சாவகச்சேரி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்

  • Home
  • Sri Lanka
  • Chavakacheri
  • சாவகச்சேரி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்

சாவகச்சேரி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் கத்தோலிக்க திருச்சபைக்கு இளைஞர்களா?

இது சாவகச்சேரி பங்கு இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த ஒன்றியத்தின் ஊடாக எமது பங்கும் பங்கு மக்களும் பலன் பெற உதவவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டுள்ளது

ஆசாதாரணமான சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செ...
25/10/2020

ஆசாதாரணமான சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று (25.10.2020) காலை 9.00 மணியிலிருந்து பி.ப 1.00 மணிவரை சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி புனித லிகோரியார் ஆலயத்தின் குழந்தை இயேசு முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில்
34 குருதிக்கொடையாளர்கள் குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய இளையோர் வாரத்தை  சிறப்பிக்கும் முறையில் இளையோர் யுவதிகளால் ...
14/09/2020

சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தேசிய இளையோர் வாரத்தை சிறப்பிக்கும் முறையில் இளையோர் யுவதிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறிய சுற்றுலாவின் சில பதிவுகள்.

 # #  ஒரு துளி உயர்வு தரும்  # #வழமையாக தவக்காலத்தை முன்னிட்டு  #சாவகச்சேரி   #புனித. #லிகோரியார்  #இளையோர்கள் ஏற்பாட்டி...
06/04/2020

# # ஒரு துளி உயர்வு தரும் # #

வழமையாக தவக்காலத்தை முன்னிட்டு #சாவகச்சேரி #புனித. #லிகோரியார் #இளையோர்கள் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் அமைத்து இரத்ததான பணிகள் மேற்கொள்வது வழக்கம் .

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகாரணமாக அப்பணியை மேற்கொள்ள முடியாது இருந்தது.

அவசரகால சட்டம் நடைமுறையில் இருப்பதன் காரணமாக #யாழ். #போதனா_வைத்தியசாலை சென்று இளையோர்களின் இரத்த தான பணி இடம்பெற்றது.

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் " அழைத்தல் " ஆண்டை மையமாக கொண்டு. பங்குத்தந்தை அருட்பணி  M.றெக்ஸ் சவுந்தரா  தலைமைய...
10/02/2019

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் " அழைத்தல் " ஆண்டை மையமாக கொண்டு. பங்குத்தந்தை அருட்பணி M.றெக்ஸ் சவுந்தரா தலைமையில் நடைபெற்ற திருக்குடும்ப திருப்பலியும், அதனைத் தொடர்ந்து பங்கு மக்களுக்கு சிறந்த செயல் அமர்வும் இடம் பெற்றது.

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் .இதில் 40 ற்கு மேற்பட்ட இரத்த க...
16/12/2018

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் .
இதில் 40 ற்கு மேற்பட்ட இரத்த கொடையாளிகள் வருகை தந்திருந்தார்கள்.

 #புனித_யோசப்வாஸ்_திருச்சிலுவைப்  #பயணம்  #சாவகச்சேரி_லிகோரியார்_ஆலயம்  #புனிதமானதருணம்(22.10.2018)
22/10/2018

#புனித_யோசப்வாஸ்_திருச்சிலுவைப் #பயணம்
#சாவகச்சேரி_லிகோரியார்_ஆலயம்
#புனிதமானதருணம்(22.10.2018)

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வானதூதர்களின் பீடப் பணியாளர்கள் தின விழா மிகவும...
07/10/2018

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய அரங்கில் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வானதூதர்களின் பீடப் பணியாளர்கள் தின விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் வானதூதர்களின் பீடப்பணியாளர்களின் தலைவர் செல்வி ந. நிதர்சினி தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக முன்னைநாள் ஆலய அருட்பணிச்சபை பொருளாளர் திரு.யேசுதாஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆலய அருட்பணிச் சபை செயளாலர் திருமதி புஷ்பா சாந்தன் அவர்களும் சிறப்பித்தனர். சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்பணி றெக்ஸ் சவுந்தரா அடிகளின் நெறிபடுத்தலில் சிறிய கலை நிகழ்வுகளும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

தனது 51 வது பிறந்தநாளை நினைவு கூறும் எமது அருட்தந்தை (ம. றெக்ஸ் சவுந்தரா) அடிகளாரின் பணி வாழ்வு சிறக்க  வாழ்த்துகிறோம். ...
04/10/2018

தனது 51 வது பிறந்தநாளை நினைவு கூறும் எமது அருட்தந்தை (ம. றெக்ஸ் சவுந்தரா) அடிகளாரின் பணி வாழ்வு சிறக்க வாழ்த்துகிறோம்.
( சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியம்)
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

26/09/2018

சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினால் முதல் முறையாக தயாரித்து வழங்கும் “வெளிச்சம்” குறுந்திரைப்படமானது எதிர்வரும் 30/09/2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு புனித லிகோரியார் ஆலய கலையரங்கில் வெளியீடு செய்வதோடு இக் குறுந்திரைப்பட கலைஞர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறும் இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அடிகளாரும் சிறப்பு விருந்தினராக திரு .க .அருந்தவபாலன் (போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு மையத்தலைவர் ). கவிஞர். த. நாகேஸ்வரன் . அவர்களும், குறுந்திரைப்படத்தை ஆய்வு செய்வதற்காக எதிரொலி பத்திரிகை ஆசிரியர் திரு. த. பிரபாகரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந் நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
-----------------------------------------------------------------
சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினர்.
நன்றி

09/09/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர்க்கான கருத்தரங்கும் ஒன்றுகூடலும். நாவற்குழி அற்புத அன்னை ஆ...
09/09/2018

09/09/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி கத்தோலிக்க இளையோர்க்கான கருத்தரங்கும் ஒன்றுகூடலும். நாவற்குழி அற்புத அன்னை ஆலயத்தில் காலை 10:00 மணிக்கு சாவகச்சேரி பங்குதந்தை அருட்திரு றெக்ஸ் சவுந்தரா அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் இளையோர்க்கான தலைமைத்துவம் எப்படியும் இன்றைய காலகட்டத்தில் போதைப் பொருள் பாவனையாள் இளையோர் எதிர்கொள்ளும் பாதக விளைவுகள் பற்றி விளக்கினார் இந்நிகழ்வில் சாவகச்சேரி பங்கை சேர்ந்த 40கும் அதிகமான இளையோர் பங்குபற்றினார்கள்

12/08/2018

Address

Chavakacheri
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சாவகச்சேரி கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share