07/06/2026
#பெருஞ்சப்பைரதம்
அசையும் இராஜகோபுரம் என்று வர்ணிக்கப்படும் பெருஞ்சப்பைரதம் அமைக்க கந்தன் திருவருள் கைகூடியது. அதற்கமைய 2013-2014 ஆம் ஆண்டில் சப்பைரதம் அமைக்கும்பணி ஆரம்பிக்கப்பட்டது
நாவற்காடு வாழ் மக்கள் உதவியினாலும் கந்தன் அடியவர்களின் ஏகோபித்த ஆதரவினாலும் 49 அடி உயரமுடைய பெருஞ்சப்பைரதம் அமைக்கும் பணி எழுச்சிபெற்று 2014 ம் ஆண்டு உயர் மஹோற்சவ காலத்தில் அதற்கான அச்சு வைக்கும் வைபவமும் இடம்பெற்றது..
அடுத்தவரும் எப்படியாவது காடு+மலை தாண்டி வந்து அமர்ந்த காட்டுமலை வேலவனை சப்பரத்தில் எழுந்தருள செய்யவேண்டும் என்ற அவா எல்லோர்மனதிலும் தொற்றிக்கொண்டது. அந்த அவா வீண்போகவில்லை... கந்தனும் திருவுளம் கொண்டான்...
2015 ம் ஆண்டு உயர்திருவிழாவின்போது 49அடி உயரமுடைய பெருஞ்சப்பைரதம் வெள்ளோட்டம் கண்டது. ஆறுமுகபெருமான் தேவியர் சகிதமாக மயில்வாகனனாக வலம்வந்து இந்த வெள்ளோட்டத்தை நடாத்தி வைத்தார்கள். அவ்வருடமே சப்பைரத உற்சவத்தில் வள்ளி தெய்வானை சமேதராக ஒருதிருமுருகன் எழுந்தருளினார்கள்.
தேவியர்கள் அன்னப்பக்ஷி வாகனத்தில் இருபுறமிருக்க முருகப்பெருமான் பச்சைமயில்வாகனனாக நடுநாயகமாக சப்பைரதத்திலே அமர்ந்து வரும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்