The temple was just a shed years back. சுமார் 1000 வருடங்களுக்கு முன்னாள் கரிகிரி கிராமத்தில் குடிமக்கள் வசித்து வந்தார்கள் இவர்கள் விறகு வெட்டி விற்று வாழ்ந்தார்கள். ஊருக்கு வடமேற்கில் உள்ள பெரிய மலை பகுதியில் விறகு வெட்ட செல்லுவார்கள். அப்படி ஒருநாள் ஒருவர் விறகு வெட்டுவதற்காக குழந்தையை தன்கூட அழைத்து சென்று ஒரு மரத்தடியியல் விட்டுவிட்டு விறகு வெட்ட செல்லுவார். அச்சமயத்தில் ஒரு பெண்ணுரு வி
ல் வந்து (எங்கள் அம்மா) அக்குழந்தையுடன் பேசி விளையாடி தின்பண்டங்கள் கொடுத்து அக்குழந்தையை தினசரி பசியாற்றி வந்தார். ஒரு நாள் அந்த விறகு வெட்டி தன் குழந்தை அன்னம் தண்ணீர் உண்ணவில்லை என்று மருத்துவரிடம் கூட்டி சென்றார். அப்போது அந்த மருத்துவர் குழந்தை தினமும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறான் என்று கூறினார் . அதை கேட்ட விறகு வெட்டி அதேபோன்று தன் குழந்தையை விறகு வெட்ட செல்லும் போது அழைத்து சென்று அதே மரத்தடியில் உட்காரவைத்து விட்டு மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார். வழக்கம்போல் அம்மா அந்த குழைந்தைக்கு பசியாற்றுவதையும் பால் ஊட்டுவதையும் பார்த்த விறகு வெட்டி அம்மாவின் பாதத்தில் தஞ்சம் அடைந்தார். பின் அந்த விறகு வெட்டி தாயே நீ என் குழந்தைக்கு மட்டும் அருள் தந்தால் போதாது என் கூட வாழும் மக்களுக்கு காவல் தெய்வமாய் இருந்து எங்கள் ஊராரையும் மக்களையும் காக்கும் மாறு வேண்டினார். பின் அவன் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அம்மன் காரிகிரி கிராமத்தில் மேளதாளம் முழங்க எட்டுத்திக்கும் அதிர முப்பது முக்கோடி தேவர்கள் ஆசியுடன் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மனாக கரிகிரி கிராமத்தில் ஜம்னாகமரத்தடியில் நிலைநிறுத்தினார்கள் பின் ஊர் செம்பரம் ஆகியது பின் மாதம் மும்மாரி மழை பொய்ய ஆரம்பித்தது விலை நிலங்கள் விளைய ஆரம்பித்தது பின் மக்கள் நோய் நொடிகள் இல்லாமல் பசி இல்லாமல் வாழ்த்துவந்தார்கள். அன்று முதல் இன்று வரை குடிநீர் பஞ்சம் இல்லை பல நுறு ஆண்டுகள் கடந்துவிட்டன.
Alerts
Be the first to know and let us send you an email when Sri Ponniyamman Kovil Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.