Gateway of Christianity

Gateway of Christianity கிறிஸ்தவ வாசல்

ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?

† சிறிய வழிகள், எளிய செயல்கள் - இறையாட்சியின் சாவிகள் †இறுதித்தீர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். என் சிறுவயதில் நான் அடிக்...
12/03/2021

† சிறிய வழிகள், எளிய செயல்கள் - இறையாட்சியின் சாவிகள் †

இறுதித்தீர்ப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். என் சிறுவயதில் நான் அடிக்கடி வாசித்து இரசித்த, வியந்த, பயந்த விவிலியப் பகுதி இது. இந்த நிகழ்வை கற்பனை செய்து பார்க்கும்போது வியப்பாக இருக்கும். உலகில் உள்ள எல்லாரையும் - உலகம் தொடக்கமுதல் இன்று வரை - ஒரே தளத்தில் கூட்ட வேண்டும். இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி அரசர் பேச வேண்டும்.

இந்த நிகழ்வு சொல்வது ஒரே செய்திதான்:
மானிட மகனின் மாட்சியில் வலப்பக்கம் நிற்பதற்கு பெரிய தகுதிகள் எவற்றையும் இயேசு நிர்ணயிக்கவில்லை:

திருச்சட்டத்தை மனப்பாடம் செய்ய வேண்டும், பத்துக் கட்டளைகள் கடைப்பிடிக்க வேண்டும், இறையியல், விவிலியம் படிக்க வேண்டும், மெய்யியலில் தெளிவு வேண்டும், இந்த வேலை செய்ய வேண்டும், அந்த வேலை செய்ய வேண்டும், இவ்வளவு படித்திருக்க வேண்டும், இவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும், இவ்வளவு கையிருப்பு வேண்டும், இன்னென்ன பொருள்கள் வைத்திருக்க வேண்டும் - இப்படி எதுவும் இல்லை தகுதிகள் லிஸ்டில்.

இறையாட்சிக்குள் நுழைவதற்கான வழிகள் எல்லாமே சிறிய வழிகள்.

சிறிய வழிகள் வழியாக, சிறியவர்களுக்குச் சிறியவர்களாக மாறினால் போதும் - வலப்பக்கம் நின்றுவிடலாம்.

மேலும், இந்நிகழ்வில் ஆண்டவரே, அரசரே தன்னை சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார்.
1. பசித்தோருக்கு உணவு
2. தாகமுள்ளோருக்கு தண்ணீர்
3. அந்நியருக்கு வரவேற்பு
4. ஆடை இல்லாதவருக்கு ஆடை
5. நோயுற்றோரைச் சந்தித்தல்
6. சிறையிலிருப்போரைச் சந்தித்தல்
வெறும் ஆறு நிகழ்வுகள். ஆறும் சின்னஞ்சிறு நிகழ்வுகள். கையில் கொஞ்சம் பணமும், இருக்க ஒரு சிறிய வீடும், கொஞ்ச நேரமும் இருந்தால் இந்த ஆறையும் செய்து முடித்துவிடலாம்.
ஆனால், இதைச் செய்வதற்குக் கடினமாக இருக்கக் காரணம் என்னவென்றால், நாம் சிறியவர்களாக மாற மறுப்பதும், சிறியவர்களில் அவரைக் காண மறுப்பதும், சிறிய வழிகளைத் தேர்ந்தெடுக்க மறப்பதும்தான்.
மேலும், இவற்றைச் செய்வதால் இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் செய்யக்கூடாது. ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு மனநிலையில் நாம் இவர்களைப் 'பயன்படுத்தி' நம் இறையாட்சியைச் சம்பாதிக்க விரும்புவோம். ஒரு மனிதர் தன் சக மனிதரைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தானது.
மேலும், பசி, தாகம், அந்நியம், நிர்வாணம், நோய், தனிமை ஆகியவற்றை மானுடத்தின் முகத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.
இவை அனைத்தையும் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறது இன்றைய முதல் வாசகம் (காண். லேவி 19:1-2, 11-18): 'உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'
என்னை நான் அன்பு செய்வது மிக எளிது என்றால், அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் அப்படித்தானே!
சிறிய வழிகள், எளிய செயல்கள் - இறையாட்சியின் சாவிகள்

தைலம் ஊற்றிய தையல்இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்த போது இலாம...
08/03/2021

தைலம் ஊற்றிய தையல்

இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்த போது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. (அதன் விலை ஏறக்குறைய முந்நூறு தெனாரியம்). அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். (மாற்கு 14:3)

இன்று அகில உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

பெண்ணைத் தமிழ் இலக்கியம் தையல் என்று அழைக்கிறது. விவிலியம் காட்டும் தையலோடு தொடங்குவோம்.

இன்று நாம் சிந்திக்கும் நற்செய்திப் பகுதியை கிரேக்க மொழியில் படித்தோம். இதுவரை காணாத பல விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. அந்த விஷயங்களோடு பெண்கள் தினத்தையும், பெண்களையும் கொண்டாடுவோம்.

1. பெத்தானியா. இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் நற்செய்தியாளர்கள் இரண்டு ஊர்களின் பெயர்களை மட்டும் அடிக்கடி குறிப்பிடுகின்றனர்: ஒன்று, எருசலேம். இரண்டு, பெத்தானியா. எருசலேமைப் பற்றி எழுதும்போதெல்லாம் இயேசுவுக்கு வரும் எதிர்ப்பையும், அவரின் பாடுகளையும், இறப்பையும் குறிப்பிடுவார்கள். பெத்தானியாவைப் பற்றி எழுதும் போதெல்லாம் ஒருவகையான அமைதி, மகிழ்ச்சி இருப்பது போல எழுதுவார்கள். பெத்தானியா இயேசுவின் செல்லப்பிள்ளை. இயேசுவைச் செல்லப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட ஊர் பெத்தானியா. ஒவ்வொரு பெண்ணும் ஒரு பெத்தானியா. அப்படியென்றால் ஒவ்வொரு ஆணும் எருசலேமா எனக் கேட்காதீர்கள். பெண்ணால் மற்றவருக்கு அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்கும். பெண்மை இனிமையானது. அதன் இனிமை ஒருசில நேரங்களில் கசப்பது போல இருக்கும். ஆனால் அந்தக் கசப்பு கூட, 'என் இனிமையை நீ புரிந்து கொள்ள மாட்டியா?' என்று கேட்பது போலத்தான் இருக்கும்.

2. தைலம். தைலத்தைப் பற்றிச் சொல்லும் போது மாற்கு நற்செய்தியாளர் இரண்டு பெயரெச்சங்களையும், ஒரு வினைச்சொல்லையும் பயன்படுத்துகிறார். கலப்பற்றது. விலையுயர்ந்தது. பெண்ணின் அன்பும் அப்படித்தான். கலப்பற்றது. ஒரு ஆணைப் பொறுத்தவரையில் தான் செய்யும் பலவற்றில் ஒன்றுதான் அன்பு. ஆனால்; பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் செய்யும் ஒன்றே அன்பு மட்டும்தான். படிப்பு, வேலை, பொழுதுபோக்கு, அன்பு என எல்லாவற்றிலும் ஒன்றாக அன்பைப் பார்ப்பர் ஆண்கள். ஆனால் பெண்கள் படிப்பிலும், வேலையிலும், பொழுதுபோக்கிலும், உறவுநிலைகளில் அன்பு என்ற ஒன்றை அப்படியே கலந்துவிடுவர். 'ஏன் நான் பிசியா இருக்கேன்னு தெரியாதா?' என்று கோபப்பட்டுப் பாருங்களேன். அவள் அழகாகக் கேட்பாள்: 'பிசியா இருக்குற சரி. சாப்பிட்டியா?' இதுதான் கலப்பற்ற அன்பு. தைலம் முந்நூறு தெனாரியம் மதிப்பு உடையது என்கிறார் நற்செய்தியாளர். இயேசுவின் காலத்தில் ஒருவரின் நாள் சம்பளம் ஒரு தெனாரியம். அப்படியென்றால் இந்தப் பெண் தன் ஒரு ஆண்டு சம்பளத்தை இயேசுவுக்குச் செலவிடுகிறாள். இயேசுதான் பெரிதாகத் தெரிந்தாரே தவிர அவளின் வேலைப்பளு பெரிதாகத் தெரியவில்லை. பெண்களுக்குத்தான் முதன்மைப்படுத்தத் தெரியும். தைலச்சிமிழை உடைக்கிறாள் பெண். இது எதைக் காட்டுகிறது? தைலம் முழுமையாக இருந்தது. தைலம் புதிதாக இருந்தது. சிமிழை உடைத்தால் உடனே அதைப் பயன்படுத்த வேண்டும். அப்படியே அடுத்த நாள் வைத்தால் அது கசந்து விடும்! அங்கே கூடியிருந்த ஆண்களுக்கு 'ஏன் வீணாக்குகிறாய்?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பெண்களின் அளவுகோல்கள் வேறு. ஆண்கள் மற்றவரின் வங்கிக் கணக்கை வைத்து ஒருவரை எடைபோடுகின்றனர். ஆனால் பெண்கள் மனிதர்களை மனிதர்களாய் மட்டுமே எடைபோடுகின்றனர். ஒருவர் மேல் அன்பைக் காட்டத் தொடங்கிவிட்டால் காட்டிக் கொண்டே இருப்பார்கள். 'ஏய் லூசா! ஏன் இப்படி கிறுக்கு மாதிரி பண்ணுற?' என்று கேட்டுப் பாருங்களேன். மெல்லியதாய்ச் சிரிப்பார்கள். 'ஆம்...பாசமென்றால் கிறுக்குதானே!' என அவர்கள் சொல்வது போல இருக்கும்.

3. துணிச்சல். பெண்கள் என்றாலே பல நேரங்களில் துணிவு இல்லாதவர்கள் என்று தான் நாம் வரையறை செய்து வைத்திருக்கிறோம். ஆனால் பெண்ணிற்கு இயல்பாகவே துணிச்சல் உண்டு. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பலரை எதிர்கொள்கின்றாள் பெண்: கணவனை, பிள்ளைகளை, பெற்றோரை, உடன் பணியாளர்களை, உடன் பயணிப்பவர்களை, அண்டை வீட்டாரை. ஒவ்வொரு கட்டத்திலும் துணிச்சல் இருந்தால் தான் அவள் வெற்றி பெற முடியும். அவளின் அளப்பறிய துணிச்சல் வெளிப்படும் நேரம்...நம்மைப் பெற்றெடுக்கும் நேரம். ஒரு குழந்தை பிறக்கும் போது குழந்தை மட்டும் பிறப்பதில்லை. அங்கே பெண்ணும் புதிதாய்ப் பிறக்கிறாள். தைலம் உடைத்த தையிலின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நம் வாழ்வில் தங்கள் அன்பினால் நம் தலைகளில் தைலம் ஊற்றும் தையல்களை நினைத்துப் பார்ப்போம்.

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!

25/12/2018
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள்கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி  ...
24/12/2018

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்துக்கள்
கிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி உங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவாராக!

திருவருகைக் கால மெழுகுதிரிகள்திருவருகைக் காலத்தில் ஞாயிறு திருப்பலியில் 5 வாரங்களும், 5 மெழுகுதிரிகளை ஏற்றி இறைவருகையைக்...
24/12/2018

திருவருகைக் கால மெழுகுதிரிகள்

திருவருகைக் காலத்தில் ஞாயிறு திருப்பலியில் 5 வாரங்களும், 5 மெழுகுதிரிகளை ஏற்றி இறைவருகையைக் கொண்டாடுகிறோம்.

முதல் வாரம் :- (ஊதா) - மத். 24:44
நம்பிக்கையின் வர்த்தி
இரண்டாம் வாரம் :- (ஊதா) - மத். 3:1-12
தயாரிப்பின் வர்த்தி
மூன்றாம் வாரம் :- (றோஸ்) - எசா. 35:10
மகிழ்ச்சியின் வர்த்தி
நான்காம் வாரம் :- (ஊதா) - எசா. 9:6-7
அன்பின் வர்த்தி
ஐந்தாம் வாரம் :- (வெள்ளை) - லூக். 2:11
அமைதியின் வர்த்தி

இங்கு மெழுகு திரிகளை அடையாள முறையில் ஏற்றுவதன் மூலம், மெசியாவின் வருகைக்காக ஆயத்தமாய் எதிர்நோக்குவோம்.

திருவருகைக் காலத்தில் தயாரிப்பு
✤ சிறிய தவக்காலம் (Little lent))
✤ செபம்
✤ நோன்பு
✤ தர்மம்

நவம்பர் 15 முதல் கிறிஸ்மஸ் வரை நோன்பு பழக்கம் இருக்கிறது. இதனை பிலிப்பு நோன்பு (Philip’s past) என்று அழைப்பார்கள்.

ஆகவே இயேசுவின் வருகைக்காக தபம், செபம், நோன்பு, தர்மம் ஆகியவற்றில் பங்கெடுத்து ஆயத்தப்படுத்துவோம்.

† திருவருகைக் கால - ஒரு வரலாற்றுப் பார்வை †திருவருகைக் கால இறையியலானது கிறிஸ்து பிறப்பின் இறையியலைச் சார்ந்திருக்கிறது. ...
24/12/2018

† திருவருகைக் கால - ஒரு வரலாற்றுப் பார்வை †

திருவருகைக் கால இறையியலானது கிறிஸ்து பிறப்பின் இறையியலைச் சார்ந்திருக்கிறது. ஏனென்றால், நாம் எதற்காகக் காத்திருக்கிறோமோ அது நாம் எப்படி காத்திருக்கிறோம் என்பதை உறுதிசெய்கிறது. 'அட்வன்ட்" என்று அழைக்கப்படும் திருவருகைக்காலம் என்னும் வார்த்தை, லத்தின் வார்த்தையான 'வெனியோ" அதாவது 'வருகை" என்னும் வார்த்தையிலிருந்து வருகின்றது. இவ்வார்த்தை 'வருகைக்கு" என்று பொருள்படுகின்றது. ஏனென்றால், தொடக்ககால திருச்சபையில் கிறிஸ்து பிறப்பு விழாவினை காட்டிலும் கிறிஸ்துவின் வருகைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆகையினால் இரண்டாம் வருகையின் எதிர்பார்ப்போடு இறுதித் தீர்ப்பு பற்றிய சிந்தனை கிறிஸ்து பிறப்பினுடைய ஆண்டு கொண்டாட்டத்துடன் இணைந்திருந்தது. இதன் காரணமாக, உயிர்ப்பு விழா போன்று கிறிஸ்து பிறப்பு விழாவும் நான்கு வார தயாரிப்பு காலங்களைப் பெற்றது. இவ்வாறு மார்கழி 25க்கு முன் நான்கு வாரங்கள் கொண்ட தயாரிப்புக் காலமானது ஒரே மாதிரியாக அனைத்து திருச்சபைகளாலும் பின்பற்றப்பட்டவில்லையென்றாலும் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான தயாரிப்பின் காலம் ஒன்று நிச்சயமாக உருவாகியது.

வரலாற்றில் திருவருகைக் காலம்
தொடக்க கால திருவழிபாட்டுக் காலங்கள் மற்றும் விழாக்களின் தோற்றம் பற்றிய ஆய்வு பல சான்றுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றது. எனவே திருவருகைக் காலத்தின் தொடக்கம் பற்றிய ஆய்வில் கிடைத்த சான்றுகளை அவைகள் கிடைக்கப் பெற்ற நாடுகளின் அடிப்படையில் இங்கு தொகுத்து வழங்கப்படவுள்ளது. இம்முயற்சி திருவருகைக் காலத்தின் வரலாறு மற்றும் இறையியல் சிந்தனைகளை அறிந்துக் கொள்ள உதவிடும். திருவருகைக்காலம் பற்றிய மிகப் பழமையான சான்றுகள் உரோமையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக கிழக்கத்திய திருச்சபைகளோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட வட இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வட இத்தாலியிலிருந்து கிடைத்த சான்றுகள்
வட இத்தாலியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆறு சான்றுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவையாவன:

1) 4ம் நூற்றாண்டில் வட இத்தாலியிலிருந்து கிடைக்கப் பெற்ற தப்பறைக் கொள்கைகள் மற்றும் தப்பறைவாதிகளின் பட்டியல்.
2) மிலான் ஆயரான புனித அம்புரோஸ் அவர்களின் எழுத்துக் கடிதங்கள்.
3) தூரின் நகரின் மேக்ஸிமுஸ் எழுதிய குறிப்புக்கள்.
4) புனித பீட்டர் கிறிஸ்சோலோகஸ் அவர்களின் குறிப்புகள்.
5) பழங்கால வழிபாட்டு குறிப்புகள்
6) பெர்காமோ நகர திருவழிபாட்டு மன்றாட்டு தொகுப்பு நூல்

இக்குறிப்புக்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை பல்வேறு இறை வெளிப்பாடுகளின் நாள் என்றழைக்கின்றன. இறைவெளிப்பாடுகள் என்று பன்மையில் அழைப்பது இயேசுவின் பிறப்பானது பலருக்கு வெளிப்படுத்தப்பட்டதை (எ.கா. இடையர்கள், மூன்று ஞானிகள்) சுட்டிக்காட்டுகின்றது. மேற்கூறப்பெற்ற முதல் சான்று திருவழிபாட்டு ஆண்டில் நான்கு நோன்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டுகின்றன. அவையானவ: பிறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவி பெருவிழா ஆகியவற்றிற்கான தயாரிப்பு.

புனித அம்புரோஸ் தனது சகோதரியான மர்சலீனா என்பவர் கிறிஸ்து பிறப்பு விழாவன்று உரோமையில் கன்னிமை வார்த்தைப்பாடு வழங்கியதற்கு வாழ்த்தி எழுதிய நீண்ட கடிதத்தில் கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்பைப் பற்றி கூறுகின்றார். அதுபோலவே, மேக்ஸிமுஸ் நிகழ்த்திய மறையுரையில் தூயவரான மெசியாவின் பிறப்பை கொண்டாட அதன் தயாரிப்புக் காலத்தில் நம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். தனது மறையுரையில் இவ்வாறு கூறுகின்றார். 'முன் கடந்த பற்பல நாட்களில் நம் இதயத்தை தூய்மையாக்குவோம். நம் மனசாட்சியை சாந்தப்படுத்துவோம். மாசுமறுவற்ற நம் ஆண்டவரின் வருகையைக் கொண்டாடுவோம். அதன் மூலம் மாசற்ற மரியாயிடமிருந்து வந்த இறைமகனின் பிறந்த நாள் அவரின் மாசற்ற ஊழியர்களால் கடைப்பிடிக்கப்படும்.

திருவருகைக்காலத்தின் தொடக்கம் பற்றி இறையியல் ஆய்வில் முக்கியமான சான்று புனித பீட்டர் கிறிஸ்சோலோகஸ் (425 - 429) அவர்களின் குறிப்புகள் மற்றும் மறையுரைகளாகும். இவர் ரொலீனா நகரத்தின் ஆயராக இருந்போது வட இத்தாலியில் ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்பு சமூகப்பண்புகளோடு திருவழிபாட்டு சிறப்புகளோடும் கடைப்பிடிக்கப்பட்டது. புனித லூக்கா நற்செய்தியிலிருந்து கிறிஸ்து பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ள வார்த்தையின் அடிப்படையில் இந்த தயாரிப்புகள் நடந்தன. இதன் தொடர்ச்சயாக ஏழாம் நூற்றாண்டில் ரொவீனா நகரில் தொகுக்கப்பட்ட மன்றாட்டு தொகுப்பு நூல் இக்காலத்தின் அழகான இறையியலான கிறிஸ்துவின் மானிடப் பிறப்பு, அவரின் இறைத்தன்மை போன்றவற்றை வெளிக்கொணர்வதாக உள்ளது. இதே காலகட்டத்தில் வழக்கில் இருந்த பழங்கால வழிபாட்டுக் குறிப்புகள், மற்றும் பெர்களமோ நகர திருவழிபாட்டு மன்றாட்டு தொகுப்பு நூல் போன்ற குறிப்புகள் வழங்குகின்ற செய்திகளின்படி திருவருகைக்காலம் ஒருசில இடங்களில் ஐந்து வாரங்களுக்கும் வேறுசில இடங்களில் ஏழு வாரங்களுக்கும் கடைப்பிடிக்கப்பட்டன. மேற்கூறிய சான்றுகள் அனைத்தும் தயாரிப்பு காலமான திருவருகைக்காலத்தின் பழமையான மரபினை எடுத்துரைக்கின்றது..............................................நன்றி

இனிய காலை வணக்கம். இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக.✠✠✠✠✠✠...
08/06/2018

இனிய காலை வணக்கம். இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக.

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠
"விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்".............................மத்தேயு 5:18

இனிய காலை வணக்கம். இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக. ✠✠✠✠✠...
02/06/2018

இனிய காலை வணக்கம். இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக.

✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠✠

நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்...........................தி.பா:91:11

ஒரு சிறுவன் காட்டிலிருந்த ஒரு மரத்திடம் விளையாடுவது வழக்கம். அதன் கனியை உண்டு நிழலில் இளைப்பாறுவான். சிறிது காலம் அவன் அ...
01/06/2018

ஒரு சிறுவன் காட்டிலிருந்த ஒரு மரத்திடம் விளையாடுவது வழக்கம். அதன் கனியை உண்டு நிழலில் இளைப்பாறுவான். சிறிது காலம் அவன் அங்கு வரவில்லை. மரம் அவனை எதிர்பார்த்தது.

ஒரு நாள் வந்தான். மரம் விளையாட அழைத்தது. அவனோ 'நான் இப்போது பெரியவன் ஆகிவிட்டேன். எனக்கு விளையாட்டுப் பொருட்கள் வேண்டும். ஆனால் என்னிடம் பணம் இல்லை" என்றான். மரம் அவனிடம் 'என்னிடமுள்ள கனிகளைப் பறித்து விற்று நீ விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொள்" என்றது. அவனும் அப்படியே செய்தான். சிறிது காலம் கழித்தபின் ஒரு நாள் மரத்திடம் வந்து 'நான் வீடு கட்டப் போகிறேன்" என்றான். மரம் என் கிளைகளை வெட்டி வீடு கட்டிக்கொள்" என்றது. அவனும் அதை செய்தான். சிறிது காலம் கழித்து மரத்திடம் 'நான் பயணம் செய்ய வேண்டும். ஆனால் என்னிடம் படகு இல்லை" என்றான். மரம் என் அடி மரத்தினை வெட்டி படகு செய்துகொள்" என்றது அவனும் அவ்வாறே செய்தான். பல ஆண்டுகளுக்குப் பின் வயது முதிர்ந்தவனாக அம்மரத்திடம், வந்தான் எப்போதும் போல அவனை விளையாட அழைத்தது. அவன் எனக்கு வயதாகிவிட்டது. விளையாடும் அளவிற்கு தெம்பு இல்லை. நான் உன் அருகில்
படுத்து ஓய்வெடுக்கப் போகிறேன். என்றான். மரமும் அவனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டது.

"நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புக்
கொண்டிருக்க வேண்டும். என்பதே என்
கட்டளை தம் நண்பர்களுக்காக உயிரைக்
கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும்
இல்லை" (யோவான் 15:13-14)

Wish you Happy Christmas to all my friends. The love, Mercy, and Peace of Jesus Christ be born in your heart and home. T...
26/12/2017

Wish you Happy Christmas to all my friends. The love, Mercy, and Peace of Jesus Christ be born in your heart and home. Through this let us see the happiness and peace in others' lives as well. The abundant Blessing of God the Father, the Holy smile of Infant Jesus, and the power of the Holy Spirit be with you now and forever!!!!.

Address

Batticoloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gateway of Christianity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share