05/06/2023
கற்பு கரசியான அருள்மிகு கல்குடா ஸ்ரீ கண்ணகை அம்மனின் 2023 ஆண்டுக்கான சடங்கு உற்சவம் கடந்த வைகாசி 16ம் நாள் ஆரம்பமாகி வைகாசி 21ம் நாள் பூரணை திதியில் திருகுளி ர்தியுடனும், கும்பம் சொரிதலுடனும் இனிதே நிறைவுற்றது.
இவ்வாண்டிகான சடங்கு உற்சவம் சிறப்புற நடைபெற பங்களிப்பு செய்த....
பூசை உபயகாரர்களுக்கும்,
சடங்கு காலங்களில் அன்னதானம் வழங்கிய அனைத்து பூசை உபய காரர்களுகும்,
சிறப்பான முறையில் எமது ஆலய பூசைகளை நடத்தி தந்த ஆலய பிரதம பூசகர் திரு. வேலுப்பிள்ளை ஐயா அவர்களுக்கும், துணை பூசகர் திரு. மா. ரவிக்குமார் அவர்களுக்கும் ஏனைய உதவி பூசகர்கள் மற்றும் உதவியாளர்கள், தெய்வ காரர்கள் அனைவருக்கும்,
வெளி ஊர்களில் இருந்து வந்துதவிய பூசகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும்,
கல்குடா போலீஸ் நிலைய பொறுபபதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும்,
மடப்பள்ளி திருப்பணிகளை சரிவர செய்த திரு. மணிவண்ணன், திரு. சீனித்தம்பி, திரு. மகேந்திரன், திரு. சசிகுமார் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும்,
சங்காபிஷேச பூசையினை நடாத்த உதவிய சிவஸ்ரீ மு.சண்முகம் ஐயா அவர்களுக்கும் மற்றும் சங்காபிஷே குருமார் சிவஸ்ரீ கோ. கபிலேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ சிவ சேகரன் சர்மா, சிவஸ்ரீ மா. ரூபன் சர்மா ஆகியோர்க்கும்
சங்காபிஷேக பூசைக்கு 108 சங்குகளை தந்துதவிய வாழைச்சேனை ஸ்ரீ கைலாயபிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும்,
சங்காபிஷேக பூசைக்கு 50 கும்ப குடங்களை தங்துதவிய வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினருக்கும்,
அம்மனின் வீதி உலாவின் போது தண்ணீர் வசதியினை ஏற்பாடு செய்து தந்த எமது ஆலய முன்னாள் தலைவர் திரு. லோகிதராஜா பிரசாத் அவர்களுக்கும்,
திருக்கல்யாண கால் வெட்டும் சடங்கிற்கு நாதஸ்வர மற்றும் மேல வாத்திய குழுவினருக்கு வாகன உதவி செய்த திரு. மதன் அவர்களுக்கும் மற்றும் முச்சக்கர வண்டிகளில் உதவி புரிந்த எனையவர் களுக்கும்,
இறுதி நாளான 04/06/2023 அன்று அன்ன தானம் வழங்கிய திருமதி லக்ஸ்சிகா சீனித்தம்பி அவர்களுக்கும்,
ஆலய வீதி அலங்காரங்களை செய்துதவிய திரு. ஞா.முரளி மற்றும் திரு. காந்தன் மற்றும் கல்குடா வேளாங்கன்னி விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுக்கும்,
மின் குமிழ் இணைப்புகளை செய்து தந்த திரு. சசிதரன் மற்றும் தியாகராசா அவர்களுக்கும்,
வெளி ஊர்களில் இருந்து வந்து உதவியவர்கள் அனைவருக்கும்,
2023ம் ஆண்டுக்கான திருசடங்கு சிறப்புற நடைபெற அனைத்து பணிகளையும் செய்துதவிய திரு. தேவா மற்றும் கண்ணகி கரப்பந்து விளையாட்டு கழக அனைத்து உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும்,
சடங்கு காலங்களில் அனைத்து உதவிகளையும் வழங்கி பூசைகள் சிறப்புற நடைபெற உதவிய முன்னாள் ஆலய தலைவர்கள், நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் ஆலய சார்ந்த மக்கள் பெண்கள், இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும்,
மற்றும் ஏனைய உதவிகளை சிறப்புற செய்த கல்குடா அனைத்து பொது மக்களுக்கும்,
திருசடங்கு காலங்களில் அனைத்து வழிகளும் பூசைகள் சிறப்புற நடைபெற உதவிய அனைத்து எமது ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களுகும்,
*ஆலய நிர்வாக சபை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு அம்மனின் அருள் கடாட்சம் கிடைக்க பிராத்திகின்றோம்,*🙏🏽
"வாழ்க வளமுடன்'
_உங்கள் திருப்பணிகளை தொடர்ந்து சிறப்புற செய்து இவ்வாலயம் வளர்ச்சி பெற உதவுமாறு வேண்டி கொள்கிறோம்._