01/05/2026
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல்
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல்
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல்
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல்
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல்
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல்
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்..
செந்தூரானின் அன்பர்களுக்கு
அன்பு நிறைந்த இனிய காலை வணக்கம்