St.Benedict church,nallur

St.Benedict church,nallur புனித ஆசீர்வாதப்பரே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

13/05/2026
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்பண்பிற்கும் உண்டோ பரிசு.இது நன்றியின் நேரம். நல்லூர் திருஅவையினராய் எம் பங்குத்தந...
03/05/2026

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
பண்பிற்கும் உண்டோ பரிசு.

இது நன்றியின் நேரம்.
நல்லூர் திருஅவையினராய் எம் பங்குத்தந்தை அருட்பணி ஜோன் மவுலிஸ் அடிகளாரின் அருட்சேவைக்கு எமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

அருட்தந்தை அவர்கள் ஒரே நேரத்தில் கொழும்புத்துறை பங்கிலும், பொதுநிலையினர் கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியபோதும், எம்மை மறக்காமல், எமது பங்கின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார்.

மறைக்கல்வி மாணவர்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய கண்டிப்பும் கரிசனையும், மறையாசிரியர்களை ஊக்கப்படுத்திய விதமும், பக்திசபைகளின் கூட்டங்களில் தவறாது பங்கேற்ற உறுதியும் — எல்லாம் எம்மை ஆச்சரியப்படுத்தியது.

மாணவர்களிடையே கார்லோ அக்குட்டிஸ் சபையை உருவாக்கி, அதன் மூலம் மாணவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையை திறந்தார். சிறார்களின் திறமைகளை வெளிக்கொணர்வதில், திருப்பாலத்துவசபை நிகழ்வுகளிலும் ஒளி விழாவிலும் எம்முடன் இணைந்து உற்சாகமாக செயற்பட்டார்.

வலயங்கள் இணைந்து ஒளிவிழா கரோல் இன்னிசை நிகழ்வினை நடாத்த பங்குமக்களை ஊக்கப்படுத்தி அதனை மிகச்சிறப்பாக மேடேயேற்றினார்

பங்குமக்களின் விருப்பத்திற்கமைய சுற்றாலா மற்றும் தவக்கால யாத்திரைகளை ஒழுங்குசெய்து எம்மை மகிழ்வித்தார்.
பல சிரமங்கள் இருந்தபோதும், பங்குமக்களின் ஆசைகளை நிறைவேற்றும் சிறந்த மேய்ப்பனாக இருந்து, எமது பங்கின் அசௌரியங்களை நிவர்த்தி செய்து, பங்கு மீண்டும் மலர வழிவகுத்தார்.

அருட்தந்தையின் பிரதான நோக்காக பீடப்பணியாளர்களை நெறிப்படுத்துவதாக கொண்டு, கொழும்புத்துறை பீடப்பணியாளருடன் இணைந்து பாசறைகளை முன்னெடுத்து, அவர்களின் வளர்ச்சிப்பாதைக்கு வழிவகுத்தார்.

"நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் உயிரை அர்ப்பணிக்கிறான்."

(யோவான் 10:11)

அதேபோல், அருட்தந்தை அவர்களும் எம்மை வழிநடத்தி, எமது பங்கின் உயிரை மீண்டும் எழுப்பியுள்ளார்

அன்பும் பண்பும் நிறைந்த உங்கள் அருட்சேவை எம்மை என்றும் ஊக்கப்படுத்தும்.

இன்று எமது பங்குமக்கள் சார்பாக, உங்கள் அருட்சேவைக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

நீங்கள் எத்திசையில் பணிபுரிந்தாலும் நல்லூர் மக்களின் அன்பும் பாசமும் உங்களை பின்தொடரும்

உங்கள் பணிவாழ்வுக்காகவும் உங்கள் உடல் உள ஆன்மீக நலனுக்காகவும் புனித ஆசீர்வாதப்பரின் பரிந்துரையூடாக இறைவனை வேண்டுகிறோம்.

https://youtu.be/Wzfy7sBCDRg?si=karjbJUL6HgITKPn
09/12/2025

https://youtu.be/Wzfy7sBCDRg?si=karjbJUL6HgITKPn

#கன்னி மரியாவின் அமலோற்பவ பெருவிழா #நல்லூர் புனித ஆசிர்வாதப்பர் ஆலயம் தயாரிப்பு #யாழ்_மறை_அலை_TV #யாழ்_மறை_அலை_TV #யாழ....

பங்குமக்களுக்கு ஓர் அறிவித்தல்நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற யூபிலி ஆண்டிலே யூபிலிச் சிலுவையொன்று மறைமாவட்டத்திலுள்ள அனைத்து...
30/09/2025

பங்குமக்களுக்கு ஓர் அறிவித்தல்

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற யூபிலி ஆண்டிலே யூபிலிச் சிலுவையொன்று மறைமாவட்டத்திலுள்ள அனைத்துப்பங்குகளிற்கும் எடுத்துச்செல்லப்படுகின்றது. இந்த வகையில் வருகின்ற வியாழக்கிழமை (02-10-2025) மாலை 5 மணிக்கு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்திற்கு அச்சிலுவையானது கொண்டுவரப்படுகின்றது. மாலை திருப்பலியைத்தொடர்ந்து எமது ஆலயத்தில் மக்களின் ஆராதனைக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமைவரை (05-10-2025) வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் தனியாகவும், குடும்பங்களாகவும், பக்திச்சபை உறுப்பினர்களாகவும், வகுப்பாகவும் திருச்சிலுவையை சந்தித்து முத்திசெய்து, சிலுவையின் வல்லமையில் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

( இவ் அறிவித்தலை மற்றவர்கட்கும் தெரியப்படுத்துங்கள்)

- பங்குத்தந்தை

14/09/2025

14.09.2025

திருத்தந்தை 14ம் சிங்கராஜர்(லியோ)
19/05/2025

திருத்தந்தை 14ம் சிங்கராஜர்(லியோ)

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when St.Benedict church,nallur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share