wisdom."
(Psalm 90:12)

 #மன்னார்_மறை_மாவட்ட_கத்தோலிக்க_இளையோர்_ஆணைக்குழுவின்_117_வது_ஒன்று_கூடல்👉மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க இளையோர் 117 வது ...
21/04/2026

#மன்னார்_மறை_மாவட்ட_கத்தோலிக்க_இளையோர்_ஆணைக்குழுவின்_117_வது_ஒன்று_கூடல்

👉மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க இளையோர் 117 வது ஒன்று கூடல் ஆனது கத்தோலிக் இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் தந்தை அருட்பணி நீக்ளஸ் அடிகளார் தலைமையில் கடந்த 18, 19 .04.2026 ஆகிய இரண்டு நாட்கள் வங்காலை பங்கில் சனி மாலை 6.00 மணிக்கு நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகி ஞாயிறு மாலை 2.00 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


👉இதில் இயக்குனர் தந்தை, வங்காலை பங்கு தந்தை, அருட்சகோதரிகள் மறை மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள், ஒவ்வொரு பங்கு இளையோர் பிரதிநிதிகளும், வங்காலை பங்கின் இளைஞர் யுவதிகள் என 80 மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#வரவேற்பு
#கொடிஏற்றுதல்
#நற்கருணைவழிபாடு
#மாதாந்தகூட்டம்
#ஆடல்பாடல்நிகழ்சி
#இரவுணவு
#காலைதிருப்பலி
#காலையுணவு
#மறைக்கோட்ட_ஒன்றுகூடல்
#நகைச்சுவைவிளையாட்டு
#கிறுகிறுஓட்டம்
#தண்ணீர்பலூன்_பிடித்தல்
#முட்டி_உடைத்தல்
#கொடிஇறக்குதல்
#மதியஉணவு

06/04/2026
“Happys Birthday!🎂🎉🥳*M. Nitharshan* -Sports Coordinator-Catholic Youth  Association Diocese of MannarTeach us to number ...
06/04/2026

“Happys Birthday!🎂🎉🥳

*M. Nitharshan*

-Sports Coordinator-
Catholic Youth Association
Diocese of Mannar

Teach us to number our days, that we may gain a heart of wisdom."
(Psalm 90:12)

 #மன்னார்_மறைமாவட்ட_கத்தோலிக்க_இளையோருக்கான_தவக்கால_பாதையாத்திரைமன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையவர்களுக்கான பாதயாத்திரை...
01/04/2026

#மன்னார்_மறைமாவட்ட_கத்தோலிக்க_இளையோருக்கான_தவக்கால_பாதையாத்திரை

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையவர்களுக்கான பாதயாத்திரை 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இயக்குனர் அருட்பணி நீக்ளஸ் அடிகளாரின் தலைமையில் ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு தோட்டவெளி புனித வேதசாட்சி இராக்கினி அன்னை ஆலயத்தில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட ஆயர்த்தந்தை பேரருட் கலாநிதி அந்தோணிப்பிள்ளை ஞானபிரகாசம் ஆண்டகை அவர்களும் அருட்தந்தையர்களும் அருட்சகோதரி மற்றும் அருட்சகோதரர்களும் கலந்து கொண்டு இளையோர்களுக்கு ஆசீர்வழங்கினர்.

தொடர்ந்து இளையவர்களுக்கான நற்கருணை ஆராதனை வழிபாடு அருட்ந்தை ரஜினிகாந் அடிகளாரினால் நடாத்தப்பட்டது.

இதில் 400 க்கும் அதிகமான இளையோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

“Happy Birthday!🎂🎉🥳S.DIFAN CHRISTY  Mannar Diocese Catholic Youth -Deputy Treasurer May you shine bright for Christ ever...
09/02/2026

“Happy Birthday!🎂🎉🥳

S.DIFAN CHRISTY

Mannar Diocese Catholic Youth -
Deputy Treasurer

May you shine bright for Christ every day
‘You are the light of the world. A town built on a hill cannot be hidden.’
Matthew 5:14

Address

Mannar Town

Telephone

+94772807524

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Diocese Catholic Youth Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mannar Diocese Catholic Youth Union:

Share