04/05/2024
கோண்டாவில் நெட்டிலைப்பாய் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்ட சிறப்பு ஓடியோ பாடல்.
பாடலை இயற்றி, இசை அமைத்து, பாடலை பாடியவர் நெட்டிலைப்பாய் கோண்டாவிலை சேர்ந்த திருமதி மதுவந்தி அவர்கள்.
Kondavil neddilipay pillaiyar temple song. வாழ்த்துகள் மதுவந்தி.அருமையான பாடல். என்றும் நெட்டிலைப்பாய்ப் பிள்ளையார் அருள் புரிவாராக.🙏🙏🙏
Thank you Mathuvanthy, god bless you . Your each sentences are good 🙏
https://we.tl/t-Sn8qmVfp4Q
ஈழவளத் திருநாட்டின் யாழ் மாநகரை மேவும்.....
எழில் மிகு கோண்டாவில் பதியுறையும் .....
நெட்டிலுப்பை நிழலுறை நாயகனே.....
உம் குடமுழுக்கு தினமதனில் கும்பிடுவோம் பக்தியுடனே....
தந்திடுவாய் தரிசனமே.... அருளிடுவாய் வரங்களையே...
தந்திடுவாய் தரிசனமே.... அருளிடுவாய் வரங்களையே....
ஓம் என்னும் பிரணவரூப ஓங்கார கணபதியே கோண்டாவில் பதியுறையும் ஹேரம்ப குணநிதியே....
காரைக்கால் அப்பனும் நந்தாவில் உமையவளும்
காரைக்கால் அப்பனும் நந்தாவில் உமையவளும்
அற்புதமாகவே அருகிருந்து அணிசேர்க்கும்
அடியவரின் மனம் குளிர வில்வையில் வீற்றிருக்கும்
அன்னை சிவகாமி அருகமர்ந்த நெட்டிலுப்பை ஐங்கரனே....
கந்தன் புகழுடன் உன் புகழ் ஓங்கிடவே ....
உம் பதிதனிலிருந்தும் புலம்பெயர் தேசமிருந்தும்..
குறைகளை இயம்பி மனம் உருகி வேண்டுகின்றோம் .....
தொழுதிட வருவோரின் குறைகளைத் தீர்த்திடுவாய் ......
தொப்பை நாயகனே இன்னருள் ஈந்திடுவாய்... தப்பாது உன் அருளை நீ எமக்குத் தந்திடுவாய்....
துணையாக நின்று எம்
துயர்தனைப் போக்கிடுவாய் .....
பறையோடு நாதஸ்வரம் தவிலோசை முழங்கிடவே...
வீரனாய் வேட்டைக்கு குமரகோட்டம் சென்றிடுவாய்....
ஓம் என்னும் பிரணவரூப ஓங்கார கணபதியே.... கோண்டாவில் பதியுறையும் ஹேரம்ப குணநிதியே....
அறுகம்புல் மாலை ஏற்கும் அத்திமுக கணபதியே ....
சந்ததம் காத்தருளும் சர்வ கணபதியே .....
நாவலரின் காலமதில் தடம் பதித்த நாயகனே......
சங்கடங்கள் தீர்க்கும் சங்கடகர நாயகனே .........
தும்பிக்கை தந்து நம்பிக்கை ஊட்டிடுவாய் ......
தரிசனம் காண்போர் உள்ளமதில் நெடிய வாழ்வை அளித்திடுவாய்...
நெட்டிலுப்பை ஏரம்பனே துயர்தனைப் போக்கிடுவாய் ....
பறையோடு நாதஸ்வரம் தவிலோசை முழங்கிடவே....
வீரனாய் வேட்டைக்கு குமரகோட்டம் சென்றிடுவாய்....
ஓம் என்னும் பிரணவரூப ஓங்கார கணபதியே.... கோண்டாவில் பதியுறையும் ஹேரம்ப குணநிதியே....
காரைக்கால் அப்பனும் நந்தாவில் உமையவளும்...
அற்புதமாகவே அருகிருந்து அணிசேர்க்கும்....
அடியவரின் மனம் குளிர வில்வையில் வீற்றிருக்கும்
அன்னை சிவகாமி அருகமர்ந்த நெட்டிலுப்பை ஐங்கரனே....