25/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சகோதரருக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ செலவீனங்களுக்காக உதவிக்கரம் நீட்டல்
எமது கல்முனை மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் சாகுல் ஹமீது முபாரக் , அடையாள அட்டை இலக்கம் 197413810040 என்பவர் தற்போதைய நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது நாளாந்த வாழ்க்கையை நடத்தி வருகிறார்
வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைவாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை உடன் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்ற அவர் தொழில் வசதிகள் மற்றும் வருமான மூலங்கள் எதுவும் இன்றி நிற்கதியான நிலையில் தனவந்தர்கள் மற்றும் ஊரவர்களின் பொருளாதார ரீதியான உதவியினை எதிர்பார்த்த வண்ணம் வாழ்ந்து வருகிறார்.
பாடசாலை செல்கின்ற மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை என நான்கு குழந்தைகளுடன் அனாதரவான நிலையில் எவ்வித வருமான மூலங்கள் இன்றி தனது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வது இவருக்கு மிகுந்த சிரமமாக காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சமூக ரீதியாக செயல்படுகின்ற சமூகம் சார் அமைப்பான எமது யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிடம் இவரது குடும்பம் சார்பாக விடுக்கப்பட்ட கருணைமிகு வேண்டுகோளின் பிரகாரம் இந்த அறிவித்தல் எமது குழுமத்தின் அங்கத்தவர்களான உங்களது மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
திருக்குர்ஆன் – ஸூரத்துல் மாயிதா (5:32)
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا ۖ وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
“இதன் காரணமாகவே நாம் இஸ்ராயீல் சந்ததியினருக்கு கட்டளையிட்டோம்:
ஒருவன் ஒரு மனிதனை கொலை செய்தால், அது மற்றொரு மனிதனை கொலை செய்ததற்காகவோ அல்லது பூமியில் குழப்பம் செய்ததற்காகவோ அல்லாமல் இருந்தால்,
அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்ததுபோல் ஆகும்.
*ஒருவன் ஒரு மனிதனை வாழ வைத்தால்,
அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்ததுபோல் ஆகும்*
மேலே குறிப்பிடப்படுகின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ செலவினங்களை போக்குவதற்காக தங்களால் முடிந்த பொருளாதார மற்றும் பண உதவிகளை கீழே குறிப்பிடப்படுகின்ற வங்கி கணக்கிற்கு வழங்கி வைக்க முடியும்.
S H Mubarak
111253446742
Sampath bank
என்று குறிப்பிடுவதுடன்,
இவரது உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கைகளை தங்களது மேலான பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அருள்வானாக.
மேலதிக தகவல்களுக்கு...0777585650
நன்றி
இவ்வண்ணம்.
எம் எம் மர்சூக்
தலைவர்
யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு கல்முனை