17/02/2026
#புதிர்_வழங்கல்_நிகழ்வு
🌙🕉🕉🕉🕉🕉🕉🌙
திருமூலநாயனாரால் சிவபூமி என சிறப்பித்து கூறப்பெற்ற ஈழமணித் திருநாட்டில் வயலும் வயல் சார்ந்த மருதநிலப் பிரதேசமாய் நெற்செய்கைக்குப் பெயர்பெற்று விளங்கும் மட்டக்களப்பு படுவான்கரைப் பெருநிலத்தின்கண் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியாய் தானாக தோன்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 2026.02.22 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய முறைப்படி புதிர் நெல் வழங்கும் திருப்பணிக்கு இறைவன் திருவருள் பாலித்துள்ளார்.
அதற்கு அமைவாக முதலில் சுவாமிக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரிசை முறைப்படி குருமார் , ஆலயத்தினுள் பணி செய்பவர்களுக்கும், ஏனைய சகல இறையடியார்களுக்கும் புது நெல் வழங்கப்படும் அத்தோடு சுவாமிக்கு புத்தரிசி பிரசாதம் நண்பகல் 12.00 மணி பூசைக்கு வைத்து அடியார்களுக்கும் வழங்கப்படும் என்பதை ஆலய பரிபாலன சபையின் சார்பாக இறையன்புடன் அறியத் தருகின்றோம்.
ஓம் நமசிவாய!
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் பரிபாலன சபை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
🌙🕉🕉🕉🕉🕉🕉🌙
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
#கொக்கட்டிச்சோலை | #சிவன் | #ஆலயம்| #தான்தோன்றீஸ்வரர்| #படுவான்கரை | #மட்டகளப்பு #புதிர்