14/05/2026
💥 கட்டாயம் அனைவரும் வாசித்து பயன்பெறுங்கள்.👇
அல்லாஹ் எதார்த்தத்தில் அடிவானிற்கு இறங்குகிறான் என நம்பிக்கை கொள்பவர் நிச்சயமாகக் காபிராவார்.
#ஏறுதல்,இறங்குதல்,ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுதல், அசைதல் போன்ற தன்மைகள் படைப்புக்களின் தன்மைகளாகும்.
#புஹாரி,முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஹதீஸுன் நுஸூல் என்றழைக்கப்படக்கூடிய ஒரு ஹதீஸ் இருக்கிறது.
#இந்த ஹதீஸின் விளக்கம் தஹஜ்ஜத்துடைய நேரம் ஏற்படும் போது அல்லாஹ்வுடைய அனுமதியின் பிரகாரம் ஒரு மலக்கு அடிவானத்திற்கு இறங்குகிறார் அம் மலக்கு அல்லாஹ் கூறுவதாக சில வசனங்களை பின் வருமாறு கூறுகிறார் அதாவது யாராவது பிரார்த்தனை செய்யக் கூடியவராக இருக்கிறாரா அவருடைய பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதற்காக வேண்டி
யாராவது தேவைகளை கேட்பவராக இருக்கிறாரா அவருடைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுப்பதற்காக வேண்டி
யாரவது பாவமன்னிப்புத் தேடக்கூடியவராக இருக்கிறாரா அவருடைய பாவமன்னிப்புகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதற்காக வேண்டி
#ஹதீஸுன் நுஸூல் என்றழைக்கப்படக்கூடிய இந்த ஹதீஸில் அடிவானத்திற்கு தஹஜ்ஜத்துடைய நேரத்தில் இறங்குவதாக சொல்லப்பட்டது ஒரு மலக்காகும் ஏனெனில் மலக்குதான் இறங்குகிறார் என்பதற்கு சான்றாக இமாம் #நஸாஈ றஹிமஹுழ்ழாஹ் அவர்கள் அமலுல் யவ்மி வல்லைலத் என்ற நூலில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் அதாவது இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரம் அடிவானத்திற்கு ஒரு மலக்கு இறங்கி மேற்கூறிய வசனங்களையே கூறுகிறார்.
என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள் இதற்கு மாற்றமாக ஹதீஸ்களை ஆராயாமல் ஹதீஸ்களின் கருத்துக்களைப் புரியாமல் இமாம்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் அல்லாஹ் அடிவானிற்கு வருகிறான் என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அல்லாஹ் இறங்குகிறான் என்று சொல்வது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமானதாகும் எனவே அல்லாஹ்வின் #றஹ்மத்(அருள்) அல்லது அல்லாஹ்வின் #மலக்கு இறங்குவதாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.