Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee

Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee Founder of Al Haj Abdul Jawath Alim Waliyyullah Trust (AJAWT),
Incorporated by act parliament No 46

Founder of Al Haj Abdul Jawath Alim Waliyyullah Trust incorporated by act parliament No 46 of 2009.

பெருநாட்களின் பெயர்களை மாற்றுங்கள்! புனித றமழான் மாதத்தை அடுத்து வரும் பெருநாள் “நோன்புப் பெருநாள்” என்று நமது நாட்டில் ...
25/05/2026

பெருநாட்களின் பெயர்களை மாற்றுங்கள்!

புனித றமழான் மாதத்தை அடுத்து வரும் பெருநாள் “நோன்புப் பெருநாள்” என்று நமது நாட்டில் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இப் பெருநாள் நோன்பை அடுத்து வரும் பெருநாளாயிருப்பதால் நமது நாட்டில் தொன்று தொட்டு மேற்கண்டவாறு அழைக்கப்பட்டு வந்ததால் அதுவே அதன் பெயர் போலாகிவிட்டது. படித்தவர்களும், படிக்காதவர்களும் அவ்வாறே சொல்லிப் பழகிவிட்டார்கள். எதார்த்தத்தில் இஸ்லாமில் நோன்புப் பெருநாள் என்று ஒரு பெருநாள் இல்லவே இல்லை. திருக்குர்ஆன் வசனங்களிலோ, நபீ மொழி வசனங்களிலோ عِيْدُ الصَّوْمِ நோன்புப் பெருநாள் என்று வரவில்லை.

நாம் நோன்புப் பெருநாள் என்று பெயர் சொல்லும் பெருநாளுக்கு இஸ்லாம் சொல்லும் பெயர் عِيْدُ الْفِطْرِ என்பதேயாகும். “பித்றா பெருநாள்” என்று சொல்வதே சரியான பெயராகும்.

பித்றா காசி, பித்றா அரிசி என்று மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது போல் “பித்றா பெருநாள்” என்று பிரசித்தி பெறாததால் நோன்பை அடுத்து வருகின்ற பெருநாள் நோன்புப் பெருநாள் என்று அழைக்கப்படலாயிற்று.

ஓதிப்படித்த ஆலிம்கள் கூட இது தொடர்பாக ஒரு நிமிடமேனும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லாது போய்விட்டது போலும். இது தொடர்பாகச் சிந்திக்கவே அவர்களுக்கு நேரமில்லாது போயிருக்கலாம். ஆனால் பரம்பரை முஸ்லிம்களுக்கு “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று பொய் “பத்வா” கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரம் தாராளமாக உண்டு.

“ஈதுல் அழ்ஹா” என்றுதான் ஒரு பெருநாள் உண்டேயன்றி “ஹஜ்ஜுப் பெருநாள்” என்று ஒரு பெருநாள் இருப்பதாக திருக்குர்ஆனிலோ, நபீ மொழியிலோ சொல்லப்படவில்லை.

எனவே, அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே! சகோதரிகளே! இதன்பிறகு நோன்புப் பெருநாள் என்று சொல்லாமல் “ஈதுல் பித்ர்” என்று சொல்லுமாறும், “ஹஜ்ஜுப் பெருநாள்” என்று சொல்லாமல் “உழ்ஹிய்யா பெருநாள்” என்ற கருத்தின்படி “ஈதுல் அழ்ஹா” என்று சொல்லுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
25.05.2026

நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நாம் பகிரங்கமான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம்!وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ ...
25/05/2026

நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நாம் பகிரங்கமான ஒன்பது அத்தாட்சிகளை வழங்கினோம்!

وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

اَلْآيَاتُ التِّسْعُ الَّتِيْ أَعْطَاهَا اللهُ مُوْسَى،
அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கிய ஒன்பது அத்தாட்சிகள்.

1. اَلْعَصَا: اِنْقَلَبَتْ حَيَّةً،
01. கைக் கோல் பாம்பாக மாறியது.

2. اَلْيَدُ تَصِيْرُ بَيْضَاءَ مِنْ غَيْرِ مَرَضٍ،
02. நோயின்றியே கை வெண்மையாக மாறும்.

3. اَلطُّوْفَانُ، مَاءٌ أَغْرَقَ الزُّرُوْعَ وَاَتْلَفَهَا،
03. பயிர்களை மூழ்கச் செய்து அவற்றை நாசமாக்கிய பெரு வெள்ளம்

4. اَلْجَرَادُ، أَكَلَ الزُّرُوْعَ وَالثِّمَارَ،
04. பயிர்களையும், பழங்களையும் பழுதாக்கிய வெட்டுக்கிளிகள்.

5. اَلْقُمَّلُ: آذَى الْإِنْسَانَ وَالْحَيَوَانَ وَأَفْسَدَ النَّبَاتَ،
05. ஒரு வகை வண்டு - பேன்: மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் தொந்தரவு செய்கின்ற, பயிர்களையும் கெடுத்து விடுகின்ற உயிரினம்.

6. اَلضَّفَادِعُ: مَلئَتْ بُيُوْتَهُمْ وَآنِيَتَهُمْ،
06. அவர்களின் வீடுகளையும், பாத்திரங்களையும் நிரப்பி விடுகின்ற தவளைகள்.

7. صَارَتْ أَنْهَارُهُمْ وَآبَارُهُمْ دَمًا،
07. அவர்களின் ஆறுகளும், கிணறுகளும் இரத்தமாக ஆகுதல்.

8. اَلسِّنُوْنَ: قَحْطُ الْأَرْضِ بِسَبَبِ قِلَّةِ الْأَمْطَارِ،
08. மழைகள் குறைந்த காரணத்தால் பூமியில் பஞ்சம் ஏற்படுதல்.

9. نَقْصُ الثَّمَرَاتِ، قِلَّةُ الثِّمَارِ،
09. பழ வர்க்கம் குறைந்து போதல்.

சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் ஓரளவு உப்பு சாப்பிடுதல் உடலுக்கு நல்லது. இவ்வாறு செய்தல் எழுபது நோய்களுக்கு மருந்தாகும...
25/05/2026

சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் ஓரளவு உப்பு சாப்பிடுதல் உடலுக்கு நல்லது. இவ்வாறு செய்தல் எழுபது நோய்களுக்கு மருந்தாகும் என்று ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அருளியுள்ளார்கள்.

اِبْدَأْ طَعَامَكَ بِالْمِلْحِ
وَاخْتِمْهُ بِالْمِلْحِ،

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
25.05.2026

கண் பார்வை தெளிவாக... ஒருவருக்கு கண் பார்வை குறைவாக - மங்கலாக இருந்தால் அவர் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை தினமும் கால...
25/05/2026

கண் பார்வை தெளிவாக...

ஒருவருக்கு கண் பார்வை குறைவாக - மங்கலாக இருந்தால் அவர் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை தினமும் காலையில் ஏழு தரமும், மாலையில் ஏழு தரமும் ஓதி இரண்டு உள்ளங்கையிலும் ஊதி முகத்திலும், குறிப்பாக கண்ணில் தடவி வந்தால் பார்வை தெளிவாகும். சுகம் கிடைக்கும் வரை செய்வது விரும்பத்தக்கது.

செய்முறை: முதலில் மூன்று முறை “ஸலவாத்” ஓதியபின், பிஸ்மியுடன் பின்வரும் திருமறை வசனத்தை

لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِنْ هَذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ

ஏழு தரம் ஓதி, இறுதியில் மூன்று தரம் “ஸலவாத்”தும் ஓதி இரு உள்ளங்கையிலும் ஊதி முகத்தில் - குறிப்பாக கண்ணில் தடவிக் கொள்ள வேண்டும்.

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
25.05.2026

வறுமையும், நோயும் நீங்கி “பறகத்” உடைய வாயல் திறப்பதற்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் காட்டிய வழி.தொகுப்பு: ம...
23/05/2026

வறுமையும், நோயும் நீங்கி “பறகத்” உடைய வாயல் திறப்பதற்கு பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் காட்டிய வழி.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

وَصِيَّةٌ نَبَوِيَّةٌ عَظِيْمَةٌ لِزَوَالِ الْفَقْرِ وَالْمَرَضِ وَفَتْحِ أَبْوَابِ الْبَرَكَةِ،

رُوي أن رجلًا جاء إلى محمد ﷺ يَشْكُو مَا أَثْقَلَ قَلْبَهُ وَمَا أَحْزَنَهُ، فَقَالَ: يَا رَسُوْلَ الله، غَلَبَنِيَ الْفَقْرُ، وَأَتْعَبَنِيَ الْمَرَضُ، فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: «أَلَا أُعلَِّمُكَ كَلِمَاتٍ إِذَا قُلْتَهَا صَبَاحًا وَمَسَاءً ذَهَبَتْ عَنْكَ الْهُمُوْمُ، وَزَالَتِ الْأَمْرُاضُ، وَازْدَادَ رِزْقُكَ، وَامْتَلَأَ قَلْبُكَ طُمَأْنِيْنَةً وَسَكِيْنَةً؟» فَقَالَ الرَّجُلُ: بَلَى يَا رَسُوْلَ الله، فَقَالَ ﷺ: إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ فَقُلْ: ' لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِيْ لَا يَمُوْتُ، وَالْحَمْدُ للهِ الَّذِيْ لَمْ يَتَّخِذْ وَلَدًا، وَالْحَمْدُ للهِ الَّذِيْ لَمْ يَكُنْ لَهُ شَرِيْكٌ فِي الْمُلْكِ، وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ، وَكَبِّرْهُ تَكْبِيْرًا ' قَالَ الرَّاوِيْ: فَمَا مَرَّتْ ثَلَاثَةُ أَيَّامٍ حَتَّى زَالَ الْفَقْرُ وَالْمَرَضُ عَنِ الرَّجُلِ بِإِذْنِ اللهِ،

தமிழாக்கம்:

ஒரு மனிதன் நபீ பெருமானார் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் திருத்தூதரே! வறுமை மிகைத்து விட்டது, நோய் என்னை கஷ்டப்படுத்திவிட்டது என்று முறையிட்டார். அப்போது நபீ பெருமானார் அவர்கள் அவரிடம், நான் உங்களுக்கு சில வசனங்கள் சொல்லித் தருகின்றேன். நீங்கள் அவற்றைக் காலையும், மாலையும் ஓதி வந்தீர்களாயின் உங்கள் கவலைகள் விடை பெற்றுச் சென்று விடும். நோய்கள் சுகமாகிவிடும். உணவு - செல்வம் அதிகமாகிவிடும். உங்களின் உள்ளம் அமைதி பெறும், நிம்மதி பெருகும் என்று அருளினார்கள். அதற்கு வந்தவர் நல்லது சொல்லுங்கள் அண்ணலே என்றார்.

நபீ பெருமானார் அவர்கள், நீங்கள் காலையிலும், மாலையிலும் பின்வரும் ஓதல்களை ஓதி வர வேண்டும் என்று கூறினார்கள். அந்த ஓதல் அடைப்புக்குள் எழுதப்பட்டுள்ளது.

)لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهْ، تَوَكَّلْتُ عَلَى الْحَيِّ الَّذِيْ لَا يَمُوْتْ، وَالْحَمْدُ للهِ الَّذِيْ لَمْ يَتَّخِذْ وَلَدًا، وَالْحَمْدُ للهِ الَّذِيْ لَمْ يَكُنْ لَهُ شَرِيْكٌ فِى الْمُلْكِ، وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ، وَكَبِّرْهُ تَكْبِيْرًا(

முடிவுரை: வந்தவர் ஓதலைத் தொடராக மூன்று நாட்கள் மட்டுமே ஓதினார். அல்லாஹ்வின் அருளால் அவரின் கஷ்டங்கள், மற்றும் குறைகள் யாவும் நீங்கி அவர் நிம்மதி பெற்றார்.

அடைப்புக்குறிக்குள் இடம் பெற்ற ஓதல்களுக்கான பொருளை தமக்கு நம்பிக்கையுள்ள, ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையையும், ஸூபிஸ தத்துவத்தையும் ஏற்றுக் கொண்ட நல்லடியார்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும், குறித்த நிபந்தனைகள் உள்ள உலமாஉகள் கிடைக்கவில்லையானால் என்னுடன் தொடர்பு கொள்ளுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வரலாறு அறிவிப்பாளர்கள் எவரின் ஆதாரமும் இல்லாமல் கூறப்பட்ட செய்தியாயிருப்பதால் தற்காலத்தில் வாழும் “நவீன உலமாஉகள்” இந்த வரலாறை மறுப்பார்கள் என்றும், இதை ஓதக் கூடாதென்று சொல்வார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.

தெரு நாய் குரைத்தால் பயப்படத் தேவையில்லை. அது குரைக்குமே தவிர கடிக்காது. கடித்தாலும் கூட விஷம் ஏறாது,

நவீன உலமாஉகள் திருக்குர்ஆன் வசனங்களைக் கூட மறுக்குமளவு முன்னேறி வருவது மறுமை நாள் நெருங்கிவிட்டதென்பதற்கான அடையாளமாகும். நவீன உலமாஉகளின் பின்னால் சென்றால் திருக்குர்ஆன் வசனங்களைக் கூட நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விடும். معاذ الله

“விர்த்” ஓதுவதின் சிறப்பு:

مَنْ لَا وِرْدَ لَهُ فَهُوَ قِرْدٌ،
“எவனுக்கு “விர்த்” இல்லையோ அவன் குரங்கு” என்று ஒரு பழமொழி உண்டு.

ஒரு முஸ்லிம் தினமும் “விர்த்” ஓதுபவனாக இருத்தல் அவசியம். ஸூபீ மகான்கள் “விர்த்” ஓதுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். எம் பெருமானார் அவர்களே “விர்த்” ஓதியிருக்கும் நிலையில் அவர்கள் வழி செல்லும் நாமும் “விர்த்” ஓதுவோம்.

இமாம் முஹ்யித்தீன் அந்நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “அவறாத்” أَوْرَادْ “விர்த்”களுக்கென்றே தனியான நூலொன்று எழுதி அதற்கு الأذكار “அல் அத்கார்” என்று பெயர் வைத்துள்ளார்கள். ஓர் ஆலிமிடம் இந்நூல் இருப்பது அவசியமாகும். “பர்ழ்ஐன்” கட்டாயக் கடமை போன்றதாகும்.

بِعِ الدَّارَ وَاشْتَرِ بِهِ الْأَذْكَارَ،
“குடியிருக்கும் வீட்டை விற்றேனும் “அல் அத்கார்” என்ற நூலை வாங்கு” என்று ஒரு பழமொழி கூட உண்டு. இந்நூலில் பாதணி அணிய வேண்டிய நேரத்தில் ஓத வேண்டிய ஓதல் முதல் படுக்கைக்குச் செல்லும் போது ஓத வேண்டிய ஓதல் வரை உண்டு.

“ஷாபிஈ மத்ஹப்” சட்ட மேதைகளில் இமாம் நவவீ அவர்களின் பேச்சுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது “ஷாபிஈ மத்ஹப்” சட்ட மேதைகளின் ஏகோபித்த முடிவாகும்.

இமாம் நவவீ அவர்களிடம் இமாம் இப்னு அறபீ குறித்து வினவப்பட்ட போது அவர்கள் கூறிய பதிலை இங்கு எழுதுவது காலத்தின் தேவையாகும் என்பதால் அதையும் இங்கு எழுதுகிறேன்.

سُئل الإمام الفقيه محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي رحمه الله، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أَوَّلَ فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ، (اليواقيت، ج 1، ص 8. للشيخ عبد الوهّاب الشعراني(
தமிழாக்கம்: இமாம் நவவீ அவர்களிடம் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட போது, “அவர்கள் வாழ்ந்து மறைந்து போன ஒரு சமூகமாகும். அவர்கள் பற்றி நாங்கள் சொல்வதாயின் புத்தியுள்ள எவராயினும் அவ்லியாஉகள் மீது தப்பெண்ணம் கொள்வது “ஹறாம்” பாவமானதாகும். ஆகையால் அவ்லியாஉகளின் பேச்சுகளுக்கும், அவர்களின் செயல்களுக்கும் வலிந்துரை செய்ய வேண்டுமேயன்றி அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்தல் கூடாது. ஆனால் அவர்கள் போல் உயர் பதவி பெற்றவர்கள் தவிர. அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அவர்களின் பேச்சுக்கு வலிந்துரை செய்பவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்களாகவே இருப்பார்கள். நற்பாக்கியமற்றவர்கள் அவர்களின் பேச்சுக்கு வலிந்துரை கொள்ளமாட்டார்கள். இவர்கள் நற்பாக்கியமில்லாதவர்களேயாவர்”

மேற்கண்டவாறு விளக்கம் கூறிய இமாம் நவவீ அவர்கள் “ஷர்ஹுல் முஹத்தப்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (அதாவது அவ்லியாஉகளின் பேச்சுக்கு வலிந்துரை கொள்வதாயினும் ஒரு வலிந்துரையோடு மட்டும் நின்று விடக் கூடாது. ஒரு வலிந்துரை சரி வரவில்லையானால் இன்னொரு வலிந்துரை கொடுக்க வேண்டும். அந்த வலிந்துரையும் சரி வரவில்லையானால் இன்னொரு வலிந்துரை கொடுக்க வேண்டும். இவ்வாறு எழுபது வலிந்துரையேனும் கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டுமேயன்றி ஒரேயொரு வலிந்துரையோடு மட்டும் நின்று அவர்களைக் குற்றவாளிகளாக்கிவிடாமல் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாமல் ஒரேயொரு வலிந்துரை மட்டும் கொடுத்து அவர்களைக் குற்றவாளிகளாக்கின்றவன் பிடிவாதக் காரனாகவே இருப்பான்) என்று கூறியுள்ளார்கள். (ஸூபிஸம் தெரியாத அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா போன்று)

இமாம் நவவீ அவர்கள் உலகப் பிரசித்தி பெற்ற ஓர் அறிஞனாக இருந்தும் கூட அவ்லியாஉகளின் பேச்சை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து அவர்களைக் குற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கரையோடு இருந்துள்ளார்கள் என்பதை மண்டையில் சரக்கில்லாத, களி மண்ணைத் தலையில் வைத்துக் கொண்டிருக்கின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முப்தீகள் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உலமா சபையின் தலைவராயிருப்பவர் தெரிந்து கொள்ள வேண்டும். இது சாம்பல் கேட்ட கதை போன்றதோ, நீதிவான்களுக்கு வட்டிலப்பம் கொடுத்த கதை போன்றதோ அல்ல என்பதை உலமா சபைத் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
تَكْفِيْرُ الْمُسْلِمِ كَقَتْلِهِ
ஒரு முஸ்லிமைக் காபிராக்கி வைத்தல் அவரைக் கொலை செய்தல் போன்றதாகும் என்ற நபீ பெருமானார் அவர்களின் வழிகாட்டலைக் கூட புரிந்து கொள்ள சக்தியற்ற ஒருவர் ஒரு நாட்டின் உலமா சபைத் தலைவராக தொடர்ந்து 22 வருடங்கள் இருந்து வருவது கேலிக்குரிய ஒன்றாகும். இந் நாட்டின் ஜனாதிபதியாக வருகின்ற ஒருவர் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்காமலிருப்பது அவர் நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

முல்லாக்கள் ஸூபிஸ சமூகத்திற்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய பின் இதுவரை இலங்கை நாட்டின் ஜனாதிபதிகளாக எட்டுப் பேர் பதவியில் இருந்துள்ளார்கள். இவர்கள் எட்டுப்பேருக்கும் உலமா சபை செய்துள்ள அநீதியும், மத உரிமை மீறலும் தெரியாமற் போனது வியப்பாக உள்ளது. (இதை விட விஷேடம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள முஸ்லிம்கள் தெரியாமல் இருப்பதேயாகும்)

உலமா சபை 47 வருடங்களாகச் செய்து வருகின்ற இவ் அநீதியை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாயிருக்கும் முஸ்லிம்கள் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் இருப்பது இவர்கள் யார் என்பதை மறுமையில் அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டுவான். அவன் أحكم الحاكمين அவனின் தீர்ப்பையே ஸூபிஸ சமூகம் எதிர்பார்க்கிறது.

முக்கிய அறிவித்தல். என்றும் எனதுள்ளத்தில் வாழும் “முரீதீன்”களே! “முரீதாத்”துகளே! மற்றும் முஹிப்பீன்களே!அஸ்ஸலாமு அலைக்கும...
21/05/2026

முக்கிய அறிவித்தல்.

என்றும் எனதுள்ளத்தில் வாழும் “முரீதீன்”களே! “முரீதாத்”துகளே! மற்றும் முஹிப்பீன்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.

உங்களில் எவரேனும் என்னைச் சந்திக்க விரும்பினால் பின்வரும் எனது “காதிம்”களுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே சந்திப்புக்கான நேர காலத்தைப் பெற்றுக் கொண்டு வருமாறும், அனுமதி பெறாமல் வருகை தந்து சிரமப்படுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் அன்பாய் வேண்டுகிறேன்.

01. மௌலவீ அல்ஹாபிள் AUM பாஸ் றப்பானீ - 077 4102602
02. மௌலவீ NS நவ்ஸீ றப்பானீ - 077 2489680
03. AS நஜ்முத்தீன் - 075 288 1826

காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
21.05.2026

ஜனாஸா பற்றிய அறிவித்தல். கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட எனது நண்பனும், சிஷ...
20/05/2026

ஜனாஸா பற்றிய அறிவித்தல்.

கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - சீதுவையை வசிப்பிடமாகவும் கொண்ட எனது நண்பனும், சிஷ்யனுமாகிய Dr. MH நூறுத்தீன் அவர்கள் இன்று மாலை சீதுவை வைத்தியசாலையில் வைத்து “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா”வை அடைந்து விட்டார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”

அன்னார் கல்முனைக்குடியில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வளர்ச்சிக்காகவும், “வஹ்ததுல் வுஜூத்” இறையியலின் வளர்ச்சிக்காகவும் ஆரம்ப காலங்களில் உழைத்தவர் மட்டுமன்றி வலீமார் மீது அதீத அன்பு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனைக்கு வரும் போதெல்லாம் என்னைச் சந்திக்க காத்தான்குடி வர மறக்கமாட்டார் என்று சொல்வதை விட என்னைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே கல்முனைக்கு வருவார் என்று சொல்வேத சிறந்ததாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களின் பொருட்டாலும், வலீமார், நாதாக்களின் பொருட்டாலும் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து அவருடைய “கப்ர்” மண்ணறை வாழ்வை ஒளி மயமானதாக ஆக்குவானாக! “ஜன்னதுல் பிர்தவ்ஸ்” எனும் சுவனச்சோலையில் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்களுடனும், வலீமாருடனும் குடியமர்த்துவானாக! ஆமீன்.

குறிப்பு: ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை சீதுவையில் இடம் பெறும்.

விஷேட அறிவித்தல்.  அல்லாஹ் இறக்கி வைத்த அல் குர்ஆனும், அண்ணலெம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் முப்...
09/05/2026

விஷேட அறிவித்தல்.

அல்லாஹ் இறக்கி வைத்த அல் குர்ஆனும், அண்ணலெம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் முப்பெரும் வழிகாட்டல்களான சொல், செயல், அங்கீகாரம் என்பவையும் மற்றும் குத்புமார், வலீமார், இமாம்கள் ஆகியோரின் சொல், செயல்களும் எமக்குப் போதும். இப்னு தைமிய்யாவும், இப்னு அப்தில் வஹ்ஹாபும் எமக்குத் தேவையில்லை, இதேபோல் இவர்களின் கொள்கை வழி செல்லும் போலிப் பண்டிதர்களும் எமக்குத் தேவையில்லை. இன்னுமிதேபோல் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேஷம் போடும் போலிக் குருமார்களின் வழிகாட்டலும் எமக்குத் தேவையுமில்லை.

بسم الله الرحمن الرحيم، كيف يكون متعلّق الباء حين يقول الله عزّ وجلّ،

بسم الله الرحمن الرحيم، كيف كان متعلّق الباء من بسم الله حين قال ربّ العزّة؟ كان كما يأتي: بِيْ كَانَ مَا كَانَ، وَبِيْ يَكُوْنُ مَا يَكُوْنُ، أي بِذَاتِيْ كَانَ مَا كَانَ، وَبِذَاتِيْ يَكُوْنُ مَا يَكُوْنُ،

معنى التوحيد فى الحقيقة تَوْحِيْدُ الْكَثْرَةِ لَا تَوْحِيْدُ الْوَاحِدِ، لأنّ توحيدَ الواحدِ مُحالٌ، كما زعمَ بعضُ الحَمقَى من ضُعفاء العلماء،

قال الصحابيّ الجليل أبو هريرة رضي الله عنه: حفظت من رسول الله صلّى الله عليه وسلّم وِعَائَيْنِ من العلم، أمّا أحدهما فبثثتُه فى النّاس، وأمّا الآخر فلو بثثتُه لقُطِع هذا الحُلقوم، وفى رواية البُلعوم،

وقال سِبطُ الرّسول زين العابدين رضي الله عنه:
وَرُبَّ جَوْهَرِ عِلْمٍ لَوْ أَبُوْحُ بِهِ - لَقِيْلَ لِيْ أَنْتَ مِمَّنْ يَعْبُدُ الْوَثَنَا
وَلَا اسْتَحَلَّ رِجَالٌ مُسْلِمُوْنَ دَمِيْ - يَرَوْنَ أَقْبَحَ مَا يَأْتُوْنَهُ حَسَنًا
إِنِّيْ لَأَكْتُمُ مِنْ عِلْمِيْ جَوَاهِرَهُ - كَيْ لَا يَرَى الْحَقَّ ذُوْ جَهْلٍ فَيُفْتِنَنَا

أهل البيت صلّى الله عليه وسلّم مُطهَّرون من كلّ عيبٍ ودنسٍ وكذبِ، وأخلاق مذمومة،

قال الشّيخ الأكبر محي الدين ابن عربي قُدس سرُّه،
بِذِكْرِ اللهِ تَزْدَادُ الذُّنُوْبُ
وَتَنْمَحِقُ الْبَصَائِرُ وَالْقُلُوْبُ
فَتَرْكُ الذِّكْرِ أَفْضَلُ كُلِّ شَيْءٍ
وَشَمْسُ الذَّاتِ لَيْسَ لَهَا غُرُوْبٌ،

من تفكّر عن هذه القصائد وعن هذه النقطة الجوهريّة وأراد به الله الخيرَ والسعادة حاز المُراد وفاز فيما أراده،

مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ

மேற்கண்ட அறபு வசனங்கள் ஸூபீ மகான்கள் கூறிய தத்துவ முத்துக்கள். ஸூபிஸ தத்துவம் தெரியாதவர்கள் மேற்கண்ட அவ்லியாஉகளால் சொல்லப்பட்ட வசனங்கள் “குப்ர்” நிராகரிப்பை ஏற்படுத்தும் வசனங்கள் என்று கூறுவார்கள்.

இதற்கான காரணம் அவர்கள் ஸூபீகளின் “அகீதா” கொள்கை தெரியாதவர்களேயாவர். ஸூபீகளால் சொல்லப்பட்ட இத் தத்துவங்கள் “குப்ர்” என்போர் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிய தத்துவங்களையும் “குப்ர்” என்றே சொல்ல வேண்டும்.

மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ
09.05.2026

இந்தியா தமிழ் நாட்டிலுள்ள வலீமார், ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்கள் துயில் கொள்ளும் புனித தர்ஹாக்களின் நிர்வாகிகளே! தினம...
07/05/2026

இந்தியா தமிழ் நாட்டிலுள்ள வலீமார், ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்கள் துயில் கொள்ளும் புனித தர்ஹாக்களின் நிர்வாகிகளே! தினமும் அவர்களை தரிசித்து அருள் பெறும் பக்த கோடிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ.

நான் இலங்கைத் திரு நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும் தமிழ் நாட்டுடன் சிறு வயது முதல் தொடர்பானவன். நீடூரிலும், வேலூரிலும் கல்வி கற்றவன். அங்கு கல்வி கற்கின்ற காலத்திலேயே காரணக்கடல் எஜமான் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அன்னவர்களின் ஆசி பெற்றவன். எனது முப்பாட்டன் நாஹூரில் இருந்தே இலங்கைத் திரு நாட்டுக்கு குடிபெயர்ந்தவர். நான் அறியாவிட்டாலும் அவரின் இரத்த உறவுகளின் வாரிசுகள் இன்னும் அங்கு வாழ்வார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

நான் ஸுன்னத் வல் ஜமாஅத், ஸூபிஸ கொள்கை வழி வாழ்பவன் மட்டுமன்றி அதை மக்களுக்குப் போதிக்கும் மத போதகராகவும் இருக்கிறேன். அதேபோல் வலீகட்கரசர் கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துலர் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் தாபிக்கப்பட்ட “அத்தரீகதுல் காதிரிய்யா”வின் வழியில் “பைஅத்” வழங்கும் “ஷெய்க்” ஆகவும் உள்ளேன். மாத்திரமின்றி “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையின் வடித்தெடுத்த சாறான “வஹ்ததுல் வுஜூத்” இறையியலை உலகறியச் செய்த மகான் அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியில் இறைஞானத்தைப் போதிப்பவனாகவும் உள்ளேன். அல்ஹம்து லில்லாஹ்!

ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் இறுதித் தூதர் கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வரை அனைத்து நபீமார்கட்கும், மற்றும் வலீமார், ஞான மகான்களுக்கும் எதிரிகள் காணப்பட்டது போல் எனக்கும் பல எதிரிகள் உள்ளனர். பல முறை என்னைக் கொல்வதற்கும் முயற்சித்தார்கள். எனது ஆதரவாளர்களை பயமுறுத்தி அவர்களின் உடைமைகளை அழித்து அவர்களை என்னை விட்டும் - சத்திய வழியை விட்டும் தூரமாக்கவும் முயற்சித்தார்கள்.

ஆனாலும் ஈருலக இரட்சகர், சன்மார்க்கப் போதகர், ஸர்தார் தோ ஆலம் கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பொருட்டாலும், நான் தரிசித்த, நான் நேசிக்கின்ற வலீமார் பொருட்டாலும் எதிரிகளின் சூட்சிகளிலிருந்து நானும் பாதுகாக்கப்பட்டுள்ளேன், என்னுடனிருப்பவர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். “அல்ஹம்து லில்லாஹ்”

أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள். (07-99)

என்ற மறை வசனத்தின் அடிப்படையில் சூட்சிகளிலிருந்து பாதுகாப்புத் தேடுவது எமது கடமை என்றதன்படி நான் உங்களிடம் வினயமாக வேண்டுவது என்னவெனில் தினமும் காலையில் தர்ஹா திறக்கப்படும் போதும், இரவில் மூடுகின்ற போதும் எனது “அஸ்ஸலாமு அலைக்கும்” எனும் எனது காணிக்கையை எத்தி வைக்குமாறும், எனக்காகவும், எனது தலைமையில் இயங்கும் ஸூபிஸ சமூகத்திற்காகவும் இரு கரமேந்துமாறும் அன்பாய் வேண்டுகிறேன்.

அன்புடன்,
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
07.05.2026

வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்! தமிழக சட்ட மன்றத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு முன்னணியில் ஜெயித்து தமிழகத்த...
05/05/2026

வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு முன்னணியில் ஜெயித்து தமிழகத்தையே அதிரவைத்த ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

உங்கள் தலைமையில் மலரவிருக்கும் ஆட்சியில் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து இன மத மக்களின் அபிலாஷைகளையும் எவ்விதப் பாகுபாடுமின்றி நிறைவேற்றி வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வரும் வன்முறைகளை இல்லாதொழித்து அவர்கள் நிம்மதியாக அச்சமின்றி வாழ வழிவகுப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியில் நீங்களும், உங்களுடனிருக்கும் உறுப்பினர்களும் எதிரிகளின் அனைத்து விதமான தீங்குகளிலிருந்தும், சூட்சிகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு சிறப்புற்றோங்க தமிழ் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வள்ளலார் காரணக்கடல் ஷாஹுல் ஹமீத் நாஹூர் ஆண்டகை பொருட்டால் ஏக இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ.
05.05.2026

“வஹ்ததுல் வுஜூத்”“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தின் அரசர் அண்ணல் இப்னு அறபீ அவர்களே!தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப்...
04/05/2026

“வஹ்ததுல் வுஜூத்”
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தின் அரசர் அண்ணல் இப்னு அறபீ அவர்களே!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை உலகறியச் செய்த மா பெரும் தத்துவ ஞானி முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்தான்.

سُئل الإمام الفقيه محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي رحمه الله، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أَوَّلَ فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ،
(اليواقيت، ج 1، ص 8. للشيخ عبد الوهّاب الشعراني)

இமாம் முஹ்யித்தீன் அந் நவவீ - நவவீ இமாம் அவர்களிடம் இப்னு அறபீ அவர்கள் பற்றி வினவப்பட்ட போது, “அது ஒரு சமூகம். வாழ்ந்து மறைந்து போயிற்று. ஆயினும் எங்களின் கடமை என்னவெனில் புத்தியுள்ள ஒருவன் அந்த மகான்கள் மீது - அல்லாஹ்வின் நேசர்களான வலீமார் மீது கெட்டம் எண்ணம் கொள்வது “ஹறாம்” பாவமாகும். ஆகையால் ஒருவன் புத்தியுள்ளவனாயின் அவன் அவர்களின் பேச்சுக்களுக்கும், அவர்களின் செயல்களுக்கும் வலிந்துரை கொள்வது அவசியமாகும். இவ்வாறு அவர்களின் தரத்தை அடையாதவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் “தவ்பீக்” நல்லனுகூலம் இல்லாதவன் இவ்வாறு செய்யமாட்டான்”

இமாம் நவவீ “ஷர்ஹுல் முஹத்தப்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அந்த மகான்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை வைப்பதாயினும் எழுபது (70) வலிந்துரைகளாவது வைக்க வேண்டும். ஒரு வலிந்துரை மட்டும் போதாது. நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவ்வாறு வலிந்துரை தேவையில்லை என்று நினைப்பது மன முரண்டாகும். (ஆதாரம்: அல்யவாகீத், பாகம் - 01, பக்கம் 08)

இமாம் நவவீ அவர்கள் இப்னு அறபீ அவர்களின் பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் எழுபது வலிந்துரையேனும் கொடுக்க வேண்டுமென்று சொன்னதற்கான காரணம் எவ்வாறேனும் அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டும் என்பதற்கேயாகும்.

ஓர் ஆன்மிக மகானை எவ்வாறேனும் குற்றமின்றிக் காப்பாற்ற வேண்டுமே தவிர அவர்கள் மீது தவறான எண்ணம் கொள்ளக் கூடாது என்பது பிரதான அம்சமாகும். இது பேணப்பட வேண்டும்.

இமாம் நவவீ “ஷரீஅத்” புலியாக இருந்தாலும் கூட மகான் இப்னு அறபீ அவர்களை மிகவும் நேசிக்கின்றார்கள்.

“ஷரீஆ” கலையில் அதிக கவனமுள்ளவர்கள் ஸூபீ மகான்களை இந்த அளவு நேசிப்பது அவர்களின் கண்ணியத்தை வெளிப்படுத்துகின்றது. அல்ஹம்து லில்லாஹ்!

ஒரு மார்க்க மேதையோ, ஒரு மகானோ ஒரு விஷயம் சொன்னாராயின் அல்லது ஒரு விஷயம் செய்தாராயின் அவர் சொன்ன விஷயம் அல்லது அவர் செய்த விடயம் வெளிப்பார்வையில் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் யாருக்காவது விளங்கினால் அவர் தனக்கு விளங்கியது போல் முடிவு செய்து விடாமல் அவரிடமே நேரில் அவரின் சந்தேகத்திற்கு விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். அவரை சந்திக்க வாய்ப்பில்லாது போனால் மார்க்க விளக்கம் தெரிந்தவர்களிடம் அது பற்றிக் கேட்டறிந்து கொள்ள வேண்டும். எவரிடம் கேட்டாலும் அவர் குறித்த நபர் சொன்னது அல்லது செய்தது பிழையென்றே சொன்னார்களாயின் அது பிழையென்றே முடிவு செய்தல் வேண்டும்.

1979ம் ஆண்டு நான் காத்தான்குடியில் நடந்த மீலாத் விழாவில் பேசிய கருத்துக்கள் தொடர்பாக காத்தான்குடி உலமா சபை சார்பில் ஐந்து மௌலவீமார் கொழும்பு வந்து கொழும்பு உலமா சபையுடன் தொடர்பு கொண்டு எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுத்தார்கள்.

கூட்டம் எங்கே நடந்தது? கூட்டத்தில் எத்தனை உலமாஉகள் கலந்து கொண்டார்கள்? “பத்வா” எழுதியவர் யார்? தனி ஒரு நபர் எழுதினாரா? அல்லது ஒரு குழு எழுதினார்களா? என்ற எந்த ஒரு விபரமும் எனக்கோ, என்னுடன் சேர்ந்தவர்களுக்கோ தெரியாது.

சில நாட்களுக்குப் பின் “முர்தத் பத்வா” வெளியாக்கப்பட்டது.

“பத்வா” எழுதியவர் யார் என்பது கூட எனக்கும் தெரியாது, என்னுடனிருந்த உலமாஉகளில் எவருக்கும் தெரியாது. ஒரு நாட்டின் உலமா சபை இவ்வாறுதானா “பத்வா” வழங்குவது? “முப்தீ”க்கு பெயர் இல்லையா? அல்லது அவருக்கு தனக்குரிய முதலெழுத்து தெரியாதா?

உலமா சபையினர் எவ்வாறு “பத்வா” வழங்கினார்கள்? என்று ஊர் மக்கள் சொன்ன செய்தி மட்டும்தான் எங்களுக்குத் தெரியுமே தவிர வேறு ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது.

ஊர் மக்கள் சொன்ன செய்தி:

ஒரு நாள் உலமா சபையைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும் மருதானை சாஹிறாக் கல்லூரி மண்டபத்தில் ஒன்று கூடினார்களாம். காத்தான்குடியிலிருந்து கொழும்பு சென்ற உலமாஉகள் ஐவரும் நான் பேசிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார்கள். ஒலி நாடாவை இயக்குவதற்குக் கூட அதற்கான உபகரணங்கள் எடுத்துச் செல்லவுமில்லை. வந்த உலமாஉகள் செய்வதறியாது ஒருவர் மற்றவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்களே தவிர எவரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுமார் 10 மணியாகியும் ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. வந்த உலமாஉகளில் சிலர் ஸ்கூல் கதிரைகளிலும், பங்குகளிலும் உறங்கத் தொடங்கிவிட்டார்கள்.

எதிர்பாராமல் அங்கு வந்த ஒருவர் (இவர் எனது நண்பர்) என்னிடம் அதை இயக்கும் கருவி உண்டு. அதை நான் எடுத்து வருகிறேன் என்று கூறி ஒரு மணி நேரத்தின் பின் கொண்டு வந்தார். வந்த உலமாஉகளில் ஒரு சிலர் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் ஹோட்டலுக்கு தேனீர் குடிக்கப் போய் விட்டார்கள். இறுதியில் ஒரு சிலர் மட்டும் ஒலி நாடாவை இயக்கிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிற் சிலர் இவருடைய பேச்சை முழுமையாகக் கேட்கத் தேவையில்லை. கட் பண்ணி பண்ணி போட்டு முடித்து விடுங்கள். இவனும், இவனைச் சரி கண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுப்போம் என்று சொன்னதுடன் கூட்டம் கலைந்து விட்டது.

இதையடுத்து சில நாட்களின் பின் “பத்வா” புத்தகம் வெளியானது.

அன்பிற்குரிய படித்தவர்களே! சிந்தனையாளர்களே! நடுநிலை வாதிகளே! நியாயத்தை நிலை நாட்டும் எண்ணமுள்ளவர்களே!

நீங்கள் உங்களின் “கல்பு” மனதிடம் “பத்வா” கேளுங்கள். உலமாஉகள் செய்தது சரியா? நியாயம்தானா? பல்துறைப் பட்டதாரிகளும், குறிப்பாக ஸூபிஸ தத்துவத்தில் திறமை உள்ளவர்களும், தரீகாவின் ஞானம் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து பல மாதங்கள் அல்லது பல நாட்கள் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டிய ஒரு விடயத்தை ஒரு சில மணித்தியாலங்கள் மட்டும், குறட்டைச் சத்தத்தோடும் செவியேற்று விட்டு “பத்வா” வழங்கியிருப்பது நியாயமா? உலமா சபை செய்தது சரியா? உங்கள் மனச் சாட்சியிடம் கேளுங்கள்!

சரி, பிழை ஒரு பக்கம் இருக்கட்டும். கருத்தைப் பேசிய என்னை வினவாமல், கருத்துக்கான விளக்கத்தை என்னிடம் கேட்காமல் உலமாஉகள் தமது விருப்பத்தின் படி “பத்வா” வழங்கியது எந்த வகையில் நியாயமாகும்? உலமாஉகள் அவசரப்பட்டு “பத்வா” வழங்காமல் சில நாட்கள் பிற்போட்டு உலமா சபை உறுப்பினர்களில் ஸூபிஸ கொள்கையும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும் நன்றாகத் தெரிந்தவர்களையும், “தரீகா”வின் ஷெய்குமாரையும் அழைத்து இது தொடர்பாக அலசி ஆய்வு செய்து முடிவு செய்திருக்கலாம் அல்லவா? ஏன் இவ்வாறு செய்யவில்லை? இதிலுள்ள இரகசியம் என்ன?

இவ்வாறு செய்யாமல் “சுடுகுது மடியைப் பிடி” என்பது போல் அவசரமாக “பத்வா” வழங்கியது மன முரண்டும், சதியுமேயன்றி தவறல்ல. இது எதிரிகளின் திட்டமிட்ட செய்லாகும். இதில் கூடிய பங்கு வஹ்ஹாபீகளுக்கேயாகும். ஏனெனில் அவர்களுக்கெதிராக நான் மட்டுமே உலமாஉகளில் பேசிக் கொண்டிருந்தேன். என் வாயை மூடுவதற்கு அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனதால் அல்லாஹ்வை மறந்து, தமது மனோ இச்சைக்கு வழிப்பட்டு பெருங்குற்றமொன்றைச் செய்து விட்டார்கள்.

ஒருவனைக் காபிராக்குவதே அவனை உயிரோடு கொலை செய்வதற்குச் சமமானதென்றால் பல்லாயிரம் முஸ்லிம்களை காபிராக்கினால் அவர்கள் அனைவரையும் உயிருடன் கொலை செய்வது போன்றாகும். இது அல்லாஹ்வின் சாபத்தை இழுத்து வருமென்ற அறிவை பொறாமை மிகைத்து விட்டது. அப்சோஸ்! அப்சோஸ்!

தொடர்ந்தால் தொடர்வேன்.

Address

Kattankudi

Alerts

Be the first to know and let us send you an email when Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee:

Share