Markazul Islah - மடவளை

Markazul Islah - மடவளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Markazul Islah - மடவளை, Religious organisation, 105/6, Wattegama Road, Madawala Bazaar, Kandy.

இஸ்லாத்தை நபித்தோழர்கள் விளங்கி பின்பற்றிய அமைப்பை ஏற்று, அதன்படி பின்பற்றி, தூய இஸ்லாத்தின் ஜோதியை புவியில் பரவச் செய்ய முயற்சிக்கும் உத்தியோகப்பூர்வ நம்பிக்கைவாரியம். 𝐌𝐈𝐃𝐆 𝐓𝐑𝐔𝐒𝐓_ 𝐌𝐀𝐃𝐀𝐖𝐀𝐋𝐀 𝐁𝐀𝐙𝐀𝐀𝐑

24/08/2026
அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?தொடர் – 11எஸ். எச். எம். இஸ்மாயில் (ஸலபி)நான்கு இமாம்களின் பார்வையில்....அல்லாஹ் எங்கும் நிறை...
24/08/2026

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
தொடர் – 11
எஸ். எச். எம். இஸ்மாயில் (ஸலபி)

நான்கு இமாம்களின் பார்வையில்....
அல்லாஹ் எங்கும் நிறைந்தவன்; அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்; அவன் படைப்புகளுக்குள் கலந்திருக்கிறான் என்ற நம்பிக்கை இஸ்லாமிய அகீதாவுக்கு முரணானது என்பதை இதுவரை அல்குர்ஆன், ஸுன்னா, ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் கூற்றுக்களின் அடிப்படையில் பார்த்தோம்.
அதேவேளை, அல்லாஹ் தன் படைப்புகளுக்கு மேலாகவும், அர்ஷின் மீது உயர்ந்தவனாகவும் இருக்கிறான் என்பதை ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையாகவும் அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
இத்தொடரில் புகழ்பூத்த இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்களைத் தொகுத்துப் பார்ப்போம். முதலில், இஸ்லாமிய உலகில் பெரிதும் அறியப்பட்ட நான்கு பெரும் இமாம்களின் கூற்றுகளை நோக்குபோம்.
35. இமாம் அபூ ஹனீபா (ரஹ்)
இமாம் அபூ ஹனீபா அந்நுஃமான் இப்னு ஸாபித் (ஹி. 80–150) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றின் மிகப் பெரிய ஃபிக்ஹ் அறிஞர்களில் ஒருவராவார்.
அவர்களிடம் அல்லாஹ்வின் உயர்வு தொடர்பாகக் கூறப்பட்டுள்ள பிரபலமான வாசகம்:
مَنْ قَالَ: لَا أَعْرِفُ اللَّهَ أَفِي السَّمَاءِ هُوَ أَمْ فِي الْأَرْضِ، فَقَدْ كَفَرَ.
பொருள்:
“அல்லாஹ் வானத்தில் இருக்கிறானா அல்லது பூமியில் இருக்கிறானா என்பது எனக்குத் தெரியாது என்று கூறுபவன் குஃப்ரில் விழுந்துவிட்டான்.”
இந்தக் கூற்று الْفِقْهُ الْأَكْبَرُ எனப் பரவலாகக் குறிப்பிடப்படும் நூலிலும், அபூ முதீஃ அல்-பல்கீ வழியாக அறிவிக்கப்படும் உரைகளிலும் காணப்படுகிறது. ( இவ்வறிவிப்பின் இஸ்னாத் குறித்து அறிஞர்களிடையே விவாதம் மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.)
அதே அறிவிப்பின் மற்றொரு வடிவில்:
وَكَذَا مَنْ قَالَ: إِنَّهُ عَلَى الْعَرْشِ، وَلَا أَدْرِي الْعَرْشُ أَفِي السَّمَاءِ أَمْ فِي الْأَرْضِ.
என்று கூறப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அதாவது இவ்வாறே அல்லாஹ் அர்ஷின் மேல் உள்ளான்.ஆனால் அர்ஷ் வானத்தில் இருக்கிறதா?அல்லது பூமியில் இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது என்று கூறுபவனும் அவ்வாறே (குப்ரில் விழுந்துவிட்டான்)
எனீறு இடம் பெற்றுள்ளது
இதன் மூலம் இமாம் அபூ ஹனீபாவிடம் அறிவிக்கப்படும் கருத்தின் மையம், அல்லாஹ்வின் உயர்வை மறுப்பது அல்லது அதனை சந்தேகிப்பது ஸலப்களின் அகீதாவுக்கு முரணானது என்பதாகும்.
ஆதாரம்: الْفِقْهُ الْأَكْبَرُ எனக் குறிப்பிடப்படும் உரை; மேலும் شَرْحُ الْفِقْهِ الْأَكْبَرِ போன்ற நூல்களில் இவ்வறிவிப்பு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.(பார்க்க:இப்னு அபில் இஸ் அல்-ஹனபி, ஷர்ஹு அல்-அகீதத்துத் தஹாவிய்யா, பக்கம் 301)

36. இமாம் மாலிக் (ரஹ்)
இமாம் மாலிக் இப்னு அனஸ் (ஹி. 93/95–179) அவர்கள் இமாமு தாரில் ஹிஜ்ரா என அழைக்கப்பட்ட மிகப் பெரிய ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் அறிஞராவார்.
அவர்களிடம் அறிவிக்கப்படும் முக்கியமான கூற்று:
اللَّهُ عَزَّ وَجَلَّ فِي السَّمَاءِ، وَعِلْمُهُ فِي كُلِّ مَكَانٍ، لَا يَخْلُو مِنْهُ شَيْءٌ.
பொருள்:
“அல்லாஹ் வானத்திற்கு மேலாக இருக்கிறான்; அவனுடைய அறிவு ஒவ்வோர் இடத்திலும் உள்ளது. அவனுடைய அறிவை விட்டும் எந்த இடமும் விலகியதல்ல.”
இந்தக் கூற்றை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலின் மகன் அப்துல்லாஹ் அறிவிக்கும் السُّنَّة நூலிலும் காணலாம். இமாம் அஹ்மத் அவர்களும் மாலிக்கிடமிருந்து இக்கூற்றை அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பை பல அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் இமாம் மாலிக்கிடம் «الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى» என்ற வசனத்தின் இஸ்திவா குறித்து கேட்கப்பட்டபோது பிரபலமாக அறிவிக்கப்படும் பதில்:
الِاسْتِوَاءُ مَعْلُومٌ، وَالْكَيْفُ مَجْهُولٌ، وَالسُّؤَالُ عَنْهُ بِدْعَةٌ.
பொருள்:
“இஸ்திவா என்பது அறியப்பட்ட ஒன்று; எவ்வாறு என்பது அறியப்படாதது; அதைப் பற்றி ‘எவ்வாறு?’ என்று கேட்பது பித்அத் ஆகும்.”
இந்த வாசகம் இமாம் மாலிக்கின் அகீதையை விளக்கும் மிகப் பிரபலமான ஸலபி மேற்கோள்களில் ஒன்றாகும்.
இதனால் இமாம் மாலிக்கின் அணுகுமுறை, இஸ்திவாவை மறுப்பதல்ல; அதன் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதன் “எப்படி” என்பதை அல்லாஹ்விடமே ஒப்படைப்பது என்பதை விளங்கலாம்.
37. இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாஃபிஈ (ஹி. 150–204) இவர்கள் இஸ்லாமிய ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் வரலாற்றின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவர்.
அவர்களின் அகீதையை விளக்கும் வகையில் அறிவிக்கப்படும் கூற்று:
الْقَوْلُ فِي السُّنَّةِ الَّتِي أَنَا عَلَيْهَا، وَرَأَيْتُ أَصْحَابَنَا عَلَيْهَا أَهْلَ الْحَدِيثِ الَّذِينَ رَأَيْتُهُمْ وَأَخَذْتُ عَنْهُمْ: الْإِقْرَارُ بِشَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنَّ اللَّهَ تَعَالَى عَلَى عَرْشِهِ فِي سَمَائِهِ، يَقْرُبُ مِنْ خَلْقِهِ كَيْفَ شَاءَ، وَأَنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا كَيْفَ شَاءَ.
பொருள்:
“நான் கடைப்பிடிக்கும் ஸுன்னத் மற்றும் நான் சந்தித்தும் அவர்களிடமிருந்து அறிவைப் பெற்றும் இருக்கும் ஹதீஸ் அறிஞர்கள் கடைப்பிடிக்கும் வழி என்னவென்றால்: ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்’ என்று சாட்சி கூறுதல்; மேலும் அல்லாஹ் தன் வானத்திற்கு மேலுள்ள அர்ஷின் மீது இருக்கிறான்; அவன் விரும்பிய விதத்தில் தன் படைப்புகளுக்கு நெருக்கமாகிறான்; மேலும் அவன் விரும்பிய விதத்தில் கீழ் வானத்திற்கு இறங்குகிறான் என்பவற்றை ஏற்றுக்கொள்வதாகும்.”
இந்த உரை
اجتماع
الجيوش الإسلامية நூலில் இமாம் ஷாஃபிஈ அவர்களிடமிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இமாம் ஷாஃபிஈ அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்து கூறியதாக அறிவிக்கப்படும் மற்றொரு முக்கியமான கூற்று:
لِلَّهِ تَعَالَى أَسْمَاءٌ وَصِفَاتٌ جَاءَ بِهَا كِتَابُهُ، وَأَخْبَرَ بِهَا نَبِيُّهُ أُمَّتَهُ، لَا يَسَعُ أَحَدًا مِنْ خَلْقِ اللَّهِ قَامَتْ عَلَيْهِ الْحُجَّةُ رَدُّهَا.
அதாவது, அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவும் உறுதிப்படுத்திய அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை மறுப்பது அனுமதிக்கப்படாது என்பதே அவரது வழிமுறையாகும்.
38. இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)
இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ஹி. 164–241) அவர்கள் ஹதீஸ் மற்றும் ஸுன்னாவின் மிகப் பெரிய இமாம்களில் ஒருவராவார்.
அவர் சத்தியத்தைப் பாதுகாப்பதில் மிகுந்த உறுதியுடன் இருந்தார். குறிப்பாக ஜஹ்மிய்யாக்களின் தவறான அகீதாவுக்கு எதிராக அவர் எழுதிய الرَّدُّ عَلَى الْجَهْمِيَّةِ وَالزَّنَادِقَةِ என்ற நூல் மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.
அதில் ஜஹ்மிய்யாக்கள்:
هُوَ عَلَى الْعَرْشِ، وَفِي السَّمَاوَاتِ، وَفِي الْأَرْضِ، وَفِي كُلِّ مَكَانٍ، لَا يَخْلُو مِنْهُ مَكَانٌ، وَلَا يَكُونُ فِي مَكَانٍ دُونَ مَكَانٍ
“அவன் அர்ஷின் மீதும் இருக்கிறான்; வானங்களிலும் இருக்கிறான்; பூமியிலும் இருக்கிறான்; மேலும் ஒவ்வோர் இடத்திலும் இருக்கிறான். எந்த இடமும் அவனை விட்டும் காலியாக இல்லை; அவன் ஒரு இடத்தில் மட்டும் இருந்து, மற்றொரு இடத்தில் இல்லாதவனாக இருப்பதில்லை.”
என்று கூறியதாக இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, அல்லாஹ்வின் மகத்துவத்திற்கும் பரிசுத்தத்திற்கும் முரணான இடங்களை எடுத்துக்காட்டுகிறார்.
அதே நூலில் இந்த வழிகேட்டை நிறூபிக்கும் மிக முக்கியமான தர்க்க ரீதியான விளக்கத்தையும் அவர் வழங்குகிறார்.
أَلَيْسَ كَانَ اللَّهُ وَلَا شَيْءٌ؟
“அல்லாஹ் இருந்தான்; அப்போது வேறு எதுவும் இருக்கவில்லைதானே ?”
என்று கேட்க வேண்டும் .
பின்னர், படைப்புகள் உருவாக்கப்பட்டபோது அவை அல்லாஹ்வுக்குள் உருவாக்கப்பட்டனவா அல்லது அவனுக்கு வெளியே உருவாக்கப்பட்டனவா என்று கேட்கவேண்டும்.இதற்கு அவன் மூன்று விதத்தில் விடியளிக்கலாம் எனச் சுட்டிக்காட்டுகிறார்:
1. அல்லாஹ் படைப்புகளைத் தன்னில் இருந்து உருவாக்கினான் என்று கூறினால்
அது படைப்புகள் அல்லாஹ்வின் ذات-இல் இருப்பதாகக் கூறுவதாகிவிடும்.
2. படைப்புகளைத் தனனுக்கு வெளியே படைத்த பின்னர் அவற்றுக்குள் நுழைந்தான் என்று கூறினால்
அல்லாஹ் படைப்புகளுக்குள் நுழைகிறான் என்ற தவறான கருத்து உருவாகும்.
3. படைப்புகளைத் தனனுக்கு வெளியே படைத்தான்; பின்னர் அவற்றுக்குள் நுழையவில்லை என்று கூறினால்
அவன் “அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான்” என்ற தன் முந்தைய கருத்தை விட்டுவிட்டு, அஹ்லுஸ் ஸுன்னாவின் கருத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும்.
இமாம் அஹ்மத் அவர்களின் சொற்களில்:
وَإِنْ قَالَ: خَلَقَهُمْ خَارِجًا مِنْ نَفْسِهِ، ثُمَّ لَمْ يَدْخُلْ فِيهِمْ، رَجَعَ عَنْ قَوْلِهِ أَجْمَعَ، وَهُوَ قَوْلُ أَهْلِ السُّنَّةِ.
“அவன் அவர்களைத் தனனுக்கு வெளியே படைத்தான்; பின்னர் அவற்றுளக்குள் நுழையவில்லை என்று கூறினால், அவன் தன் முந்தைய கருத்தை முழுமையாக விட்டுவிட்டான்; அதுவே அஹ்லுஸ் ஸுன்னாவின் கருத்தாகும்.”
இதன் மூலம் இமாம் அஹ்மத் அவர்கள் அல்லாஹ் படைப்புகளோடு கலந்து எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்ற கருத்தைத் தெளிவாக நிராகரித்திருப்பதை அறியலாம்.
நான்கு இமாம்களின் கருத்து என்ன சொல்கிறது?
இதுவரை நாம் பார்த்த நான்கு இமாம்களின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்:
இமாம் அபூ ஹனீபா:
அல்லாஹ்வின் உயர்வை மறுக்கும் கருத்தை கடுமையாக மறுக்கும் அறிவிப்புகள் அவரிடமிருந்து வந்துள்ளன.
இமாம் மாலிக்:
اللَّهُ فِي السَّمَاءِ، وَعِلْمُهُ فِي كُلِّ مَكَانٍ
என்று அறிவிக்கப்படுகிறது; மேலும் இஸ்திவா பற்றி «الِاسْتِوَاءُ مَعْلُومٌ، وَالْكَيْفُ مَجْهُولٌ» என்று கூறியதாகப் பிரபலமாக அறிவிக்கப்படுகிறது.
இமாம் ஷாஃபிஈ:
وَأَنَّ اللَّهَ تَعَالَى عَلَى عَرْشِهِ فِي سَمَائِهِ
என்று அல்லாஹ்வின் அர்ஷின் மீதான உயர்வை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
இமாம் அஹ்மத்:
ஜஹ்மிய்யாக்களின் “அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான்” என்ற கருத்தை மறுத்ததுடன், அல்லாஹ் படைப்புகளிலிருந்து வேறுபட்டவனாக இருக்கிறான் என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகிறார்.
எனவே, அல்லாஹ்வின் உலூ (الْعُلُوّ), அர்ஷின் மீது இஸ்திவா (الِاسْتِوَاءُ عَلَى الْعَرْشِ), மற்றும் படைப்புகளிலிருந்து அவன் வேறுபட்டிருத்தல் (مُبَايَنَةُ الْخَلْقِ) ஆகிய கருத்துகள் ஸலப்களின் அகீதா விளக்கங்களில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.
அதேவேளை, அல்லாஹ்வின் உயர்வு என்பது படைப்புகளின் உயர்வைப் போன்றதல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
“அவனைப் போன்றது எதுவுமில்லை; அவனே நன்கு கேட்பவனும் பார்ப்பவனுமாவான்.”
(அஷ்-ஷூரா: 11)
எனவே, அஹ்லுஸ் ஸுன்னாவின் வழிமுறை:
பண்புகளை மறுப்பதுமல்ல; படைப்புகளுடன் ஒப்பிடுவதுமல்ல.
மாறாக, அல்குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிப்படுத்தியதை உறுதிப்படுத்தி, அல்லாஹ்வை படைப்புகளுக்கு ஒப்பிடாமல் இருப்பதாகும்.
ஏன் ஸலப்களின் கூற்றுகளை நாம் தொடர்ந்து குறிப்பிடுகிறோம்?
“அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்தான்” என்பதற்கு அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.
என்றாலும், சிலர் குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் வேறு விளக்கங்களை வழங்கக்கூடும்.
அதனால், அந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் விளங்கிய முதல் தலைமுறையினரும், அவர்களைத் தொடர்ந்து வந்த இமாம்களும் எவ்வாறு புரிந்துகொண்டார்கள்? என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
அதனால்தான் இத்தொடரில் ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய இமாம்களின் கூற்றுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இவை அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, அல்லாஹ்வின் உயர்வு மற்றும் அர்ஷின் மீது அவனுடைய இஸ்திவா என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தல்ல; மாறாக, ஸலப்களின் அகீதா விவாதங்களில் தெளிவாக இடம்பெற்ற ஒரு கருத்து என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நான்கு இமாம்களின் கருத்துக்களுடன் இத்தொடரை முடித்தாலும் போதுமானதாகும்.எனினும் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு இன்னும் பல முன்னணி அறிஞர்களின் கூற்றுகளைப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிரபலமான மற்றும் சில அறிஞர்களின் கூற்றுக்களையும் நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?தொடர் – 10எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலபி31. உம்முல் முஃமினீன் ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி) இவர்நபி...
23/08/2026

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
தொடர் – 10
எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலபி

31. உம்முல் முஃமினீன் ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி)
இவர்நபி ﷺ அவர்களின் மனைவியர்களில் ஒருவராவார்.முஃமின்களின் தாயாவார். அவர்களை அல்லாஹுத்தஆலாவே நபி ﷺ அவர்களுக்கு மணமுடித்து வைத்தான்.
அதனால்தான் அவர்கள் நபி ﷺ அவர்களின் ஏனைய மனைவியர்களிடம் பெருமையாகக் கூறுவார்கள்:
زَوَّجَكُنَّ أَهَالِيكُنَّ، وَزَوَّجَنِي اللَّهُ تَعَالَى مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ.
“உங்களை உங்கள் குடும்பத்தினர் மணமுடித்து வைத்தனர்; ஆனால் என்னை ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹுத்தஆலா மணமுடித்து வைத்தான்.”
இந்த அறிவிப்பு அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்:
• ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ்: 7420
• ஜாமிஉத் திர்மிதி, ஹதீஸ்: 3213 — இமாம் திர்மிதி: حَسَنٌ صَحِيحٌ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது நபி ﷺ அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு ஸஹாபியப் பெண்மணியான ஸைனப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் உயர்வை எவ்வாறு புரிந்திருந்தார்கள் என்பதற்கான முக்கியமான ஆதாரமாகும்.இவர்களை யாரும் அல்லாஹ்வுக்கு இடம் கற்பித்தூவிட்டார் எனக்குற்றம் சாட்டமுடியாது.நபியவர்களின் மனைவியான இவர் இந்த அகீதாவை மகஸாஸிமாக்களீடம் இருந்து எடுத்ததாக கூறமுடியாது.
தாபிஈன்களின் பார்வையில் அல்லாஹ் எங்கும்நீறைந்தவனா?
ஸஹாபாக்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து நேரடியாக மார்க்க அறிவைப் பெற்ற தலைமுறையினரே தாபிஈன்கள் (التابعون) எனப்படுகின்றனர்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
خَيْرُ النَّاسِ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ.
“மக்களில் சிறந்தவர்கள் எனது தலைமுறையினர்; பின்னர் அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள்; பின்னர் அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள்.”
எனவே ஸஹாபாக்களைத் தொடர்ந்து வந்த தாபிஈன்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த தபஉத் தாபிஈன்களும் இஸ்லாமிய அகீதாவை ஆரம்பகாலத் தூய வடிவில் அறிந்த முக்கிய தலைமுறைகளாகும்.
அல்லாஹுத்தஆலா அர்ஷின் மேலிருப்பதைப் பற்றிய அவர்களின் கூற்றுக்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
33. மஸ்ரூக் (ரஹ்)
இவர் முக்கியமான தாபிஈ அறிஞர்களில் ஒருவர். இவர் ஹிஜ்ரி 62 அல்லது 63 ஆம் ஆண்டில் மரணித்ததாக குறிப்பிடப்படுகிறது.
அவர்கள் உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும் போது அவர்களை இவ்வாறு வர்ணிக்கும் வழக்கமுடையவராக இருந்ததாக அறிவிக்கப்படுகிறது:
حَدَّثَتْنِي الصِّدِّيقَةُ بِنْتُ الصِّدِّيقِ، حَبِيبَةُ حَبِيبِ اللَّهِ، الْمُبَرَّأَةُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ.
“ஸித்தீக்கின் மகளும், ஸித்தீக்கா எனப் போற்றப்படுபவருமான, அல்லாஹ்வின் நேசத்துக்குரியவரின் நேசத்துக்குரியவருமான, ஏழு வானங்களுக்கு மேலிருந்து குற்றமற்றவர் எனத் தூய்மைப்படுத்தப்பட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.”
இந்தச் சொல்லை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களைப் பற்றிக் கூறியதாக அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.
இங்கே கவனிக்க வேண்டியது, ஆயிஷா (ரழி) அவர்களை
“المُبَرَّأَةُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ” — “
ஏழு வானங்களுக்கு மேலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டவர்” என்று மஸ்ரூக் (ரஹ்) குறிப்பிடுகிறார்.
இது இட்டுக் கட்டப்பட்ட பிற்காலக் கருத்து அல்ல; ஸஹாபாக்களின் காலத்துக்குப் பின்னர் வந்த ஆரம்பகால தாபிஈ அறிஞரின் பயன்பாடாகும்.
34. ழஹ்ஹாக் இப்னு முஸாஹிம் (ரஹ்)
இவர் பிரபலமான தாபிஈ முஃபஸ்ஸிர்களில் ஒருவர். ஹிஜ்ரி 105 அல்லது 106 அளவில் மரணித்ததாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:
مَا يَكُونُ مِنْ نَجْوَىٰ ثَلَاثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمْ، وَلَا خَمْسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمْ، وَلَا أَدْنَىٰ مِنْ ذَٰلِكَ وَلَا أَكْثَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا...
“மூன்று பேர் இரகசியமாகப் பேசினாலும், அவர்களுடன் நான்காவது ஒருவனாக அவன் இல்லாமல் இருப்பதில்லை... அவர்கள் எங்கு இருந்தாலும் அவன் அவர்களுடன் இருக்கிறான்...”
— அல்-முஜாதலா 58:7
இந்த வசனத்திற்கு ழஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் விளக்கம் அளிக்கும்போது:
هُوَ فَوْقَ الْعَرْشِ، وَعِلْمُهُ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا.
“அவன் அர்ஷின் மேலிருக்கிறான்; அவனுடைய அறிவு அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுடன் இருக்கிறது.”
என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
இது மிகவும் முக்கியமான விளக்கமாகும்.
ஏனெனில், “அல்லாஹ் அவர்களுடன் இருக்கிறான்” என்ற வசனத்தை, “அல்லாஹ்வின் ذات் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது” என்று புரிந்துகொள்ளாமல், அவன் அர்ஷின் மேலிருக்கிறான்; அவனுடைய அறிவு அனைத்தையும் சூழ்ந்துள்ளது என்று ழஹ்ஹாக் (ரஹ்) விளக்கியுள்ளார்.
“அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான்” என்றால் என்ன?
இங்கே ஒரு முக்கியமான அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அல்குர்ஆனில் சில இடங்களில்:
مَعِيَّة — மஅிய்யத்
அதாவது “உடன் இருப்பது” பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இதை இரண்டு வகையாகப் புரிந்துகொள்ளலாம்:
1. மஅிய்யா ஆம்மா — பொதுவான உடனிருத்தல்
அல்லாஹ் தன்னுடைய அறிவு, கேள்வி, பார்வை, ஆற்றல் மற்றும் கண்காணிப்பு மூலம் அனைத்து படைப்புகளையும் சூழ்ந்திருக்கிறான்.
உதாரணமாக அல்லாஹுத்தஆலா மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) ஆகியோரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது கூறினான்:
قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَىٰ.
“பயப்படாதீர்கள்; நிச்சயமாக நான் உங்கள் இருவருடனும் இருக்கிறேன்; நான் கேட்கிறேன், பார்க்கிறேன்.”
— தாஹா 20:46
இங்கே “நான் கேட்கிறேன், பார்க்கிறேன்” என்று கூறப்படுவது, இந்த மஅிய்யாவின் தன்மையை விளக்குகிறது.
2. மஅிய்யா ஹாஸ்ஸா — சிறப்பான உடனிருத்தல்
சில இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்ட நல்லடியார்களுடன் இருப்பதாகக் கூறுகிறான்.
உதாரணமாக:
إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ.
“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடனும் நன்மை செய்பவர்களுடனும் இருக்கிறான்.”
— அந்நஹ்ல் 16:128
இது அல்லாஹ்வின் உதவி, பாதுகாப்பு, ஆதரவு மற்றும் அருளுடன் இருப்பதை குறிக்கும் சிறப்பான மஅிய்யாவாகும்.
“அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான்” — இரண்டு முக்கிய உதாரணங்கள்
குகையில் நபி ﷺ அவர்களும் அபூபக்கர் (ரழி) அவர்களும் இருந்தபோது நபி ﷺ கூறினார்கள்:
لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا.
“கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான்.”
— அத்தவ்பா 9:40
அதேபோன்று மூஸா (அலை) அவர்களும் தமது சமூகத்தினர் கடலைக் கண்டு அஞ்சியபோது கூறினார்கள்:
كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ.
“அவ்வாறல்ல! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான்; அவன் எனக்கு வழிகாட்டுவான்.”
— அஷ்ஷுஅரா 26:62
இரண்டு இடங்களிலும் “அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான்” என்று கூறப்பட்டிருப்பதை, அல்லாஹ்வின் ذات் அவர்களுடன் அந்த இடத்தில் இருந்தது என்று புரிந்துகொள்வது அவசியமில்லை.
மாறாக, இங்கு அல்லாஹ்வின் உதவி, பாதுகாப்பு, ஆதரவு என்பது பொருள்.
இதனால்:
அல்லாஹ் அர்ஷின் மேலிருக்கிறான் என்ற ஆதாரங்களுக்கும்,
அல்லாஹ் எங்களுடன் இருக்கிறான் என்ற வசனங்களுக்கும்
எந்த முரண்பாடும் ஏற்படாது.
35. இமாம் அவ்ஸாஈ (ரஹ்) — தாபிஈன்களின் காலத்திலேயே நிலைநிறுத்தப்பட்ட அகீதா
இவர் புகழ்பெற்ற இமாம்களில் ஒருவர்.
பிறப்பு: ஹிஜ்ரி 88
மரணம்: ஹிஜ்ரி 157
அவர்கள் தாபிஈன்களையும் சந்தித்த தலைமுறையைச் சேர்ந்த முக்கிய இமாமாவார்.
அல்லாஹ்வின் உயர்வைப் பற்றி அவர்கள் கூறியதாக இமாம் பைஹகி அறிவிக்கிறார்:
كُنَّا وَالتَّابِعُونَ مُتَوَافِرُونَ، نَقُولُ: إِنَّ اللَّهَ جَلَّ ذِكْرُهُ فَوْقَ عَرْشِهِ، وَنُؤْمِنُ بِمَا وَرَدَتْ بِهِ السُّنَّةُ مِنْ صِفَاتِهِ.
“நாங்கள் தாபிஈன்கள் பெருமளவில் இருந்த காலத்தில், ‘அல்லாஹ் — அவனது புகழ் உயர்ந்ததாகுக — அவனது அர்ஷின் மேலிருக்கிறான்’ என்று கூறுபவர்களாக இருந்தோம். மேலும் அவனுடைய பண்புகள் குறித்து ஸுன்னாவில் வந்துள்ளவற்றை நாம் ஈமான் கொள்கிறோம்.”
இது மிகவும் வலுவான வரலாற்றுச் சான்றாகும்.
ஏனெனில் இமாம் அவ்ஸாஈ (ரஹ்) வெறுமனே “நான் இவ்வாறு நம்புகிறேன்” என்று கூறவில்லை.
மாறாக,
كُنَّا وَالتَّابِعُونَ مُتَوَافِرُونَ
“நாங்களும் தாபிஈன்களும் பெருமளவில் இருந்தபோது...”
என்று கூறுகிறார்.
அதாவது தாபிஈன்களின் காலத்தில் நிலவிய அகீதாவை அவர் எடுத்துரைக்கிறார்.
இமாம் பைஹகி இந்த அறிவிப்பை அல்-அஸ்மாஉ வஸ்ஸிஃபாத் நூலில் பதிவு செய்துள்ளார்; பின்னர் தஹபி, இப்னுல் கையிம் போன்ற அறிஞர்களும் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.
எனவே இதுவரை நாம் பார்த்த ஆதாரங்களின் சுருக்கம்:
ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரழி):
وَزَوَّجَنِي اللَّهُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ
“அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து என்னை மணமுடித்தான்.”
மஸ்ரூக் (ரஹ்):
الْمُبَرَّأَةُ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ
“ஏழு வானங்களுக்கு மேலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டவர்.”
ழஹ்ஹாக் (ரஹ்):
هُوَ فَوْقَ الْعَرْشِ، وَعِلْمُهُ مَعَهُمْ أَيْنَ مَا كَانُوا
“அவன் அர்ஷின் மேலிருக்கிறான்; அவனது அறிவு அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் இருக்கிறது.”
இமாம் அவ்ஸாஈ (ரஹ்):
إِنَّ اللَّهَ جَلَّ ذِكْرُهُ فَوْقَ عَرْشِهِ
“அல்லாஹ் அவனது அர்ஷின் மேலிருக்கிறான்.”
எனவே “அல்லாஹ் அர்ஷின் மேலிருக்கிறான்; அவனது அறிவு அனைத்து படைப்புகளையும் சூழ்ந்துள்ளது” என்ற கருத்து பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கருத்து அல்ல; ஸஹாபாக்கள், தாபிஈன்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஆரம்பகால இமாம்களின் விளக்கங்களிலும் இதற்கான சான்றுகளைப் பார்க்க முடிகிறது.
தொடரும் — இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?தொடர் – 09எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலபிஸஹாபாக்களின் பார்வையில்சுவனம் செல்லும் கூட்டம் எது என்...
23/08/2026

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
தொடர் – 09
எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலபி

ஸஹாபாக்களின் பார்வையில்

சுவனம் செல்லும் கூட்டம் எது என்ற கேள்விக்கு நபி ﷺ அவர்கள்,
«مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي اليوم»
“நானும் எனது ஸஹாபாக்களும் இன்றைய தினம் எதில் இருக்கின்றோமோ அதிலிருப்பவர்களே ” என்ற கருத்தை அறிவித்தார்கள்.
எனவே, குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் ஒரு நம்பிக்கையை ஆய்வு செய்யும்போது, அந்த நம்பிக்கையை நபித்தோழர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்பதையும் பார்ப்பது மிக முக்கியமானதாகும்.
முந்தைய தொடர்களில் குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாஹ் தனது படைப்புகளுக்கு மேலாகவும், அர்ஷுக்கு மேலாகவும் இருப்பதைப் பார்த்தோம்.
இது நாமாக உருவாக்கிய புதிய கருத்தல்ல. அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் நேரடியாகக் கல்வி பெற்ற ஸஹாபாக்களின் புரிதலிலும் அல்லாஹ்வின் உலூவ் – உயர்வு தெளிவாகக் காணப்படுகிறது.
எனவே, இந்தத் தொடரில் சில முக்கியமான ஸஹாபாக்களின் கூற்றுகளைப் பார்ப்போம்.

25. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரழி)

நபி ﷺ அவர்கள் மரணித்தபோது, நபி ﷺ அவர்கள் மரணிக்கவில்லை என்று உமர் (ரழி) கூறியிருந்தார்கள். இது ஒரு சர்ச்சையாகத் தொடர்ந்தது.அப்போது அபூபக்ர் (ரழி) வந்து:
«مَنْ كَانَ يَعْبُدُ مُحَمَّدًا فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لَا يَمُوتُ»
“யார் முஹம்மதை வணங்கினாரோ, நிச்சயமாக முஹம்மத் மரணித்துவிட்டார். யார் அல்லாஹ்வை வணங்குகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் உயிரோடு இருக்கிறான்; அவன் மரணிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
இந்தச் சம்பவம் ஸஹீஹுல் புகாரியில் ஆயிஷா (ரழி) வழியாக இடம்பெற்றுள்ளது.
இதே சம்பவம் இப்னு உமர் (ரழி) வழியாக அறிவிக்கப்படும் மற்றொரு பாதையில்:
«وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ فِي السَّمَاءِ حَيٌّ لَا يَمُوتُ»
“யார் அல்லாஹ்வை வணங்குகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்; அவன் உயிரோடு இருக்கிறான், மரணிக்கமாட்டான்” என்று வருகிறது.
இந்த இரண்டாவது வாசகம் அத்தாரீகுல் கபீர் மற்றும் இப்னு குதாமாவின் இஸ்பாத்து ஸிஃபதில் உலூ போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ளது. தஹபி இதன் ஸனதை ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அபூபக்ர் (ரழி) அவர்களின் ஸஹீஹான கூற்றிலிருந்து உறுதியாகத் தெரியும் முக்கியமான விஷயம் என்னவெனில்:
அல்லாஹ்வை வணங்க வேண்டும்; நபி ﷺ அவர்கள் மனிதர் என்பதால் மரணித்துவிட்டார்கள்; அல்லாஹ் மரணிக்காதவன்.
மேலும் «فِي السَّمَاءِ» என்ற வாசகம் இடம்பெறும் அறிவிப்பை எடுத்துக் கொண்டால், அது அல்லாஹ்வின் உயர்வைக் குறிப்பிடும் முக்கியமான அதர் ஆகும்.
ஆதாரங்கள்:
ஸஹீஹுல் புகாரி; அத்தாரீகுல் கபீர் 1/201; அத்தஹபியின் அல்-அர்ஷ் / அல்-உலூ; இப்னு குதாமாவின் இஸ்பாத்து ஸிஃபதில் உலூ.

26. உமர் இப்னுல் கத்தாப் (ரழி)
உமர் (ரழி) அவர்கள் ஒரு வயதான பெண்ணிடம் நின்று அவளுடைய தேவையை கேட்டறிந்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவருடன் இருந்த ஒருவர், “இந்த வயதான பெண்ணுக்காக குறைஷிகளின் ஆண்களை நீங்கள் காத்திருக்கச் செய்துவிட்டீர்களே!” என்று கேட்டபோது உமர் (ரழி) அவர்கள்:
«وَيْحَكَ! تَدْرِي مَنْ هَذِهِ؟ هَذِهِ امْرَأَةٌ سَمِعَ اللَّهُ شَكْوَاهَا مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ»
“உனக்குக் கேடு உண்டாகட்டும்! இவள் யார் என்று உனக்குத் தெரியுமா? ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் இவளுடைய முறையீட்டைக் கேட்டான்” என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் கவ்லா பின்த் ஸஅலபா (ரழி) ஆவார். அவருடைய சம்பவத்தில்தான் ஸூரத்துல் முஜாதலாவின் முதல் வசனம் இறங்கியது:
﴿قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ﴾
“தன் கணவன் தொடர்பாக உம்மிடம் வாதாடி அல்லாஹ்விடம் முறையிட்ட அந்தப் பெண்ணின் சொல்லை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டான்.” (அல்முஜாதலா 58:1)

(குறிப்பு:உமர் (ரழி) அவர்களிடமிருந்து வரும் மேற்கண்ட அறிவிப்பின் ஸனதில் அபூ யஸீத் அல்-மதனீ மற்றும் உமர் (ரழி) இடையே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று இப்னு கஸீர் குறிப்பிட்டுள்ளார்).
27. அலி இப்னு அபீ தாலிப் (ரழி)

அலி (ரழி) அவர்களின் இறுதி உரையாக இமாம் தாரமியின் அர்ரத்து அலல் ஜஹமிய்யாவில் பீன்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
«الْحَمْدُ لِلَّهِ الَّذِي دَنَا فِي عُلُوِّهِ، وَنَأَى فِي دُنُوِّهِ، لَا يَبْلُغُ شَيْءٌ مَكَانَهُ، وَلَا يَمْتَنِعُ عَلَيْهِ شَيْءٌ أَرَادَهُ»
இதன் பொருள்:
“தனது உயர்விலேயே நெருக்கமாக இருப்பவனும், தனது நெருக்கத்திலேயே உயர்ந்து தூரமாக இருப்பவனுமான அல்லாஹ்வைப் புகழ்கிறேன். எதுவும் அவனது இடத்தை அடைய முடியாது; அவன் நாடிய எந்தக் காரியத்தையும் எதுவும் தடுக்க முடியாது.”
இது அல்லாஹ்வின் உயர்வு மற்றும் படைப்புகளிலிருந்து அவனது வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும் பொருளைக் கொண்டுள்ளது.
(இதன் ஸனதில் சில விமர்சணங்கள் உள்ளன)
28. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)

இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது:
«الْعَرْشُ فَوْقَ الْمَاءِ، وَاللَّهُ فَوْقَ الْعَرْشِ، لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ مِنْ أَعْمَالِكُمْ»
“அர்ஷ் தண்ணீருக்கு மேலாக உள்ளது. அல்லாஹ் அர்ஷுக்கு மேலாக இருக்கிறான். உங்களுடைய செயல்களில் எதுவும் அவனுக்கு மறைந்துவிடாது.”
(இமாம் தஹபி இதன் அறிவிப்புச் சங்கிலியை ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார். )
இது இப்னு குஸைமாவின் அத்தவ்ஹீத், தாரமியின் அர்ரத்து அலல் ஜஹமிய்யா, பைஹகியின் நூல்கள் உள்ளிட்ட பல இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது:
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அல்லாஹ் அர்ஷுக்கு மேலாக இருப்பதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.
அதே நேரத்தில், “அல்லாஹ் எங்கும் இருக்கிறான்” என்ற கருத்துக்கு இது முற்றிலும் எதிரான புரிதலைக் காட்டுகிறது.
29. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி)

ஆயிஷா (ரழி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அவர்களைச் சந்தித்தார்கள்.
அப்போது அவருடைய சிறப்புகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது:
«وَأَنْزَلَ اللَّهُ بَرَاءَتَكِ مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ»
“அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து உங்களுடைய குற்றமற்ற தன்மையை அறிவிக்கும் வசனத்தை இறக்கினான்” என்று கூறினார்கள்.
இந்த அறிவிப்பு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது.
ஆயிஷா (ரழி) மீது சுமத்தப்பட்ட அவதூறிலிருந்து அவருடைய நிரபராதித்தனத்தை அறிவிக்கும் வசனங்கள் அல்லாஹ்விடமிருந்து இறங்கியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
இது ஸஹாபாக்களின் புரிதலில் “மேலிருந்து இறங்குதல்” மற்றும் அல்லாஹ்வின் உயர்வு ஆகிய கருத்துகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை விளக்கும் முக்கியமான ஆதாரமாகும்.
30. ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி)
நபி ﷺ அவர்களின் கவிஞரான ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் பாடிய கவிதையில்:
شَهِدْتُ بِإِذْنِ اللَّهِ أَنَّ مُحَمَّدًا
رَسُولُ الَّذِي فَوْقَ السَّمَاوَاتِ مِنْ عَلُ
“அல்லாஹ்வின் அனுமதியுடன் முஹம்மத் அவர்கள் வானங்களுக்கு மேலாக உள்ளவனின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்.”
என்று பாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நபி ﷺ அவர்கள் “وأنا” — “நானும் [அவ்வாறே சாட்சி கூறுகிறேன்]” என்று கூறியதாகவும் அறிவிப்பு வருகிறது. இது அபூ யஅலா, இப்னு அபீ ஷைபா உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.
(ஹபீப் இப்னு அபீ ஸாபித் என்பவரிடமிருந்து வரும் அறிவிப்பு முர்ஸல் என்று சில ஹதீஸ் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். )
ஸஹாபாக்களின் நிலைப்பாடு என்ன?
மேற்கண்ட ஆதாரங்களை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ஸஹாபாக்களின் கூற்றுகளில் அல்லாஹ்வின் உலூவ் – உயர்வு தெளிவாகக் காணப்படுகிறது.
குறிப்பாக:
இப்னு மஸ்ஊத் (ரழி): «اللَّهُ فَوْقَ الْعَرْشِ» — “அல்லாஹ் அர்ஷுக்கு மேலாக இருக்கிறான்.”
இப்னு அப்பாஸ் (ரழி): «مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ» — “ஏழு வானங்களுக்கு மேலிருந்து.”
அபூபக்ர் (ரழி) வழியாக அறிவிக்கப்பட்ட வாசகம்: «فِي السَّمَاءِ» — “வானத்தில்.”
உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட வாசகம்: «مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ» — “ஏழு வானங்களுக்கு மேலிருந்து.”
ஹஸ்ஸான் (ரழி) கவிதை: «فَوْقَ السَّمَاوَاتِ مِنْ عَلُ» — “வானங்களுக்கு மேலாக.”
இதனால், “அல்லாஹ் எங்கும் தனது ذاتுடன் நிறைந்திருக்கிறான்” என்ற கருத்து ஸஹாபாக்களின் மேற்கண்ட புரிதலுடன் ஒத்துப்போகவில்லை என்பது தெளிவாகிறது.
அதேவேளை, அல்லாஹ் தனது அறிவால், கேள்வியால், பார்வையால், அதிகாரத்தால் தனது படைப்புகளுடன் இருக்கிறான் என்பதை மறுப்பதில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
﴿وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ﴾
“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.”
(அல்ஹதீத் 57:4)
எனவே, குர்ஆன்–ஸுன்னா மற்றும் ஸஹாபாக்களின் புரிதலை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது:
அல்லாஹ் தனது படைப்புகளுக்கு மேலாகவும், அர்ஷுக்கு மேலாகவும் இருக்கிறான்; அதேவேளை அவனது அறிவு, கேள்வி, பார்வை மற்றும் அதிகாரம் அவனது அனைத்து படைப்புகளையும் சூழ்ந்துள்ளது.
இதுவே ஸஹாபாக்களின் வழியைப் பின்பற்றும் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான புரிதலாகும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

21/08/2026

இவ்வார ஜும்ஆ_ 21.08.2026

நபிவழியில் நபிகளாரை நேசிப்போம்.

அஷ்ஷேய்க் ஆஸிர் ஸலபி

🕌 ஜாமிஉல் இஸ்லாஹ்- 𝕄𝕀𝔻𝔾 𝕋𝕣𝕦𝕤𝕥.
𝟏𝟎𝟓/𝟔, 𝐖𝐚𝐭𝐭𝐞𝐠𝐚𝐦𝐚 𝐑𝐨𝐚𝐝,
𝐌𝐚𝐝𝐚𝐰𝐚𝐥𝐚 𝐁𝐚𝐳𝐚𝐚𝐫.
⭕══════ ❁ ✦ ❁ ══════⭕
👉𝙅𝙊𝙄𝙉 𝙒𝙞𝙩𝙝 WhatsApp Channel...
𝑨𝒍 𝑴𝒂𝒓𝒌𝒂𝒛𝒖𝒍 𝑰𝒔𝒍𝒂𝒉 𝑫𝒂𝒉𝒘𝒂 𝑨𝒏𝒅 𝑮𝒖𝒊𝒅𝒂𝒏𝒄𝒆 𝑻𝒓𝒖𝒔𝒕.
https://whatsapp.com/channel/0029VbCFGcvL7UVQEBagO72z

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?தொடர் – 08எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபிமுன்னைய தொடர்களில் அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்...
17/08/2026

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
தொடர் – 08
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி

முன்னைய தொடர்களில் அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களின் அடிப்படையில், அல்லாஹ் தனது படைப்புகளுக்கு மேலாகவும், அர்ஷுக்கு மேலாகவும் இருக்கிறான் என்பதைப் பார்த்தோம்.
இத்தொடரில், இதனை மேலும் தெளிவுபடுத்தும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.
22. “அதூ அவனிடத்தில் அர்ஷுக்கு மேல் உள்ளது”
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ الْخَلْقَ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي، فَهُوَ مَكْتُوبٌ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ.
“அல்லாஹ் படைப்புகளைப் படைப்பதற்கு முன்னரே ஒரு நூலை எழுதினான்: ‘எனது அருள் எனது கோபத்தை முந்திவிட்டது’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது. அது அவனிடத்தில் அர்ஷுக்கு மேலாக உள்ளது.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி: 3194, 7404, 7422, 7453, 7553, 7554; ஸஹீஹ் முஸ்லிம்: 2751.
இந்த நபிமொழியில்:
فَهُوَ مَكْتُوبٌ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ
என்ற வார்த்தை மிகவும் தெளிவாக இடம்பெறுகிறது.
அதாவது, “அது அவனிடத்தில் அர்ஷுக்கு மேலாக எழுதப்பட்டுள்ளது” என்று நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது அல்லாஹ்வின் உயர்வையும், அவன் தனது படைப்புகளுக்கு மேலாக இருப்பதையும் சுட்டிக்காட்டும் முக்கியமான ஆதாரமாகும். எனவே, “அல்லாஹ் தனது படைப்புகள் அனைத்திலும் அல்லது எல்லா இடங்களிலும் இருக்கிறான்” என்ற கருத்து இந்த நபிமொழியின் வெளிப்படையான கருத்துடன் ஒத்துப்போவதில்லை.
23. நபி ﷺ அவர்கள் வானத்தை நோக்கி சுட்டிக்காட்டியமை
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் நீண்ட ஹதீஸில், நபி ﷺ அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது அரஃபா நாளில் மக்களுக்கு உரையாற்றிய பின்னர்:
ثُمَّ رَفَعَ يَدَهُ إِلَى السَّمَاءِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ.
“பின்னர் நபி ﷺ அவர்கள் தமது கையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நான் காணும் அளவுக்கு உயர்த்தினார்கள். பின்னர்:
‘அல்லாஹ்வே! நீ சாட்சியாக இரு! அல்லாஹ்வே! நீ சாட்சியாக இரு! அல்லாஹ்வே! நீ சாட்சியாக இரு!’
என்று கூறினார்கள்.”
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 1218.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், நபி ﷺ அவர்கள் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்கள் முன்னிலையில் வானத்தை நோக்கி தமது கையை உயர்த்தி, பின்னர்:
اللَّهُمَّ اشْهَدْ
ஆல்லாஹ்வே..என்று கூறியுள்ளார்கள்.
இதுவும் அல்லாஹ்வின் உயர்வையும், அவன் தனது படைப்புகளுக்கு மேலாக இருப்பதையும் சுட்டிக்காட்டும் சுன்னாவின் ஆதாரங்களில் ஒன்றாகும்.

24. “அவனே அல்-ழாஹிர்; அவனுக்கு மேலாக எதுவுமில்லை”
அல்லாஹ் கூறுகிறான்:
﴿هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ﴾
“அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே அந்தரங்கமானவன். மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.”
[அல்ஹதீத்: 3]
இந்த வசனத்தில் இடம்பெறும் الظَّاهِرُ மற்றும் الْبَاطِنُ ஆகிய இரு பெயர்களுக்கும் நபி ﷺ அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ.
“அல்லாஹ்வே! வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்களுடைய இறைவனே! ஒவ்வொரு பொருளின் இறைவனே! விதையையும் கொட்டையையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கானை இறக்கியவனே!
நீ எவருடைய தலைவிதியை உனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாயோ, அத்தகைய ஒவ்வொரு பொருளின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

அல்லாஹ்வே! நீயே முதலானவன்; உனக்கு முன்னால் எதுவுமில்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னால் எதுவுமில்லை. நீயே அல்-ழாஹிர்; உனக்கு மேலாக எதுவுமில்லை. நீயே அல்-பாதின்; உனக்குக் கீழாக/அப்பால்-இணையாக எதுவுமில்லை. எங்களுடைய கடனைத் தீர்த்து, வறுமையிலிருந்து எங்களைத் தன்னிறைவாக்குவாயாக.”
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 2713. மேலும் ஸுனன் அபீ தாவூத்: 5051, ஜாமிஉத் திர்மிதி: 3400.
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி حَسَنٌ صَحِيحٌ என்று மதிப்பிட்டுள்ளார்.
இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம்
அல்லாஹ் குர்ஆனில்:
﴿وَهُوَ الظَّاهِرُ﴾
“அவனே அல்-ழாஹிர்” என்று கூறுகிறான்.
இதற்கு நபி ﷺ அவர்கள் விளக்கமாக:
«وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ»
“நீயே அல்-ழாஹிர்; உனக்கு மேலாக எதுவுமே இல்லை” என்று கூறியுள்ளார்கள்.
எனவே, இது வெறுமனே ஒரு விளக்கம் அல்ல; குர்ஆன் வசனத்திற்கு நபி ﷺ அவர்கள் அளித்த விளக்கமாக அமைந்துள்ளது.
இதிலிருந்து:
الظَّاهِرُ — அல்லாஹ் தனது படைப்புகளுக்கு மேலானவன்.
فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ — அவனுக்கு மேலாக எதுவுமே இல்லை.
என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
எனவே, “அல்லாஹ் தனது படைப்புகள் அனைத்திற்குள்ளும் அல்லது எல்லா இடங்களிலும் இருக்கிறான்” என்று கூறுவது இந்த நபிமொழியின் வெளிப்படையான கருத்துடன் ஒத்துப்போகாது.
அதேவேளை, இந்த ஹதீஸை “அல்லாஹ் எல்லா இடங்களிலும் இல்லை” என்பதற்கான தனிப்பட்ட ஆதாரமாக மட்டும் பார்க்காமல், “அல்லாஹ் தனது படைப்புகளுக்கு மேலானவன்” என்ற நபி ﷺ அவர்களின் நேரடியான விளக்கமாகப் புரிந்துகொள்வதே மிகவும் துல்லியமானதாகும்.
அடுத்த தொடர்களில்...
அல்லாஹ் எங்கும் நிறைந்தவன் என்ற கொள்கை அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் கொள்கை அல்ல என்பதற்கான ஆதாரங்களை இதுவரை நாம் பார்த்தோம்.
ஆனால், சிலர்:
“குர்ஆனையும் ஹதீஸையும் நாம் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாமே?”
என்று கேட்கலாம்.
அதற்கான பதிலை அறிய, அடுத்த கட்டமாக நபித்தோழர்கள் (ரழியல்லாஹு அன்ஹும்) இந்த விடயத்தை எவ்வாறு புரிந்துகொண்டார்கள்? என்பதைப் பார்க்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, கண்ணியத்திற்குரிய இமாம்கள் மற்றும் ஆரம்பகால அறிஞர்களின் நிலைப்பாடு என்ன? என்பதையும் ஆதாரங்களுடன் பார்ப்போம்.
தொடரும்...

Address

105/6, Wattegama Road, Madawala Bazaar
Kandy
20260

Telephone

+94772657755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Islah - மடவளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share