04/08/2026
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் மஹோற்சவம்!
குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும்-18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.35 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் காலை, மாலை திருவிழாக்களாக இவ் ஆலய மஹோற்சவம் சிறப்பாக நடைபெறும். மஹோற்சவத்தை முன்னிட்டு ஆறு தினங்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Ravi-