சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka)

சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka) வணக்கம்! உங்களுக்கு எமது அன்பு வாழ்த்துக்கள்...

www.sathiyavasanam.lk We have served in Sri Lanka since May 1955.

Back to the Bible was incorporated by Act of Parliament No. 17 of 1972, for the purpose of teaching the message of the Christian scriptures through various forms of media and technology. We operate as a not for profit Christian service organisation, funded by donations from individuals and churches and other organisations with similar interests. In our 55 years of operation we have been of service

to many thousands of individuals from all parts of the country and walks of life, and from all language and religious backgrounds in Sri Lanka. We provide services in Sinhala, Tamil and English languages. Back to the Bible is governed by a Board of Directors. The Board appoints the Managing Director who is entrusted with the responsibility to lead the organisation and the staff team towards fulfilling the mission of the organisation. All members of the board and staff are Sri Lankan nationals belonging to various Christian denominations.

22/05/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [மே 23 சனி]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 49:27-28

பென்யமீன்

அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், ...அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். ஆதியாகமம் 49:28

தேவனுடைய செய்தி:

தேவன் தமது பிள்ளைகளாக நம்மை ஆசீர்வதிக்கின்றார்.

தியானம்:

பென்யமீன் ஒரு பசித்த ஓநாய் போன்றவன். காலையில் கொன்று தின்பான். மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாருக்கும் ஆசீர்வாதம் கிடைத்தது. எனக்குரிய பங்கும் தேவனிடத்திலிருந்து கிடைக்கும்.

பிரயோகப்படுத்தல் :

பென்யமீன் எதனுடன் ஒப்பிடப்படுகிறார்?

இளைய மகன்களான யோசேப்பு மற்றும் பென்யமீனின் தீர்க்கதரிசனம், மூத்த மகன்களின் தீர்க்கதரிசனங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

தந்தையின் ஆசீர்வாதம் ஏன் முக்கியமானது? ஒவ்வொரு பிள்ளைகளை யும் அவரவருக்குரிய ஆசீர்வாதங்களையும் குறிப்பிடுவது அவசியமானதா?

ஒவ்வொரு பிள்ளைகளின் செயல்களின் விளைவுகளை யாக்கோபின் ஆசீர்வாதம் எவ்வாறு பிரதிபலிக்கிறது?

பென்யமீன் எதிர்காலத்தைப் பற்றி அவருடைய தீர்க்கதரிசனங்கள் என்ன சொல்கின்றன, அதை உங்கள் வாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறீர்கள்?

யாக்கோபு தனது மகன்களுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து குடும்பத்திற்குள் பொறுப்புணர்வு குறித்த அவரது உணர்வை எவ்வாறு உணருகின்றீர்கள்?

ஆதியாகமம் 35:18ல், மரணகாலத்தில் ராகேல் பென்யமீனுக்கு இட்ட பெயர் என்ன? பென்யமீனின் எதிர்காலம் எப்படிப்பட்டதாயிருந்தது?

பென்யமீனை பீறுகிற ஓநாய் என்று சித்தரிப்பது பழங்குடியினரின் தன்மை பற்றிய வரலாற்றுச் சான்றுகளுடன் முரண்படுகிறதா?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

21/05/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [மே 22 வெள்ளி]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:13-17

அறிக்கை செய்துவிடு!

சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது... அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள். யோனா 1:15,16

சிலசமயங்களில், உண்மையான காரணங்களை வெளிப்படுத்தப் பயந்து, வெட்கப் பட்டு, மறைத்து, வேறு காரணங்களைக் காட்டி சமாளிக்க நாம் முயற்சிப்பதுண்டு. 'ஒருசமயம், எனக்குக் கீழ் பணிபுரிந்த ஒருவருக்கு, அவரது நெருக்கத்தில், சட்டத் திற்கு மாறாக ஒரு உதவிசெய்தேன். அன்று பார்த்து அவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார். அப்பாவியான அவர் என்னையும் காட்டிக் கொடுத்துவிட்டார். “இதில் எனக்கு சம்மந்தம் இல்லை| என்று அன்று நான் தப்பியிருந்தால், அந்தப் பணியாளருடைய வாழ்வே சின்னாபின்னமாயிருந்திருக்கும். கடவுள் கிருபையால் தவறு என்னுடையது என்பதைத் தெளிவுபடுத்தி, அந்தப் பணியாளரை விடுவிக்க கடவுள் பெலன் தந்தார். நடந்தது என்ன? விசாரணை செய்த காவல் அதிகாரி எழுந்து நின்று, “நீர் ஒரு கிறிஸ்தவரா| என்று கேட்டார்”. இது ஒருவரின் உண்மைச் சாட்சி.

யோனா தன் தவறையும் மறைக்கவில்லை. நடக்கப்போவதையும் நிதானமாகக் கூறிவிட்டார். ஆனால், அந்தக் கப்பலில் இருந்தவர்கள்தான் தயங்கினார்கள். எதுவும் பலனளிக்காதபோது, எல்லாப் பாரத்தையும் கடவுள்மீது போட்டுவிட்டு, யோனா சொன்னபடியே அவனை சமுத்திரத்தில் போட்டுவிட்டார்கள். சமுத்திரம் அடங்கியது. மாத்திரமல்ல, அந்தப் புறவின மக்கள் யோனாவின் கடவுளுக்குப் பயந்தனர்; நன்றி பலிகளைச் செலுத்தி மெய்த்தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

நமது தவறுகளை ஒத்துக்கொள்வது, அதிலும் பிறர் முன்னிலையில் ஒத்துக்கொள்வது மிகவும் கடினமான, மிகுந்த வேதனை தரும் அனுபவமாகும். ஆனால், உண்மையாக தன் குற்றத்தை உணருபவன் தன் பிழையை மறைக்கமாட்டான். அதிலும், உண்மையுள்ள ஒருவன், தன் தவறினால் அடுத்தவன் பாதிக்கப்படுகிறான் என்பதை உணரும்போது அமைதியாக இருக்கவும்மாட்டான். அறிக்கைசெய்யும்போது அது மிகுந்த உத்தம சாட்சியாக விளங்கும். குற்றத்தை மறைத்து நிமிர்ந்து நிற்பதிலும்பார்க்க, அதை அறிக்கைசெய்து தலைகுனிவது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவரும். நமக்கு வெட்கமாக தோன்றினாலும், தேவனுக்கு உண்மைத்துவமாய் செயற்படும் போது, பிறர் மெய்த்தேவனை அறிந்துகொள்ளும்படிக்கு நம்மையே சாட்சியாக நிறுத்துவதற்குக் கர்த்தர் வல்லவராயிருக்கிறார். இங்கே கப்பலில் இருந்தவர்களும் தேவனை அறிந்தார்கள்; யோனாவும் ஒரு மீனினால் சாவிலிருந்து காப்பாற்றப்பட் டான். எந்தச் சந்தர்ப்பத்திலாவது நமது பாவத்தை மறைத்து, பிறர் கண்ணீர்விட காரணமாயிருந்திருக்கிறோமா? இன்றே நம்மை ஆராய்ந்து பார்த்து அறிக்கை செய்வோமாக. தேவன் நம்மில் நிச்சயம் மகிமைப்படுவார். பிறனும் விடுதலையா வான். கர்த்தர் தாமே துணை புரிவாராக.

💫 இன்றைய சிந்தனைக்கு:என் தவறினால் யாராவது இதுவரை வேதனை அடைந்திருக்கிறார்களா? இன்றே அதைச் சரிப்படுத்துவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

20/05/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [மே 21 வியாழன்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:10-13

யார் யாரில் கரிசனை?
..நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். யோனா 1:11

பிறவினத்தாராகிய கப்பல் மாலுமியும் மற்றவர்களும் தேவனுடைய தீர்க்கதரிசியைப் பார்த்து இக் கேள்வியைக் கேட்கின்றனர். இது தலைகீழாக தெரியவில்லையா! யோனா தான் யாரென்றும், தன் கடவுள் யாரென்றும் சொன்னபோது, அங்குஇருந்தவர்களுக்கு அவன்மீது ஒரு மரியாதை ஏற்பட்டது. இல்லாவிட்டால், சீட்டுவிழுந்த மாத்திரத்தில் தாம் தப்புவதற்காக, அவனுக்கு ஏதாவது செய்திருப்பார்கள். பிறவினத்தாராகிய அவர்கள் அவனிடத்தில் இத்தனை கருணை காட்டியபோதும், அதில் சிறிதளவேனும் யோனாவுக்கு நினிவே பட்டணத்தாரில் காட்டமுடியாமற் போனது ஏன்?

கொந்தளிப்பு ஏற்பட்டதற்கான காரணம் யோனாவுக்குத் தெரியும். தன்னை அகற்றினால் சமுத்திரம் அமைதிப்படும் என்றும் கூறிவிட்டான். அந்தக் கப்பலில் இருக்கிற வர்களுக்காக தன் உயிரை-யே கொடுப்பதில் அவன் காட்டிய ஆர்வம் நல்லது. ஆனால், தான் நினிவேக்குப் போகவேண்டியவன், அவர்-களுக்குத் தேவ எச்சரிப்புக் கொடுக்கவேண்டியவன் என்று எதையும் யோனா வெளிப்படுத்தவில்லை. நினிவேயைக் குறித்து கர்த்தருக்கு ஏற்பட்ட கரிசனையிலும் பார்க்க, கப்பலில் இருந்தவர்களில் யோனாவுக்கு இருந்த கரிசனை பெரிதாயிருந்தது. மேலும், கர்த்தர் ஒருபெரிய மீனை ஆயத்தம் செய்திருப்பது யோனாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க, தான் சமுத்திரத்தில் ஆழ்ந்துபோனாலும், நினிவே பட்டணத்திற்கு மாத்திரம் போகக்கூடாது என்று உறுதியாயிருந்தது என்ன? அசீரியரில் அத்தனை வெறுப்பு. ஆனால், அந்த மாலுமிகளோ தேவ ஒழுங்கை அறியாதவர்களாக யோனாவைத் தப்புவிக்க வேகமாகத் தண்டுவலித்தனர்; முடியவில்லை. தேவதிட்டத்துக்கு எதிரான எந்தவித இரக்கத்தாலும் பயனில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

யோனாவின் கசப்புணர்வு அவனது இயல்பான தோற்றத்தையே மாற்றிவிட்டது. தேவபிள்ளையே, இன்று மெய்த்தேவனை அறியாதவர்கள்மீது நாம் காட்டும் கரிசனையிலும் அதிகமாக அவர்கள் நம்மில் காட்டுகின்ற கரிசனையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? அதிலும் மேலாக தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். ஏனெனில் நாம் தேவனுடைய பிள்ளைகள். இயேசு எரிகோவுக்குச் சமீபமாக வந்தபோது, தம்மைநோக்கிக் கூப்பிட்ட குருடனிடம், 'நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கி றாய்” (லூக்கா 18:41) என்றுதான் கேட்டார். இன்று இந்தக் கேள்வியை நாம் பிறரிடம் கேட்கிறோ]மா? அல்லது, அவர்கள் நம்மிடம் கேட்க இடமளித்து வெட்கி நிற்கிறோமா? நாம் எல்லோரிடமும் அன்பும் கரிசனையுமுள்ளவர்களாய் இருப்பதே தேவசித்தம். நாம் எப்படி?

💫 இன்றைய சிந்தனைக்கு:யோனாவின் மீது பிறர் காட்டிய கரிசனையைக் குறித்தும், யோனா நினிவே மக்கள்மீது கொண்ட வெறுப்பைக் குறித்தும் நான் என்ன உணருகிறேன்?

📘 அனுதினமும் தேவனுடன்.

19/05/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [மே 20 புதன்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 2:3-6

நீ...நீயா!
..நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். யோனா 1:10

கேள்வியை இரு விதத்தில் கேட்கலாம். 'நீ ஏன் இதைச் செய்தாய்?” ஒன்று, அல்லது 'நீயா இதைச் செய்தாய்?” என்றும் கேட்கலாம். ஒரு மேலதிகாரி, 'நீ ஒரு கிறிஸ்தவன் என்பதனாலேயே பொறுப்பை உன்னிடம் தந்தேன். ஆனால், நீ... நீ என்னை ஏமாற்றிவிட்டது என்ன” என்று தன் ஊழியனிடம் கேட்டாராம். இதைக் கேட்டு மனமுடைந்த அந்த ஊழியன் வேலையை விட்டுவிட்டான். இக்கேள்வி அவனது வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

யோனாவின் பேரில் சீட்டு விழுந்ததும் அனைவரது கண்களும் அவன் பக்கம் திரும்பியது. இந்த ஆபத்தின் காரணம் என்ன? உன் தொழில் என்ன? எங்கிருந்துவருகிறாய்? உன் தேசம் எது? என்ன ஜாதி? கேள்விக் கணைகள் தொடர்ந்தன. யோனா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தபோதும், இந்தப் புத்தகம் யோனா உரைத்த தீர்க்கதரிசனங்களுக்காக எழுதப்பட்டது அல்ல; யோனாவின் வாழ்வில் நடந்த பலசம்பவங்களுக்கே முக்கிய இடமளித்துள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவுவரை யோனாவைக் குறித்து பல எதிர்மறையான காரியங்களையே நாம் பார்த்தாலும், இந்த இடத்தில் யோனாவின் ஒரு வித்தியாசமான குணாதிசயத்தைக் காண்கிறோம். யோனா எதையும் மறைக்காமல் உண்மையையே பேசுகிறான். நான் எபிரெயன், இந்த சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தரே தன் கடவுள் என்பதை தைரியமாக அறிக்கையிட்டான். தான் கர்த்தருடைய சமுகத்தி லிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்றும் உண்மையைச் சொன்னான். அதாவது, தேவ சமுகத்திற்குத் தன்னை எதுவிதத்திலும் மறைத்துக்கொள்ள முடியாது என்பதை யோனா உணர்ந்துவிட்டான். இதைக் கேட்டு, கர்த்தரை அறியாத அந்த ஜனங்கள் பயந்து, 'நீ ஏன் இதைச் செய்தாய்” என்று கேட்டார்கள் (யோனா 1:8-10).

'நீங்களா?” என்று இன்று உலகம் நம்மைப் பார்த்துக் கேட்கும்படியாக நமது வாழ்வு இருக்கிறதா என்பதை சிந்திப்போம். 'நீயா” என்று உலகம் கேட்குமானால், நாம் தேவனுடைய திசையைவிட்டு விலகிவிட்டோம் என்பதுதான் உண்மை. தேவ னின் அன்பை வாஞ்சிக்கிற நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வது எப்படி? தேவனின் சமுகத்திற்கு ஒளித்து ஓடமுடியாது என்பதை உணர்ந்து, தேவனிடம் திரும்பும் முன்னர், தான் போகும் திசையை மாற்றி, தேவன் காட்டிய திசைக்குத் திரும்பவேண்டிய அவசியம் யோனாவுக்கு இருந்தது. தேவனை நேசிக்கிறோம் என்று சொல்லும் நாம் அவர் வழியில்தான் போகிறோமா? கடின பாதையாயினும் தேவன் வகுத்த வழிக்குத் திரும்புவோமாக. தாம் தெரிந்துகொண்ட பாதையில் அவரே நம்மை நிச்சயம் வழிநடத்துவார்.

💫 இன்றைய சிந்தனைக்கு:கர்த்தருக்குரிய திசைக்கு எதிர்த் திசையில் என் வாழ்வு இருந்தால், உடனே இன்றே மனந்திரும்புவேனாக. கர்த்தருடைய நாளிலே நான் வெட்கப்பட வேண்டாமே!

📘 அனுதினமும் தேவனுடன்.

18/05/2026

📖 சத்தியவசனம் – இலங்கை [மே 19 செவ்வாய்]

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:5-7

பாவத்தின் கொடூரம்
..எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்... யோனா 1:6

மாகாணங்களுக்கு இடையிலான தேகாப்பியாசப் போட்டிக்காக இடைநிலைக் குழுவினர் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதிலே நானும் ஒருத்தி. ஒருநாள் என் கால்களில் பலத்த அடி விழ, திடுக்கிட்டு திரும்பினேன். கோபம் கொப்பளிக்க ஆசிரியை பெரிய தடியுடன் நின்றிருந்தார். 'வரிசையைவிட்டு விலகக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். உன் ஒருத்தியின் தவறால் முழு குழுவும் தோல்வியைத் தழுவ-நேரிடுமே” என்றார் அவர். அவரது முகமும், அவர் சொன்ன வார்த்தைகளும் என் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. (அதனால் நாமேதான் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தோம். ஆசிரியைக்கு நன்றி.)

பயணம்செய்த அத்தனைபேரும் கப்பல் கவிழ்ந்துவிடுமோ என்று தவித்து கதறிய வேளையில், கப்பலின் கீழ்த்தட்டில் நித்திரை செய்கின்ற ஒருவனை மாலுமி கண்டான். யோனாவை எழுப்பிய மாலுமி, 'எழுந்திரு, உன் தேவனை நோக்கி வேண்டுதல் செய்; ஒருவேளை அவராவது நம்மை நினைத்தருளுவார்” என்கிறான். இத்தனை ஆபத்துக்கும் காரணமானவன் தூங்குகிறான். இந்தக் காற்றையும் கடலையும் அடக்க வல்ல தேவனுடைய பிள்ளை தூங்குகிறான். அவனைத் தட்டியெழுப்பி யது யார்? மெய்த்தேவனை அறியாத ஒருவன். சீட்டு தன் பெயருக்கு விழும்வரை ஆபத்துக்கு யார் காரணம் என்பது யோனாவுக்குத் தெரியாதா! அவன் ஒருவனின் தவறினால், கப்பலில் இருந்த அத்தனை பேருமே பாதிக்கப்பட்டார்கள். இதுதான் உண்மை. ஒரு ஆகானினால் முழு இஸ்ரவேலும் தண்டிக்கப்பட்டார்களே.

பாடசாலை ஆசிரியை சொன்னது இன்றும் ஞாபகத்தில் இருந்தாலும், வாழ்க்கை ஓட்டத்தில், இரட்சிப்பின் மகத்துவத்தை உணராத காலத்தில், என் ஒருத்தியின் தவறினால் பாதிக்கப்பட்டவர்களை இன்றும் நினைக்கும்போது மனவருத்தம்தான். நாம் மனந்திரும்பிய பின்பும் அந்த உணர்வின்றி வாழமுடியாதே. இன்று தேசத்தில், சபைகளில், குடும்பங்களில் கொந்தளிப்பு! இதற்கு நாம் காரணம் அல்ல என்றுசொல்லமுடியுமா? 'என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் மனந்திரும்பினால் தேசத்துக்குச் ஷேமம்” என்று கர்த்தர் சொன்னது சத்தியம். தேசத்தின் கொந்தளிப்புக்கு நாம்தான் காரணம் என்பது இதிலேயே விளங்குகிறது. ஆனால், நாமோ நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லாதவர்களைப்போல, எதுவும் தெரியாதவர்களைப்போல தூங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மைத் தட்டியெழுப்ப அடுத்தவன் தேவையா? ஒரு ஏவாளின் பாவம் முழுஉலகையும் பாதித்ததே! பாவம் அத்தனை கொடுமையானது. தூக்கத்தை விட்டு இன்றே எழுந்திருப்போம். மனந்திரும்புவோம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:என் நிமித்தம் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் இன்றே அதை உணர்ந்து, பாதிப்பைச் சரிப்படுத்துவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

Address

120A Dharmapala Mawatha
Colombo
00700

Alerts

Be the first to know and let us send you an email when சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to சத்தியவசனம் - Sathiyavasanam (Sri Lanka):

Share