Arulmigu Sri Thimmaraya Perumal Swamy Temple Alasandapuram

Arulmigu Sri Thimmaraya Perumal Swamy Temple  Alasandapuram This is perumal kovil

14/06/2025
இன்றைய பூஜை புகைப்படங்கள்
14/06/2025

இன்றைய பூஜை புகைப்படங்கள்

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 25/01/2025 சனிக்கிழமை இன...
25/01/2025

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 25/01/2025 சனிக்கிழமை இன்று காலை 7 மணிக்கு ஹோமம் வளர்த்து, தாயார்கள் ,பெருமாள்சுவாமிக்கு திருமஞ்சனம்(அபிஷேகம்) நடைபெறும். அதனை தொடர்ந்து அ/மி திம்மராயப்பெருமாளுக்கு சாளக்கிராம மாலை சாற்றி பூஜை நடைபெற்றது.

உபயம்:
A. K. இ லட்சுமிபதி,
A. H. அல்லி
சென்னை.

25/01/2025

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 25/01/2025 சனிக்கிழமை இன்று காலை 7 மணிக்கு ஹோமம் வளர்த்து, தாயார்கள் ,பெருமாள்சுவாமிக்கு திருமஞ்சனம்(அபிஷேகம்) நடைபெறும். அதனை தொடர்ந்து அ/மி திம்மராயப்பெருமாளுக்கு சாளக்கிராம மாலை சாற்ற உள்ளதால் அதுசமயம்
பக்தகோடிகள் அனைவரும் கலந்துக்கொண்டு பெருமாள் அருளைப்பெற
வேண்டுகிறோம்.
உபயம்:
A. K. இ லட்சுமிபதி,
A. H. அல்லி
சென்னை.
இப்படிக்கு ,
கோயில்நிர்வாகம்.

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில்  26/8/23 இன்று காலை 7 ...
26/08/2023

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 26/8/23 இன்று காலை 7 மணிக்கு முதல் 12.30Pm அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது 🙏🌥️.

உபயதாரர்:
A.N.சுந்தரம் S. சுகுணா குடும்பத்தினர்

முதலாம் ஆண்டு ஸ்ம்வத்ஸராபிஷேகம் விழாசிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அன்னதானம். பக்த கோடிகள் அனைவரும் அனைவரும் கலந்து கொண...
26/05/2023

முதலாம் ஆண்டு ஸ்ம்வத்ஸராபிஷேகம் விழா
சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அன்னதானம்.

பக்த கோடிகள் அனைவரும் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற 🙏 கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: ஸ்ரீ திம்மராயசுவாமி பெருமாள் ஆலயம் , அலசந்தாபுரம்.

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 21-01-23 சனிக்கிழமை கா...
21/01/2023

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 21-01-23 சனிக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை பூஜை நடைபெற்றது.

உபயதாரர்:

A.C.வெற்றிச்செல்விமணி
ஆசிரியர் (ஓய்வு)
சென்னை.

பூஜை புகைப்படங்கள்

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 14.01.2023 சனிக்கிழமை ...
14/01/2023

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 14.01.2023 சனிக்கிழமை காலை 7 மணிக்கு பூஜை நடைபெற்றது

உபயதாரர்:
M.மோகன்மஞ்சுளா
அலசந்தாபுரம் கிராமம்

பூஜை புகைப்படங்கள்

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 07.01.2023 சனிக்கிழமை ...
08/01/2023

அலசந்தாபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ திம்மராயப்பெருமாள் ஆலயத்தில் 07.01.2023 சனிக்கிழமை நேற்று காலை 7 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது,

உபயதாரர்:
A.C.ஜெயலட்சுமி B.Sc,M.A,BL.
வழக்கறிஞர், சென்னை.

புகைப்படங்கள்

 #அருள்மிகு ஶ்ரீ திம்மராயசுவாமி ஆலயம் - அலசந்தாபுரம்புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை மற...
01/10/2022

#அருள்மிகு ஶ்ரீ திம்மராயசுவாமி ஆலயம் - அலசந்தாபுரம்

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை மற்றும் மேல்விளக்கு ஏற்றப்பட்டது மற்றும் அன்னதானம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Purattasi Viratham: புரட்டாசி மாதம் விரதத்தின் மகிமைகள் - சனிக்கிழமை விரத சிறப்பு பலன்கள்புரட்டாசி மாதத்தில் விரதம் இருப...
30/09/2022

Purattasi Viratham: புரட்டாசி மாதம் விரதத்தின் மகிமைகள் - சனிக்கிழமை விரத சிறப்பு பலன்கள்
புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதாலும், புரட்டாசி சனிக்கிழமைக்கு உள்ள முக்கியத்துவம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் புரட்டாசி. மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும், பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் இந்த புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.

பெருமாளை தரிசிக்க உகந்த சனிக்கிழமை:
பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

*புதன் கிரகத்திற்குரிய மாதம்*:
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும்.

புதனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார்.
அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது.

புரட்டாசி மாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் கூறுகிறது. இதனால் இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வதால் எமபயம் நீங்கி, நல் வாழ்க்கையை பெறலாம்.

புரட்டாசி மாத விரதம்:
ஒவ்வொரு சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. அப்படி விரதத்தை மேற்கொள்ள் முடியாதவர்கள் புரட்டசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜை செய்து வழிபடுவதோடு, முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிட்டும்.

சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை:

சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.

பெருமாளுக்கு உரிய திருத்தலங்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதன். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார்.

ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோயிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தான்.

அப்படியே கோயிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோயிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்ஹ்டு, ‘நீ எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்துவிடுவார்.

இந்நிலையில், கோயிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் *சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை*. *அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார்*.

அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார்.

அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார்.

அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது *தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது*.

இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார்.

அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார்.

திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.

திருமாலுக்கு நைவேத்யம்:
பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.

சனி கெடுபலன்களிலிருந்து காக்கும் பெருமாள்:
புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக பார்க்கப்படுகின்றது.

அதே போல், சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால்*, சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.

Address

Alasandapuram Post & Village/Alasanthapuram
Vaniyambadi
635801

Opening Hours

Monday 6am - 9:30am
Tuesday 6am - 9:30am
Wednesday 6am - 9:30am
Thursday 6am - 9:30am
Friday 6am - 9:30am
Saturday 5am - 10am
4:30pm - 6:30pm
Sunday 6am - 9:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sri Thimmaraya Perumal Swamy Temple Alasandapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category