Kannkai Amman Kovil

Kannkai Amman Kovil temple in East Srilanka

With Arayampathy – I just got recognised as one of their top fans! 🎉
27/05/2026

With Arayampathy – I just got recognised as one of their top fans! 🎉

19/05/2026

அலங்காரப் பெண்ணேகற் பழியாத பெண்ணே
சின்னப்பெண் ணேயழகு செட்டிப்பெண் ணேயெங்கள்
தெய்வப்பெண் ணேசிந் தாமணிப் பெண்ணே
வன்னப்பெண் ணேகோவ லற்கினிய பெண்ணே
மானாகர் மகளாய் வளர்ந்ததொரு பெண்ணே
சொர்ணப்பெண் ணேகண் ணகைப்பெண்ணே யென்று
துரைராசர் தொழவந்த துய்யபெண் ணரசே.
வரபத்திர காளியென் றாடுமா காளி
மகமாயி யீசுபரி வல்லமைசெய் சத்தி
கரமுத் தலைச்சி சூலி கபாலி
களங்கற்ற பொன்னி விளங்குற்ற கன்னி
வரமுற்ற நரசிங்கி ஜெயவீர பத்தினி
வடுகிமா தங்கியென வந்ததிரி சூலி
உரமுற்ற புகழ்முத்து மாரியுப காரி
வராகியா னந்தியென வந்தபத் தினியே.
துர்க்கை பிடாரி மிடாரி கடல்நாச்சி
சோதிசிவ மங்கலி சுவாதிதிரு நீலி
முக்கண்ணி காடேறி யுச்சியுரு மத்தி
முன்னோடி பின்னோடி மோகனக் கன்னி|
அக்கினிக் கன்னிபொன் னம்மானைக் கன்னி
அன்னவூஞ் சற்கன்னி ஆலாத்திக் கன்னி
திக்குத்திக் கெட்டுநவ சக்திகள்வ ணங்கவரு
சேனாபதிப் பத்தி னிக்கன்னி நீயே

18/05/2026

உவகை கொள்ளப் பறையோசை, நிறைவு கொள்ள உடுக்கோசை, உனக்கெனவே ஒலித்திருக்கோம் — வாருமம்மா! உன் வரவை காத்திருக்கிறோம் — வாருமம்மா! மேலான வேல்விழியாள், பாலாறும் மென்மொழியாள், பரிவான கண்ணகியே — வாருமம்மா! மேலான வேல்விழியாள், பாலாறும் மென்மொழியாள், பரிவான கண்ணகியே — வாருமம்மா! பேழையுள் அமர்ந்தவளே, காரிகை கண்ணகியே, ஆதிசக்தி அபிராமி — வாருமம்மா!

16/05/2026

அண்டங்கள் அனைத்தும் அழகுற அமைத்து
அசைவுறச் செய்தவளே
ஆதிசங்கரரின் பாதியே தாயே
ஜோதிஸ்வரூபிணியே

அம்புஜலோசனி அகிலாண்டேஸ்வரி
அபிராம சுந்தரியே
அருளாட்சி செய்திட பேழையுள் அமர்ந்த
ஆரையம்பதி கண்ணகியே

கமலாம்பிகையே கருமாரித் தாயே
கௌரி மனோகரியே
கற்பகாம்பாளே காமாட்சி அம்மையே
காளி மகேஸ்வரி அம்பிகையே

ஆதிகாரணி அன்னபூரணி
அதிரூப சுந்தரியே
புலவன் நாகனின் புகழோங்க வைத்த
ஆரையம்பதி கண்ணகியே

#கண்ணகை #ஆரையம்பதி

14/05/2026

மேலான வேல் விழியாள்
பாலாறு மென்மொழியாள்
பரிவான கண்ணகையே வாருமம்மா

மேலான வேல் விழியாள்
பாலாறு மென்மொழியாள்
பரிவான கண்ணகையே வாருமம்மா

எங்கள் ஆரையம்பதி கண்ணகையே
வாருமம்மா

#கண்ணகை #ஆரையம்பதி

12/05/2026

உணர்ந்துதான் அருள்புரியும் அன்னையரும் நீயே
உத்தமர்கள் மதிக்கின்ற தெய்வமும் நீயே
கணக்கற்ற செல்வங்கள் தருபவளும் நீயே
கதியற்ற வாழ்வதனைக் காத்தவளும் நீயே

கணக்கில்லா மேன்மையதை அளித்தவளும் நீயே
பேழையதில் வீற்றிருந்து அருள்பவளும் நீயே
சுணக்கமின்றி எமைக் காக்கும் சுந்தரியும் நீயே
ஆரையம்பதியிலுறை கண்ணகித் தாயே

கண்ணகியாய் மாங்கனியில் வந்துதித்தாயே
கற்புடைய பத்தினியாய் துலங்கி நின்றாயே
மண்ணுள்ளோர் நலம் பெறவே அருளளித்தாயே
மக்கள் மனை செழிக்கவோ விளங்கி நின்றாயே

விண்ணுலகோர் பேற்றிடவே வாழ்ந்து வந்தாயே
விடிவெள்ளியாகவே பறந்து நின்றாயே
உண்மைநெறி செழிக்கவே அறம் வளர்த்தாயே
ஆரையம்பதியிலுறை கண்ணகித் தாயே

#கண்ணகை #ஆரையம்பதி

11/05/2026

கண்ணகித்தாயாக வந்தவளும் நீயே
கற்புநெறி தவறாத பத்தினியும் நீயே
உண்மை செரூபமாய் நின்றவளும் நீயே
உத்தமியே பத்தினியே காத்திடுவாள் நீயே

கண்ணகியாய் எங்களையும் காப்பதும் நீயே
கண்கண்ட தெய்வமாய் விளங்குவதும் நீயே
பணபுசெறி மக்கள் வாழ் ஆரையம் பதியில்
பக்திநெறி தெய்வமாதாய் விளங்குவதும் நீயே

ஆரையம்பதியில் மாதரசி கண்ணகிக்கு வைகாசி திருச்சடங்கு-----------------------------------வரலாற்று சிறப்புமிக்க ஆரையம்பதியில...
06/06/2025

ஆரையம்பதியில் மாதரசி கண்ணகிக்கு வைகாசி திருச்சடங்கு
-----------------------------------

வரலாற்று சிறப்புமிக்க ஆரையம்பதியில் மாதரசி கண்ணகியின் வைகாசி திருச்சடங்கு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (03-06-2025)ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை(11-05-2025)ஆம் திகதி கதவடைத்தல் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு இனிதே நிறைவுபெறவுள்ளது.

இவ்வருடாந்த திருச்சடங்கில் அம்மன் எழுந்தருளல் பண்ணல், கும்ப ஊர்வலம், கலியாணக்கால் வெட்டுதல், கூறைதாலிச் சடங்கு, அதிகாலை கலியாணச் சடங்கு, பச்சைகட்டி சடங்கு, கப்பல்கார சடங்கு, குளிர்த்தி பாடுதல் உட்பட தினமும் அதிகாலைச்சடங்கும், மாலைச்சடங்கும் கண்ணகியம்மன் ஆலய பிரதம கட்டாடியார் த.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த உற்சவ காலத்தில் அடியார்கள் கற்பூரச்சட்டி எடுத்தல்,காவடி எடுத்தல்,அங்கபிரதசனம் எடுத்தல்,மற்றும் அம்பாளுக்குரிய நேர்த்திக்கடன் பொருட்களை ஒப்படைத்து பிணி நீங்கி இன்புற்று வாழ்வதற்கு கண்ணகி அம்பாள் அருள்பாலித்து காத்தருளுவாள் என்பது கிராமியத் தெய்வ வழிபாட்டின் சிறப்பம்சமாகும்.

பத்தினி கண்ணகி விழாக் காலம்தமிழ் நிலத்தின்  பெரும் தெய்வம் கண்ணகி------------------------------"வடபேர் இமயத்து வான் தரு ...
02/06/2025

பத்தினி கண்ணகி விழாக் காலம்
தமிழ் நிலத்தின்
பெரும் தெய்வம் கண்ணகி
------------------------------
"வடபேர் இமயத்து வான் தரு சிறப்பிற்
கடவுட் பத்தினி கற்கால் கொண்ட பின்
சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர் கதிர்முடி யேற்றிச்
செறி கழல் வேந்தன் தென் தமிழாற்றல்"
சிலப்பதிகார நீர்ப்படைக் காதை வட இந்திய கனக விசயன் தலை சுமந்து கல் எழுப்பிய வரலாற்றை சொல்லி நிற்க
நம் மரபுவழிப்பட்ட பத்ததி முறை மறந்து வடமொழி வளக்காற்றில் கண்ணகிக்கு பூசையும் புனற்காரமும் செய்வது நம் தன்னிலை மறந்த செயலாகும்.
கண்ணகிக்கு வழிபாட்டுக்கு சமஸ்கிருத சுலோகங்கள் உண்டா.கண்ணகிக்கு பதிலாக சமஸ்கிருத மரபிலான தெவங்கள் ஆவாகணம் செய்யப் படுகிறதா.
இரண்டு எதிர் எதிர் மரபுகள் ஒன்றிணைய முடியாது.ஒரு மரபு ஆதிக்க மனோநிலை சார்ந்தது நம் அடிப்படைப் பண்பாட்டை அழித்தொழித்து.எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்கும் மனோபாவம் கொண்டது.
தமிழ் முறைமையிலான மந்திர முறைமைகள் நம் பண்பாட்டில் காலம் காலமாக தொடர்வது.
மதுரையை எரித்த கண்ணகி ஈழ நிலத்தில் வந்து குளிர்ந்ததாக கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.இது புராணக் கதையல்ல மனுசியாக வாழ்ந்து தெய்வமானவளது கதை.
இக் காலத்தில் நடைபெறும் பத்தினியம்மன் கண்ணகி சடங்கின் பேசு பொருள் குளிர்த்தி ஆடல் அல்லது பாடல் மரபார்ந்த முறைமை சார்ந்தது.

கிழக்கில் இன்னமும் பெரும்பாலான கோயில்களில் கண்ணகித் தாயாக பத்தினி அம்மனாகவே கொண்டாடப் படுகிறாள் சமஸ்கிருதமயமாகாமல் தமிழ் நிலத்து தெய்வமாய்
தாயே குளிர்ந்தருள்வாய் என கொண்டாடப்படுகிறாள்.இனி வரும் காலம் எல்லாம் மரபு மாறாத கண்ணகி வழிபாட்டை தமிழ் மந்திர மரபில் தொடர்வோம்.
இன்று தொடங்கும் கதவு திறந்தலுடன் ஏழு நாள் சடங்கு முக்கியப்பட்டு குளிர்த்தி ஆடலுடன் முடிவடையும்.சில இடங்களில் மூன்று நாள் சடங்காகவும் ,கோராவெளி போன்ற இடங்களில் ஒரு நாள் சடங்காகவும் நடைபெறுகிறது.

கிழக்கில் மக்கள் வாழ்வியலோடு ஒரு பண்பாட்டு படையலாக கண்ணகி வழிபாடு உள்ளது.
திருகோணமலையில் பத்தினித் தாய் ,பத்தினித் தெய்வம் என கண்ணகி கொண்டாடப் படுகிறாள்.இங்கு ஒரு நாள் சடங்காகவே பத்தினி சடங்கு உள்ளது.
இந்த மரபுகளின் ஒரு கூறாகவே நாம் வற்றாப்பளை கண்ணகியையும் நாம் பார்க்க வேண்டும்.
கண்ணகி சடங்கு வெறுமனே ஒரு வழிபாடு மாத்திரமல்ல அது கலை பண்பாட்டு இலக்கிய செல் நெறியும் கூட.கண்ணகி வழக்குரை,கோவலனார் காதை,கோவலன் கூத்து,கண்ணகி காவியம்,கண்ணகி சிந்து,கண்ணகி வசந்தன் என இலக்கியமாகவும் கலையாகவும் விழாக்கோலம் பூணும் ஒரு காலம் இந்த நாட்கள்.

வைகாசித் திங்கள் வருவேன் என்று வரிசைக்கிசைந்து விடை கொடுத்தார் என கண்ணகி குளிர்த்தி கூறும் இந்த நாட்கள் மட்டக்களப்பில் கண்ணகி சடங்கில் நாள் தோறும் புதிய புதிய கூத்துக்கள்
அரங்கேறும் சொர்ணாளி இசையும் பறையும் இசைக்க நாம் மயங்கிக் கிடக்கும் காலம் இது.
தமிழ் நிலத்துத் தெய்வமாய் கண்ணகியை இன்னும் இன்னும் காலம் முழுமைக்குமான ஒரு மரபை பண்பாட்டைக் கொண்டாடுவோம்.

மட்டக்களப்பில் வைகாசி மாதம் கண்ணகி மாதம் -------------------------------சிலப்பதிகாரம்தொடக்கம் கண்ணகி வழக்குரை வரை  தமிழர...
02/06/2025

மட்டக்களப்பில் வைகாசி மாதம் கண்ணகி மாதம்
-------------------------------
சிலப்பதிகாரம்தொடக்கம் கண்ணகி வழக்குரை வரை தமிழரிடையே கண்ணகி இலக்கியங்கள் மலிந்து கிடக் கின்றன
இதனை விட கண்ணகி பற்றிய இலக்கியங்கள் மலையாளத்திலும் சிங்களத்திலும் இருக் கின்றன
இந்த வகையில் தமிழ்நாட்டின் புராதன தொன் மமான கண்ணகி தொன்மம் இந்தியாவின் தென் மண்டலத்திற்குரிய
தொன்மங்களுள் முக்கியமானதோர் தொன்மம் ஆகும்
சிலப்பதிகாரம்
பற்றியும்
கண்ணகி இலக்கியங்கள் பற்றியும்
பல பதிப்புகளும்
பல ஆய்வுகளும் வந்துள்ளன
ஆய்வுகள் ஒருபுற மாக
அது மக்கள் வாழ் வியலாக நிலை பெற்று நிற்கிறது
தமிழ்நாட்டிலே சிலப்பதிகாரமும் கண்ணகியும்
அரசியலாக மாற
ஈழத்திலே
கண்ணகி இலக் கியங்களும் கண் ணகி வழிபாடும்
வாழ்வியலாக மாத்திரமன்றி
பண்பாட்டு அரசியலாகவும்
மாறியுள்ளது
இரண்டு நாட்டு வரலாறுகளும் சூழல்களும் இதற்கான காரணங்களாகும்
அந்த வகையில் மிகவலிமை வாய்ந்த ஒரு தொன்மம் கண்ணகிகதை
தமிழகத்தில் அவள் கண்ணகி என்றால்
ஈழத்திலே அவள்
கண்ணகை அம்மன்
அம்மாள் ஆச்சி
கண்ணகைத் தாயார்
கி.பி எட்டாம் நூற்றா ண்டுக்கு பிறகு வடமொழி புராண இதிகாச கதைகள் தமிழ்நாட்டில் புகுந்து இந்தத் தொன்மங்களை ஓரங்கட்டி விட்டன
மீண்டும் அறிஞர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் சிலப்பதிகாரத்தைக் கண்டுபிடிக்கின்றனர்
இடைக்காலத்தில்
உயர் குழாமும் மேட்டுக்குடியினரும் கண்ணகியை மறந்தார் ஆயினும் மக்கள் மறக்கவில்லை
அந்த நினைவை அவர்கள் தமிழகத்திலும் கேரளத்திலும்
ஈழத்திலும் தொடர்ச்சியாகப் பேணி வந்துள்ளனர்
சிலப்பதிகாரக் கண்ணகி
மதுரையை எரிக்க முற்பட்ட போது அக்கினியை பார்த்து
'பார்ப்பார் அறவோர் பத்தினிப் பெண்டிர்"
இவர்களை அழிக்க வேண்டாம் என்று கூறுகிறாள்
ஈழத்துக் கண்ணகியோ
"எச்சேரி வந்தாலும்
இடைச்சேரி வேகாது
பச்சேரி வெந்தாலும்
பறைச்சேரி வேகாது"
பார்த்துக்கொள் என்று சூரியனை வேண்டுகிறாள்
இந்த வகையில் கண்ணகி ஓர் மக்கள் தெய்வம்
அடிநிலை மக்களும் போற்றிய தெய்வம்
மக்கள் தெய்வமாக கண்ணகி முகிழ்த்தமைக்கு
வரலாறு
சமூகவியல்
பொருளியல்
பண்பாட்டியல்
காரணங்கள் உண்டு
இந்த மாதம் மட்டக்களப்பில்
கண்ணகி மாதம்
ஊர் ஊராய்க் கூத்தாடும் ஊர் அம்மா
என்று மட்டக்களப்பை ஒரு கவிஞன் பாடினான்
இன்றோ வைகாசி மாதத்தில் ஊர் ஊராய்
கண்ணகி சடங்குகள் நடைபெறுகின்றன
சடங்குகள்
விழாவாகி
உற்சவங்களாகி
வருவதும்
வழிபாடு செய்வோரும்
வழிபாட்டு முறைகளும்
வேகமாக மாறி வருவது
ஒரு பண்பாட்டியல் ஆய்வாளனுக்குரிய ஆய்வுப்பொருளும் ஆகும்
பல ஆண்டுகளுக்கு முன்
கண்ணகி இலக்கிய விழா
மட்டக்களப்பில் நடந்தேறியது
ஆய்வு மகா நாடாகவும்
மக்கள் விழாவாகவும் அது வடிவமைக்கப்பட்டது
இரண்டு மூன்று நாட்கள் நடைபெற்றன
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் அறிஞர்களும் கலைஞர்களும் பங்கு கொண்டனர்
அப்போது அந்த விழாக் குழுவினர் ஒரு முக்கிய செய்தியைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு
அனுப்பி வைத்தனர்
அதில் ஒன்று கண்ணகி பற்றிய ஆய்வுப் புலம் ஒன்றை நிறுவுங்கள் என்பதாகும்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள
இந்து நாகரீகத்துறை
மெய்யியல் துறை
நுண்கலைத் துறை
தமிழியல் துறை
ஆகியனவும்
விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுகத்தில் உள்ள நடனநாடகத்துறை
இசைத்துறை
கட்புலத்துறை
ஆகினமும் இணைந்து
ஒன்றாக திட்டமிட்டு செயல்படுவதன் மூலம்
கண்ணகி கற்கைப் புலம் ஒன்றைத் தோற்றுவிக்கலாம்
கீழே தரப்பட்டுள்ள
கண்ணகி அம்மன் சடங்கு பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பரங்கள்
எந்தெந்த நாட்களில் எந்தெந்த இடங்களில் கண்ணகி உற்சவங்கள் நடைபெறுகின்றன
என்பதனை காட்டுகின்றன
இதனை தனது முகநூலில் வழங்கிய அந்த அன்பருக்கு எனது நன்றிகள்

பேராசிரியர் சி. மௌனகுரு

Address

Old Road, Arayampathy
Batticaloa
30150

Alerts

Be the first to know and let us send you an email when Kannkai Amman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category