அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Atchuvely
  • அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலயம்

அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலயம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலயம், Hindu temple, Atchuvely.

 #பெருஞ்சப்பைரதம்அசையும் இராஜகோபுரம் என்று வர்ணிக்கப்படும் பெருஞ்சப்பைரதம்  அமைக்க கந்தன் திருவருள் கைகூடியது. அதற்கமைய ...
07/06/2026

#பெருஞ்சப்பைரதம்

அசையும் இராஜகோபுரம் என்று வர்ணிக்கப்படும் பெருஞ்சப்பைரதம் அமைக்க கந்தன் திருவருள் கைகூடியது. அதற்கமைய 2013-2014 ஆம் ஆண்டில் சப்பைரதம் அமைக்கும்பணி ஆரம்பிக்கப்பட்டது

நாவற்காடு வாழ் மக்கள் உதவியினாலும் கந்தன் அடியவர்களின் ஏகோபித்த ஆதரவினாலும் 49 அடி உயரமுடைய பெருஞ்சப்பைரதம் அமைக்கும் பணி எழுச்சிபெற்று 2014 ம் ஆண்டு உயர் மஹோற்சவ காலத்தில் அதற்கான அச்சு வைக்கும் வைபவமும் இடம்பெற்றது..

அடுத்தவரும் எப்படியாவது காடு+மலை தாண்டி வந்து அமர்ந்த காட்டுமலை வேலவனை சப்பரத்தில் எழுந்தருள செய்யவேண்டும் என்ற அவா எல்லோர்மனதிலும் தொற்றிக்கொண்டது. அந்த அவா வீண்போகவில்லை... கந்தனும் திருவுளம் கொண்டான்...

2015 ம் ஆண்டு உயர்திருவிழாவின்போது 49அடி உயரமுடைய பெருஞ்சப்பைரதம் வெள்ளோட்டம் கண்டது. ஆறுமுகபெருமான் தேவியர் சகிதமாக மயில்வாகனனாக வலம்வந்து இந்த வெள்ளோட்டத்தை நடாத்தி வைத்தார்கள். அவ்வருடமே சப்பைரத உற்சவத்தில் வள்ளி தெய்வானை சமேதராக ஒருதிருமுருகன் எழுந்தருளினார்கள்.

தேவியர்கள் அன்னப்பக்ஷி வாகனத்தில் இருபுறமிருக்க முருகப்பெருமான் பச்சைமயில்வாகனனாக நடுநாயகமாக சப்பைரதத்திலே அமர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்

சிறப்பான முறையில் ஆலயத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்ற சிவசுப்பிரமணியம் ஐயாவை  2012இல்  இறைவன் தன் பாதக்கமலத்தில் சேர...
06/06/2026

சிறப்பான முறையில் ஆலயத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்ற சிவசுப்பிரமணியம் ஐயாவை 2012இல் இறைவன் தன் பாதக்கமலத்தில் சேர்த்துக்கொண்டான்.

அதனைத்தொடந்து ஆலயத்தின் நிர்வாகப்பொறுப்பை அவரது மூத்த புதல்வனான #சிவானந்தம் ஐயா ஏற்றுக்கொண்டார். இவருடன் இணைந்து இவரது சகோதரரான #விசாகேந்திரம் ஐயா வும் ஆலயத்தினை மேலும் வளர்ச்சியுறசெய்யும் நோக்கில் இன்றுவரை நேரகாலம் தவறாது அவனுக்கான பணிகளை முறையாக ஆற்றி வருகின்றனர். இவர்களுடன் கூடவே இவரது சிறிய தந்தையாரான #சீனியர் அவர்களும் கந்தனுக்கான பணிகளை ஆற்றி வருகின்றனர்.

காட்டுமலைக்கந்தனது வளர்ச்சியிலே மேலும்மேலும் ஆகச்சிறந்த திருப்பணிகளை இவர்கள் நிறைவேற்றினர்... அதன் தொடர்ச்சியாக அசையும் இராஜகோபுரம் எண்டு சொல்லக்கூடிய.....

தொடரும்

04/06/2026

முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் கலியுக வரதன் கந்தப்பெருமானின் அதியுன்னத பராபவ வருஷ மஹோற்சவம் 2026

2004 ம் ஆண்டு தந்தையாரின் மறைவைத்தொடர்ந்து 3ம் தலைமுறையாக மூத்த புதல்வர்  திரு  #சிவசுப்பிரமணியம் ஐயா  ஆலயநிர்வாகத்தை பொ...
02/06/2026

2004 ம் ஆண்டு தந்தையாரின் மறைவைத்தொடர்ந்து 3ம் தலைமுறையாக மூத்த புதல்வர் திரு #சிவசுப்பிரமணியம் ஐயா ஆலயநிர்வாகத்தை பொறுப்பெடுத்தார் கூடவே அவருக்கு உதவியாக திரு #சீனியர் அவர்களும் அண்ணனுடன் ஆலய பரிபாலனத்தை சீரும் சிறப்புமாக மிகுந்த பயபக்தியுடன் முருகனுக்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்த வந்தனர்

இவரது காலத்திலே ஆலய பிரதானவாயில் மணிமண்டபம் அலங்காரவளைவாக மிகப்பிரமாண்டமாக எழுச்சிபெற்றது . அதனைத்தொடர்ந்து 2011 இல் மிகப்பிரமாணடமான திரிதள இராஜகோபுரமும் கலச ஸ்தாபனம்கண்டு குடமுழுக்கும் கண்டது

ஒவ்வொருவரும் புதிய நிர்வாகத்தில் கந்தனுக்கான புதிய திருப்பணியை செய்வது மரபாகியது அதற்கேற்றாற்போல் இவரது காலத்திலும் இரண்டு விண்ணுயர் #திரிதள_இராஜகோபுரங்களும்
#மூன்று_மணிக்கோபுரங்களும் உருவாகின இக்காலத்தில் கணிசமான வாகனங்கள் ஆலயத்திற்கு வந்துசேர்ந்தன...

1997ம் ஆண்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் நேர்த்தியாகவும்  பிரமாண்டமாகவும்  மக்களின் உதவியுடன்  அமைக்கப்பட்டதுடன் ...
01/06/2026

1997ம் ஆண்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் நேர்த்தியாகவும் பிரமாண்டமாகவும் மக்களின் உதவியுடன் அமைக்கப்பட்டதுடன் உயரமான மணிக்கோபுரமும் அமையப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவரின் காலத்திலேயே தேர் தரிப்பிடம் ,மஞ்சத்தரிப்பிடம், தண்டாயுதபாணி [பழனியாண்டவர்] க்கான தனியான சந்நிதி ஆலய வெளி வீதியிலும் அமையப்பெற்றது

அதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கென கைலாயவாகனமும் இவரின் காலத்திலேயே அமையப்பெற்றது.

ஆலயத்தை மேலும்மேலும் மெருகூட்ட இவர்செய்த செயல்கள் அளப்பரியது. போர்சூழலில்கூட கந்தனை பூசித்தவர்

இவ்வாறு கந்தனையே சிந்தை தவறாது பூசித்து வந்த சிவகுரு ஐயா 2004ம் வருடம் கந்தனது பெருவிழாவின்போது கார்த்திகை நட்சத்திரத்தன்று அவன் பாதம்பற்றி பூரணநிலை எய்தினார்..

இவரது மகன்களான #சிவசுப்பிரமணியம் #சீனியர் ஆகியோர் ஐயாவுக்கு சிலை வைக்க எண்ணி அத்திருப்பணியை நிறைவேற்றினர். ஆலய மேற்குவீதியில் இவரது ஐம்பொன்சிலை பிரதிஷ்டை செப்யப்பட்டது

இவர் விட்டுச்சென்ற பணியை...

#தொடரும்....

கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் தொடக்கமாக, கொடிமரத்தில் இறைவனின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி, திருவிழாவை...
01/06/2026

கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் தொடக்கமாக, கொடிமரத்தில் இறைவனின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி, திருவிழாவைத் தொடங்கி வைக்கும் ஆன்மீக நிகழ்வே கொடியேற்றம் ஆகும். இந்த நிகழ்வு, ஊர்மக்கள் அனைவரையும் கடவுளின் ஆசி காக்கிறது என்பதையும், உயிர்கள் இறைவனை அடையும் தத்துவத்தையும் உணர்த்துகிறது.

கோயில்களில் கொடியேற்றம் எதற்காகச் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்:

#துவஜாரோஹணம்: வடமொழியில் இதற்கு ‘துவஜாரோஹணம்’ என்று பெயர். ‘துவஜம்’ என்றால் கொடி, ‘ஆரோஹணம்’ என்றால் ஏற்றுதல் என்று பொருளாகும்.

#அழைப்பிதழ்: திருவிழா தொடங்கியதை ஊரறியச் செய்யும் அறிவிப்பாகவும், முப்பத்து முக்கோடி தேவர்களையும், பஞ்சபூதங்களையும் திருவிழாவிற்கு அழைக்கும் அழைப்பாகவும் இது கருதப்படுகிறது.

#வழிபாட்டுத் தத்துவம்: உயிர்கள் பாசத்தடைகளை நீக்கி, இறைவனின் திருவடியை நோக்கிச் செல்லும் ஆன்மீக தத்துவத்தை இது விளக்குகிறது.

தேர் திருப்பணியை தொடர்ந்து  ஆலயத்திற்கு திருமஞ்சமொன்றையும் உருவாக்கவேண்டும் என்ற அவா அவர் மனதில் ஆழமாகப்பதிய  கருணைக்கடல...
31/05/2026

தேர் திருப்பணியை தொடர்ந்து ஆலயத்திற்கு திருமஞ்சமொன்றையும் உருவாக்கவேண்டும் என்ற அவா அவர் மனதில் ஆழமாகப்பதிய கருணைக்கடலான கந்தனின் அருளுடன் 1986 இல் அவனுக்கான திருமஞ்சப்பணியும் பூர்த்தியாகிறது. தொடர்ந்து ஆலயத்துக்கென வாகனங்களும் அவனருளால் உருவாகியது. பக்தர்களாலும் வழங்கப்பட்டது

கந்தனின் அருட்திறன் யாழ் குடாவெங்கும் பரவியது. சற்றே பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் இப்போதிருக்கும் சிறிய ஆலயம் சனநெரிசலை உருவாக்குகிறது எனவே ஆலயத்தை பெருப்பிக்க எண்ணி அதற்கான திருப்பணியை 1997ம் ஆண்டு ஆரம்பித்தார்

 #சித்திரத்தேர்_வெள்ளோட்டம்1939ம் வருடம் முதல் 2ம் தலைமுறை பூசகராக பொறுப்பெடுத்த சிவகுரு ஐயா கந்தனுக்கென சித்திரத்தேர் அ...
30/05/2026

#சித்திரத்தேர்_வெள்ளோட்டம்

1939ம் வருடம் முதல் 2ம் தலைமுறை பூசகராக பொறுப்பெடுத்த சிவகுரு ஐயா கந்தனுக்கென சித்திரத்தேர் அமைக்க விரும்பினார். அவரின் விருப்படியே கந்தனும் மகிழ்ந்து தனக்கான சித்திரத்தேர் திருப்பணியை 1969 இல் ஆரம்பித்து வைத்தார்கள்.

அக்காலகட்டத்தில் தேர் செய்வதென்பது இலகுவான காரியமல்ல கந்தன் அருள்வாக்கினை பெற்று " அவனருளாலே அவன்தாள் வணக்கி" கடும் பொருளாதார நெருக்கடியிலும் நாளும்பொழுதும் ஓயாமல் வேலைகள் நடைபெற்று 1971ம் ஆண்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. சித்திரத்தேர் அமைக்கும்வரை கட்டுத்தேரில் கந்தன்பவனி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது

 #ஆலயதிருப்பணிதனது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறாமல் இருந்த கட்டுமானங்களை நிறைவேற்றி 1960ம் ஆண்டில்  ஆலயத்தை புனர...
30/05/2026

#ஆலயதிருப்பணி

தனது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறாமல் இருந்த கட்டுமானங்களை நிறைவேற்றி 1960ம் ஆண்டில் ஆலயத்தை புனரமைப்பு செய்து அழகுமிக்க திருத்தலமாக மாற்றிய பெருமை சிவகுரு ஐயாவிற்கே உரியதாகும்.

இளமை தொடங்கியே சமயாசாரமும் முருகபத்தியும் இவருக்கு இருந்தமையால் நாவலம்பதி வாழ் மக்களின் ஒத்துழைப்புடன் அருள்வள்ளலாகிய முருகப்பெருமான் கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற காட்டுமலைதேவஸ்தானத்தை விரிவாக்க எண்ணினார். அவரது பணிகள் அற்புதமானவை. திருவருட்சக்தி மிக்கது..

இவரது திருப்பணிகளுக்கு சிறுவயது முதலே இவரது சகோதரர்களான #குமரகுருவும் தமக்கையார் #தங்கம் என்போர் உறுதுணையாக இருந்தனர்

29/05/2026

#வைகாசி_விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த திருநாளாகும். வைகாசித் திங்களில் வரும் விசாக நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது நம்பிக்கை. இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவபெருமான் தனது ஐந்து முகங்கள் மற்றும் எவரும் காணாத ஆறாவது முகத்தின் நெற்றிக்கண்களிலிருந்து திருவிளையாடலாய் ஆறு குழந்தைகளை நெருப்பாக இந்நாளில் படைத்தார். அந்த ஆறுகுழந்தைகளே பின்னாளில் உமையம்மையின் அணைப்பால் ஒன்றாகி முருகன் எனப் பெயர் பெற்றது‌.

மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் நோன்பிருத்து கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

Address

Atchuvely

Alerts

Be the first to know and let us send you an email when அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category