13/01/2026
”சப்த கன்னியர்” மற்றும் “சப்த மாதாக்கள்” இரண்டும் ஓன்று அல்ல. பல இடங்களில் இரண்டையும் ஓன்றாக குழப்பி வருகிறார்கள். அது பெரும் பிழை ! இரு பிரிவினரின் மூலம், தத்துவம், வழிபாட்டு நோக்கம், சமூகப் பின்புலம் ஆகியவற்றில் தெளிவாக வேறுபடுகின்றன.
சப்த கன்னியர் (Saptha Kanniyar) வழிபாடு என்பது ஒரு பாரம்பரியத் தெய்வ வழிபாடாகும், குறிப்பாக தென்னிந்திய கிராமிய மற்றும் சக்தி (பெண் தெய்வ) ஆராதனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
இதுவரை அதிகம் அறியப்படாத சப்த கன்னியர்கள் பெயர்கள் கீழே...
1.பட்டாரகி கன்னி, (ராஜகன்னி)
2.தேவகன்னி (சுரக்கன்னி)
3.பத்ம கன்னி
4.சிந்து கன்னி
5.கிரி கன்னி
6.வனக் கன்னி
7.பூமி கன்னி
சப்த கன்னியர் என்பது கிராம எல்லை, சுடுகாடு, வயல், நீர்நிலைகள், வீதி சந்திப்பு போன்ற இடங்களில்
காவலர்களாக கருதப்பட்ட பெண் ஆவிகள்.
இவர்கள் தேவர்களின் மனைவிகள் அல்ல,
தேவர்களின் சக்தி நிழல்களும் அல்ல.
காணா-சக்தி காவலர்களாக கருதப்பட்ட பெண் ஆவிகள்.
திருமணம் செய்யாதவர்கள். (கன்னிகள்)
கிராமங்களில் குழந்தை மரணம், தொற்று நோய், பிசாசு, கண் திருஷ்டி ஆகியவற்றை கட்டுப்படுத்துபவர்கள். சில இடங்களில் ஏழு சகோதரிகள் எனவும், சில இடங்களில் ஏழு திசை சக்திகள் எனவும் கருதப்படுவர்.
இவர்களுக்கு பெரும்பாலும்..இரவு பூஜை தான் !
விளக்கு, கறுப்பு எள், அரிசி, சில இடங்களில் ரத்த பலி பூஜை ! (பலி பூஜை இவைகளுக்கு மிகவும் உயர்ந்தது.)
ஆகம மந்திரம் இல்லை. பிராமண பூசை இல்லை.
மலை–காடு–எல்லைப் பகுதிகளில் ஏழு கற்கள் / ஏழு சிறு பெண் சிலைகள் வைத்து முன்னோர் வழிவழியாக வழிப்பட்டனர். “ஏழு அக்காள் / ஏழு அம்மன்” எனவும் இடத்துக்கு இடம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுவார்கள். கார்த்திகை, ஆடி மாதங்களில் விசேஷ இரவு வழிபாடு உண்டு.
கிராமங்களில் நோய், மாடு மரணம், குழந்தை திடீர் இறப்பு → சப்த கன்னியர் கோபம் என நம்பிக்கை. பிரச்னைகளுக்கு சாமி ஆடி வாக்கு சொல்லுதல் மூலம் பக்தர்களுக்கு சமாதானம் கிடைக்கும்.
மீனவர் சமூகத்திலும் சில இடங்களில் சப்த கன்னிகள் வழிபாடு உண்டு. திடீர் காய்ச்சல், அம்மை, வாந்தி → கன்னியர் சீற்றம் என கருதுவர்.
கடலுக்கு முன் விளக்கு ஏற்றி பொங்கல் வைத்து வழிபடுவர்.
கொங்கு மண்டல பகுதியில்...
“ஏழு பெண் தெய்வம்” என அழைக்கப்படுகிறாள். – தனிப் பெயர்கள் இல்லை.
மழை தவறினால் → கன்னியர் வழிபாடு!
மரத்தடியில் சீரான ஏழு கல் நட்டு, சிவப்பு துணி உடுத்தி சப்த கன்னியர் வழிபாடு செய்வர்.
சாமி ஆடும் பெண்கள் மூலம் “வாக்கு” பெறுவர்.
சப்த கன்னி வாக்கு சொல்லும் பெண்கள் ..நாங்கள் ஏழு பேர்” என்ற கூட்டு குரல் கொடுப்பர்.
பனை மரம் அருகில், சுடுகாடு அருகில் சப்த கன்னி நடமாட்டம் கண்டதாக காய்ச்சல் கண்டவர்கள் கூறுவதுண்டு. அமாவாசை இரவு வழிபாடும் சிலர் செய்வர்.
(அடுத்த பதிவில் சப்த மாதாக்கள் என்பவர்கள் யார்? -விளக்கம் )
-யாணன்