16/02/2026
இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஏ.பி. அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினார்..
#மனிதர்களுடன்_இருப்போம் என்ற தலைப்பில் கழிந்த மாதம் நடைபெற்ற
கேரள சுற்றுப்பயணத்தின் போது, சமூகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் எழும் பிரச்சினைகள் குறித்து பிரதமருக்கு விரிவாக விளக்கப்பட்டது.
அனைத்துப் பிரிவு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி,
பொருளாதார முன்னேற்றத்துடன்
மகிழ்ச்சி குறியீடுகளுக்கும்
மற்றும் மனித மேம்பாட்டிற்கும்
கொடுக்கப்பட வேண்டிய கவனம்,
மக்கள் தொகை மற்றும் பிராந்திய சமநிலைக்கு ஏற்ப வளங்களை வழங்குவதன் முக்கியத்துவம், வக்ஃப்-எஸ்.ஐ.ஆர் குறித்த
மக்களின் கவலைகள்,
பண்டைய மசூதிகள் மற்றும் இஸ்லாமிய பாரம்பரிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்,
மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் உள்ளிட்ட சிறுபான்மை கல்வி நலத் திட்டங்களை மீட்டெடுப்பது,
அலிகார் பல்கலைக்கழக மலப்புரம் மையத்தின் மேம்பாடு,
நாட்டின் சிறுபான்மை மக்களுடன் மத்திய அரசு நெருக்கமாக ஈடுபட வேண்டியதன் அவசியம் ஆகியவை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன.