Shivagnana Swamigal

Shivagnana Swamigal CLICK LIKE ON THIS PAGE TO SUBSCRIBE TO GOOD ARTICLES RELATED TO SAIVISM AND LORD SHIVA

Our Shivagnana Swamigal
who has enlightened the Saivites
On Sivagamas without any trace of contradictions
who is adored as the Family Deity of our Saivites in this world
who has risen in the horizon of Saivism as a shining Sun

22/05/2026




சிவமயம்
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்ற

பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

ஐந்தாவது
வம்பறாவரிவண்டுச் சருக்கம்

சோமாசிமாறநாயனார் புராணம்

அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்
அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்
உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்
உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்
நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்
நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே
இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

சோழமண்டலத்திலே, திருவம்பரிலே, பிராமணகுலத்திலே சோமாசிமாறநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்பினோடு ஜபித்தலை நித்திய நியமமெனக் கொண்டவர் எந்தக் குலத்தினராயினும், எந்தக் குணத்தினராயினும், பரமசிவன் மேல் அன்புடையவர்களாயின், அவர்களே நம்மை ஆள்பவர் என்னும் மெய்யறிவினையுடையவர் அவ்வன்பர்கள் தம்முடைய வீட்டுக்கு எழுந்தருளிவந்தால், அவர்களை எதிர் கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர். பரமசிவனுக்குப்பிரீதியாகிய யாகங்களை, புகழ் பயன் முதலியன கருதாது நிஷ்காமியாக வேதவிதிப்படி செய்பவர், அவர் திருவாரூரிற் சென்று, சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்திநாயனாரை அடைந்து, அவருடைய திருவடிகளிலே பக்தி பண்ணி, அதனாலே சிவபதத்தைப் பெற்றார்.





திருச்சிற்றம்பலம்.

வார்கொண்டவனமுலையாள் சருக்கம்
முற்றுப்பெற்றது

21/05/2026
21/05/2026

📖தெய்வச் சேக்கிழார் பெருமான் - 🙏குருபூஜை நாள் : வைகாசி - பூசம்

செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி

🌷திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் தந்த தெய்வச் சேக்கிழார்

சேக்கிழாருக்கு அவர்தம் பெற்றோர் வைத்த பெயர் அருண் மொழித்தேவர் என்பதாகும். பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த கார ணத்தால் அவர் சேக்கிழார் எனவே வழங்கப்பெற்றார்.

சேக்கிழாரின் தந்தையின் பெயர் வெள்ளியங்கிரி முதலியார் என்பதும் தாயாரின் பெயர் அழகாம்பிகை என்பதும் கர்ண பரம்பரைச் செய்தியாகும்

அந்நாளில் சைவம் சார்ந்த அன்பர்கள் பலரும் தங்கள் சமய மெய்நூல்களைப் பயிலாது சமணர்கள் புனைந்துரைத்ததும் சிற்றின்பச் சுவை மிகுந்ததும் ஆகிய சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி, அக்காவியச் சுவையில் ஈடுபட்டு, தம் சமயப்பெரியோர்களின் வரலாறுகளை அறியாது, பொழுது கழித்து வந்தனர். சோழமன்னனும் சிந்தாமணிக் கதையைச் சுவைபடக் கேட்டு, மனமகிழ்ந்து பாராட்டிக் களிப்புற்று வந்தான்.

🌻அது கண்ட அருண்மொழித்தேவராம் சேக்கிழார், அரசனை நோக்கி `வேந்தர் பெருமானே, தாங்கள் சைவமெய்ச் சமயத்தைச் சார்ந்தவராயிருந்தும் இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மை நலங் களையும் தரும் சிவனடியார்களின் மெய்மை வரலாறுகளைக் கேளாது சமணர்கள் புனைந்துரைத்த பொய்க்கதையாகிய சிந்தா மணிக் கதையை மெய்யெனக் கருதிக் கேட்டல் தகுதியுடையதன்று என இடித்துரை கூறினார்.

அமைச்சரின் அறிவுரையைக் கேட்ட மன்னன், `நீவிர் கூறும் சிவகதை யாது? அதனை விளங்க உரைப்பீராக` எனக் கேட்டனன்.

🌺திருவாரூரில் விளங்கும் தியாகேசப் பெருமான் தம்முடைய அடியார்களின் பெருமைகளை விரித்துரைத்துப் போற்றுக எனக் கூறி, `தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` எனத் தாமே அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்னும் திருப் பதிகத்தால் சிவனடியார்களின் பெருமைகளைப் புகழ்ந்துப் போற்றி னார்.

அத் திருத்தொண்டத் தொகைக்குத் திருநாரையூரில் விளங்கும் பொல்லாப் பிள்ளையார் அருள்பெற்று அவர் உணர்த்திய வகையில் அத்திருத்தொண்டத் தொகையில் குறிப்பால் உணர்த்திய வரலாறு களைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்றதொரு நூலை அருளிச் செய்துள்ளார்.

👉🏽இவ்வரலாறு களைக் கேட்ட இராஜராஜமன்னர், சிவாலய தேவர் முதலாகவுள்ள அனைவரும் கேட்டு மகிழ்ந்து இவைகளே மெய்நூல்கள் எனப் பாராட்டியுள்ளார்கள்` எனக் கூறினார்.

அதனைக் கேட்ட சோழமன்னன், திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி வாயிலாகச் சேக்கிழார் கூறக்கேட்டு மகிழ்ந்து திருத்தொண்டர் வரலாறுகளைத் தெளிவாகவும் விரிவாக வும் அமைத்து ஒரு விரிநூல் செய்து தருமாறு சேக்கிழாரைக் கேட்டுக் கொண்டான்.

💐மன்னன் வேண்டுகோளை ஏற்ற சேக்கிழார், நடராசப் பெரு மான் அருள்துணையோடு தெய்வத் தமிழ்ப் பெருங்காவியத்தைப் பக்திச் சுவையும் இலக் கியச் சுவையும் இனிதே அமையப் பாடி முடித்தார்.

நடராசப்பெருமானுக்கு உகந்ததும், திருஞானசம்பந்தர் திருவ வதாரம் செய்ததும், அவருக்கு உமையம்மை ஞானப்பால் அளித்ததும் ஆகிய பெருமைகளை உடையது திருவாதிரை. இது கருதியே சேக்கிழார் பெருமான் தில்லையில் சித்திரைத் திருவாதிரையில் தொடங்கிச் சித்திரைத் திருவாதிரையிலேயே திருத்தொண்டர் புராணத்தை முற்றுவித்தார்.

🌱திருத்தொண்டர் புராணத் திருமுறையைக் கனகசபையின் முன்னே வைத்தார். மன்னர்பிரான் சேக்கிழாருக்குத் தொண்டர்சீர் பரவுவார் எனத் திருப்பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான்.

தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் பெருமான் தில்லை நகரிலேயே தங்கியிருந்து, திருத்தொண்டர் பெருமைகளை உணர்ந்து போற்றியவராய்ச் சிவனடியார்களோடுகூடித் தவநிலையிலமர்ந்து வைகாசிப் பூச நாளில் தில்லைப்பெருமான் திருவடி நீழலை அடைந்து முத்தி பெற்றார்.

அவதாரத் தலம்: குன்றத்தூர்

இறைவன்: ஸ்ரீ திருநாகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீ காமாட்சியம்மை

முக்தி தலம்: தில்லை

🌷சேக்கிழார் துதி

தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டர்த் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழாரடி போற்றி

20/05/2026

#நம்பியாண்டார்
சிவனடி சிந்தையீரே இன்று திரு "நம்பி ஆண்டார் நம்பிகள்" குரு பூஜை

நம்பியாண்டார் நம்பிகள் வரலாறு


பதினொன்றாம் திருமுறையில் பத்துப் பிரபந்தங்களை அருளிச் செய்தவர் இவர். தேவாரத் திருமுறைகளை பொல்லாப் பிள்ளையார் துணைக்கொண்டு தில்லையிலிருந்து வெளிப்படுத்தியும் திருமுறைகளை வகுத்தும் தந்த பெருமைக்குரியவர் இவர்.

பிள்ளையார்க்கு அமுதூட்டல்

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார்க்குப் பூசனை புரியும் ஆதி சைவக் குடும்பத்தில் தோன்றியவர் இவர். பெற்றோர் சிவபிரானைச் சுந்தரர் குறித்துப் போற்றும் நம்பி என்னும் பெயரைச் சூட்டி உரிய பருவத்தில் உபநயனம் செய்வித்து வேத சிவாகமங் களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தனர். ஒருநாள் இவர் தந்தையார் வேற்றூர்க்குச் செல்ல நேரிட்டது. தந்தையார் தம் மைந்தரை அழைத்து பிள்ளையார்க்குப் பூசை நிவேதனம் செய்து பள்ளிக்குச் செல்லுமாறு பணித்து வெளியூர் சென்றார். தந்தை கட்டளைப்படி நம்பிகள் காலையில் எழுந்து நீராடி மலர் பறித்து மாலை தொடுத்துக்கொண்டு தாயார் தயாரித்து அளித்த நிவேதனத்துடன் ஆலயம் சென்றார். பிள்ளையார்க்குத் திருமஞ்சனம் முதலாயின செய்து தாயார் அளித்த நிவேதனத்தை எதிரே வைத்து பிள்ளையாரை அமுது செய்தருளுமாறு பலமுறையும் வேண்டி நின்றார். நாள்தோறும் தந்தையார் படைக்கும் நிவேதனத்தைப் பிள்ளையார் உண்டு வருவ தாக எண்ணிய நம்பிகள் தன் பூசையில் ஏதேனும் தவறு நேர்ந்ததோ என்று உளம் நைந்து வருந்தியவராய்ப் பிழையிருப்பின் மன்னித்து திருஅமுதை ஏற்றருள வேண்டும் என வேண்டினார். அதற்கும் பிள்ளையார் வாளா இருத்தலைக் கண்டு மனம் பொறாதவராய்த் தன் தலையைக் கோயில் சுவரில் மோதிக் கொள்ள முற்பட்டார். அது கண்டு திருவுளம் இரங்கிய பிள்ளையார் `குழந்தாய் பொறு` எனத் தடுத்து நிவேதனத்தை மகிழ்வோடு உண்டருளினார்.

கலைஞானம் கைவரப் பெறல்

இந்நிகழ்ச்சியால் நம்பிகள் பள்ளி செல்லக் காலம் தாழ்த்தது என்றும் இனிச் சென்றால் ஆசிரியர் தன்னைத் தண்டிப்பார் என்றும் கூறப் பிள்ளையார் நாமே அப்பாடங்களை உனக்கு கற்பிப்போம் எனக் கூறித் தாமே நம்பிகளுக்குத் தமிழ் கற்பித்தருளினார்.

நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்

கற்கும் சரக்கன்று காண் (திசுவருட்பயன் - 1)

என்னுமாப்போல விநாயகர் திருவருளால் நம்பிகள் கலை ஞானங்கள் அனைத்தும் கைவரப்பெற்றார்.

விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடிப் போற்றினார்.

இவ்வற்புத நிகழ்ச்சி நாடெங்கும் பரவியது. அதனைக் கேட்டு மகிழ்ந்த அபயகுலசேகரன் என்னும் இராசராச மன்னன் அப் பிள்ளையாரை வழிபடுதற் பொருட்டும் தன் உள்ளத்தில் நெடு நாட்களாக இருந்த கவலையைத் தீர்த்துக் கொள்ளற் பொருட்டும், விநாயகருக்கு உகந்த பழ வகைகள், கரும்பு, தேன், அவல், எள்ளுருண்டை முதலான பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருநாரையூர் வந்தடைந்தான். நம்பிகளை வணங்கி இவற்றைப் பிள்ளையார் ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டினான். மன்னன் விரும்பிய வண்ணம் நம்பிகள் பிள்ளையார்க்கு அபிடேக ஆராதனை கள் புரிந்து மன்னன் கொண்டு வந்த நிவேதனப் பொருள்களைப் படைத்து அமுது செய்தருளுமாறு வேண்டிய அளவில் பிள்ளையார் அவற்றை ஏற்றருளினார்.

அது கண்டு மகிழ்ந்த மன்னன் தன் நெடு நாளைய கவலையை நம்பிகளிடம் தெரிவித்தான். மூவர் அருளிய தேவாரத் திருமுறைகளும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்க ளுக்குக் கிடைக்குமாறு செய்தருள வேண்டுமெனக் கேட்டுக் கொண் டான். நம்பிகள் மன்னனின் வேண்டுகோளைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார். அவர் வேண்டுகோளை ஏற்ற பொல்லாப் பிள்ளையார் `தில்லையில் தேவாரமூவர் கையடையாளத்துடன் ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன` எனக் கூறியதோடு திருத்தொண்டர் வரலாறுகளையும் நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்தியருளினார்.

அவற்றைக் கேட்டு மகிழ்ந்த நம்பிகளும் அபய குலசேகரனாகிய சோழ மன்னனும் மகிழ்ந்து தில்லையை அடைந்து அவ்வறையைத் திறக்கு மாறு தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டுக் கொண்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் தேவாரமூவர் கையடையாளம் இட்டுள்ளதால் அவர்கள் வந்தால் அன்றி அவ்வறைக் கதவைத் திறத்தல் இயலாது எனக் கூறக்கேட்ட மன்னன் மூவர் திருவுருவங் களுக்கும் அபிடேக ஆராதனைகள் செய்வித்து எழுந்தருளச் செய்து அவ்வறைக்கு எதிரே நிறுத்திட மூவரும் வந்துவிட்டனர். கதவைத் திறக்கலாமே எனக் கூறத் தில்லைவாழ் அந்தணர்கள் வேறு வழியின்றிக் கதவைத் திறந்தனர். அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பெற்றிருந்த ஏடுகளைக் கறையான் புற்று மூடியிருக்கக்கண்ட மன்னன் மனம் வருந்தி எண்ணெய் சொரிந்து புற்றை அகற்றிப் பார்த்த அளவில் ஏடுகளில் பல செல்லரித்திருந்ததை அறிந்து அளவிலாத துயருற்றான். அந்நிலையில் `தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம் கவலற்க` என்றொரு அசரீரி அனைவரும் கேட்க எழுந்தது. மன்னன் ஆறுதல் அடைந்து அவ்வேடுகளைச் சிதையாமல் எடுத்து அவற்றைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான்.

திருமுறை வகுத்தவர்

நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந் திருமுறையாக வும் தொகுத்ததோடு மணிவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத்தேவர் முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய வற்றை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்களைத் தொகுத்துப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை யின் வகைநூலாய் பொல்லாப்பிள்ளையார் தமக்கு உணர்த்தியருளிய நாயன்மார்களின் பிற வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு திருத் தொண்டர் திருவந்தாதி என்ற வகை நூலையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மீது திருஏகாதசமாலை என்னும் பிரபந்தத்தையும் அருளி மன்னன் விருப்பின்படி அவற்றையும் இத்திருமுறையில் சேர்த் தருளினார்.

காலம்

நம்பியாண்டார் நம்பிகள், திருமுறைகளை வெளிப்படுத்திய முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்றே சமய உலகில் இராசராச சோழன் (கி.பி. 985-1014) காலத்திலும், முதல் இராசேந்திர சோழன் காலத்திலும் வாழ்ந்தவர் என்றே சமய உலகில் பலரும் கருதுவர். உமாபதி சிவாசாரியார் திருமுறைகண்ட புராணத் துள் அபயகுல சேகரன் இராசராசன் என்றே குறிப்பிடுகின்றார். பன்னிரு திருமுறைகளில் பதினொரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பிகளே தொகுத்தருளினார் என்பதாலும், அவரால் தொகுக்கப் பட்ட ஒன்பதாம் திருமுறையில் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராசேந்திர சோழன் எடுப்பித்த கோயிலும் இடம் பெற்றுள்ளமையாலும் இவ்விரு மன்னர் காலங்களிலும் நம்பிகள் வாழ்ந்தவர் என்று கொள்ளலே முறை. அங்ஙனமாயின் நம்பிகள் காலம் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலம் எனக் கோடலே பொருந்துவதாகும்.

18/05/2026

Lord Shiva is there to help you always

18/05/2026


Valli Murugan

17/05/2026

17/05/2026

17/05/2026

16/05/2026

Address

Vikramasingapuram

Alerts

Be the first to know and let us send you an email when Shivagnana Swamigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shivagnana Swamigal:

Share