சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில்

சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில், Hindu temple, A9 Road, Navatkuli, Jaffna.

🌹🌹மகா சிவராத்திரி ஸ்பெஷல்: 2🌹சிவராத்திரி விரதத்தின் மகிமை...ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு ஒரு மந்திரி இர...
12/02/2023

🌹🌹மகா சிவராத்திரி ஸ்பெஷல்: 2

🌹சிவராத்திரி விரதத்தின் மகிமை...

ஒரு ஊரில் ஒரு அரசன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு ஒரு மந்திரி இருந்தான். அரச வையில் மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான்.

அந்த மந்திரி க்கு இரு மகன்கள். ஒருவன் பெயர் பாலன் மற்றவன் பெயர் வேதநெறி இருவரும் மந்திரியின் சொல் பேச்சை கேட்காமல் தன்னுடைய இஷ்டம் போல வாழ்பவர்கள். அதனால் வயது வந்த பின் தனது சொத்தை உடனடியாக பிரித்து தரும்படி கேட்டுச்சென்றனர்.

அரசனுக்கு மந்திரி மீது மிகவும் பிரியம். அவர் அறிவுத் திறமை குறித்து நன்கு அவரிடம் அன்பும் பண்பும் நிறைந்ததாக இருப்பார். ஒருநாள் அரசவையில் மந்தி ரியின் பெருமை கண்டு மாதிரிக்கு அரசன் ஒரு நவரத்தினங்களால் செய்யப்பட்ட அழ கிய மோதிரத்தை பரிசாக கொடுத்தான்.

அன்று மந்திரி அந்த மோதிரத்தை வீட்டிற் கு எடுத்து சென்று பத்திரமாக வைத்து கொள் என்று தனது மனைவியிடம் ஆணையிட்டார். ஒரு நாள் இதை அறிந்து தனது வீட்டிற்கு வந்த வேதநெறி என்ற இரண்டாமவன் வீட்டில் யாருக்கும் தெரி யாமல் அந்த மோதிரத்தை எடுத்து திருடி ஒரு நாட்டிய பெண்ணுக்கு பரிசளித்தான்.

மறு நாள் அந்த பெண் அரசவையில் அரசன் முன் நடனம் ஆடிகொண்டிருக்கும் வேளையில் அவளது கையில் இருந்த மோதிரத்தை பார்த்து அரசனுக்கு மிகவும் அதிர்ச்சி.

நாம் மந்திரிக்கு கொடுத்த மோதிரமாச்சே!! இது எப்படி இந்த பெண்ணின் கையில் என்று யோசித்தவாறு மந்திரியை அழைத் து உங்களிடம் தந்த அந்த நவரத்தினம் பதித்த மோதிரத்தை எடுத்து வாருங்கள் என்று ஆணை இட்டான்.

மந்திரியும் வீட்டிற்கு சென்று பார்க்கிறார் மோதிரம் காணவில்லை. வுடனே மந்திரி இல்லை என்ற விபரத்தை கூறியவுடன் அரசன் அந்த பெண்ணிடம் யார் உனக்கு மோதிரத்தை கொடுத்தார்கள் என்று கேட்டவுடன், அவளும் வேதநெறி எண்டு மந்திரி மகனை சொல்ல அங்கிருந்த மந்திரி தான் மகன் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வேதனை அடைந்து சில காவலாளிகளை கூட்டிட்டு மகனை கொல்ல போகிறேன் என்று செல்கிறார். மகன் வேதநெறியும் விஷயம் அறிந்து வேகமாக ஓடுகிறான்.

அன்று காலை ஆரம்பித்தது ஓட்டம். முடிய வில்லை. அன்று சிவராத்திரி தினம். அவ ன் காலையில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் காவலாளிகளுக்கு பயந்து விட்டு ஓடி கிட்டே இருக்கின்றான்.

இறுதியில் ஒரு சிவாலயம் வருகிறது. அங்கு எம்பெருமானார் சிவனுக்கு சில நெய்வைத்தியங்கள் பக்தர்கள் படைத்தது இருந்தனர். அவன் ஓட்டம் தாங்காமல் ஈசன் கருவறைக்குள் செல்கிறான். ஒரு சிறிய விளக்கு மட்டும் அணைந்து போகி ன்ற நிலைமையில் உள்ளது.

அவன் தான் வயிற்று பசி தாங்காமல் அந்த இறைவனின் அறைக்குள் ஏதேனும் நெய்வைத்தியம் உண்பதற்காக அந்த விளக்கை தூண்டினான். தூண்டிய உடன் கோவிலில் இருந்து சிலர் அவனை அடிக்கலானர்.

அவன் சப்தம் கேட்டவுடன் எந்த பிரசாதத் தையும் சாப்பிடாமல் ஓடத்துவங்கினான். இறுதியில் பசி தாங்கமுடியாமல் இறந்து போனான்.

உடனே அவன் இறந்த உடன் எம தூதர்கள்
அவனை கூட்டிச்செல்ல ஒருபுறம் வருகின் றனர். மறுபுறம் கைலாயத்தில் இருந்து எம்பெருமானாரால் தேவர்கள் அழைத்துச் செல்ல வருகின்றனர்.

எமதூதர்கள் சரியாக அவனை தொடும் வேளையில்,தேவர்கள் அந்த வேத நெறி யை விட்டு விடுங்கள். அவன் கைலாயத் தில் சிவபெருமனரால் அழைக்கப் பட்டிரு க்கின்றான் என்ற வுடன் எமதூதர்கள் என் எதற்கு என்று வினவினார்கள்.

அதற்கு தேவர்கள் கூறிய பதில்

அவன் இறந்த நாள் முதலில் சிவராத்திரி
அவன் அன்று பச்சை தண்ணீர் கூட குடிக் க வில்லை. அவன் ஈசனின் கருவறைக் குள் அணையும் நிலையில் இருந்த விளக் கை தூண்டினான்.

என்று கூறியவுடன் எமதூதர்கள் தேவர்க ளிடமே அவனை விட்டுவிட்டனர் அவனும் கைலாயமலையில் ஈசனின் முக்தி பேற்றிற்கு ஆளானான்..

தெரியாமல்நடந்தது அந்த வேதநெறியின் செயல்கள் அதற்கே அவனுக்கு முக்தி கிடைத்தது என்றால், நாம் தினமும் கடவு ளை மனதை ஒருமுக படுத்தி இறைவனை வழிபட்டால் இறைவனிடம் பேரருள் பெற்று முக்திநிலையை அடையலாம்.

அவனருளால் வாழ்க வளமுடன்….
ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்....
11.01.2023.. நேசமுடன் விஜயராகவன்....

06/12/2022

🌹 கார்த்திகை தீபம் வரலாறு🌹

🌹கார்த்திகை தீபம்

என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகா சமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

🌹 கார்த்திகை மாதம்:

🌹தமிழ்நாட்டில்கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படு ம் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

🌹🌹கார்த்திகை நாள்:

🌹பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களா ல் வழங்கி வந்தனர்.

🌹அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது....

🌹🌹கார்த்திகை விழா:

🌹கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த் திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களி னை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புற ங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற் றி கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர்.

🌹ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சிய ளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பி ழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.

🌹இல்லங்களை விளக்குகளால் அலங்க ரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

🌹கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

🌹 குமராலய தீபம்:

முருகன் தலங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத் திரம் கூடிவரும் நாள்.

🌹விஷ்ணுவாலய தீபம்:

விஷ்ணு தலங்களில் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திர ம் கூடிவரும் நாள்.

🌹சர்வாலய தீபம்:

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளி லும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

🌹🌹ஐதீகம் :

🌹படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர்.

சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன் றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுத ற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

🌹🌹திருவண்ணாமலை கார்த்திகை விளக்கு :

🌹காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக,நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.

இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

🌹இக்கொப்பரையை 1668-ல் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார்.பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும்.

இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,10O0 மீட்டர் காடா துணி யும் கொண்டு ஏற்றப்படுகிறது.

🌹🌹விரதம் இருக்கும் முறை:

🌹இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத் தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

🌹🌹 வீடுகளை அலங்கரிக்கும் முறை :

🌹பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள் ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடு களை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

🌹🌹கார்த்திகை நட்சத்திரம்:

🌹கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும். இத னால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்தி கை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்தி ரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலு ள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்க ளே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

🌹🌹சங்கநூல்களில் கார்த்திகை :

🌹கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான்.

மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்த து. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

🌹கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது. அழல் என்பது கார்த்திகை- நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத் தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும்.

🌹 ஆல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத் தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

🌹ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல் களில் குறிப்புகள் உள்ளன.

🌹எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம்.

ஓம் நமசிவாய.

சிவபூமிக்கு பெருமை தரும் திருவாசக அரண்மனை! ........................................................சைவமும் தமிழும் தழைத்...
17/10/2022

சிவபூமிக்கு பெருமை தரும் திருவாசக அரண்மனை! ........................................................
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ் மண் தன்னிகறற்ற சிவபூமியாகவும் திகழ்கிறது யாழ்ப்பாண ராச்சியத்தை வரவேற்கும் நுழைவாயிலில் நீரேரிகழும் பனைமரக்காடுகளும் தலையசைத்து வரவேற்கும் இடம் நாவற்குழி ,

யாழ் , நாவற்குழியில் ஏ - 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளது . சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.

திருவாசக அரண்மனையின் மூலவராகத் சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் மிளிரக் காட்சி தருகின்றன. சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கர் தேர் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது . தேருக்கு மேலாகச் முழுமுதற் கடவுளான சிவபெருமான் . சிவலிங்க வடிவிலும் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது . தேரின் முன்பாக கருங்கல்லான பெரிய நந்தி அமைந்துள்ளது .

கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இருமருங்கிலும் மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658

திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளாமை வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும். கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு ' செதுக்கியுள்ளார்

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் , தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் , பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு . திருமுருகன்

திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ,சிங்களம், அரேபிய மொழி என 11 மொழிபெயர்ப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன . திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி . இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு . சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக பிரமாண்டமான திருவாசகம் அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ் மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய சான்றாகும் .

நன்றி - ப.ஆரணி [சக்திFM]

01/10/2022
05/09/2022

Murugaa

11/07/2022
09/07/2022

Sivan song

08/07/2022

ஓம் சிவாய நம

08/07/2022

சிவபூமி சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில் பூசை வழிபாடுகள்

08/07/2022

திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் சிவதெட்சணாமூர்த்தி பெருமானுக்கான பூசை..(08.07.2022)

Address

A9 Road, Navatkuli
Jaffna
400000

Opening Hours

Monday 06:00 - 21:00
Tuesday 06:00 - 21:00
Wednesday 06:00 - 21:00
Thursday 06:00 - 21:00
Friday 06:00 - 21:00
Saturday 06:00 - 21:00
Sunday 06:00 - 21:00

Telephone

+94212214330

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சிவபூமி திருவாசக அரண்மனை சிவதெட்சணாமூர்த்தி திருக்கோவில்:

Share

Category