SHUMS TV

SHUMS TV இறைஞானமே எங்கள் மூலதனம்

இது ஷம்ஸ் மீடியா யுனிட்டின் உத்தியோகபூர்வ ஷம்ஸ் டிவி முகநூல் பக்கம்.

இவ் அமைப்பு கிழக்கிலங்கை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அதி சங்கையும், கீர்த்தியும் நிரம்பிய அஷ்ஷெய்குல் காமில், ஆரிப் பில்லாஹ், ஞானபிதா, மௌலவீ அல்ஹாஜ் AJ.அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ அன்னவர்களின் உயர்திரு ஆலோசனைக்கிணங்க
ஸுபிஸ இஸ்லாமியம் சார்ந்த விழுமியங்களான ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றின் விளக்கங்க

ளையும், நுணுக்கங்களையும், ஆய்வுகளையும், வழிகாட்டுதலையும் உலகிற்கு எடுத்துரைக்கக்கூடிய ஓர் முகநூல் ஊடகமாகும்.

எமது உத்தியோகபூர்வ ஊடக வலையமைப்புக்களும், சமூக வலைத்தளங்களும்...

இணையத்தளம் - www.shumsmedia.com

யூடியுப் - www.youtube.com/shumsmedia

டுவிட்டர் - www.twitter.com/shumsnews

வாட்ஸ்அப் - +94 77 48 49 786

முகநூல் - www.facebook.com/shumsmediaunit

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ AMM. அப்துல் மலிக் நஜாஹீ அவர்கள்காலம் - 24.04.2026 வெள்ளிக்கிழமைஇடம் - பத்ரிய்...
25/04/2026

ஜுமுஅஹ் பிரசங்கம்

உரை - சங்கைக்குரிய மௌலவீ AMM. அப்துல் மலிக் நஜாஹீ அவர்கள்

காலம் - 24.04.2026 வெள்ளிக்கிழமை

இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

ஜுமுஅஹ் பிரசங்கம் | 24.04.2026 Jumah | Moulavi Abdul Malik Najahi | at Badhriyyah Jumah Mosque

25/04/2026

ஸூபிஸ முஸ்லிம்களை மனமுரண்டாக மதம் மாற்றி “பத்வா” வழங்கிய முல்லாக்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்களும், திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாம் மார்க்கத்தில் மீண்டும் இணைய வேண்டியவர்களுமாவர். இதுவே இஸ்லாமிய “ஷரீஆ” கூறும் சட்டமாகும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

இலங்கைத் திரு நாடு ஜனநாயக நாடாகும். இந்நாட்டில் பிறந்து வாழ்ந்து வருபவர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் மத உரிமைகள் எல்லாமே உண்டு.

இவர்களில் எவர் எந்த மார்க்கத்தைப் பின்பற்ற விரும்புகிறாரோ அவர் அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவரை எவராலும் ஏதோ ஒரு மார்க்கத்தைக் குறிப்பிட்டு அதைப் பின்பற்று என்று சொல்ல முடியாது. ஒருவர் அவ்வாறு பலாத்காரமாகச் சொன்னால் சொன்னவர் தண்டிக்கப்பட வேண்டியவரேயாவார்.

இவ்வாறுதான் நான்கு “மத்ஹப்”களில் ஏதோ ஒரு மத்ஹபைப் பின்பற்றுமாறு வலியுறுத்துவதுமாகும். நமது இலங்கை நாட்டைப் பொறுத்த வரை நான்கு “மத்ஹப்”களில் இரண்டு “மத்ஹப்”கள் மட்டும்தான் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்று “ஷாபிஈ மத்ஹப்” மற்றது “ஹனபீ மத்ஹப்”.

ஒரு முஸ்லிம் இவ்விரு மத்ஹப்களில் தான் விரும்புகின்ற ஒன்றை பின்பற்றுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. அவரை எவராலும் ஒரு மத்ஹபைக் குறிப்பிட்டு இதையே நீ பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்த அதிகாரமில்லை. இவ்வாறு யாராவது வலியுறுத்தினால் அவருக்கு எதிராக மற்றவர் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறுதான் ஒரு “தரீகா”வைப் பின்பற்றுவதுமாகும். “தரீகா”க்கள் பல உள்ளன. அவற்றில் “காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிபாஇய்யா, நக்ஷபந்தியா, சிஷ்திய்யா” முதலானவை இந்நாட்டில் அதிகமாக உள்ளன.

எவர் எந்த “தரீகா”வை பின்பற்ற விரும்புகின்றாரோ அவர் அதைப் பின்பற்றுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. எவராலும் அவரை ஒரு “தரீகா”வைக் குறித்து இதன் வழியே நீ செல்ல வேண்டும் என்று அவரை வலியுறுத்த முடியாது. அவ்வாறு ஒருவர் இன்னொருவரை பலாத்காரமாக வலியுறுத்தினால் அவருக்கு எதிராக மற்றவர் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, ஒருவன் இந்த ஜனநாயக நாட்டில் தான் விரும்புகின்ற மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும், இதேபோல் தான் விரும்புகின்ற மத்ஹபைப் பின்பற்றுவதற்கும், இதேபோல் தான் விரும்புகின்ற “தரீகா” வழி செல்வதற்கும் உரிமை உண்டு.

இவர்களில் எவரையும் எவராலும் பலாத்காரமாக மாற்றம் செய்ய முடியாது. இது ஜனநாயக நாட்டைப் பொறுத்து மத உரிமை மீறலும், மனித உரிமை மீறலுமாகும்.

ஒரு நாட்டின் அரசாங்கத்தாற் கூட அவ்வாறு ஒருவரை மாற்ற முடியாது. அவ்வாறு எவராவது மாற்றினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு செய்தல் மனித உரிமை மீறலாகவும், மத உரிமை மீறலாகவும் ஆகிவிடும்.

ஜனநாயக நாட்டில் வாழும் அனைவருக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை எல்லாமே உண்டு. இதில் எவரும் தலையிட முடியாது.

மார்க்க ஞானம் கற்ற ஒருவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தும், நபீ மொழிகளை ஆய்வு செய்தும் கருத்துக்கள் கூறுவதற்கும் அவருக்கு உரிமை உண்டு.

பொதுவாக ஜனநாயக நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் மத உரிமை, மனித உரிமைகள் என்பன உண்டு. குறிப்பாக மத போதகர்களுக்கு உண்டு.

நான் ஓர் இஸ்லாமிய மத குரு. ஒரு மௌலவீ ஆவேன். இலங்கையில் காலிக் கோட்டை “அல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியில் ஆறு வருடங்கள் கல்வி கற்று மௌலவீ தராதரப் பத்திரமும் பெற்றுள்ளேன்.

பாணந்துறை “தீனிய்யா” அறபுக் கல்லூரியில் ஒரு வருடம் கல்வி கற்றுள்ளேன். இதேபோல் அங்கு ஒரு வருடம் சிறிய மாணவர்களுக்கு ஹழ்றத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கற்றும் கொடுத்துள்ளேன்.

ஸஊதி அரேபியாவின் திரு மதீனா நகரிலுள்ள “அல் ஜாமிஅதுல் இஸ்லாமிய்யா” பல்கலைக் கழகத்தில் ஒரு வருடம் கற்றுள்ளேன். அங்கு “வஹ்ஹாபிஸம்” கற்றுக் கொடுக்கப்படுவதால் ஒரு வருடத்தோடு நின்று கொண்டேன். தொடர்ந்து படிக்கவில்லை.

இந்தியா சென்று தமிழ் நாட்டில் மாயவரம் - நீடூரில் உள்ள “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரியில் மூன்று வருடங்கள் தொடராக கல்வி கற்று “மௌலவீ” பட்டமும் பெற்று, “மௌலவீ பாஸில்” பட்டமும் பெற்றுள்ளேன்.

இறுதியில் தமிழ் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்ற “அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரியில் ஒரு வருடம் தங்கியிருந்து எனக்குத் தேவையான பாடங்களை மட்டும் கற்று முடித்தேன்.

நான் எனது படிப்புகளை முடித்துக் கொண்டு எனது தாயகமான இலங்கைத் திரு நாட்டிற்கு வந்த பின் “அக்கரைப்பற்று” நகரிலுள்ள “மன்பஉல் கைறாத்” அறபுக் கல்லூரியில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினேன். “உஸ்தாத்” ஆகப் பணியாற்றினேன்.

பின்பு காலி சோலை பிரதேசத்தில் “தங்கெதற” எனும் இடத்திலுள்ள “ஜிப்ரிய்யா” அறபுக் கல்லூரியில் சுமார் 18 மாதங்கள் “உஸ்தாத்” ஆசிரியராகக் கடமை செய்தேன். அங்குள்ள பத்ரிய்யா பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமைகளில் “குத்பா” பிரசங்கம் செய்து “ஜுமுஆ”த் தொழுகையும் நடத்தியுள்ளேன்.

மேலும் அரசாங்கப் பாடசாலைகள் பலதில் மௌலவீ ஆசிரியராகப் பல வருடங்கள் கற்றுக் கொடுத்துள்ளேன்.

நான் இறுதியாகக் கடமை செய்த கல்லூரி காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையாகும். இங்கு என்னிடம் ஏழாம் வகுப்பு மாணவராக கல்வி கற்றவர்தான் பல அரசியற் பதவிகள் பெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக ஒளிரும் மதிப்பிற்குரிய கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்கள்.

மேற்கண்ட விபரங்களை நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில், நான் இஸ்லாம் மார்க்க அறிவில் அரை வேக்காடு அல்ல என்பதையும், “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஸூபிஸ ஞானத்தின் உச்சிக்குப் போகாது போனாலும் எனது ஆயுளில் நான் பல இறைஞானிகளுடன் நெருங்கியிருந்து அவர்களிடமிருந்து ஞான விளக்கங்களைப் பெற்றவனேயன்றி பாலர் வகுப்போடு நின்றவனவல்ல என்பதையும் ஒன்பதாயிரம் உலமாஉகளை கைக்குள் வைத்திருக்கும் உலமா சபைத் தலைவர் ரிஸ்வீ அவர்களுக்கும், அவர்கள் 22 ஆண்டுகள் தொடராக ஆட்சி புரிவதற்கும் வாய்ப்புக் கொடுத்து உதவிய ஒன்பதாயிரும் உலமாஉகளுக்கும், மேற்கண்ட விபரங்களை நினைவூட்டுவதற்கேயன்றி என்னை நானே புகழ்ந்து கொள்வதற்காக அல்ல. أعوذ بالله منه

1979ம் ஆண்டு காத்தான்குடியில் நடைபெற்ற மீலாத் விழாவில் நபீ பெருமானார் அவர்களின் “அல்ஹகீகதுல் முஹம்மதிய்யா” பெருமானாரின் அகமியங்கள் தொடர்பான ஆழமான கருத்துக்களைக் கூறினேன். நான் கூறிய கருத்துக்கள் தொடர்பாக உலமாஉகளிற் பலரும், பொது மக்களிற் பலரும் பல்வேறு அபிப்பிராயங்கள் கூறிக் கொண்டிருந்த போது காத்தான்குடி உலமா சபை நான் பேசிய கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் தர வேண்டுமென்று ஒரு பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் பிரசுரத்திற்கு நான் பதில் பிரசுரமொன்று வெளியிட்டேன்.

இவ்வாறு எனக்கும், காத்தான்குடி உலமாஉகளுக்கும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த வேளை பிறவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட, காத்தான்குடியில் வசித்து வந்த ஒருவர் சிக்கந்தர் மத்றசாவுக்கு காத்தான்குடி உலமாஉகளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி இந்தப் பிரச்சினையை கொழும்புக்கு எடுத்துச் சென்று அங்குள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவரின் வேண்டுகோளை இறைவனின் வேண்டுகோளாகக் கருதிய உலமாஉகளில் ஐந்து பேர் வாடகைக்கு ஒரு வாகனம் எடுத்துக் கொண்டு கொழும்பு சென்று அங்குள்ள உலமாஉகளிற் சிலரைச் சந்தித்து காத்தான்குடி றஊப் ஊரில் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டான், மார்க்கத்திற்கு முரணாகப் பேசிவிட்டான், இவனுக்கு தலை தூக்க முடியாத அளவுக்கு ஒரு மருந்து கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

உலமா சபையைச் சேர்ந்த நீதி, நியாயம் தெரிந்த சிலர் இது மார்க்கப் பிரச்சினையேயன்றி துன்யாவின் பிரச்சினையல்ல. ஆகையால் உலமாஉகளான நாம் அவசரப்பட்டு ஒரு முடிவு செய்யாமல் ஒரு மாத காலம் பிற்போட்டு றஊப் மௌலவீயையும் அழைத்து அவருடனும் கலந்தாலோசித்து தீர்க்கமான ஒரு முடிவு செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்கள். அவர்களின் ஆலோசனையை ஒரு சில சுய நலவாதிகளான, வஹ்ஹாபிஸத்துக்கு ஆதரவான உலமாஉகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் இது தொடர்பாக உஸ்தாது மாரில் ஒருவரான சங்கைக்குரிய மர்ஹூம் அப்துஸ்ஸமத் “பலகீ” றஹிமஹுல்லாஹ் அவர்கள் உலமாஉகள் சிலரிடம் றஊப் மௌலவீ என்னிடம் கல்வி கற்ற, திறமையுள்ள மாணவனாவார். அவர் ஏன் அவ்வாறு பேசினார்? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும் நீங்கள் அவசரப்பட்டு ஒரு முடிவு செய்து விடாமல் அவருடன் நேரில் கலந்தாலோசித்து ஒரு முடிவு செய்தால் நல்லது என்று கூறியுள்ளார்கள். ஸுன்னீ உலமாஉகள் அவர்களின் ஆலோசனையை சரி கண்டாலும் கூட வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ள சிலரும், என்னோடு தனிப்பட்ட குரோதமுள்ள எனதூரவர்களிற் பலரும் சரி காணவில்லையாதலால் அவசரமாக “பத்வா” வழங்க வேண்டுமென்று முடிவு செய்து வழங்கிவிட்டார்கள்.

நான் பேசிய கருத்து “வஹ்ததுல் வுஜூத்” என்ற ஸூபிஸ தத்துமேயன்றி - இது “ஹுலூல் – இத்திஹாத்” என்ற இஸ்லாமிய “அகீதா”வுக்கு முரணான கருத்தல்ல. “பத்வா” வழங்கியவர்கள் என்னை நேரில் விசாரணை செய்யாமல் அவசரப்பட்டு “பத்வா” வழங்கிவிட்டார்கள். இதுவே உலமாஉகள் செய்த தவறாகும்.

அவர்கள் தமது தவறை உணர்ந்து “முர்தத்” என்று வழங்கிய “பத்வா”வை வாபஸ் பெற வேண்டும்.

இங்கு இன்னுமோர் விடயத்தை இவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். இலங்கைத் திரு நாடு ஜனநாயக நாடு. இந்நாட்டில் வாழும் மக்களுக்கு மத உரிமை, மனித உரிமைகள் எல்லாமே உள்ளன. இவர்களின் “பத்வா” இந்நாட்டின் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதாகும்.

இது தொடர்பாக ஸூபிஸ சமூகம் பெரும் முயற்சி செய்து வருகின்றது. “பத்வா” வழங்கியவர்கள் தமது எதிர்கால வாழ்வைக் கவனத்திற் கொண்டு செயல்பட்டார்களாயின் அது அவர்களுக்கே நல்லது. இன்றேல் அவர்கள் மட்டுமன்றி அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ்வின் சாபத்தாலும், அவ்லியாஉகளின் சாபத்தாலும் தெருவில் கையேந்தி நிற்கவேண்டிவரும்.

19/04/2026

A Question to the Government Operating Under the Leadership of His Excellency President Anura Kumara Dissanayake!

In the democratic nation of Sri Lanka, how can it be justified that the human rights and religious rights of Sufi Muslims are being taken away by the All Ceylon Jamiyyathul Ulama(ACJU), operating under the authoritarian leadership of Rizvi M***i?

We, Sufi Muslims, who were born in this motherland of Sri Lanka and recognized by the State as its citizens, have never acted against the sovereignty of this country, nor have we posed any threat to its security.

Yet, we ask only for the rights granted to a citizen under the Constitution of Sri Lanka.

Based on the constitutional rights of freedom of thought, freedom of speech, and freedom of expression granted to a citizen, the All Ceylon Jamiyyathul Ulama(ACJU), unable (or unwilling) to understand the Sufi views expressed by me, has not only declared me and the thousands of Sufi Muslims who accepted my views as having left the religion of Islam, but has also issued a “fatwa” declaring us apostates (“murtad”), despite not being legally granted the authority to issue such religious verdicts by law. Furthermore, they have stated in their ruling that all of us must be killed.

As a result of this anti-democratic ruling, one of the senior religious scholars of our community, the late Moulavi MSM Farooq Qadiri, was shot and killed at his home in 1998 by unidentified persons. This is a matter that must be mentioned here.

Moreover, in 2007, while I was speaking in my office with the administrators of the mosque functioning under my leadership, unidentified armed individuals entered my office with weapons, attempting either to kill me or abduct me at gunpoint. By the grace of God, I narrowly escaped. Alhamdulillah.

To this day, I and the preachers who work with me continue to live in fear of their death threats. In a free country, we are unable to freely go to public places or gatherings where people assemble.

In their anti-democratic “fatwa,” they have stated that the marriages of the Sufi community are invalid under Islamic law, that marital relations among them amount to adultery, and that children born to them are children born out of adultery.

They have also stated that Muslims must socially boycott the Sufi community and that Sufi Muslims should not be allowed to enter mosques managed by non-Sufis.

Above all, they have stated that if anyone from our community dies, Islamic funeral rites must not be performed for them and they must not be buried in Muslim burial grounds.

Similarly, they have written many other statements provoking the Sufi community and pushing them toward unlawful acts. However, I wish to state at this moment that our community has not engaged in any action contrary to the law at any time. On the contrary, many acts of terrorism have been carried out against our Sufi community in the past with the support of institutions that enforce this “fatwa.” We have testified many times before investigative committees and commissions, including those related to the Easter attacks. The painful fact is that no constructive action has been taken by any government to date.

The All Ceylon Jamiyyathul Ulama(ACJU) is not the government of this country, nor does it possess authority to suppress a community. In such a situation, even the government seeking guidance from the Jamiyyathul Ulama on matters concerning the religious affairs of Muslims in Sri Lanka can be considered, in a way, a violation of democracy.

Honourable President Anura Kumara Dissanayake,

On the basis that every citizen living in Sri Lanka has the right to follow the faith and principles of their choice, I respectfully request that you, using the executive powers vested in you as Head of State, annul the unjust “fatwa” issued against me and the thousands of Muslims who accepted my views, and officially recognize all of us as Sufi Muslims living in Sri Lanka.

Moulavi Alhaj A. Abdur Rauff Misbahee Bahjee
Leader,
Sufi Community,
Kattankudy.
19.04.2026

19/04/2026

அதிமேதகு ஜனாதிபதி தோழர் அநுர குமார திஸாநாயக அவர்களின் தலைமையில் இயங்கும் அரசிடம் ஒரு கேள்வி!

ஜனநாயக நாடான இலங்கைத் திரு நாட்டில் ஸூபிஸ முஸ்லிம்களின் மனித உரிமைகளும், மத உரிமைகளும் ரிஸ்வீ முப்தீ எனும் சர்வாதிகாரியின் தலைமையில் இயங்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் பறிக்கப்படுவது எந்த வகையில் நியாயமாகும்?

இலங்கைத் தாய்த் திரு நாட்டில் பிறந்து அந்நாட்டின் பிரஜைகளாக அரசினால் அங்கீகரிக்கப்பட்டு வாழும் ஸூபிஸ முஸ்லிம்கள் நாட்டின் இறையாண்மைக்கு மாறாக நாடு கேட்கவுமில்லை, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படவுமில்லை.

ஆயினும் இலங்கைத் திரு நாட்டின் அரசியல் சாசனத்தில் நாட்டின் பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மட்டுமே கேட்கின்றோம்.

இலங்கை அரசியல் சாசனத்தில் ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை அடிப்படையில் என்னால் தெரிவிக்கப்பட்ட ஸூபிஸ கருத்துக்களை ஜீரணிக்க முடியாத (அறியாத) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்னையும், எனது கருத்துக்களைச் சரி கண்ட பல்லாயிரம் ஸூபிஸ முஸ்லிம்களையும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று பாராளுமன்றில் அவர்களின் சபையை சட்ட மூலமாக்குகின்ற போது வழங்கப்படாத - மறுக்கப்பட்ட “பத்வா” மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றி “முர்தத்” என்று “பத்வா” வழங்கியதோடு மாத்திரம் நின்று விடாமல் எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்களின் ஜனநாயகத்துக்கு முரணான இத் தீர்ப்பினால் எமது சமூகத்தின் மூத்த மத குருக்களில் ஒருவரான மர்ஹூம் மௌலவீ MSM பாறூக் காதிரீ அவர்கள் கடந்த 1998ம் ஆண்டு இனம் தெரியாத நபர்களினால் தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட விடயம் இவ்விடத்தில் குறிப்பிடற்குரியதாகும்.

மாத்திரமின்றி கடந்த 2007ம் ஆண்டு நான் எனது அலுவலகத்தில் எனது தலைமையில் இயங்கும் பள்ளிவாயல் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்த வேளை ஆயுதங்களுடன் எனது அலுவலகத்தினுள் புகுந்த இனந்தெரியாத ஆயுத தாரிகள் என்னைக் கொல்வதற்கு அல்லது ஆயுத முனையில் கடத்திச் செல்வதற்கு முயற்சித்தார்கள். ஆனாலும் இறைவன் உதவியால் மயிரிழையில் நான் காப்பற்றப்பட்டேன். அல்ஹம்து லில்லாஹ்!

இன்று வரை நானும், என்னுடனிருக்கும் போதகர்களும் இவர்களின் கொலை மிரட்டலுக்குப் பயந்த வண்ணமே வாழ்கிறோம். சுதந்திர நாட்டில் சுதந்திரமாக பகிரங்க இடங்களுக்கு - பொது மக்கள் ஒன்று கூடுமிடங்களுக்குச் செல்ல முடியாத நிலையிலும் வாழ்கிறோம்.

அவர்களின் ஜனநாயகத்துக்கு முரணான “பத்வா”வில் ஸூபிஸ சமூகத்தவர்களின் திருமணங்கள் இஸ்லாமிய சட்டப்படி ரத்தாகிவிட்டதென்றும், அவர்கள் உடலுறவு கொள்வது விபச்சாரம் என்றும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் முஸ்லிம்கள், ஸூபிஸ சமூகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், ஸூபிஸ முஸ்லிம்கள் அல்லாதவர்களால் நிர்வகிக்கப்படும் பள்ளிவாயல்களுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களில் எவரேனும் மரணித்தால் அவரின் பிரேதத்திற்கு இஸ்லாமிய முறைப்படி மரண சடங்குகள் செய்யலாகாது என்றும், முஸ்லிம் மையவாடிகளில் நல்லடக்கம் செய்யக் கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதேபோல் ஸூபிஸ சமூகத்தைச் சீண்டி அவர்களை சட்ட விரோத செயல்களில் ஈடுபட வைக்கும் இன்னும் பலவற்றை எழுதியுள்ளார்கள். ஆனாலும் இதுகாலவரை எமது சமூகத்தால் சட்டத்துக்கு முரணான எந்த ஒரு நடவடிக்கையும் செயற்படுத்தப்படவில்லை என்பதை இத்தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். மாறாக இவர்களின் “பத்வா”வை அமுல் படுத்தும் நிறுவனங்களின் அனுசரணையிலேயே பல பயங்கரவாத செயல்பாடுகள் கடந்த காலங்களில் எமது ஸூபிஸ சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ளன. அவை தொடர்பில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுக்கள், ஆணைக்குழுக்கள் முன்னிலையில் பல முறை சாட்சியமளித்துள்ளோம். வேதனைக்குரிய விடயம் என்னவெனில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் எந்த ஒரு ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இதுவரையில் இடம்பெறவில்லை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்நாட்டு அரசாங்கமுமில்லை, ஒரு சமூகத்தை அடக்கியொடுக்கவென அதிகாரம் பெற்றவர்களுமில்லை. இவ்வாறிருக்கும் நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மத விவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களுக்கு ஜம்இய்யதுல் உலமாவை அரச தரப்பு நாடுவது கூட ஒரு வகையில் ஜனநாயக மீறல் என்றே சொல்ல வேண்டும்.

கௌரவ ஜனாதிபதி தோழர் அநுர குமார திஸாநாயக அவர்களே!

இலங்கைத் திரு நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் தான் விரும்பிய கொள்கையில், தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றி வாழ உரிமை உண்டு என்ற அடிப்படையில் நீங்கள் ஜனநாயகத்தை நிலை நாட்டி அநீதியான முறையில் எனக்கும், எனது கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட “பத்வா” தீர்ப்பை அரச தலைவர் என்ற வகையில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்துச் செய்து எம் அனைவரையும் இலங்கை வாழ் ஸூபிஸ முஸ்லிம்கள் என்று பிரகடனம் செய்யுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
தலைவர்,
ஸூபிஸ சமூகம்,
காத்தான்குடி.
19.04.2026

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அவர்கள்காலம் - 17.04.2026இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல்...
17/04/2026

ஜுமுஅஹ் பிரசங்கம்

உரை - சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அவர்கள்

காலம் - 17.04.2026

இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அவர்கள்காலம் - 17.04.2026இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல்...

அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர் தரப்பரீட்சையில...
16/04/2026

அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர் தரப்பரீட்சையில் கலைப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்ற அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரியின் இறுதி ஆண்டு மௌலவீ மாணவன் ஜனாப் ALM. ஆதில் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.04.2026 வியாழக்கிழையன்று பி.ப 4.00 மணியளவில் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

16/04/2026
15/04/2026

للصّائم فرحتان
قال النبيّ صلّى الله عليه وسلّم ” للصائم فرحتان ، فرحة عند إفطاره، وفرحة عند لقاء ربّه “ وفي رواية عند فطره، هذا حديث صحيح، رواه كثير من رُواة الحديث، والفطر والإفطار معناهما واحد، وهما لفظان مترادفان لمعنى واحد،
للصّائم صوما حقيقيّا فرحتان، لا للصّائمين كلّهم ، لأنّ الصوم كما قال حجّة الإسلام محمّد الغزّالي على ثلاثة أنواع، الأوّل صوم العوامّ، والثاني صوم الخواصّ، والثالث صوم خواصّ الخواصّ، والصوفيّة الصافية يقولون في اصطلاحهم للنّوع الأوّل صوم الشـريعة، وللنّوع الثاني صوم الطريقة، وللنّوع الثالث صوم الحقيقة أو صوم المعرفة،
وأمّا الفرحتان المذكورتان في الحديث للصّائمين صوم الحقيقة (المعرفة) فقط لا للصّائمين كلّهم، لأنّ الصوم الحقيقيّ هو الصوم المراد في الحديث المذكور، بدليل ” المُطلق إذا أُطلِق ينصـرف إلى الفَرْدِ الكامل “ وهذه قاعدة كليّة، وعلى هذه القاعدة أنّ قول النبيّ صلّى الله عليه وسلّم ” للصّائم “ ينصـرف إلى الفرد الكامل، والفرد الكامل من الصوم هو صوم خواصّ الخواصّ، أي صوم الحقيقة (المعرفة)

الصائم صوم العوامّ وهو صوم الشـريعة، والصائم صوم الخواص وهوصوم الطريقة، لا ينالان الفرحتين المذكورتين في الحديث، فعُلِم من هذا التفصيل أنّ قول النبيّ صلّى الله عليه وسلّم ” للصّائم “ الصّائمُ على سبيل الحقيقة لا على سبيل الطريقة والشريعة،

وأمّا الفرحة التي ينالها الصائم عند فطره فهي فرحة قلبيّة، لا فرحة لسانيّة ولا عُضويّة، لأنّ الفرح متعلّق بالقلب لا بالأعضاء، والأعضاء مظاهر تظهر عليها الفرحة، كالعين تدمع بشدّة الفرح، واللّسان ينطق بكلمات بشدّة الفرح، والفم يضحك من شدّة الفرح،

فالمعنى الحقيقيّ لفرحة الصائم عند إفطاره فرحُ قلبه بإعانة الله تعالى له على إتمام صومه من غير أن يَعرُض له ما يفسده ويبطله من مُفطرات الصوم ومبطلاته من الفجر إلى الغروب، وأن يَعرُض لجسمه شيئ من الأمراض والكسل والفُتور، وهذه نعمة عظيمة، فيجب على العبد الصائم أن يشكر نِعَمه ويفرح بها، وهذه الفرحة هي المرادة بقول النبيّ صلّى الله عليه وسلّم ” فرحة عند إفطاره “

وأمّا التفسير لحصول الفرح للصّائم عند فطره بما يأتي فباطل وخطأ بيّن فاحش، وغير مناسب لمقصود الرسول صلّى الله عليه وسلّم بقوله للصّائم فرحتان فرحة عند فطره،

يقول وهّابيّ جاهل بالدّين في بيانه وخطبته ” أنّ الفرحة الحاصلة للصّائم عند فطره هي بالمأكولات والمشـروبات والحلويات والتُّمور والسّويق والعِنب والبرتقال والتّفّاحة وغيرها، لأنّ الصائم الجائع من الفجر إلى الغروب إذا رأى هذه الأشياء موضوعةً أمامه وقت الإفطار فرح فرحا شديدا “

خرّب الله عقل هذا الوهّابيّ الجاهل المعاند حيث أنزل الرّسول أفضلَ موجوداته وأسعدَ مخلوقاته منزلةَ نفسه، وعدّه صلّى الله عليه وسلّم مثله في حبّ المأكولات والمشـروبات والأطعمة اللّذيذة المتنوّعة ، وملْاِ بطنه بالأطعمة، حاشا جنابه الكريم صلّى الله عليه وسلّم عن وصف الأطعمة والفرح بأكلها، والأغذية التي تقوّي النّفس القاتلة من الأمّارة واللّوّامة وغيرها،

ألا يعلم هذا الوهّابي أنّ الرسول صلّى الله عليه وسلّم أرسله الله رحمة للعالمين وبشيرا ونذيرا وطبيبا لأدواء الأجسام والقلوب، ومُرشدا يرشد النّاس إلى باب ربّ العزّة ربِّ العالمين، لا لِيُطيعوا أنفسهم والشيطان الذي بين جَنبيهم، كما قال الرسول صلّى الله عليه وسلّم ” أعدى عدوّك نفسك التي بين جنبيك “

فظهر ممّا قلت أنّ الفرحة التي تصيب الصائم عند فطره فرحة إعانة الله تعالى له لإتمام صومه من غير أن يعرض له ما يفسده ويبطله، لا الفرحة الشيطانيّة النّفسانيّة التي تحصل للصّائم عند رؤيته المأكولات والمشروبات وغيرها، ممّا تشتهيه نفسه،

وأمّا الفرحة الثانية التي تحصل للصائم فهي عند لقاء ربّه يوم القيامة، لأنّ العبد الصائم يفرح عند لقاء ربّه فرحا شديدا لا نهاية له ولا غاية، ولا تُوصف تلك الفرحة بالعبارات، لأنّ الفرح الحاصل باللّقاء متعلّق بالقلب، والسبب لفرحه عند لقاء ربّه ذوقُه لذّة عظيمة باللّقاء، وهذه اللّذّة لا تساويها لذّة، وهي ألذُّ من لذّة الجماع بآلاف مرّة،

وكيف لا تحصل له لذّة عظيمة عند لقاء ربّه يوم القيامة؟ لأنّه يغيب في لذّة اللّقاء عن شعور نفسه وعن شعور الكائنات كلّها ، ويذوق ما لم يذق في عيشه من اللّذّات، ويستمرّ في تلك اللّذّة إلى خمسمأة عام، فسبحان الله العظيم،

13/04/2026
ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்கள்காலம் - 10.04.2026இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவா...
11/04/2026

ஜுமுஅஹ் பிரசங்கம்

உரை - சங்கைக்குரிய மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்கள்

காலம் - 10.04.2026

இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5. இலங்கை.

ஜுமுஅஹ் பிரசங்கம்உரை - சங்கைக்குரிய மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்கள்காலம் - 10.04.2026இடம் - பத்ரிய்யஹ் ஜுமுஅஹ் பள்ளிவா...

08/04/2026

(நீதியை நிலைநாட்ட விரும்பும் சகோதரர்கள் இக்கட்டுரையை இறுதி வரை வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.)

ஜனநாயக நாட்டில் மத உரிமை மீறலும், அடக்கு முறையும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், ஸூபிஸ சமூகத்திற்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று 1979ம் ஆண்டு வழங்கிய முட்டாள் தனமான “பத்வா”வை இன்று வரை ரிஸ்வீ முப்தீ என்பவர் அமுல் செய்து கொண்டு முஸ்லிம்களுக்கிடையில் பிளவையும், பகைமையையும், பிரச்சினையையும் ஏற்படுத்தி வருகிறார்.

இவர் தனக்கு முன்னுள்ள ஸூபிஸ தத்துவம் தெரியாத அறிவிலிகளால் வழங்கப்பட்ட “பத்வா”வை வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கிடையில் சண்டையையும், “பித்னா” குழப்பங்களையும் ஏற்படுத்துகிறார். இவர் இதை வாபஸ் பெற்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமைக்கு வழி செய்யவில்லையானால் ஸூபிஸ சமூகம் சாலையில் இறங்கி கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் நீதி கேட்க வேண்டிய நிலைமை ஏற்படுமென்பதை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும், கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கும், நாடாளுமன்ற அமைச்சர்களுக்கும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கையிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு ஒரு முஸ்லிமை மதம் மாற்றி “பத்வா” கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்தால் வழங்கப்படாமல் இருக்கும் நிலையில் உலமா சபையினர் இலங்கையில் வாழும் பல்லாயிரம் முஸ்லிம்களை மதம் மாற்றித் தீர்ப்பு வழங்கி, அத்தீர்ப்பை இன்றுவரை சுமார் 47 வருடங்களாக அமுல் செய்து கொண்டிருப்பது மத உரிமை மீறலில் மிகக் கடுமையானதும், கொடுமையானதுமாகும்.

இலங்கைத் திரு நாடு ஒரு ஜனநாயக நாடாக இருந்தும் கூட, இங்கு வாழும் மக்களுக்கு மத உரிமை முதல் அனைத்து மனித உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தும் கூட ஒரு சங்கம் இந்நாட்டுச் சட்டத்திற்கு மாறாக - சட்டத்தை மீறி செயல்படுவது பெருங்குற்றமாகும்.

உலமா சபை இப்படியொரு அநீதியை 1979ம் ஆண்டு செய்தது. சுமார் 47 வருடங்கள் கடந்து விட்டன. இவ்வாறு அவர்கள் “பத்வா” வழங்கிய பின் இந்நாட்டில் 08 ஜனாதிபதிகள் இந்நாட்டில் ஆட்சி பீடத்தில் இருந்துள்ளார்கள். ஸூபிஸ சமூகம் அவர்களுடன் இது தொடர்பாக ஒரு முறையல்ல பல முறை தொடர்பு கொண்டும் கூட அவர்கள் எங்களை ஏமாற்றினார்களே தவிர ஆக்க பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்த பிறகு பல முறை பல வழிகளில் தொடர்பு கொண்டோம். ஆனால் எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பதவிக்கு வருகின்ற ஜனாதிபதிகளில் எவரும் இதுவரை ஆக்கபூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? என்று எமக்குப் புரியவில்லை.

ஸூபிஸ சமூகம் இது தொடர்பாக வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் ஒரு முடிவு கிடைக்கும் என்று இது தொடர்பாக எமது சமூகம் மேல்மட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு சார்பாக வாதாட வாக்களித்த சட்டத்தரணிகள் ஏதோ ஒரு சாட்டுக் கூறி பின்வாங்கிவிடுகிறார்கள். இதற்கு மறைமுகமான காரணம் உலமா சபையின் நடவடிக்கையேயாகும். அவர்கள் எமக்குச் சாதகமாக வழக்குப் பேசும் வழக்கறிஞரை எவ்வாறேனும் கண்டுபிடித்து அவரைப் பெருங் கூட்டத்துடன் சந்தித்து தடை செய்து விடுகிறார்கள். இவ்வாறு இரண்டு சட்டத்தரணிகளை அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

நாட்டில் ஆட்சி அதிகாரமுள்ளவர்களே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் நாங்கள் என்ன செய்வது? எங்களுக்கு ஒரு நீதி இல்லையா? இவ்வாறே நாங்கள் மரணிக்கும் வரை இருக்க வேண்டுமா?

“பத்வா” வழங்கிய மூடர்கள் எங்களை மதம் மாறியவர்கள் என்று மட்டும் சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் தெரு நாய் குரைக்கிறதென்று நாங்கள் முடிவு செய்வோம்.

ஆனால் அவர்கள் மனச் சாட்சிக்கு விரோதமாக எமது மத உரிமைகளை பறித்ததோடு மட்டும் நின்று கொள்ளாமல் பின்வருமாறும் தமது “பத்வா” புத்தகத்தில் எழுதி எம்மை அவமானப்படுத்தியுள்ளார்கள். எவ்வாறு அவமதித்துள்ளார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் எழுதுகிறேன்.

01. நாங்கள் மதம் மாறிய அதே நேரத்திலிருந்து எங்களின் மனைவிமார் “தலாக்” ஆகிவிட்டார்களாம். அதாவது எங்களின் திருமணம் ரத்தாகிவிட்டதாம். நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்வது விபச்சாரமாகுமாம். இது மட்டுமல்ல. எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகளாகிவிடுமாம். இது அந்த அறிவிலிகளின் தீர்ப்பாகும்.

02. நாங்கள் மதம் மாறிவிட்ட படியால் திருமணம் செய்ய வேண்டுமானால் நாங்கள் இஸ்லாமிய முறைப்படி இஸ்லாத்தில் இணைந்த பின்புதான் ஓர் இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்ய முடியுமாம். பொது மக்களே எங்களை எப்படி நசுக்குகின்றார்கள் என்று பார்த்தீர்களா?

03. நாங்கள் மதம் மாறிவிட்டபடியால் நாங்கள் தொழக் கூடாதாம். தொழுவதாயின் புதிதாக இஸ்லாத்தில் சேர வேண்டுமாம்.

04. நாங்கள் மரணித்தால் ஒரு "ஜனாசா" - மையித்திற்குச் செய்ய வேண்டிய நான்கு கடமைகளில் ஒன்றுமே செய்யக் கூடாதாம். அதாவது ஒரு முஸ்லிம் மரணித்தால் முதலில் அவனை இஸ்லாமிய முறைப்படி குளிப்பாட்ட வேண்டும். இரண்டாவது "கபன்" செய்ய வேண்டும். துணியால் அவனின் முழு உடலையும் மறைக்க வேண்டும். மூன்றாவது அவனுக்காக தொழுகை நடாத்த வேண்டும். நான்காவது அவனின் பிரேதத்தை - உடலை முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட நான்கு கடமைகளில் ஒன்றுமே எமக்குச் செய்யக் கூடாதாம். அதாவது குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய வேண்டுமாம்.

05. மதம் மாறியவனின் உடலை புதைப்பதாயினும் முஸ்லிம்களின் மையவாடியில் புதைக்கக் கூடாதாம்.

06. மதம் மாறிய ஒருவர் தனது இஸ்லாமிய மனைவியுடன் கணவனாக வாழ முடியாதாம். அவர் மதம் மாறியதோடு அவரின் திருமணம் ரத்தாகிவிட்டதாம். அவர் தனது மனைவியோடு வாழ்ந்து அவளுடன் உடலுறவு கொள்வது விபச்சாரமாகுமாம். குழந்தை பிறந்தால் அது விபச்சாரத்தில் பிறந்த குழந்தையாகுமாம்.

07. மதம் மாறிய ஒருவர் தொழுகை நடத்தினால் அவரைப் பின்பற்றித் தொழுதவர்களின் தொழுகை நிறைவேறாதாம்.

08. மதம் மாறிய ஒருவர் திருமணம் செய்து வைத்தால் – "நிகாஹ்" நடத்தி வைத்தால் அது நிறைவேறாதாம்.

மேற்கண்டவாறு உலமா சபை தனது "பத்வா"வில் எழுதியுள்ளார்கள். இதனால் காத்தான்குடியைப் பொறுத்த வரை ஒரே குடும்பத்தில் ஸூபிஸத்துக்கு ஆதரவானவர்களும், அதற்கு எதிரானவர்களும் இருப்பதால் ஒரு ஜனாசாவை நல்லடக்கம் செய்யும் விடயத்தில் குடும்பத்தவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும், ஏச்சுப் பேச்சுக்களும், கை கலப்புகளும் ஏற்படுகின்றன. இதை மையமாகக் கொண்டு பல திருமணங்கள் "காழீ" நீதிமன்றம் வரை சென்று விடுகின்றன. அவற்றில் சில சீர் செய்யப்படுகின்றன. இன்னும் சில "தலாக்" விவாகரத்தில் முடிகின்றன.

உலமாஉகள் "பத்வா" வழங்கிய காலத்திலிருந்து இற்றைவரை (08.04.2026) பல திருமணங்கள் பிரிந்துவிட்டன. இன்னும் சில ஒற்றுமையாகிவிட்டன.

உலமாஉகள் "பத்வா" வழங்கியது 1979ம் ஆண்டாகும். அன்று முதல் இன்று வரை 08.04.2026 நான் பிறந்த ஊரான காத்தான்குடியில் எந்த ஓர் இடத்திற்கும் நான் தனிமையயாகச் சென்றதே இல்லை. சுமார் 47 ஆண்டுகள் நான் பிறந்த சொந்த ஊரில் தனிமையாக நடமாட முடியாத நிலையிலேயே உள்ளேன்.

இதேபோல் ஓர் அவசியத் தேவைக்காக வெளியூர் போவதாயினும் இரண்டு வாகனங்களிலேயே பயணிக்கிறேன். ஒன்றில் நானும் எனது நண்பர்களும் பயணிப்போம். இன்னொன்றில் எனது பாதுகாப்புக் கருதி பாதுகாவலர்கள் பயணிக்கின்றார்கள். ஒரு தரம் கொழும்பு சென்று திரும்புவதாயின் வாகனக் கூலியும், என்னுடன் வருபவர்களின் செலவும் சுமார் இரண்டு இலட்சம் செலவாகும்.

இவ்வாறு நான் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான காரணம் உலமாஉகள் வழங்கிய "பத்வா"வின் 20ம் பக்கத்தில் "முர்தத் என்றால் என்ன?" என்ற தலைப்பில் நான் கொலை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எழுதியிருப்பதேயாகும்.

அவர்கள் இவ்வாறு எழுதியது பணத்திற்காக கொலை செய்பவர்களுக்கு பசி பிடித்த நாய்க்கு இறைச்சி முள் கிடைத்தாற்போலாகிவிடும் என்பதற்காக நான் சுமார் 47 வருடங்களாக வெளியில் தனிமையாகச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

முல்லா முட்டாள்களின் "பத்வா" இலங்கை நாட்டின் அடிப்படைச் சட்டத்திற்கே எதிரானதாகும். இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல. மத உரிமை மீறலுமாகும்.

இப்படியொரு அநீதி ஸூபிஸ சமூகத்திற்கு பகிரங்கமாக நடந்தும் கூட இது தொடர்பாக நாங்கள் அரசியல் மட்டத்தில் பல நடவடிக்கைகள் எடுத்தும் கூட பதவியிலிருந்த எந்த ஒரு ஜனாதிபதியின் கண்ணும் தெரியாமற் போயிற்று. அரசியல்வாதிகளின் கண்களும் குருடாகிவிட்டன.

இது தொடர்பாக கௌரவ சட்டமா அதிபர் அவர்களே நடவடிக்கை எடுக்குமாறு தந்த கடிதமும் செயலிழந்து போய்விட்டது, சட்டமா அதிபர் அவர்களைப் பாராட்டுகிறோம். இது தொடர்பான எங்களின் ஆவணங்களை சுமார் மூன்று மாத காலம் தங்களின் பார்வையில் வைத்திருந்து எமக்குத் தந்த கடிதத்துக்குக் கூட எந்த ஒரு ஜனாதிபதியும், எந்த ஒரு அமைச்சரும் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியாக தற்போதுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்களோடு தொடர்பு கொண்டும் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை. தற்போதுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சட்டமா அதிபர் தந்த அந்தக் கடிதத்தோடு நாங்கள் கடிதம் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்களாலும் எடுக்கப்படவில்லை. நாங்கள் - ஸூபிஸ சமூகம் தற்போதுள்ள அரசாங்கத்தாலும் கைவிடப்பட்ட நிலையில் கவனிப்பார் எவருமின்றி அரசியல் அநாதைகளாகி தவித்து நிற்கிறோம்.

தற்போதுள்ள கௌரவ ஜனாதிபதி அவர்களாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் நடந்த முதலாவது தேர்தலில் அவர்களின் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டு அவரின் கட்சியில் போட்டியிட்ட பிர்தௌஸ் நளீமீ அவர்கள் எனது கொள்கைக்கு எதிரானவராயிருந்தும் கூட அதை நான் கருத்திற் கொள்ளாமல் அவரின் வெற்றிக்காக பெண்கள் மத்தியில் சுமார் ஒன்பது கூட்டங்களில் அவருக்கு ஆதரவாகப் பேசினேன். என்னால் முடிந்த வரை அவரை வெல்ல வைப்பதற்காகப் பாடுபட்டேன். ஆயினும் அவர் தோல்வியடைந்து விட்டார். அல்லாஹ் அவரின் வெற்றியை நாடவில்லை போலும். ஆனாலும் கட்சிக்கு மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்தது. مَا شَاءَ اللهُ كَانَ، وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ

ஆயினும் மௌலவீ அவர்கள் தேர்தலுக்குப் பின் என்னைச் சந்தித்து அவரின் வெற்றிக்காக நான் மேற்கொண்ட முற்சிகளுக்காக ஒரு நன்றி கூடச் சொல்லாமல் விட்டது என்னால் மறக்க முடியாத ஒரு மகிழ்சிக்குரிய ஒன்றாகும்.

கௌரவ ஜனாதிபதி அவர்களே!

நீங்கள் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் ஸூபிஸ சமூகத்திற்குச் செய்யப்பட்டுள்ள மத உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் பதவியேற்றுப் பல மாதங்கள் கடந்தும் கூட நீங்களும், உங்களுக்கு முன்னிருந்த 07 ஜனாதிபதிகள் போன்றே செயல்படுகிறீர்கள். இது ஸூபிஸ சமூகத்திற்குப் பெருங்கவலையைத் தருகின்றதென்பதை உங்களின் கவனத்திற்குத் தருகிறோம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு முஸ்லிமை மதம் மாற்றி “பத்வா” வழங்குவதற்கு அரசாங்கம் எந்த ஒரு அதிகாரமும் கொடுக்காத நிலையில் அவர்கள் எங்களை மதம் மாற்றி “பத்வா” வழங்கியிருப்பது மத உரிமை மீறல் இல்லை என்று நீங்கள் கருதுகிறீர்களா? எங்களின் - ஸூபிஸ சமூகத்தின் பிரச்சினையை மிக விரைவில் தீர்த்து வைத்து இறைவனின் நல்லாசியை பெற்றுக் கொள்ளுமாறு ஸூபிஸ சமூகத்தின் சார்பில் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.

-மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ -
08.04.2026

Address

Abdul Jawad Alim Road
Kattankudi
0094

Alerts

Be the first to know and let us send you an email when SHUMS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SHUMS TV:

Share