Inuvil gnalinkeshwarar thirukovil /இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்

  • Home
  • Sri Lanka
  • Inuvil
  • Inuvil gnalinkeshwarar thirukovil /இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்

Inuvil gnalinkeshwarar thirukovil /இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழில் வழிபடுவோம், தமிழ் வழிப்படுவோம். Saivanerikoodam Inuvil gnalinkeshwarar thirukovil /சைவநெறிக்கூடம் இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்

15/02/2026

மகாசிவராத்திரி

14/02/2026
14/02/2026
30/01/2026

தினம் ஒரு திருமுறை

30.01.2026 - வெள்ளிக்கிழமை

அருளியவர் :
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

திருமுறை :
ஏழாம் திருமுறை

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு

பாடல் விளக்கம்:

தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே, ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே, யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு, உனது செயல்முறையையும், குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே, நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று ; அதனால், என்றும் உன் அடி யேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி, எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய்.

அறிவோமா? நாம் அன்றாடம் செய்யும் பாவ, புண்ணியக் கணக்கு இறைவனால் எழுதப்படுகின்றன தெரியுமா? இதோ!👇 நாவரசர் பெருமான் அருளிய த...
30/01/2026

அறிவோமா?

நாம் அன்றாடம் செய்யும் பாவ, புண்ணியக் கணக்கு இறைவனால் எழுதப்படுகின்றன தெரியுமா? இதோ!👇

நாவரசர் பெருமான் அருளிய தேவாரம்.

தலம், திருஇன்னம்பர்.

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று, அழுது காமுற்று அரற்றுகின்றாரையும், பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும், எழுதும் கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே.

இப்பாடலின் மூலப்பொருள்.

தூய்மையான மலர்களைத் தூவி, இறைவனை வணங்கி, துதித்து, அழுது, காதலுடன் (இறைவன் மேல்கொண்ட அன்பால் பக்திப் பெருக்கால்) அரற்றுகின்ற உண்மையான அன்பர்களையும், வீணாகப் பொழுதை கழித்து, இறைவனைப் புறக்கணிப்பவர்களையும், அவரவர் செய்த நல்வினை, தீவினைக் கணக்குகளை நாள்தோறும் எழுதி வைப்பவர் இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசன் ஆவார்.

முக்கிய கருத்து.

மெய்யடியார்களின் பக்தி வழிபாட்டையும், காலத்தை வீணடிப்போரின் அலட்சியத்தையும் இறைவன் கவனித்து, அதற்கேற்ப இப்பிறவி உயிர் நீத்தவுடன் நீதி வழங்குவார் என இப்பாடல் ஆழமாக கூறுகிறது.

மேற்கண்ட சிவ அருள்ஞானியின் திருவாக்கில் உதிர்த்த நல்வினை, தீவினைப் பயனை உணர்ந்து கொண்டு, அதன்படி அறக்கூற்றின் நேர்நின்று ஒழுகுபவர்கள், மேலான பேரின்ப வாழ்வினை பெறுவார்கள் என்பது திண்ணமே.

இதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, மகா சிவராத்திரி இரவு வேளையில், திருமுறைகளை மறந்து, ஆர்கெஸ்ட்ரா, சினிமா பாடல்களை கேட்பது, மற்ற பலப்பல பொழுதுப் போக்கு அவநிகழ்வில் பொழுதை கழிப்பது, பக்திநெறி என்றால் என்னவென்றே தெரியாத மனிதப் பதர்களாய் பாவத்தைச் செய்வது, இதற்கெல்லாம் உன்னுடைய இப்பிறவியும் பாழாகி, வருபிறவி பெருந்துயரமும் துன்பக்கடலில் திளைக்க ஏழ்நரகிடையும் காத்திருக்கிறது. உன்னை விடாது கருப்பு என்ற வகையை புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக இரு. நீ என்ன வேண்டுமானாலும் செய்! அது உன்னுடைய வினைப்பயன்! பார்த்துக்கோ!! அன்றாட ஈசன் கணக்கு உன்னுடைய ஏட்டில் எழுதப்படுகிறது என்பதை நினைவிற்கொள்! மறந்து விடாதே! மறந்தும் இருந்து விடாதே!!

என்றும் இன்ப அன்புடன், நாவரசரின் அடிப்பொடி.

"திருமுறைக் கலைக்களஞ்சியம்" "தெய்வத்தமிழிசை அறிஞர்" "சைவத்தமிழ் இயலிசை அறிஞர்" "சைவசமயப் புரட்சியாளர்" "திருமுறைப் புரட்சி வேந்தர்" "சைவத்தமிழ்ச் சுடர்மணி" "சிறந்த தமிழ்ப்பண் இசைப்போன்" "முனைவர்" திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர்.

தொடர்புக்கு, +91 9788065610, 9488055610.

அபிராமிப்பட்டர் விழாவும் அன்னையின் சந்தனகாப்பு அலங்காரமும்
18/01/2026

அபிராமிப்பட்டர் விழாவும் அன்னையின் சந்தனகாப்பு அலங்காரமும்

Address

இணுவில் தெற்கு, தாவடி
Inuvil

Opening Hours

Monday 05:30 - 12:30
16:30 - 19:00
Tuesday 05:30 - 12:30
16:30 - 19:00
Wednesday 05:30 - 12:30
16:30 - 19:00
Thursday 05:30 - 12:30
16:30 - 19:00
Friday 05:30 - 12:30
16:30 - 19:00
Saturday 05:30 - 12:30
16:30 - 19:00
Sunday 05:30 - 12:30
16:30 - 19:00

Telephone

+94212243545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inuvil gnalinkeshwarar thirukovil /இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share