18/08/2024
சாயிராம்.
என் அன்பு சகோதரன் ராகவன் சாயிநிலையத்தை விட்டு, பகவான் பாதங்களில் சங்கமித்துவிட்டான். சாயிநிலையத்தின் தலைவராக 2000 ஆண்டு, சாயிநிலையத்தை பொறுப்பேற்ற சமயத்தில், எனக்கு கைகொடுத்து துணையாக இருந்தவர். சாயிநிலையத்துக்கு உதவி பொருளராக, அதுவும் கண்ணியமாக, நம்பிக்கைக்குரிய,நாணயமாக கிடைத்த ஓரு பொக்கிஷம். சாயிநிலையத்திலுள்ள, இரண்டு சீரடி சாயி திருவுருவ சிலைகளையும், அவரது பாதங்களையும், இந்தியாவிலிருந்து, தனது மடியில் வைத்து, எடுத்து வந்த சாயி தொண்டன். இவை யாவும், எப்போதும் சாயிநிலையத்தில், இவரது சாயி பணியை நினைவுபடுத்தும். ஆனால் என்ன சொன்னாலும், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அதி தீவிர பித்தன். அதனால்தான் என்னவோ, அவர் கூடிய சீக்கிரத்தில் தன்னுடன் அழைத்துக் கொண்டாரோ?
அவரது ஆத்மா பரிபூரண சாந்தியடைய, அனைத்து சாயிநிலைய அங்கத்தவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் பிராத்திக்கிறோம். அவரது குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
எஸ். என்.உதய நாயகம்