26/08/2026
மெய்யானவனே ....
மெய் அல்ல நீ
மெய்யும் ஓர்நாள் கரைசேர
ஒலியும் ஓர்நாள் கரைசேர
ஒளியும் ஓர்நாள் கரைசேர
ஓசையும் ஓர்நாள் கரைசேர
சுவாசமும் ஓர்நாள் கரைசேர
கரைசேரா கதியே
பஞ்ச பூதமல்ல நீ
பஞ்ச பூதமும் உன்அருளாளே
அருளுக்கு அருளான முருகா
என் உயிருக்குள் உயிரான முருகா
உண்டாக்கி
உருவாக்கி
ஒன்றாக்கி
ஒன்றிரண்டாக்கி
இரு பலவாகி
பலவற்றுள்
விதையாய்
விருட்சமமாய்
சூட்சமமாய்
அரசாளும் ஓதியப்பா
உன் பாதம் பணிந்தேன்
மகிழ்வுதர மலர்ந்தது மனம் இனிக்கும் இன்னாள்!