02/07/2025
நன்றியுரை
----------------------
35 ஆண்டுகளாக நாட்டுச் சூழ்நிலை காரணமாக நின்றுபோய்விட்ட ஆலய பெருந்திருவிழாக்களை மகத்தான முறையிலே மீளவும் நிறைவேற்றிட திருவருள்புரிந்த கணபதீஸ்வரப் பெருமான் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமிக்கு முதற்கண் மனம் வாக்கு காயங்களால் எமக்கு இத் தெய்வ பணியை ஆற்ற வாய்ப்புத் தந்தமைக்கு எமது சிரம்தாழ்த்திப் பணிகின்றோம்.
சென்ற ஆண்டில் மகாகும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம் என்பவற்றையும் திருப்பணிகளையும் முன்வந்து செய்த சிவன் அடியார்களான உபயகாரர்களாகிய நீங்கள் இம் மகோற்சவங்களையும் முன்வந்து நிறைவேற்றியமைக்கு முதற்கண் எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முறை மகோற்சவம் சிறப்பாக நடைபெற தமது ஒத்துழைப்பை வழங்கியோர் பலர், யாவரையும் பட்டியலிட்டு சொல்வது சிரமம் விடுபட்டாலும் குறையாகிவிடும் தெய்வப் பணிக்கு தாமாக முன்வந்து தொண்டாற்றியோர் அனைவருக்கும் நன்றிகள்
மகோற்சவத்தை முறைப்படி நிறைவேற்றிய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் மாரீசக்குருக்கள் அவர்களுக்கும் அவரது தந்தையார் தாமோதர குருக்கள் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
ஆலய நித்திய குரு பிரம்மஸ்ரீ கோகுலன் சர்மா அவர்களுக்கும் அவரது சகோதரர் பிரம்மஸ்ரீ ரோஹித் சர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள். மண்டப உதவியாளர் பிரம்மஸ்ரீ துலக்க்ஷன் சர்மா அவர்களுக்கும் அயல் கிராம ஆலய குருமாருக்கும் எமது நன்றிகள். சுவாமி பிரசாதம் முதலானவற்றையும் நாளாந்த உணவு தயாரிப்பு பணிகளையும் ஆற்றிய பிரம்மஸ்ரீ அழகேஸ்வர சர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆலய விழாக்காலத்தில் மங்கல இசை வழங்கிய ஈழநல்லூர் மணியம் குழுவினருக்கும் ஒலிபெருக்கி ஒளி உதவி சேவையாற்றிய சுவிக்சன் நிறுவனத்தினருக்கும் சுவாமி அலங்கார பூமாலை தொண்டாற்றிய உரும்பிராய் மிதிலன் மற்றும் செல்வநாயகம் ஆகியோர்களுக்கும் , நேரடி ஒளிபரப்பு செய்து தூர தேசத்தில் இருக்கும் மக்களுக்கு திருவிழாவை கொண்டு சேர்த்த மாறன் ஸ்டுடியோ அவர்களுக்கும் எமது நன்றிகள்.
உபயதாரர்களின் பங்களிப்பாக நடைபெற்ற அன்னதானம் வழங்கலை குறைவுபடாமல் செயல்படுத்திய ராசா மற்றும் தொண்டர்களுக்கும், தேவையான வாகனங்கள் சப்பர சகடைகள் உதவிய அயற்கிராம ஆலய பரிபாலசபையினருக்கும் எமது நன்றிகள்.
இவ்வண்ணம்,
ஆலய தர்மகர்த்தா
சிவன் தேவஸ்தானம்