அல்லாஹ் இடம், திசையின்றி உள்ளவன்

  • Home
  • Sri Lanka
  • Colombo
  • அல்லாஹ் இடம், திசையின்றி உள்ளவன்

அல்லாஹ் இடம், திசையின்றி உள்ளவன் الله موجود بلا مكان ولا زمان ولا جهة
இறுதி மூச்சு வரை இஸ்லாத்தை தூய வடிவில் கற்றுக்கொடுத்தல்.

💥 கட்டாயம் அனைவரும் வாசித்து பயன்பெறுங்கள்.👇அல்லாஹ் எதார்த்தத்தில் அடிவானிற்கு இறங்குகிறான் என நம்பிக்கை கொள்பவர் நிச்சய...
14/05/2026

💥 கட்டாயம் அனைவரும் வாசித்து பயன்பெறுங்கள்.👇

அல்லாஹ் எதார்த்தத்தில் அடிவானிற்கு இறங்குகிறான் என நம்பிக்கை கொள்பவர் நிச்சயமாகக் காபிராவார்.

#ஏறுதல்,இறங்குதல்,ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுதல், அசைதல் போன்ற தன்மைகள் படைப்புக்களின் தன்மைகளாகும்.

#புஹாரி,முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஹதீஸுன் நுஸூல் என்றழைக்கப்படக்கூடிய ஒரு ஹதீஸ் இருக்கிறது.
#இந்த ஹதீஸின் விளக்கம் தஹஜ்ஜத்துடைய நேரம் ஏற்படும் போது அல்லாஹ்வுடைய அனுமதியின் பிரகாரம் ஒரு மலக்கு அடிவானத்திற்கு இறங்குகிறார் அம் மலக்கு அல்லாஹ் கூறுவதாக சில வசனங்களை பின் வருமாறு கூறுகிறார் அதாவது யாராவது பிரார்த்தனை செய்யக் கூடியவராக இருக்கிறாரா அவருடைய பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதற்காக வேண்டி

யாராவது தேவைகளை கேட்பவராக இருக்கிறாரா அவருடைய தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுப்பதற்காக வேண்டி

யாரவது பாவமன்னிப்புத் தேடக்கூடியவராக இருக்கிறாரா அவருடைய பாவமன்னிப்புகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதற்காக வேண்டி

#ஹதீஸுன் நுஸூல் என்றழைக்கப்படக்கூடிய இந்த ஹதீஸில் அடிவானத்திற்கு தஹஜ்ஜத்துடைய நேரத்தில் இறங்குவதாக சொல்லப்பட்டது ஒரு மலக்காகும் ஏனெனில் மலக்குதான் இறங்குகிறார் என்பதற்கு சான்றாக இமாம் #நஸாஈ றஹிமஹுழ்ழாஹ் அவர்கள் அமலுல் யவ்மி வல்லைலத் என்ற நூலில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் அதாவது இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரம் அடிவானத்திற்கு ஒரு மலக்கு இறங்கி மேற்கூறிய வசனங்களையே கூறுகிறார்.
என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள் இதற்கு மாற்றமாக ஹதீஸ்களை ஆராயாமல் ஹதீஸ்களின் கருத்துக்களைப் புரியாமல் இமாம்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் அல்லாஹ் அடிவானிற்கு வருகிறான் என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அல்லாஹ் இறங்குகிறான் என்று சொல்வது இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமானதாகும் எனவே அல்லாஹ்வின் #றஹ்மத்(அருள்) அல்லது அல்லாஹ்வின் #மலக்கு இறங்குவதாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

14/05/2026
12/05/2026

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

❌❌🚫 #இப்னு உஸைமீனின் பிழையான மார்க்கத் தீர்ப்பு. இவரை விட்டும் மக்களை எச்சரியுங்கள்❗நம் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாருங்கள...
10/05/2026

❌❌🚫 #இப்னு உஸைமீனின் பிழையான மார்க்கத் தீர்ப்பு. இவரை விட்டும் மக்களை எச்சரியுங்கள்❗நம் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாருங்கள்❗
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
#வழிகெட்ட வஹ்ஹாபிய நஜ்திய சிந்தனையாளரான இப்னு உஸைமீன் அவரிடம் போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஹஜ் செய்பவரின் சட்டம் பற்றிக்கேட்கப்பட்ட போது அதற்கவர் "அவரின் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், அவருக்கு போலிக்கடவுச் சீட்டை பயன்படுத்தியதற்கான பாவம் கிடைக்கும் எனவும் அதற்காக அவர் தௌபா செய்வதுடன் கடவுச்சீட்டை சீர் செய்வது கட்டாயம் எனவும் ஒரு பிழையான பத்வாவை வழங்கினார்".

👉 போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஒருவர் ஹஜ் செய்தால் அது ஒரு காலமும் பாவமாகாது.

குறிப்பு : போலிக் கடவுச் சீட்டை பயன்படுத்துவதை இங்கு நாம் ஆர்வமூட்டவில்லை. மாறாக மார்க்க சட்டத்தை தெளிவுபடுத்துவதே எமது நோக்கமாகும்.

👉 நாட்டு சட்டத்தை ஒருவர் மீறுவதனால் அவர் அந் நாட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகிறார். அதற்காக நாட்டு சட்டங்கள் ஒருபோதும் மார்க்க சட்டங்களாகாது.

👉 பிழையான மார்க்க சட்டங்களை வழங்குபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபமுள்ளது.

💥 #முக்கிய எச்சரிக்கை❗விளையாட்டாகவோ கோபத்திலோ அல்லது அறியாமையிலோ...அல்லாஹ்வை நிந்திப்பது அல்லது ஏசுவது ' #குப்ர்' இறை நி...
05/05/2026

💥 #முக்கிய எச்சரிக்கை❗

விளையாட்டாகவோ கோபத்திலோ அல்லது அறியாமையிலோ...அல்லாஹ்வை நிந்திப்பது அல்லது ஏசுவது ' #குப்ர்' இறை நிராகரிப்பு ஆகும். ​அத்தகைய நிலையில் இருப்பவருக்கு 'தவ்பா' (பாவமன்னிப்பு) மட்டும் போதாது, உதாரணமாக குப்ர் ஏற்பட்ட ஒரு மனிதர் அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறுவதைப் போல இதன் மூலம் அவருடை பாவம்தான் அதிகரிக்குமே தவிர வேறொன்றுமில்லை மாறாக அவர் #இருஷஹாதா' கலிமாக்களையும் கூறி இஸ்லாத்தில் இணைய வேண்டும்.​மார்க்கம் என்பது விளையாட்டல்ல❗

#சிலர் #குப்ர் #ஏற்பட்டும் #அதிலிருந்து #மீளத்தெறியாமல் #இருக்கின்றனர்.

⚘ அடிமைப் பெண்ணின் ஹதீஸ் என்று அறியப்பட்ட “ஹதீஸுல் ஜாரியஹ்” வை பற்றி விளக்குக.  #விடை : இந்த ஹதீஸ் “முழ்தரிப்” எனும் பலக...
04/05/2026

⚘ அடிமைப் பெண்ணின் ஹதீஸ் என்று அறியப்பட்ட “ஹதீஸுல் ஜாரியஹ்” வை பற்றி விளக்குக.

#விடை : இந்த ஹதீஸ் “முழ்தரிப்” எனும் பலகீனமான ஹதீஸ் வகையைச்சார்ந்ததாகும். இந்த ஹதீஸை ‘ஸஹீஹ்’ எனக்கூறிய அறிஞர்களின் கருத்துப்படி, இந்த ஹதீஸ், “அல்லாஹ் வானத்தில் குடியிருக்கிறான்” என்ற கருத்தைத் தராது.

👉 இமாம் அந்-நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை பின்வருமாறு விளக்குகிறார்கள் :
“அய்னல்லாஹ்?” (أين الله)என்ற வார்த்தையானது அல்லாஹ்வின் அந்தஸ்து (புகழ்ச்சி) பற்றிய கேள்வியாகும். இடத்தைப் பற்றிய கேள்வியல்ல. அதன் கருத்தாவது “அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதில் உனது கொள்கை என்ன?” என்பதாகும். அதற்கு அந்த அடிமைப் பெண்ணின் “பிஸ்ஸமா” (فى السماء)என்ற பதில், “அல்லாஹ் மிக உயர்ந்த அந்தஸ்தை உடையவன்” என்ற அவளின் நம்பிக்கையையே குறிக்கிறது. மாறாக நபியவர்கள் அந்தப்பெண்ணிடம் அல்லாஹ்வின் இடம் பற்றி வினவினார்கள் என்றும், அந்தப்பெண் “அல்லாஹ் வானத்தில் குடியிருக்கிறான்” என நினைத்துக் கூறினாள் என்றும் நம்புவது ஆகுமாகமாகமாட்டாது.

#குறிப்பு : அரபு மொழியில் (أين)“அய்ன” எனும் சொல் ஒன்றின் இடம் பற்றி வினவப்படுவதற்குப் பயன்படுத்தப்படுவது போல அந்தஸ்து பற்றி வினவுவதற்காகவும் பயன்படுத்தப்படும். அதே போன்று “அஸ்ஸமாஉ” (السماء)என்ற அரபுப் பதம் “வானம்” என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதைப் போல் “உயர்ந்த அந்தஸ்து” என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும்.

👉 அமீருல் முஃமினீன் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
لاَ يُقَالُ أَيْنَ لِمَنْ أَيَّنَ الْأَيْنَ
“எங்கே? எனப்படும் வினாவானது இடத்தைப் படைத்த அல்லாஹ்வைக் குறித்து வினவப்படமாட்டாது.”
(அறிவித்தவர் : இமாம் அபுல் காஸிம் அல்-குஷைரீ, நூல் : அர்-ரிஸாலதுல் குஷைரிய்யஹ்)

👉 இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்:
كَانَ قَبْلَ الْمَكَانِ، كَانَ ولَمْ يَكُنْ أيْنٌ وَلا خَلْقٌ وَهُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ
“அல்லாஹ், இடத்தைப் படைப்பதற்கு முன்னரே ஆரம்பமில்லாதத் தன்மையில் உள்ளவன். அவனோ எந்த இடமும், எந்தப் படைப்பும் இல்லாத போதே உள்ளவன், அவனே யாவற்றையும் படைத்தவன்.”
(ஆதாரம் : அல்-இமாம் அபூ ஹனீபா , அவர்களுக்குரிய நூலான அல்-பிக்ஹுல் அப்டஸத்)

👉 அல்லாஹ் கூறியுள்ளான் :
لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ ١١
விளக்கம் : “எவ்விதத்திலும் அவனைப் போல எதுவுமே இல்லை.”
(அத்தியாயம் : அஷ்-ஷ_றா வசனம் : 11)

👉 முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் :
كَانَ اللهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ
விளக்கம் : “அல்லாஹ், தன்னையன்றி எதுவுமே இல்லாத போதே ஆரம்பமில்லாத தன்மையில் உள்ளான்.”
(அறிவித்தவர் : இமாம் அல்-புஹாரீ)

🔥 #வினா : “அல்லாஹ்வைத் திட்டிப் பேசுபவன் நிச்சயமாக காபிராவான்” என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். இதனை ஆதாரத்துடன் விளக்கு...
03/05/2026

🔥 #வினா : “அல்லாஹ்வைத் திட்டிப் பேசுபவன் நிச்சயமாக காபிராவான்” என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். இதனை ஆதாரத்துடன் விளக்குக?

♦️ #விடை : அல்-காழீ இயாழ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் “எவன் ஒருவன் அல்லாஹ்வைத் திட்டும் வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றானோ அவன் கோபத்தில் இருந்தவனாக இருப்பினும் அல்லது அவன் பரிகாசத்துக்கு பேசி இருந்தாலும் அல்லது மனவிருப்பமில்லாத நிலையில் பேசி இருப்பினும் அவன் காபிராகி விடுவான்” எனும் ஏகோபித்த முடிவான இஜ்மாஉவை பதிவு செய்துள்ளார்கள்.

👉 அல்லாஹ் கூறியுள்ளான்:
وَلَئِن سَأَلۡتَهُمۡ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلۡعَبُۚ قُلۡ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمۡ تَسۡتَهۡزِءُونَ٦٥ لَا تَعۡتَذِرُواْ قَدۡ كَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡۚ ٦٦
#விளக்கம் : “நீங்கள் அவர்களிடம் கேட்டால், “நாங்கள் (வீண்) விவாதத்திலும், விளையாட்டிலும் மூழ்கி இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள், அதற்கு நீங்கள் கூறுங்கள் “நீங்கள் அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும், அவனுடைய தூதரையுமா பரிகசிக்கின்றீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஈமான் கொண்ட பின்னரும் காபிராகி விட்டீர்கள், உங்களுக்கு மன்னிப்பே கிடையாது.”
(அத்தியாயம் : அத்-தவ்பஹ் வசனம் : 65-66)

👉 முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் :
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لَا يَرَى بِهَا بَأْسًا يَهْوِيْ بِهَا فِى النّارِ سَبْعِيْنَ خَرِيْفًا
#விளக்கம் : “ஓர் அடியான் தனக்குக் குற்றத்தைத் தராது என நினைத்தவனாக குறிப்பிட்ட ஒரு வார்த்தையைப் பிரயோகிப்பான், அவ்வார்த்தைப் பிரயோகத்தினால் அந்த அடியான் நரகத்தில் எழுபது வருட தொலை தூரமான ஆழத்தில் போய் விழுவான்.”
(அறிவித்தவர் : இமாம் அத்-திர்மிதீ)

#குறிப்பு : இந்த ஆழமே நரகத்தின் அடிப்பகுதியாகும். மேலும் இது குப்ரில் ஈடுபட்டவர்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமாகும்.

⭕❌ஹஜ்ஜுடைய இந்தக் காலப்பகுதியில் மக்காவின் ஹறம் எல்லைக்குள் இலவசமாக வினியோகிக்கப்படும் வஹ்ஹாபிகளின் நூல்களை விட்டும் எச்...
02/05/2026

⭕❌ஹஜ்ஜுடைய இந்தக் காலப்பகுதியில் மக்காவின் ஹறம் எல்லைக்குள் இலவசமாக வினியோகிக்கப்படும் வஹ்ஹாபிகளின் நூல்களை விட்டும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்❌‼

↘️இந்த வஹ்ஹாபிகள் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரின் கோட்பாடுகளை விட்டும் முற்றுமுழுதாக வேறுபட்டவர்கள்.

↘️இந்த வஹ்ஹாபிகள் அல்லாஹ்வை படைப்புகளுக்கு ஒப்பிடுகிறார்கள் மேலும் உட்காருதல், இறங்குதல், இடம்பெயர்தல், உடலுறுப்புக்கள் மற்றும் இவைகளல்லாத அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற மோசமான பண்புகளை அவனுக்கு இணைத்துக்கூறுகிறார்கள் இந்த மோசமான வஹ்ஹாபிய வழிகெட்ட சிந்தனைகளை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!.

↘️ஹஜ்ஜுடைய காலப்பகுதியை இவர்கள் சாதகமாகப் பயன்படுத்தி இவர்களின் மோசமான, இஸ்லாத்திற்குப் பாதகமான வஹ்ஹாபிய வழிகெட்ட சிந்தனைகளை முழுக்க முழுக்க பொதிந்திருக்கக்கூடிய நூல்களை மக்களுக்கு இலவசமாக வழங்க பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அல்லாஹ் இவர்களை அழிப்பானாக!

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when அல்லாஹ் இடம், திசையின்றி உள்ளவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share