03/05/2026
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
பண்பிற்கும் உண்டோ பரிசு.
இது நன்றியின் நேரம்.
நல்லூர் திருஅவையினராய் எம் பங்குத்தந்தை அருட்பணி ஜோன் மவுலிஸ் அடிகளாரின் அருட்சேவைக்கு எமது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
அருட்தந்தை அவர்கள் ஒரே நேரத்தில் கொழும்புத்துறை பங்கிலும், பொதுநிலையினர் கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியபோதும், எம்மை மறக்காமல், எமது பங்கின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தார்.
மறைக்கல்வி மாணவர்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய கண்டிப்பும் கரிசனையும், மறையாசிரியர்களை ஊக்கப்படுத்திய விதமும், பக்திசபைகளின் கூட்டங்களில் தவறாது பங்கேற்ற உறுதியும் — எல்லாம் எம்மை ஆச்சரியப்படுத்தியது.
மாணவர்களிடையே கார்லோ அக்குட்டிஸ் சபையை உருவாக்கி, அதன் மூலம் மாணவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையை திறந்தார். சிறார்களின் திறமைகளை வெளிக்கொணர்வதில், திருப்பாலத்துவசபை நிகழ்வுகளிலும் ஒளி விழாவிலும் எம்முடன் இணைந்து உற்சாகமாக செயற்பட்டார்.
வலயங்கள் இணைந்து ஒளிவிழா கரோல் இன்னிசை நிகழ்வினை நடாத்த பங்குமக்களை ஊக்கப்படுத்தி அதனை மிகச்சிறப்பாக மேடேயேற்றினார்
பங்குமக்களின் விருப்பத்திற்கமைய சுற்றாலா மற்றும் தவக்கால யாத்திரைகளை ஒழுங்குசெய்து எம்மை மகிழ்வித்தார்.
பல சிரமங்கள் இருந்தபோதும், பங்குமக்களின் ஆசைகளை நிறைவேற்றும் சிறந்த மேய்ப்பனாக இருந்து, எமது பங்கின் அசௌரியங்களை நிவர்த்தி செய்து, பங்கு மீண்டும் மலர வழிவகுத்தார்.
அருட்தந்தையின் பிரதான நோக்காக பீடப்பணியாளர்களை நெறிப்படுத்துவதாக கொண்டு, கொழும்புத்துறை பீடப்பணியாளருடன் இணைந்து பாசறைகளை முன்னெடுத்து, அவர்களின் வளர்ச்சிப்பாதைக்கு வழிவகுத்தார்.
"நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் உயிரை அர்ப்பணிக்கிறான்."
(யோவான் 10:11)
அதேபோல், அருட்தந்தை அவர்களும் எம்மை வழிநடத்தி, எமது பங்கின் உயிரை மீண்டும் எழுப்பியுள்ளார்
அன்பும் பண்பும் நிறைந்த உங்கள் அருட்சேவை எம்மை என்றும் ஊக்கப்படுத்தும்.
இன்று எமது பங்குமக்கள் சார்பாக, உங்கள் அருட்சேவைக்கு எமது மனமார்ந்த நன்றிகள்
நீங்கள் எத்திசையில் பணிபுரிந்தாலும் நல்லூர் மக்களின் அன்பும் பாசமும் உங்களை பின்தொடரும்
உங்கள் பணிவாழ்வுக்காகவும் உங்கள் உடல் உள ஆன்மீக நலனுக்காகவும் புனித ஆசீர்வாதப்பரின் பரிந்துரையூடாக இறைவனை வேண்டுகிறோம்.