22/08/2026
“வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இக் கொள்கை “குப்ர்” என்று கூறும் உலமா சபைத் தலைவரும், அதன் உறுப்பினர்களும் அதே கொள்கையைப் பகிரங்கமாகப் பேசியும், எழுதியும் வந்தவர்களான இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ ஆகியோரை அவர்கள் வெளியிட்ட “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற “பத்வா” நூல் 22ம் பக்கம் “விடை” என்ற தலைப்பின் இரண்டாம் பந்தியில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.
(நான்கு மத்ஹபுகளின் மேதைகளாம் இமாம்கள் அபூ ஹனீபா, மாலிக், ஷாபிஈ, அஹ்மத் பின் ஹன்பல் (றஹ்) ஆகியோரும், இவர்களைப் பின்பற்றியவர்களும், இஸ்லாமிய சித்தாந்த மேதைகளுமான மாதுரீதீ, அஷ்அரீ (றஹ்), அபூ மன்சூர் அல் பக்தாதீ, அந்நவவீ, இப்னு அறபீ, ஙஸ்ஸாலீ, அஷ்ஷஃறானீ அஸ்ஸுயூதீ (றஹ்) போன்ற ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றெல்லாம் கூறப்படும் சகல ஞானங்களிலும் ஆழ்ந்த அறிவு பெற்று விளங்கிய மா மேதைகளின் தெளிவான போதனைகளின் அடிப்படையிலேயே எமது விடை அமைந்திருக்கும்) என்று எழுதியுள்ளார்கள்.
அதாவது இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் இப்னு அறபீ, இமாம் ஷஃறானீ ஆகிய மூன்று பேர்களையும் குறிப்பிட்டு இவர்கள் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் என்றெல்லாம் கூறப்படும் சகல ஞானங்களிலும், ஆழ்ந்த அறிவு பெற்று விளங்கிய மா மேதைகள் என்று எழுதியுள்ளார்கள்.
குறித்த மூவரும் பெரும் மகான்கள் என்று எழுதிய உலமா சபை முப்தீகள் இம் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை தமது நூல்களில் எழுதியவர்கள் என்பதை அறியாமலா மேற்கண்டவாறு அவர்களைப் புகழ்ந்துள்ளார்கள்? இப்படியும் ஓர் அறியாமையா?
இந்த அறிவிலிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இம் மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியலின் “கிங்” அரசர்கள் என்பதை உணர்த்துவதற்காக இவர்கள் மூவரும் கூறிய தத்துவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
முடிவில் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் தங்களின் ஞானப் பெட்டகம் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற நூலில் எழுதியுள்ள “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை சுருக்கி எழுதுகிறேன். இவர்களை யாரென்று சொல்வார்களோ?
'إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ تَحْقِيْقًا إِلَّا اللهُ وَأَفْعَالُهُ '
)إحياء علوم الدين، كتاب آداب السّماع والوَجْدِ(
குறித்த இந்தப் பாடத்தில் முன், பின் தொடரை வாசித்து கூறப்படும் சுருக்கத்தை அறிந்து கொள்ளவும்.
إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ شَيْءٌ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ،
(إحياء علوم الدين، كتاب شرح عجائب القلب)
குறித்த இந்தப் பாடத்தில் முன், பின் தொடரை வாசித்து சுருக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
فَالرُّتْبَةُ الأُوْلَى من التوحيد هي أن يقول الإنسان بِلِسَانِه {لا إله إلا الله} وقلبُه غافلٌ عنه أو منكرٌ له كتوحيد المنافقين،
والثانيةُ أن يُصدِّقَ بمعنَى اللَّفْظِ قلبُه كما صدَّق به عمومُ المسلمين وهو اعتقاد العوامّ،
والثالثةُ أن يُشَاهِدَ ذلك بطَريق الْكَشْفِ بواسطةِ نورِ الحقِّ، وهو مقامُ المُقرَّبين، وذلك بأن يرى أشياءَ كثيرةً، ولكن يراها على كثرتِها صادرةً عن الواحد القهّار،
والرابعة أن لا يَرَى في الوجود إلا واحدًا، وهي مُشاهدةُ الصِّدِّيقينَ، وتُسمِّيه الصوفيةُ الفناءَ في التوحيد، لأنَّه من حيثُ لا يرَى إلَّا واحداً فلا يرَى نفسَه أيضًا، وإذا لم يرَ نفسَه لكونه مستغرقًا بالتوحيد كان فانيًا عن نفسِه في توحيده بمعنى أنه فني عن رؤية نفسه والخلق،
(إحياء علوم الدين، كتاب التوحيد والتَّوكُّل)
فَإِنَّ مَنْ عَرَفَ نَفْسَهُ وَعَرَفَ رَبَّهُ عَرَفَ قَطْعًا (أَنَّهُ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ، وَإِنَّمَا وُجُوْدُ ذَاتِهِ وَدَوَامُ وُجُوْدِهِ وَكَمَالُ وُجُوْدِهِ مِنَ اللهِ وَإِلَى اللهِ وَبِاللهِ، فهو المخترع الموجد له وهو المبقي له وهو المكمل لوجوده بخلق صفات الكمال وخلق الأسباب الموصلة إليه ذو خلق الهداية إلى استعمال الأسباب،وَإِلَّا فَالْعَبْدُ مِنْ حَيْثُ ذَاته لا وجودَ له من ذاتِه، بلْ هُوَ مَحْوٌ مَحْضٌ وَعَدَمٌ صِرْفٌ، (إحياء علوم الدين، كتاب المحبّة والشَّوْقِ وَالْأُنْسِ وَالرِّضَا)
وَلَيْسَ فِى الْوُجُوْدِ إِلَّا ذَاتُهُ وَأَفْعَالُهُ،
(إحياء علوم الدين، كتاب المحبّة والشَّوْقِ وَالْأُنْسِ وَالرِّضَا)
وأن الأرواح النّبَوِيَّةَ القُدسيَّة مُقْتَبَسَةٌ مِنَ الْأَرْوَاحِ الْعُلْوِيَّةِ اِقْتِبَاسَ السِّرَاجِ مِنَ النُّوْرِ؛ وَأَنَّ الْعُلْوِيَّاتِ بَعْضَهَا مُقْتَبَسَةٌ مِنَ الْبَعْضِ، وَأَنَّ تَرْتِيْبَهَا تَرْتِيْبُ مَقَامَاتٍ، ثم ترقي جملتها إلى نور الأنوار ومعدنها ومنبعها الأول؛
وأن ذلك هو الله تعالى وحده لا شريك له، وأن سائر الأنوار مستعارة، وَإِنَّمَا الْحَقِيْقِيُّ نُوْرُهُ فَقَطْ؛ وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ، بَلْ هُوَ الْكُلُّ، بَلْ لَا هُوِيَّةَ لِغَيْرِهِ إِلَّا بِالْمَجَازِ، (مشكاة الأنوار، صفحة 28، للإمام الغزالي)
இது வரை இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக எழுதிய குறிப்புக்களை எழுதினேன். இப்போது தமது “பத்வா”வில் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைப் புகழ்ந்து எழுதிய முல்லாக்கள் தலை குனிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைப் புகழ்ந்த முல்லாக்களும், முப்தீகளும் இதன் பிறகு அவர்களையும் “முர்தத்” என்று “பத்வா” வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
முஸ்லிம்கள் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களை “முர்தத்” என்று நம்பியதால்தான் முஸ்லிம் அரசாங்கப் பாடசாலைகளில் காலைக் கூட்டங்களின் போது படித்து வந்த ஙஸ்ஸாலீ இமாம் அவர்களைக் கொண்டு “வஸீலா” தேடும் பாடல்களை நிறுத்திவிட்டார்கள் போலும். இதோ அப்பாடல்கள்.
نَوِّرْ إلهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا
نَـوَّرْتَ قَلْبَ إِمَامِ الـنَّاسِ غَزَّالِيْ
يَا رَبِّ أَعْطِ لَنَا عِلْمًا وَفَهْمًا كَمَا
أَعْطَيْتَ يَا رَبَّـنَا لِلـشَّـيْخِ غَزَّالِيْ
يَـا رَبِّ يَـسِّـرْ لَنَا كُلَّ الْأَمُوْرِ كَمَا
يَسَّرْتَ يَا رَبَّنَـا لِـلْهَادِيْ غَـزَّالِيْ
يَا رَبِّ بَـلِّـغْ لَـنَـا كُلَّ الْمُرَادِ كَمَا
بَلَّغْتَ يـَا رَبَّنَا مَـقْـصُوْدَ غَـزَّالِيْ
يَا رَبِّ اِقْبَلْ دُعَانَا يَا مُـجِيْبُ كَمَا
قَبِلْتَ يَا رَبَّـنَـا لِـلْـعَـالِ غَـزَّالِيْ
இப்னு அறபீ நாயகம் தொடர்பான விபரம் தொடரும்.