14/05/2026
இப்புகைப்படம் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நிறமாக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தின் வரலாறை சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தோம். அதில் ஒரு சுவாரசியமான தகவல் குறிப்பிடப்படவில்லை.
மல்லாகத்தின் முதல் கிறிஸ்தவர்களுக்குள் ஒரு கோவில் பூசாரியும் இருந்தார். இவர் சாமி ஆடி, அருள் வாக்குச் சொல்பவராம். மக்கள் இவரை “வைரவர்” என அழைத்தனர்.
பூசாரி கத்தோலிக்க சமயத்தில் சேர்ந்தது அங்கிருந்த சைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இந்த மனந்திரும்புதல்களுக்குக் காரணமாக இருந்தவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் ஆவார்.
இத்தகவல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் நிலைமை பற்றிய 1922 ஆம் ஆண்டு அறிக்கையில் (Report on the State of the Diocese of Jaffna)இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.