ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபை

  • Home
  • India
  • Vellore
  • ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபை

ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபை ஆன்மீகம் பற்றிய தகவல்

சபரிமலையின் பஸ்ம குளம் – வரலாறும் ஆன்மீக முக்கியத்துவமும்!! #பஸ்ம_குளம் எங்கே இருக்கிறது?சபரிமலை சன்னிதானத்திலிருந்து மா...
11/08/2026

சபரிமலையின் பஸ்ம குளம் – வரலாறும் ஆன்மீக முக்கியத்துவமும்!!

#பஸ்ம_குளம் எங்கே இருக்கிறது?

சபரிமலை சன்னிதானத்திலிருந்து மாளிகப்புரத்தம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையில் பஸ்ம குளம் அமைந்துள்ளது. மாளிகப்புரத்தம்மன் சன்னிதி சபரிமலை பிரதான சன்னிதானத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது வெறும் ஒரு குளம் அல்ல. சபரிமலை யாத்திரையின் முக்கியமான புனித இடங்களில் ஒன்றாக பக்தர்களால் கருதப்படுகிறது.

பஸ்ம குளம்” என்ற பெயர் எப்படி வந்தது?

பஸ்மம் (Bhasma) என்றால் சாம்பல் / திருநீறு என்று பொருள்.

சபரிமலையின் பாரம்பரிய ஐதீகத்தின்படி, இந்தப் பகுதியில் சபரி என்ற தவசினி கடுமையான தவம் மேற்கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

அவர் தனது பூத உடலை நெருப்பில் அர்ப்பணித்ததாக ஐதீகம் கூறுகிறது. அந்த நிகழ்வுடன் தொடர்புடைய இடமாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.

அதனால் இந்தத் தீர்த்தம் “பஸ்ம குளம்” என அழைக்கப்படுவதாக பாரம்பரிய விளக்கங்கள் கூறுகின்றன. மேலும், சபரி தொடர்பான இந்த ஐதீகத்திலிருந்தே “சபரிமலை” என்ற பெயர் ஏற்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

சபரி → பஸ்மம் → பஸ்ம குளம் → சபரிமலை
என்ற ஆன்மீகத் தொடர்பை இந்த ஐதீகம் எடுத்துக்காட்டுகிறது.

Post By : Hariharan Selvan Ayyapan

🧘‍♀️ சபரி யார்?

சபரி பற்றிய கதை, சபரிமலையின் மிகப் பழமையான ஆன்மீக மரபுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

சபரி ஒரு தவசினியாக இந்த மலைப்பகுதியில் தவம் செய்ததாக ஐதீகம் கூறுகிறது. இறுதியில் தனது உடலை நெருப்பில் அர்ப்பணித்து இறைவனுடன் ஒன்றியதாக நம்பப்படுகிறது.

அவரது தவம் நடைபெற்றதாகக் கருதப்படும் இடம் பின்னாளில் புனிதமாகப் போற்றப்பட்டது.

அதனால்தான் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பஸ்ம குளம் ஒரு சாதாரண நீர்நிலையாக இல்லாமல், ஒரு தவசினியின் தியாகத்தையும் இறைநம்பிக்கையையும் நினைவுபடுத்தும் இடமாக விளங்குகிறது.



🙏 பஸ்ம குளத்தில் பக்தர்கள் ஏன் நீராடுகிறார்கள்?

பாரம்பரியமாக பக்தர்கள் இங்கு நீராடுவது:

* உடல் தூய்மைக்காக
* மனத் தூய்மைக்காக
* சபரியின் தவத்தை நினைவுகூர
* பாவங்கள் நீங்க வேண்டும் என்ற ஆன்மீக நம்பிக்கையுடன்
* சபரிமலை யாத்திரையின் ஒரு புனித அங்கமாக

என்று கருதப்படுகிறது.

சபரிமலை பற்றிய பல பாரம்பரிய ஆதாரங்களும் இங்கு பக்தர்கள் சபரி நெருப்பில் தன்னை அர்ப்பணித்ததை நினைவுகூர்ந்து புனித நீராடல் செய்வதாக குறிப்பிடுகின்றன.



🌊 பஸ்ம குளத்தின் ஒரு தனிச்சிறப்பு

சபரிமலை யாத்திரைக் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு நீராடுவதால், குளத்தின் நீர் பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகிறது.

பக்தர்கள் அதிக அளவில் நீராடுவதால், நீர் அடிக்கடி வெளியேற்றப்பட்டு புதிய நீர் நிரப்பப்படுவதாக சபரிமலை தொடர்பான ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், இங்கு சோப்பு, எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று யாத்திரை வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.



🌺 மாளிகப்புரத்தம்மனுடன் உள்ள தொடர்பு

பஸ்ம குளத்தின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், அது மாளிகப்புரத்தம்மன் சன்னிதிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

மாளிகப்புரத்தம்மன் தொடர்பான சபரிமலை ஐதீகம், மகிஷி மற்றும் மணிகண்டன்/ஐயப்பனின் கதையுடன் நெருங்கிய தொடர்புடையது.

மாளிகப்புரத்தம்மன் கோயில் வளாகத்தில்:

* மாளிகப்புரத்தம்மன்
* கடுத்தசுவாமி
* நாகராஜா
* நாகயக்ஷி

ஆகிய தெய்வ சன்னிதிகளும் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அதனால் பஸ்ம குளம் → மாளிகப்புரத்தம்மன் → சபரிமலை சன்னிதானம் என்ற பகுதி, யாத்திரையில் தனிப்பட்ட ஆன்மீக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.



🔥 “பஸ்மம்” என்பதன் ஆன்மீக அர்த்தம்

இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

பஸ்ம குளம் (Bhasma Kulam)
➡️ ஒரு புனித நீர்நிலை.

பஸ்ம அபிஷேகம் (Bhasma Abhishekam)
➡️ ஐயப்ப சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் ஒன்று.

இவை இரண்டும் ஒன்றல்ல.

சபரிமலை வழிபாட்டு முறையில் பஸ்ம அபிஷேகம் இடம்பெறுகிறது. அபிஷேக வரிசையில் பஸ்ம அபிஷேகத்திற்குப் பிறகு ஜல அபிஷேகம் செய்யப்படுவதாக சபரிமலை வழிபாட்டு விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



🕉️ பஸ்மத்தின் தத்துவம்

இந்திய ஆன்மீக மரபில் பஸ்மம்/திருநீறு ஆழமான குறியீட்டைக் கொண்டது.

நாம் சேர்த்து வைத்திருக்கும்:

* செல்வம்
* பதவி
* புகழ்
* உடல்
* ஆசைகள்
* அகங்காரம்

எல்லாமும் இறுதியில் நிலையற்றவை என்பதை பஸ்மம் நினைவூட்டுகிறது.

“எல்லாம் அழிந்து சாம்பலாகும்; நிலையானது இறைநினைவும் தர்மமும் மட்டுமே” என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.

அதனால் சபரிமலையில் பஸ்மம் என்ற கருத்து துறவு, தூய்மை, நிலையாமை, இறை சரணாகதி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.



🔱 பஸ்ம குளமும் சபரிமலை யாத்திரையும்

சபரிமலை யாத்திரையை ஒரு ஆன்மீகப் பயணமாகப் பார்த்தால், பஸ்ம குளத்திற்கும் ஒரு அழகான குறியீட்டு அர்த்தம் இருக்கிறது.

பம்பை
⬇️
உடல்–மனத் தூய்மை

மலை ஏற்றம்
⬇️
துன்பங்களைத் தாண்டுதல்

பதினெட்டாம் படி
⬇️
ஆன்மீக உயர்வு

ஐயப்ப தரிசனம்
⬇️
சரணாகதி

பஸ்ம குளம்
⬇️
சபரியின் தவம் மற்றும் தியாகத்தை நினைவுகூருதல்

மாளிகப்புரத்தம்மன் தரிசனம்
⬇️
சக்தி மற்றும் பக்தி

என்று பக்தர்கள் இதை ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.


வேண்டி பெறுவதற்குஇனிமேல் ஒன்றுமே இல்லை....மாறாக நன்றி கூறஆயிரம் இருக்கிறது.... நன்றி கூற மறந்து விட்டுவேண்டுதலை மட்டுமே ...
11/08/2026

வேண்டி பெறுவதற்கு
இனிமேல் ஒன்றுமே இல்லை....

மாறாக நன்றி கூற
ஆயிரம் இருக்கிறது....

நன்றி கூற மறந்து விட்டு
வேண்டுதலை மட்டுமே
முக்கியமான வேலையாக கொண்டிருக்கிறோம்.....

முதலில்,
இருப்பதை என்னவென்று
பார்த்தோமா?
ரசித்தோமோ?
அனுபவித்தோமோ?....

நமக்கு என்ன வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை...
திரும்பிப் பார்க்கக் கூட
நமக்கு நேரமில்லை.....

ஆனால்,
உலகம் முழுவதும் உள்ள கோவில்களில்
என்னென்ன பரிகாரம் செய்தால்,
என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதில் மட்டும் கவனமாக கேட்டு,
அதன் வழி செயல்படுகிறோம்....

முதலில் பரிகாரம் எதற்கு?
யார் பரிகாரம் செய்வார்கள்?

தவறு செய்தவர்கள் தானே
பரிகாரம் செய்ய வேண்டும்?

அப்படி என்ன தவறு செய்கிறோம் என்று சிந்தித்து பார்த்தால்...
கொடுத்திருப்பதைக் கொண்டு வாழாமல்....

இன்னும் வேண்டும்,
இன்னும் வேண்டும் என்று
ஓயாமல் இறைவனிடம்
கேட்பது தான் மிகப்பெரிய குற்றம்.....

இதற்கு எந்த பரிகாரமும் கிடையாது....

எல்லா வேண்டுதல்களும்,. பிரார்த்தனைகளும்...
முரண்பாட்டில்தான் இருக்கிறது...

நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற வேண்டுதலிலேயே,
மகிழ்ச்சியற்ற நிலையில்
நாம் இருப்பதைக் உணரலாம்....

எந்த அளவு நம் வேண்டுதல்
வலுவாக உள்ளதோ ,
அதே அளவு எதிர்மறை எண்ணங்களும் வலுவாகவே இருக்கும்....

ஒவ்வொரு எண்ணங்களுக்கும், எதிரிடையான எண்ணம் உருவாகும்....

ஆடையில் அழுக்கு பட்டுவிடப் போகிறது என்ற எண்ணம்,
அழுக்கின் மீது மட்டுமே கவனத்தை
நிலை நிறுத்தும்....

ஆகையால்
'இது வேண்டும், அது வேண்டும்' என்று இடைவிடாத வேண்டுதலில் இருந்து நாம் விடுபட வேண்டும்....

இல்லையெனில்,
மனதின் இரண்டுபட்ட நிலைக்கு ஓய்வேயில்லை....

இரண்டுபட்ட மனம் இருக்கும் வரை,
இருண்ட வாழ்வில் இருந்து
மீட்பு இல்லை.....

ஒன்றுபட்ட மனமே மனமற்ற நிலைக்கு இட்டுச்செல்லும்....

மனமற்ற நிலையே,
ஆன்மாவில் உரைந்திருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்....

ஆகவே,
ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமானால்.....

வேண்டுதலை விட்டொழித்து,
வழங்கப்பட்டிருப்பதற்கு
நன்றி கூறி வாழ்வோம்.....

ஆனந்த வாழ்வில்...

"இதுவே ஆன்மீக வாழ்வு,
ஆனந்த வாழ்வு!"

மகிழ்ச்சி!!!

குருசாமி


#‌ஸ்ரீ_பம்பாவாசன்_பக்த_சபை

திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் சமாதி பற்றிய சிறப்பு பதிவு...        திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள...
28/07/2026

திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் சமாதி பற்றிய சிறப்பு பதிவு...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும்.

மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.

பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

ஆனால் இடைக்காடர் திருவண்ணாமலையில்தான் அடங்கி இருக்கிறார் என்பது 99 சதவீத சித்த ஆய்வாளர்களின் கருத்தாகும்.

நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் திருவண்ணாமலையில் இடைக்காடரின் ஜீவ சமாதி உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி அல்லது ஒளி சமாதி எங்கு உள்ளது என்பதில்தான் மாறுபட்ட தகவல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி 5 இடங்களில் இருப்பதாக பேசப்படுகிறது.

1. அண்ணாமலையாரின் கருவறையே இடைக்காடரின் ஜீவ சமாதி என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். திருவண்ணாமலை கோவிலின் கருவறை 4-ம் நூற்றாண்டில் உருவானது. அந்த கருவறை சுற்றுச் சுவர்களில் ஏராளமான ஆடுகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த கருவறைக்குள்தான் இடைக்காடர் அடங்கி இருப்பதாக நம்புகிறார்கள்.

2. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி நுழைவாயில் இருபுறமும் இரண்டு பெரிய அறைகள் உள்ளன. வடக்கு புறம் உள்ள அறையின் அருகே ஒரு சுரங்க பாதை செல்கிறது. அந்த சுரங்க பாதை மலைக்குள் ஊடுருவி செல்வதாகவும், அந்த சுரங்கப் பாதைக்குள்தான் இடைக்காடரின் ஜீவ சமாதி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

3. திருவண்ணாமலை கோவிலின் 3--ம் பிரகாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்கு அருணை யோகீஸ்வரர் மண்டபம் என்று பெயர். அந்த மண்டபம்தான் இடைக்காடர் ஜீவசமாதி என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மண்டபத்தின் கீழ் இடைக்காடரின் சிலை உள்ளது. எனவே அவர் அந்த மண்டபத்தில் சூட்சும வடிவில் புதைந்திருப்பதாக கருதப்படுகிறது.

4. திருவண்ணாமலை மலையின் மேற்கு பகுதியில் இடைக்காடர் ஜீவசமாதி இருப்பதாக மற்றொரு கருத்து உள்ளது. அங்கு பாத வடிவம் உள்ளது. எனவே அதுதான் இடைக்காடர் ஜீவசமாதியான இடம் என்று சொல்கிறார்கள்.

5. திருவண்ணாமலை ஆலயத்தில் 6-வது பிரகாரத்தில் பிரம்மலிங்கம் பின்புறம் சுற்றுச்சுவரில் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு உள்ளது. 7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட அந்த இடம்தான் இடைக்காடர் சித்தர் ஒளிசமாதி பெற்ற இடமாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம் தான் இடைக்காடரின் ஒளிசமாதி அமைந்து இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்ல தொடங்கி உள்ளனர்.

திருவண்ணா மலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் இடமாக இந்த இடம்தான் சமீபத்தில் அதிகமான ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. எனவே இந்த இடத்துக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

திருவண்ணாமலை பெரிய தெருவில் இடைக்காடர் சித்தர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடைக்காடர் சித்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை நிறுவிய கோவிந்தராஜ் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று இடைக்காட்டருக்கு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இடைக்காடர் ஒளிசமாதியாக அமைந்திருப்பது பற்றி அவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து நிறைய தகவல்களை சேகரித்து உள்ளார். அவர் சொல்கிறார்....

இடைக்காடர் சித்தரால்தான் திருவண்ணாமலை கோவில் உருவானது. அதற்கான சான்றுகள் ஆலயம் முழுக்க பரவலாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இருக்கும் தூண்களில் காணப்படும் சிற்பங்களை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் நிறைய இடங்களில் ஆடுகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதை காண முடியும். திருமஞ்சன கோபுரத்தில் நிறைய ஆடுகள் சிற்பம் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். அவையெல்லாம் இடைக்காடரை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலை மலை உச்சியில் இருக்கும் அல்லிக்குளம் அருகேதான் இடைக்காடர் முதன் முதலில் தியானம் செய்த இடம் உள்ளது. ஆண்டுக்கு ஒருதடவை நாங்கள் அங்கு சென்று பூஜை நடத்தி வருவதை வழக்கத்தில் வைத்து உள்ளோம்.

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கோசாலை அருகே இருக்கும் இடம்தான் இடைக்காடர் ஒளிசமாதி ஆன இடமாகும். அங்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம். சமீப காலமாக திருவாதிரை நட்சத்திரகாரர்களும் இங்கு தேடி வந்து வழிபடுகிறார்கள்.

இடைக்காடரின் இந்த ஒளிசமாதியில் ஒரே ஒரு நெய்தீபம் ஏற்றி வைத்து மனமுருக வழிபட்டாலே நீங்கள் கேட்டதை எல்லாம் இடைக்காடர் நிச்சயம் தருவார். புரட்டாசி மாதம் திருவாதிரை தினத்தன்று இங்கு பூஜைகள் நடத்தும்போது ஜோதி தானாக எரியும் அதிசயம் நடைபெறும். அதோடு அன்றைய தினம் மழை பெய்யும். இவையெல்லாம் இடைக்காடர் இப்போதும் இருக்கிறார் என்பதற்கான உதாரணங்களாகும்.

திருவண்ணாமலை தளத்தில் இடைக்காடர் செய்திருக்கும் திருப்பணிகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கின்றன. கருவறை லிங்கம் 160 அடி ஆழத்துக்கு ஒரே தூணால் அமைந்துள்ளது. இதை ஏற்படுத்தியதே இடைக்காடர்தான்.

திருவண்ணாமலையில் மலையை சுற்றி கிரிவலம் வரும்போது இடுக்கு பிள்ளையார் கோவிலை பார்த்திருப்பீர்கள். இந்த இடுக்கு பிள்ளையார் ஏராளமானவர்களின் உடல் பிரச்சினையை தீர்த்து வருகிறார். இதை உருவாக்கியது இடைக்காடர் சித்தர்தான். இதுபோன்று ஏராளமானவற்றை இடைக்காடர் உருவாக்கி தந்துள்ளார்.

சித்தப்புருசர்கள் ஒரு இடத்தில் தோன்றி, இன்னொரு இடத்தில் தங்களை அடக்கி கொள்வார்கள். அந்த வகையில் இடைக்காட்டூரில் தோன்றிய இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் அடங்கி அருள் பாலித்து வருகிறார்.

இடைக்காடர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். எனவே இவரை முறைப்படி வழிபட்டால் ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் இடைக்காடரை வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி பலன் பெற முடியும். இடைக்காடருக்கு பிடித்தது பச்சை நிறமாகும். எனவே அவருக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபடலாம்.

இடைக்காடரை புதன்கிழமை வழிபட்டால் எளிதில் அவரின் அருளை பெற முடியும். அதுவும் அவர் ஒளிசமாதியாகி இருக்குமிடத்தில் புதன்கிழமை வழிபட்டால் பரிபூரண அருளை பெறலாம்.

பவுர்ணமி நாட்களில் இப்போதும் இடைக்காடர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். நமக்கு எதிரே வலது பக்கமாக அவர் வருவார். எனவே நாம் இடைக்காடரை நினைத்தபடி கிரிவலம் சென்றால் அவரை எந்த ரூபத்திலாவது பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இடைக்காடர் இதுவரை ஒரு கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீப தரிசனம் செய்துள்ளார் என்று குறிப்புகள் உள்ளன. அப்படியானால் இவர் எத்தனை தடவை கிரிவலம் சென்றிருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். அந்த சித்தப்புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம்மீது பட்டால் நாம் தோஷங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெற முடியும் என்பது ஐதீகம் ஆகும்.

இத்தகைய சிறப்புகள் நிறைந்த இடைக்காடரின் அருளை பெற சில குறிப்பிட்ட வழிபாடுகள் உள்ளன. திருவண்ணாமலை தளத்துக்கு செல்பவர்களில் 99 சதவீதம் பேருக்கு அந்த ரகசிய வழிபாடு இதுவரை தெரியாமலேயே உள்ளது. அதை தெரிந்து கொண்டு இடைக்காடரை வழிபட்டால் இமாலய அளவுக்கு பலன்கள் பெற முடியும்....💫🙏🏻

திரு அம்பலத்தரசன் திருவடி நிழலில் என்றும் உன் அடியேன் 💫🫴🏻🪷

#அம்பலத்தரசன் #திருச்சிற்றம்பலம்

01/04/2026

வேலூர் மாநகர் சைதாப்பேட்டை
அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் உள்ள ஐயப்பன் சன்னதியில்
இன்று 01-04-2026 #பங்குனி_உத்திரம்
முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

குருசாமி


ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபை

15/02/2026

#இறைதத்துவம்

யாரையும் பழிவாங்க வேண்டும்
என்ற எண்ணத்தோடு இருக்காதீர்கள்
அது உங்கள் நிம்மதியை தொலைக்கும்
காலம் அதற்க்கான பதிலை சொல்லும்
அதுவரை காத்திரு...

அனைவருக்கும் #மஹாசிவராத்திரி
நல்வாழ்த்துக்கள்

குருசாமி


#பம்பாவாசன்_பக்த_சபையினர்

நாளை உனக்கு நன்மை நடக்கவேண்டும் என நீ நினைத்தால்இன்றே பிறருக்குநன்மைகளை செய் #இறைதத்துவம் குருசாமி     #பம்பாவாசன்_பக்த_...
05/02/2026

நாளை உனக்கு
நன்மை நடக்கவேண்டும்
என நீ நினைத்தால்
இன்றே பிறருக்கு
நன்மைகளை செய்

#இறைதத்துவம்

குருசாமி


#பம்பாவாசன்_பக்த_சபையினர்

01/02/2026

#தைப்பூசம் #ஜோதி_தரிசனம் விழா.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலம்.

சத்திய ஞான சபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனத்தை கண்டுகளித்த பக்தர்கள்.

குருசாமி


#பம்பாவாசன்_பக்த_சபையினர்

 #தைப்பூசம் திருநாள்முருகப் பெருமானுக்கே உரிய இந்த புனித நாள்  இந்த ஆண்டு தைப்பூசம் ஏன் சிறப்பு? பூச நக்ஷத்திரமும் பௌர்ண...
01/02/2026

#தைப்பூசம் திருநாள்
முருகப் பெருமானுக்கே உரிய
இந்த புனித நாள்

இந்த ஆண்டு தைப்பூசம் ஏன் சிறப்பு?
பூச நக்ஷத்திரமும் பௌர்ணமியும்
ஒரே நாளில் மேலும் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால்
தெய்வீக சக்திகள் பல மடங்கு அதிகம்!

புராண நம்பிக்கை:
பார்வதி தேவி, தன் ஞானத்தின் வடிவமான வேலாயுதத்தை
முருகப்பெருமானுக்கு அளித்த
புனித நாள் தான் தைப்பூசம்
அதனால் தான் இந்த நாளில் வழிபடுவோருக்கு
ஞானமும் செல்வ வளமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது

இந்த தைப்பூசத்தில் முருகன் அருள் உங்கள் வீட்டில் நிறைந்திருக்கட்டும்
வேல் வேல் முருகா…!

குருசாமி


#பம்பாவாசன்_பக்த_சபையினர்

01/02/2026

இன்று #வெள்ளியங்கிரி மலை
#நடை_திறக்கும் நாள் என்பதால்
#படி_பூஜை நடைபெற்றது

குருசாமி


#பம்பாவாசன்_பக்த_சபையினர்

உங்கள் தன்மானம் இழந்துயாரிடமும் கெஞ்சாதீர்கள்நடப்பதெல்லாம் நன்மைக்கே... #இறைதத்துவம் குருசாமி     #பம்பாவாசன்_பக்த_சபையி...
31/01/2026

உங்கள் தன்மானம் இழந்து
யாரிடமும் கெஞ்சாதீர்கள்
நடப்பதெல்லாம் நன்மைக்கே...

#இறைதத்துவம்

குருசாமி


#பம்பாவாசன்_பக்த_சபையினர்

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share