11/12/2017
*மஹா கால பைரவாஷ்டமி*
🕉 *ஓம் நம சிவாய!*
#காலாஷ்டமி!
*இந்த விரதத்திற்கு வைக்கம் அஷ்டமி என்றும், மகாதேவ அஷ்டமி என்றும் பெயர் உண்டு.*
*கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற #அஷ்டமியே #காலாஷ்டமி எனப்படும். இது #காலபைரவரின் #அவதார #தினமாகும்.*
*பிரம்மாவுக்கும் முதலில் 5 தலைகளே இருந்தன. சிவனது முடியைக் காணா விட்டாலும், கண்டேன் என்று தவறாக கூறியதால் அவரது ஐந்து முகத்தில் ஒன்றை எடுப்பதற்காக தோன்றியவரே கால பைரவர்.*
*அவரே காசிக்கு வருவோரின் பாவத்தை கண்டிக்கும் பொறுப்பை உடையவர். அவர் கொடுக்கும் தண்டனையின் அடையாளமே நாம் கட்டிக்கொள்ளும் காசிக் கயிறு. அதைக் கட்டிக் கொண்டால் நாம் செய்த பாவம் விலகும் என்பது ஐதீகம்.*
*பிரம்மனின் தலையை எடுத்த தோஷம் நீங்க பைரவர் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது காசிக்கு வந்ததும் அவரது பாவம் நீங்கிற்று.*
*உண்மையை மறைத்த பிரம்மாவை தண்டித்தது போல எல்லா மனிதரின் பாவங்களையும் நீக்குவதற்காக பைரவர் காசியிலேயே தங்கிவிடுகிறார்.*
*நமது பாவங்கள் போய்விடுவதால் மீண்டும் எமன் நம்மை அண்டாமல் சிவனடியில் நம்மை பைரவர் சேர்த்து விடுகிறார்.*
*சிவபெருமானுடைய 5 முகங்களில் இருந்து தோன்றிய 25 மூர்த்திகளில் #தத்புருஷ #முகத்திலிருந்து #தோன்றியவர் #பைரவர்.*
*பேராபத்தையும் சிறுநொடியில் அகற்றிடும் பைரவரை நமக்கு ஏற்படும் அபாயங்களை போக்கிடுமாறு*
*பரமனை மதித்திடா பங்கய ஆசனன்*
*ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்*
*குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்*
*புரிதரு வடுகனைப் போற்றி தெய்வமாகும்.*
*என்று கூறி*
*வணங்கிடுவோம்.*
🙏 *ஓம் நம சிவாய!*
படித்தில்பிடித்து இனியகாலைவணக்கம் இன்று கார்த்திகை மாதம் 4வதுவாரம் நரசிம்மர் தரிசனம் மற்றும் அஷ்டமி