06/06/2026
சஹாபாக்களின் வழியே நேர்வழி தொடர்-02
******
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُمْ بِهِ فقَدِ اهْتَدَوْا وَإِنْ توَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ .البقرة: 137
நீங்கள் எவற்றை நம்பிக்கை கொண்டீர்களோ அதேபோன்று அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்கள் முரண்பாட்டிலேயே இருப்பர். எனவே அவர்கள் விடயத்தில் உமக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் (யாவற்றையும்) செவியுறுபவன் நன்கறிந்தவன்(2:137)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் சஹாபாக் களின் ஈமானிய கொள்கையிலும் சுன்னாவின் செயற்பாட்டிலும் பயணிப்பதே ஈமானுக்கு பாதுகாப்பானது. நேர்வழிக்கு உத்தரவாதமானது. அந்த ஈமானிய கொள்கையையும் சுன்னாவின் செயற்பாட்டையும் எவர் நிராகரிக்கின்றாரோ அவர் முரண்பாட்லும் வழி கேட்டிலும்; தட்டுத்தடுமாறிக் கொண்டிருப்பார் என்பதை அல்லாஹ் எச்சரிக்கிறான்.
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بعْدِ مَا تبَيَّنَ لَهُ الْهُدَى وَيتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نوَلِّهِ مَا توَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا ) النساء: 115(
யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு முஃமின்களின் வழி அல்லாததைப் பின்பற்று கின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனைச் செல்ல விட்டு அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்ட தாகும்.(4:115)
இவ்வசனத்தில் 4 விடயங்களை அல்லாஹ் கோடிற்று காண்பிக்கின்றான்
* ``அல்உதா (الْهُدَى) எனும் நேர்வழியை, வஹியின் மூலம் (அல் குர்ஆனை மற்றும் சுன்னா வின் மூலம் ) அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.. அந்த நேர்வழியில் தான் ஈமானையும் இபாதத்தையும் உறுதிப்படுத்துகிறான்..
* அந்த நேர்வழியை நிராகரிக்கின்ற மற்றும் மறுக்கின்றவனை அல்லாஹ் கண்டிக் கிறான்.
* இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காண்பித்த வழியில் பயணிக்கின்ற சஹாபாக்களை மூஃமின்கள் என்று நற்சான்று சொல்கிறான்.முஃமின்களான சஹாபாக்களின் வழியை அங்கீகரிப்பதாக அறிவிக்கின்றான்.
* சஹாபாக்கள் நபிகளாரிடமிருந்து எந்த வழியில் அகீதா (நம்பிக்கை கோட்பாடு ) மற்றும் இபாதத் (வணக்கவழிபாடுகளை)ஏற்று பின்பற்றினார்களோ அந்த வழியை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். அந்த வழியில் செல்லுமாறு மக்களுக்கு கட்டளையிடுகிறான். அவர் களின் வழியில் செல்லாமல் வேறுவழியில் செல்பவர்களை நரகத்திற்குள் நுழைவிப்பதாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.
இமாம் ஸஃதி (ரஹ்)
அவர்கள் கூறும்போது:
تفسير السعدي . تيسير الكريم الرحمن (ص: 202)
{ويتبع غير سبيل المؤمنين} وسبيلهم هو طريقهم في عقائدهم وأعمالهم
முஃமின்களின் பாதை என்பது, அவர்களின் (அகீதா) நம்பிக்கைகள் மற்றும் (அமல்கள்) செயற்பாடுகளில் அவர்களை பின்பற்றும் பாதையாகும். (நூல்: தப்ஸீர் தைஸீருல் கரீமில் ரஹ்மான் பக்கம்202)
சஹாபாக்களுக்கு அல்லாஹ் வஹி இறக்க வில்லை.நபிக்கு இறக்கப்பட்ட வஹியின் நிழலில், அவர்கள் நேர்த்தியாக பயணித்ததை அறிவிக்கிறான்.
மேலும் அல்லாஹ் கூறும் போது
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ } يوسف: 108
இதுவே எனது நேரான வழி. நானும் என்னை பின்பற்றுபவர்களும் தெளிவான சான்றின் அடிப்படையில் இருந்து அல்லாஹ்வின் பால் (மக்களுக்கு) அழைப்பு விடுக்கிறேன். மேலும் அல்லாஹ் மிகத்தூய்மையானவன். நான் இணைவைப்பாளர்களில் ஒருவன் அல்ல என நபியே நீர் கூறுவீராக (12: 108)
எவ்வித சந்தேகங்களும் குழப்பங்களும் இல்லாத அல்லாஹ்விடமிருந்து வந்து தெளிவான சான்றினை (வஹியை) முன்வைத்து நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல், நானும் என்தோழர்களும் அந்த சான்றின் மீது (வஹியின் மீது) நின்றவர்களாக அழைப்பு விடுக்கிறோம் என கூறுமாறு அல்லாஹ் நபிக்கு கட்டளையிடு கிறான்.
சஹாபாக்களின் வழி, வஹியின் அடிப்படையில் செப்பனிடப்பட்ட தெளிவான பாதையாகும் என்பதை இந்த வசனத்தின் மூலம் மீண்டும் அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்
சஹாபாக்கள் வஹியின் நிழலில் செயற்பட்டதால் தஃவா பணியினை மேற்கொள்ள –மக்களுக்கு மாரக்கத்தின் பால் அழைப்பு விடுக்க- தகுதிப் பெற்ற கூட்டமாக அவர்களை ஆக்கி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் தூதுவர்களாகவும் ஆக்கினான். சஹாபாக் களிடத்தில் இல்லாத ஈமானிய நம்பிக்கைளையும் செயற்பாடுகளையும் எவரும் பின்பற்ற முடியாது. புதிதாக உருவாக்கவும் முடியாது. இது தான் கியாமத் நாள் வரை உலக முஸ்லிம்களுக்கான வழி என்பதை மிக துல்லியமாக அல்லாஹ் உலகிற்கு அடையாளம் காட்டுகின்றான். இவ்வாறான உத்தரவாதம் வேறு எந்தவொரு சமூகத்தாருக்கும் கொடுக்கப்பட வில்லை.
தொடரும் இன்ஷா அல்லாஹ்