Darul-Khair Islamic Welfare Foundation

Darul-Khair Islamic Welfare Foundation சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

வெசாக் போன்ற பிற மத நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் தன்சல் உணவை சாப்பிடலாமா?பதிலளிப்பவர்: சகோதரர் அப்துர் ராஸிக்எழுத்து வடிவ...
30/05/2026

வெசாக் போன்ற பிற மத நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் தன்சல் உணவை சாப்பிடலாமா?

பதிலளிப்பவர்: சகோதரர் அப்துர் ராஸிக்

எழுத்து வடிவம்: சகோதரர். அப்துர் ரஹீம்

இலங்கை பௌத்த மக்கள் அதிகமாக வாழக்கூடிய, அரசியல் சாசனப்படி பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகும். இங்கு வாழும் பௌத்த மக்களின் மிக முக்கிய வழிபாட்டுத் திருநாளான “வெசாக்” தினத்தன்று, புத்த பெருமானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து பல்வேறு சடங்குகளையும் கலாச்சார நிகழ்வுகளையும் நடத்துவார்கள்.
அன்றைய தினம் தோரணங்கள் மற்றும் அலங்காரங்களைக் காண்பதற்கு வரும் மக்களின் பசியையும் தாகத்தையும் தீர்ப்பதற்காக பௌத்த மக்களால் “தன்சல்”என்ற பெயரில் அன்னதானம் (உணவு, கஞ்சி, ஐஸ்கிரீம், சர்பத் மற்றும் குடிபானங்கள்) விநியோகம் செய்யப்படுகிறது.

“தன் சல” என்ற சிங்கள வார்த்தையின் நேரடி அர்த்தமே தர்மமாக அல்லது தானமாக வழங்கக்கூடிய இடம் என்பதாகும். இந்தத் தன்சல் உணவை முஸ்லிம்கள் சாப்பிடலாமா என்ற சர்ச்சை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
ஆரம்ப காலங்களில் நாங்களும் இந்தத் தன்சல் உணவுகள் ஹராம் (விலக்கப்பட்டது) என்று பிரச்சாரம் செய்து வந்தோம். ஆனால், மார்க்க ரீதியாக கடுமையான நுணுக்கத்துடன் ஆய்வு செய்தபோது, இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட உணவு அல்ல என்ற தெளிவான முடிவே நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கான விரிவான மார்க்க விளக்கங்களை இனி காண்போம்.

1. தன்சல் உணவு பூஜை செய்யப்பட்டதா?

தன்சல் உணவு ஹராம் என்று கூறுபவர்கள், இது 'பூஜை செய்யப்பட்ட உணவு' என்ற வாதத்தையே முன்வைக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் தன்சல் உணவு இரு வகைகளில் விநியோகிக்கப்படுகிறது:

•பொழுதுபோக்கு மற்றும் தர்ம நோக்கம்: பெரும்பாலான இடங்களில் மக்கள் சாதாரணமாகப் பட்டாசு கொளுத்தி, ஒரு பொழுதுபோக்காகவும், தர்ம சிந்தனையோடும், பசியோடு வருபவர்களின் பசியைத் தீர்த்து புண்ணியம் தேடும் நோக்கோடுமே உணவுகளை வழங்குகிறார்கள். இதில் எந்தவிதமான மந்திரங்களோ, பூஜைகளோ செய்யப்படுவதில்லை.

• மதகுருமார்களின் 'பிரித்' ஓதுதல்: ஒரு சில இடங்களில் தன்சல் நிகழ்வை ஆரம்பிக்கும் போது பௌத்த பிக்குமார்களை அழைத்து “பிரித்” என்ற பெயரில் சில மந்திர சொற்களை ஓதுகிறார்கள். இது உணவிற்காக ஓதப்படும் பூஜை அல்ல. முஸ்லிம்களில் சிலர் தங்களின் புதிய மஜ்லிஸ்களை (நிகழ்வுகளை) ஆரம்பிக்கும் போது 'ஃபாத்திஹா' ஓதுவதைப் போன்ற ஒரு வழக்கமே பௌத்தர்களிடம் உள்ள இந்த 'பிரித்' ஓதுதலாகும். இது புத்த பெருமானுக்குப் படையல் செய்யும் காரியம் அல்ல.

2. படையல் செய்யப்பட்டதாக இருந்தாலும் ஹராம் ஆகுமா?

அல்குர்ஆனின் அடிப்படையில் 'இஹ்லால்' என்பதன் விளக்கம்?

ஒரு வாதத்திற்கு, இந்தத் தன்சல் உணவு பிற மதக் கடவுள்களின் பெயரால் படையல் செய்யப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும் அது மார்க்கப்படி ஹராமாகுமா என்றால், அப்போதும் அது ஹராமாகாது.

அல்குர்ஆனின் 2-வது அத்தியாயத்தின் 173-வது வசனத்தில் அல்லாஹ் எவற்றையெல்லாம் ஹராமாக்கியுள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகிறான்:

"தாமாகச் செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்டவை (உஹில்ல பிஹி லிகைரில்லாஹ்) ஆகியவற்றைத்தான் உங்களுக்கு அவன் ஹராமாக்கியிருக்கிறான்."

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள "உஹில்ல" (இஹ்லால்) என்ற அரபு வார்த்தையின் ஆரம்பக்கருத்து 'சப்தமிடுதல்' என்றிருந்தாலும், அரபு மக்கள் மத்தியிலும் சமூக மன்றத்திலும் அதன் நேரடிப் பொருள் 'அறுத்துப் பலியிடுதல்' என்பதாகும்.
அதாவது, அல்லாஹ் அல்லாத பிற தெய்வங்களின் பெயரால் 'அறுத்துப் பலியிடப்படும் மாமிச உணவுகளைத்தான்' இஸ்லாம் தடுத்துள்ளது. தன்சல் என்பது தானியங்கள், பருப்பு, அரிசி மற்றும் குடிபானங்கள் போன்ற அறுத்துப் பலியிடப்படாத உணவுகளாகும். எனவே, இதனை ஹராமாக்குவதற்கு குர்ஆனில் எவ்வித ஆதாரமும் (நஸ்ஸும்) கிடையாது.

இது சம்பந்தமாக அறிஞர் பி.ஜே அவர்களால் விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு, இறுதியாக நடத்தப்பட்ட பகிரங்க விவாதத்திலும் "இஹ்லால் என்பது அறுத்துப் பலியிடுதல் தான்" என்பதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளோம்.

எனவே, அல்லாஹ்வினால் ஹலாலாக்கப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் தூய்மையான குடிபானங்களை ஹராம் செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. தன்சல் உணவு மார்க்க அடிப்படையில் ஹராம் கிடையாது.

3. நடைமுறை வழிகாட்டுதலும் தவிர்ந்து கொள்ள வேண்டிய நிலையும்!

உணவு ஹலாலாக இருந்தாலும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய ஒழுங்குமுறை உள்ளது:
இந்தத் தன்சல் உணவுகள் வெசாக் திருவிழாவைக் கொண்டாட வரும் மக்களுக்காகவே விநியோகிக்கப்படுகின்றன. எனவே, முஸ்லிம்களாகிய நாம் வேண்டுமென்றே அந்த வெசாக் தோரணங்களைப் பார்க்கச் சென்று, வரிசையில் நின்று அந்த உணவை வாங்கிச் சாப்பிட்டால், நாமும் அவர்களின் மதக் கொண்டாட்டத்தில்/சடங்கில் பங்குபெறுபவர்களாகக் காட்சி அளிக்க நேரிடும். இதனால், மார்க்கத்தில் பிற மதக் கலாச்சாரங்களுக்கு ஒப்பாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், நாமாகத் தேடிச் சென்று அங்கு உண்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

4. நெருக்கடியான சூழ்நிலைகளில் அனுமதி!

நாம் ஒரு பயணத்திலோ அல்லது நமது சொந்த வேலை நிமித்தமாகவோ வீதியில் செல்லும் போது, அவர்கள் நம்மை வழிமறித்து வற்புறுத்தி இந்தத் தன்சல் உணவுகளையோ அல்லது குடிபானங்களையோ தரும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு.
அந்நேரத்தில் நாம் வாங்க மறுத்தால், அவர்கள் நம் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தவும் நல்லிணக்கம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், நாம் தாகத்திற்கோ பசிக்கோ அதனைப் பருகினாலோ அல்லது உட்கொண்டாலோ, நாம் அந்த மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதாக ஆகாது. ஏனெனில், நாம் வேண்டுமென்று தேடிச் சென்று அதை உட்கொள்ளவில்லை.

சுருக்கமாகக் கூறின், தன்சல் என்ற பெயரில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் தூய்மையான பானங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் "ஹராமான உணவு அல்ல; அது ஹலாலானதுதான்."
எனினும், பிற மதக் கொண்டாட்டங்களுக்கு ஒத்துப் போவது போன்ற தோற்றத்தைத் தவிர்ப்பதற்காக, நாமாகத் தேடிச் சென்று அந்தத் திருவிழாச் சூழலில் நின்று அதை உண்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், பயணங்களின் போதோ அல்லது தவிர்க்க முடியாத வற்புறுத்தலின் போதோ அதனை உட்கொள்வதில் மார்க்க ரீதியாக எந்தத் தவறும் இல்லை என்பதே தெளிவான முடிவாகும்.

#முஸ்லிம்கள்_வெசாக்_நிகழ்ச்சிகளில்_கலந்து_கொள்ளலாமா #தன்சல்_உணவை_சாப்பிடலாமா #அப்துர்_ராசிக் #இஸ்லாம் #பௌத்தம் #இலங்கை

25/05/2026

இதோ வெளிவந்து விட்டது.
விரைந்து வாங்குங்க...

அல் புர்கான்
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் மாத இதழ்

* ஹஜ் பெருநாள் தினம் மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள்

* 📚 அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்: நாம் அறிய வேண்டியவை

* 🍽️ படையல் உணவுகள் — ஹலாலா? ஹராமா?

* 📖 குர்ஆனின் நிழலில் ஹதீஸ்கள்

* 👩 பெண்கள் பகுதி | 🧒 சிறுவர் பகுதி | ❓ ஐயமும் தெளிவும்

இன்னும் பலவற்றுடன்...

இந்த மாத இதழை பெற்றுக்கொள்ள கீழ் வரும் எண்களை தொடர்புகொள்ளுங்கள். 0705013764 . 0753692512 .

உண்மையை தேடுபவர்களுக்காக...வெளியாகிறது!அல் புர்கான் - சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் மாத இதழ் இம்மாதம்...
23/05/2026

உண்மையை தேடுபவர்களுக்காக...

வெளியாகிறது!

அல் புர்கான் -
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கும் மாத இதழ்

இம்மாதம் தவறவிடாதீர்கள்:

• 🐄 ஹஜ் பெருநாள் தினம் மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள்

• 📚 அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்: நாம் அறிய வேண்டியவை

• 🍽️ படையல் உணவுகள் — ஹலாலா? ஹராமா?

• 📖 குர்ஆனின் நிழலில் ஹதீஸ்கள்

• 👩 பெண்கள் பகுதி | 🧒 சிறுவர் பகுதி | ❓ ஐயமும் தெளிவும்

📍 தாருல் கைர் இஸ்லாமிய நலன்புரி அறக்கட்டளை
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் — மாளிகாவத்தை கிளை
46, மாளிகாவத்தை வீதி, கொழும்பு 10.
📞 +94 70 501 3746
📞 +94 75 369 2512

இன்றே படியுங்கள் — பகிருங்கள்!

மஹ்ஷர் தண்டனை!CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!இன்ஷா அல்லாஹ்,22.05.2026 (வெள்ளிக்கிழமை),மாலை 04:...
21/05/2026

மஹ்ஷர் தண்டனை!

CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!

இன்ஷா அல்லாஹ்,
22.05.2026 (வெள்ளிக்கிழமை),
மாலை 04:30 மணிக்கு,
CTJ தலைமையகத்தில் நடைபெறும்.

சகோதரர். பர்ஹான் (கபூரி)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் இந்த சபைக்கு அனைத்து பெண்களும் கலந்துக் கொண்டு பூரண நன்மையை அடைத்துக் கொள்வோமாக!

தொடர்புகளுக்கு: 0705013746, 0753692512, 0775511565

CTJ மாளிகாவத்தை கிளை நிர்வாகிகளுக்கான முதல் தர்பிய்யா அமர்வு: நிர்வாகிகளின் மார்க்க அறிவை மேம்படுத்தும் சிறப்பு நிகழ்ச்ச...
16/05/2026

CTJ மாளிகாவத்தை கிளை நிர்வாகிகளுக்கான முதல் தர்பிய்யா அமர்வு: நிர்வாகிகளின் மார்க்க அறிவை மேம்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி!

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளையின் நிர்வாகிகளுக்கான முதலாவது தர்பியா அமர்வு நேற்று 16.05.2026 (வெள்ளிக்கிழமை) மிகச் சிறப்பாகவும் பயனுள்ள முறையிலும் நடைபெற்றது. நிர்வாகிகளின் மார்க்க அறிவை மேம்படுத்தும் நோக்கிலும், எதிர்காலக் களப்பணிகளை மார்க்க அடிப்படையில் மேலும் சிறப்பாக்கும் நோக்கிலும் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சிறப்பு அமர்வில் பின்வரும் இரு முக்கிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன:

குர்பானியின் சட்டங்களும் அதன் நடைமுறைகளும்: நிகழ்வின் முதல் அமர்வாக, "குர்பானி கொடுப்பது ஒரு நாளில் தான்'' உட்பட ''குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் மாளிகாவத்தை கிளையின் தலைவர் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் மிகத் தெளிவானதோர் உரையை நிகழ்த்தினார். எதிர்வரும் தியாகத் திருநாளை முன்னிட்டு, குர்பானியின் அடிப்படைச் சட்டங்கள் மற்றும் குர்பானியை ஒரு நாளில் நிறைவேற்றுவது குறித்தான மார்க்கத் தெளிவுகள் இதில் விரிவாகப் பேசப்பட்டன.

மன்ஹஜுஸ் ஸஹீஹ்: இலங்கைவாழ் ஸலபிச சிந்தனை கொண்டவர்களால் வெளியிடப்பட்ட மன்ஹஜுஸ் ஸஹீஹ் நூலை குறித்து, "மன்ஹஜுஸ் ஸஹீஹ் - நாம் அறிய வேண்டியவை" எனும் தலைப்பில் கிளையின் செயலாளர் சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார். குர்ஆன் மற்றும் சுன்னாவை எவ்விதக் கலப்படமுமின்றி சரியான புரிதலுடன் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இந்த உரையில் ஆழமாக விளக்கப்பட்டது.

இந்த தர்பிய்யா அமர்வில் கிளையின் நிர்வாகிகள் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதுடன், பிற சகோதரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்து பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நடைபெற்ற கேள்வி - பதில் அங்கத்தில், பங்கேற்பாளர்களாலும் நிர்வாகிகளாலும் முன்வைக்கப்பட்ட பல்வேறு மார்க்க மற்றும் நடைமுறைச் சந்தேகங்களுக்கு, தெளிவான விளக்கங்களும் உரிய பதில்களும் வழங்கப்பட்டன.

இன்ஷா அல்லாஹ், மாளிகாவத்தை கிளையின் இத்தகைய பயனுள்ள தர்பியா அமர்வுகள் இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். நமது இந்தச் சிறு முயற்சிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

இவண்,
அப்துல்லாஹ்,
கிளைச் செயலாளர்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) - மாளிகாவத்தை கிளை.

#சிலோன்தவ்ஹீத்ஜமாஅத் #மாளிகாவத்தை #தர்பிய்யா

CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!இன்ஷா அல்லாஹ்,15.05.2026 (வெள்ளிக்கிழமை),மாலை 04:30 மணிக்கு,CTJ...
14/05/2026

CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!

இன்ஷா அல்லாஹ்,
15.05.2026 (வெள்ளிக்கிழமை),
மாலை 04:30 மணிக்கு,
CTJ தலைமையகத்தில் நடைபெறும்.

சகோதரர். ஆர்.அப்துர் ராஸிக் MA in Sinhala, B.Com (Special), LLB UK (Hons), Dip. In Psychology & Counseling (Merit) (பொதுச் செயலாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் இந்த சபைக்கு அனைத்து பெண்களும் கலந்துக் கொண்டு பூரண நன்மையை அடைத்துக் கொள்வோமாக!

தொடர்புகளுக்கு: 0705013746, 0753692512, 0775511565

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இத...
13/05/2026

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.

இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்களும் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திகின்றான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு கோரிய அந்த வியத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உளளது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன் மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

திருக்குர்ஆன் 60:4

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான் என்று (இப்ராஹீம்) கூறினார்.

திருக்குர்ஆன் 19:47

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த தந்தைக்காக இப்றாஹீம் நபி பாவமன்னிப்பு கோரியதை யாரும் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு இணை கற்பிப்போருக்கு பாவமன்னிப்பு கோரக் கூடாது. அதே சமயம் இறைவனுக்கு இணை கற்பித்த தந்தைக்கு இப்றாஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட இரண்டு வசனங்களையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவது இப்றாஹீம் நபியின் வழிமுறையில் உள்ளது என்பதில் மறுப்பேதும் இல்லை.

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.

அஸ்ஸலாமு அலை(க்)கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் . இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்கு சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தியடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்கு கிடைக்க நாம் துஆ செய்யலாம் இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நல்லறம் எது? என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவளிப்பதும், உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 12, 28, 6236



முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என்று தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று கூறியுள்ளனர்.

ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா அல்லவா என்பதும் கூட நமக்குத் தெரியாது. அது பற்றிக் கவலைப்படாமல் தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறியலாம்.

மேலும் பின்வரும் வசனங்கத்தில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழி காட்டுகிறான். இங்கே மூடர்கள் என்று குறிப்பிடுவதில் இஸ்லாத்தை ஏற்காதவர்களும் தீயவர்களும் அடங்குவார்கள்.

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ஸலாம் எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 25:63

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம் எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 28:55

என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர் என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.) அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்

திருக்குர்ஆன் 43:88,89

மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாம் என்பதற்கு திருக்குர்ஆன் வசனங்களும் நபிவழியும் சான்றுகளாகத் திகழ்ந்த போதும் இதைக் கண்டு கொள்ளாத சிலர் ஹதீஸ்களைத் தவறாக விளங்கிக் கொண்டு முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6258

வேதமுடையோர் ஸலாம் கூறினால் நாம் ஸலாம் கூறாமல் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்தே அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927

யஹூதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இது தான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.

வெற்றி பெறும் இலட்சியம்!CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!இன்ஷா அல்லாஹ்,08.05.2026 (வெள்ளிக்கிழமை...
07/05/2026

வெற்றி பெறும் இலட்சியம்!

CTJ மாளிகாவத்தை கிளையின் வாராந்த பெண்கள் பயான் நிகழ்ச்சி!

இன்ஷா அல்லாஹ்,
08.05.2026 (வெள்ளிக்கிழமை),
மாலை 04:30 மணிக்கு,
CTJ தலைமையகத்தில் நடைபெறும்.

சகோதரர். நவாஸ்
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

மார்க்கத்தை கற்றுக் கொள்ளும் இந்த சபைக்கு அனைத்து பெண்களும் கலந்துக் கொண்டு பூரண நன்மையை அடைத்துக் கொள்வோமாக!

தொடர்புகளுக்கு: 0705013746, 0753692512, 0775511565

“இறந்தவர்களை நீ எப்படி எழுப்புவாய்?”மகத்தான ஐந்து இறைத்தூதர்களில் ஒருவர் இப்ராஹீம் (அலை) அவர்கள். ‘இறைவனின் தோழர்’ எனும்...
04/05/2026

“இறந்தவர்களை நீ எப்படி எழுப்புவாய்?”

மகத்தான ஐந்து இறைத்தூதர்களில் ஒருவர் இப்ராஹீம் (அலை) அவர்கள். ‘இறைவனின் தோழர்’ எனும் சிறப்புப் பெற்றவர் இவர். ஓரிறைக் கொள்கையைப் பன்னாட்டளவில் பரப்புரை செய்தவர்களில் இவர்தாம் முதலாமவர்.

இத்தகைய சிறப்புகள் நிறைந்த இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களுக்குத் திடீரென்று ஓர் எண்ணம்.
“இறந்தவர்களை இறைவன் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கிறான்?” மறுமைக் கொள்கையில் ஐயமோ தடுமாற்றமோ அவருக்கு இல்லை. மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு, மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள், தங்களின் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும், நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்பதில் எல்லாம் அவருக்கு எந்த ஐயமும் இருக்கவில்லை. இருந்தாலும் மனம் நிம்மதி அடைவதற்காக உயிர்த்தெழும் நிகழ்வைக் கண்கூடாகப் பார்க்க விரும்பினார். தம் விருப்பத்தை இறைவனிடமும் சமர்ப்பித்ததார்.

“என் இறைவனே, மரித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக” என்று இப்ராஹீம் கூறிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். “என் இறைவனே, மரித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக” என்று இப்ராஹீம் கூறிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்.
“அப்பொழுது இறைவன்,“நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான். “அவ்வாறில்லை. (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) எனினும் என் மனம் அமைதி அடையும் பொருட்டே இவ்வாறு கேட்கிறேன்” என்று அவர் கூறினார்.
அதற்கு இறைவன், “அப்படியானால் நீ நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை (நன்கு பழக்கி) உன்னுடன் இணங்கி இருக்கச் செய். “பின் அவற்றைத் துண்டுகளாக்கி அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிடு. “பிறகு அவற்றை நீ கூப்பிடு. அவை உன்னிடம் விரைந்துவரும். இறைவன் நிச்சயமாக வல்லமை மிக்கவனும் நுண்ணறிவுடையோனுமாய் இருக்கிறான் என்பதை நீ நன்கு அறிந்துகொள்.”
[📖 திருக்குர்ஆன் 02 - வது அத்தியாயம் 260 - வது வசனம் 📖]

இந்த நிகழ்வின் மூலம் இறைத்தூதர் இப்ராஹீமின் இதயம் அமைதி அடைந்தது. மறுமைக் கொள்கையை மக்களிடம் முன்பைவிட அதிகமாக எடுத்துரைத்துப் பரப்புரை செய்தார். உயிர்த்தெழுதல் குறித்து வேதம் கூறும் சில கருத்துகளைப் பார்ப்போம்.

“இறந்துபோனவர்களை இறைவன்(அடக்கத்தலங்களிலிருந்து) எழுப்பியே தீருவான். பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக் காகக்) கொண்டு வரப்படுவார்கள்.”
[📖 திருக்குர்ஆன் 06 - வது அத்தியாயம் 36 - வது வசனம் 📖]

“அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். அந்த திகிலில் இருந்து எவர்களை இறைவன் காப்பாற்ற நாடுகிறானோ அவர்களைத் தவிர! மேலும் அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் திருமுன் வருவார்கள்.”
[📖 திருக்குர்ஆன் 27 - வது அத்தியாயம் 87 - வது வசனம் 📖]

மறுமை விசாரணைக்காக மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பது குறித்து இதுபோல் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் உண்டு.

அனைத்து இறைத்தூதர்களும் அனைத்து மதச் சான்றோர்களும் மரணத்திற்குப் பின்னுள்ள பெருவாழ்வு பற்றி மனிதர்களுக்கு எச்சரித்தே வந்துள்ளனர்.
ஆகவே நாமும் அந்தச் சான்றோர்கள் வழியில் மறுமையை முன்வைத்து இம்மையில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வோம்.

“நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது இறைவனின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கிறான். பின்னர் மறுமுறையும் அவனே படைப்பான். ஏனெனில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற் காக...”
[📖 திருக்குர்ஆன் 10 - வது அத்தியாயம் 04 - வது வசனம் 📖]



#இஸ்லாம்
#திருக்குர்ஆன்
#இறைத்தூதர்
#இப்ராஹீம்_நபி
#மறுமை_நம்பிக்கை
#உயிர்த்தெழுதல்
#இறைவசனம்
#நம்பிக்கை
#வாழ்வியல்
#ஆன்மீகம்
#அமைதி
#படிப்பினை

04/05/2026

இன்பமும் துன்பமும் இறைவனின் பரீட்சையே: உலக வாழ்வின் எதார்த்தம்!

உரையாற்றுபவர்: சகோதரர். அஜ்மீர் பாரூக் (அமீனி)
(அழைப்பாளர், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ)

Address

46, Maligawatta Road
Colombo
00100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul-Khair Islamic Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share