29/08/2026
அன்று எது மார்க்கமாக இருக்கவில்லையோ அது இன்றும் மார்க்கமாகாது.
சத்தியக் கொள்கையில், சுவனத்து கொள்கையில் யார் இருக்கின்றார் என்பதனை அன்றே நபி ஸல் அவர்கள் இலகு கணிதமாக தெளிவுபடுத்தி சென்றுவிட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
பின்னர் உருவான வழிகெட்ட கொள்கைகளும், வழிகேடர்களும் மார்க்கத்தின் பெயரால் தங்களது இஸ்டப்படியும், சுயலாபங்களுக்காகவும் உருவாக்கியவைகள் எப்போதும் மார்க்கமாகது அவைகள் நிராகரிக்கப்பட்டவையே.
இன்னும் இவைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கற்றதாக மாறி மறுக்கப்படு வரவே அதனை நியாயப்படுத்தும் யுக்தியாக ஆம் இவைகள் அன்று இல்லாதவைகள்தான் ஆனால் இவைகள் நல்ல பித்அத்கள் என்று முட்டுகொடுக்க பார்க்கின்றனர் ஆனால் அதற்கும் நபி ஸல் அவர்கள் "குல்லு பித்அதின் ழலாழா" எல்ல பித்அத்களும் வழிகேடுகள் என சாவுமணி அடித்துவிட்டார்கள்.
எனவே சிந்திப்போம் ஒரே ஒரு கேள்வி கேட்போம் இவர்களிடம்.....
நபி ஸல் அவர்கள் செய்தார்களா? நபி ஸல் அவர்கள் உயிரோடு உள்ள பொழுது ஸஹாபாக்கள் செய்தார்களா?
ஆம் என்று விடை வந்தால் அதுதான் மார்க்கம் இல்லை என்றால் அவைகள் மலை போல இருந்தாலும் பித்அத்துக்களே! எம்மை நரகில் தள்ளிடும் காரியங்களே!
இறைவன் நம்மை இறுதி வரை சத்திய தவ்ஹீத் கொள்கையில் ஸலபுஸ் ஸாலிஹீன்கள் வழியில் வாழவைத்து மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக!