சிவன் ஆலயம், நாவற்குடா, மட்டக்களப்பு. Sivan Temple, Navatkudah

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • சிவன் ஆலயம், நாவற்குடா, மட்டக்களப்பு. Sivan Temple, Navatkudah

சிவன் ஆலயம், நாவற்குடா, மட்டக்களப்பு. Sivan Temple, Navatkudah சிவன் ஆலயம்
சேமிப்பு கணக்கு இலக்கம் - 2887243
இலங்கை வங்கி, மட்டக்களப்பு கிளை

"ஸ்ரீ காசிலிங்கேஸ்வரர் ஆலயம்"

கிழக்கிலங்கையில் நாகர் வாழ்ந்ததற்கும் 18ம் நூற்றாண்டில் நாவற்குடாவில் ஆதிநாகர் வழிபாட்டுத்தலமாக இவ்வாலயம் கட்டப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன.

 #பொதுக்கூட்டம் 12.10.2025 மாலை 5.00 மணி
27/09/2025

#பொதுக்கூட்டம்
12.10.2025 மாலை 5.00 மணி

07/09/2025
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏நாவற்குடா சிவன் ஆலயத்தில் வருகின்ற 05.09.2025 அன்று வெள்ளிக்கிழமை அன்றைய தினம் பிரதோஷ நாள் ஆகும்...
04/09/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

நாவற்குடா சிவன் ஆலயத்தில் வருகின்ற 05.09.2025 அன்று வெள்ளிக்கிழமை அன்றைய தினம் பிரதோஷ நாள் ஆகும். எனவே அன்றைய தினத்தில் சிவன் ஆலயத்தில் அம்மனுக்கான கொடிஸ்த்தம்பம் ஸ்தாபனம் பண்ணும் நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை 9.00 மணியளவில் இசை நடனக்கல்லூரி மாணவ மாணவிகளினால் பக்தி காணங்கள் இசைக்கப்பட்டு அதனைத்தெடர்ந்து கொடிஸ்தம்பம் ஸ்தாபனம் பண்ணும் நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினத்தில் சிவன் ஆலயத்திற்கு இந்தியாவில் இருந்து உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தைச்சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட அடியார்கள் வரவிருக்கின்றார்கள். அவர்களினால் சிவ வாத்தியம் இசைக்கப்பட்டு பிரதோஷ பூசை செய்யப்படும். வருகின்ற அடியார்களுக்கு சிவசின்னமான உருத்திராட்சம் அணிவிக்கப்படும். அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.
தவறாது சகல பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி 🙏🙏🙏.

இறைபணியில்
நாவற்குடா சிவன் ஆலய நிர்வாகத்தினர்

02/07/2025

சுற்று மண்டப கொங்கிறீட் இடும் வேலை...
02.07.2025

26/05/2025
சிவதொண்டு செய்வதால் மரணத்தையும் வெல்ல முடியும்.ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு, உள்ளூர தயக்கம்! கா...
14/05/2025

சிவதொண்டு செய்வதால் மரணத்தையும் வெல்ல முடியும்.
ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு, உள்ளூர தயக்கம்! காரணம்,
அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது;
அதை அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல், ”ஐயா…எனக்கு நிறைய வேலைகள் உள்ளன… உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும்! நாளை காலையில் என்னை வந்து பாருங்கள்!” என்றார்.
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது ,
மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது!
அப்போது, லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க…சற்றைக்கெல்லாம் பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே, சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்.. அந்த பாழடைந்த சிவன் கோயில் தென்பட……ஓடோடிச்சென்ற அவன், கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்.
மண்டபத்தில் நின்றவாறே, கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான்! தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக் கொண்டதோடு நில்லாது…..
அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து….
ராஜகோபுரம் … உட்பிராகாரங்கள் மற்றும் மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து …. வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி…….. இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க…….
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் அவனை கொத்த தயாராக இருந்தது!!
சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும், மண்டபம் ‘ கிடுகிடு ‘ வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது!
இப்போது மழையும் நின்று விட்டிருக்க ….விவசாயியும் வீடு போய் சேர்ந்தான்:
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும்!
‘எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ‘ பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய, அவரது கணக்கு சரியாகவே இருந்தது!
பின், ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ….
‘இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால், அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து, கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் ‘ என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது!
‘ஒரு ஏழைக்கு, சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் ‘
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க …. அவனோ, வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி!!
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும்!
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும்!

(Copied)

18/03/2025

பாணலிங்கங்களை பெற்றுத்தரவிரும்பும் சிவனடியார்கள் சிவன் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு முன் பதிவுகளை செய்து கொள்ளவும்.
(+94 77 361 9230 / +94 77 387 6361)

மேலும் புராதன கோயிலை புனரமைத்து பூசைகள் நடைபெறச் செய்யும் மகத்தான பணியில் தாங்களும் இணைந்து பேறுபெறுங்கள். ஆலயத்தில் மீதமுள்ள திருப்பணி வேலைகளை விரைவில் முடிக்க அடியார்களின் உதவிகளை ஆலய திருப்பணிக் குழுவினர் நாடிநிற்கின்றனர். தங்களின் உதவிகளை நேரடியாக வழங்கவோ அல்லது வங்கி கணக்கில் வைப்பிலிடவோ முடியும்.

(சிவன் ஆலயம், இலங்கை வங்கி, மட்டக்களப்பு கிளை கணக்கிலக்கம் - 2887243)

13/03/2025

புல்லினால் ஒரு கோடி..
புதுமண்ணால் பத்து கோடி...
செல்லுமா ஞாலந்தன்னில் செங்கல்லால் நூறு கோடி..
அல்லியங் கோதை கேளாய்,
அறன் அரியிக்கு கல்லினால் செய்வித்தோர் கைலாயம் விட்டு அகலார்.

- பரஞ்சோதி முனிவர்

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இன்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன் நாகர் காலத்தில் அமைக்கப்பட்டதற்கான...
11/03/2025

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இன்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன் நாகர் காலத்தில் அமைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை கொண்ட பழைமையான ஆலயம், சிவாலயமாக தற்பொழுது முதன் முறையாக திருக்குடமுழுக்கு காண திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாலயத்தின் சிறப்பை மெருகூட்ட தனியான சனீஸ்வரர் சந்நிதி, கொடிமரத்துடன் கூடிய அம்மன் (மனோன்மணி) சந்நிதி மற்றும் கருவறையினை சுற்றி காசி நர்மதா நதியில் எடுக்கப்பட்ட 108 பாணலிங்கங்களை பிரதிஷ்டை செய்து எமது ஆலயம் மிகச்சிறப்பானதும், கிழக்கில் 108 பாணலிங்கம் அமையப்பெறும் முதல் சிவாலயமாகவும் நிர்மாணிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அமைப்பெறும் 108 பாணலிங்கங்களையும் தனித்தனி உபயமாக செய்து அதனை தங்கள் கைகளால் பிரதிஷ்டை செய்யும் பாக்கியம் அடியவர்களுக்கு கிடைக்கவிருக்கின்றது. எனவே பாணலிங்கத்தினை பெற்றுத்தரவிரும்பும் சிவனடியார்கள் சிவன் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு முன் பதிவுகளை செய்து கொள்ளவும்.
(+94 77 361 9230 / +94 77 387 6361)
மேலும் புராதன கோயிலை புனரமைத்து பூசைகள் நடைபெறச் செய்யும் மகத்தான பணியில் தாங்களும் இணைந்து பேறுபெறுங்கள். ஆலயத்தில் மீதமுள்ள திருப்பணி வேலைகளை விரைவில் முடிக்க அடியார்களின் உதவிகளை ஆலய திருப்பணிக் குழுவினர் நாடிநிற்கின்றனர். தங்களின் உதவிகளை நேரடியாக வழங்கவோ அல்லது வங்கி கணக்கில் வைப்பிலிடவோ முடியும்.

(சிவன் ஆலயம், இலங்கை வங்கி, மட்டக்களப்பு கிளை கணக்கிலக்கம் - 2887243)

https://maps.app.goo.gl/Cwwp9Rbze5oi1nMNA?g_st=iw

#பாக்கியம் அருளும் பாணலிங்கம் #
இயற்கையிலேயே இறையம்சம் பொருந்தியதாக உள்ள பல பொருட்களில் பாணலிங்கம் ஒன்று. இது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, பாணம் எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.

கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பெருமளவுக்கு கிடைக்கின்றன.

பாணாசுரன் என்ற அசுரன், சாஸ்திரங்களின் உள்ளர்த்தங்களை, அதற்குத் தகுந்த பெரியவர்களிடம் கேட்கும் பழக்கம் கொண்டவன். அவ்வாறு கேட்டதன் வாயிலாக, சிவலிங்க வழிபாட்டின் மகிமையையும், சிவபூஜை செய்வதன் பலன்களையும் மானசீகமாக உணர்ந்து, அதைச் செய்ய விரும்பினான். அதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவன் முன்பாக தோன்றி, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

பாணாசுரன், சிவபெருமானிடம் ‘ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்கு 14 கோடி சிவலிங்கங்கள் வேண்டும்’ என்று கேட்டான்.

அவனது வேண்டுதலின்படியே சிவபெருமான் வரத்தை அளித்தார். தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்கு 14 கோடி சிவலிங்கங் களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணா சுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்க திருமேனிகள் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

பாணாசுரன், தான் வழிபட்ட சிவலிங்கங்களை புண்ணிய தலங்களான ஸ்ரீசைலம், கங்கை, நீலகண்டம், நேபாளம், யமுனை, நர்மதை, கன்னியாகுமரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களில் ஸ்தாபித்து வழிபட்டான். அத்தகைய சிவலிங்கங்கள் தற்போதும் பரவலாக காணப்படுகின்றன. சிறிய அளவில் இருக்கும் லிங்க வடிவம் முதல், ஒரு அடி நீளத்துக்கும் மேல் அளவு கொண்ட லிங்கங்கள் வரையில் அவனால் வழிபடப்பட்டன. அவன் மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்திருந்த காரணத்தால், அந்த லிங்கங்களில் எல்லா காலத்திலும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.

நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் பாணலிங்கத்தில், வெடிப்பு அல்லது பிளவுகள் இருந்தால் அவற்றை வைத்து பூஜைகள் செய்வது கூடாது. பாணலிங்கம் அல்லாத வேறு வகை லிங்க வடிவங்களும் ஆங்காங்கே பரவலாக காணப்படுகின்றன. தற்காலத்தில் புனிதமான நர்மதை நதியின் படுகையில் கிடைக்கும் பாணலிங்கங்கள் விலை மதிப்பற்றவையாக கருதப்படுகின்றன. அவை கீறல் போன்ற ரேகையுடனும், பிந்து வட்டம், பளபளப்பு, கருமையான நாவல்பழம் போன்ற நிறத்தோடு நீள் உருண்டை வடிவம் கொண்டதாகவும் இருக்கின்றன. அத்தகைய பாணலிங்கங்களே வழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளன.

(நன்றி - மாலை மலர்)

Address

Navatkudah
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிவன் ஆலயம், நாவற்குடா, மட்டக்களப்பு. Sivan Temple, Navatkudah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category